சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

ஜி. சுப்பிரமணிய ஐயர்.  Khan11

ஜி. சுப்பிரமணிய ஐயர்.

Go down

ஜி. சுப்பிரமணிய ஐயர்.  Empty ஜி. சுப்பிரமணிய ஐயர்.

Post by ராகவா Mon 16 Sep 2013 - 20:44

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
ஜி. சுப்பிரமணிய ஐயர்.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

நாட்டின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டதிலும், சமூக சீர்திருத்தங்களிலும், பத்திரிகை துறையில் நுழைந்து பெரிய அளவில் செய்தித் தாள்களை அறிமுகம் செய்ததிலும் ஆகிய மூன்று வெவ்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கியவர் ஜி.சுப்பிரமணிய ஐயர். "தி இந்து" "சுதேசமித்திரன்" ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கி, நாட்டு சுதந்திரப் போரில் விடுதலை வேட்கையையும், வீரத்தையும் மக்கள் உள்ளங்களில் விதைத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக மகாகவி பாரதியாரை உலகுக்குக் காட்டியவர் இவரே. இவர் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1855ஆம் ஆண்டு கணபதி ஐயர், தர்மாம்பாள் தம்பதியருக்கு மகவாகப் பிறந்தார். கணபதி ஐயர் அவ்வூர் முன்சீப் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர். சுப்பிரமணிய ஐயருக்கு உடன் பிறந்தவர்கள் சகோதரர்கள் ஆறு பேர், சகோதரி ஒருவர். ஆரம்பக் கல்வி திருவையாற்றிலும், உயர் கல்வியைத் தஞ்சாவூரிலும் படித்து 1869ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேறினார். 1871இல் எஃப்.ஏ (இடைநிலை) தேர்வில் தேறினார். அதே ஆண்டு திருமணமும் நடந்தது. பிறகு சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சி முடித்தார். அதனைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி உட்பட சில இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின் தி ஆரியன் ஸ்கூல் எனும் பள்ளியை நிறுவி நடத்தினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்த இலக்கியக் கழகத்தில் சேர்ந்து, அங்கிருந்த சில அறிஞர்களின் தொடர்பை பெற்றார். அப்போது முதன் முறையாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதியாக ஒரு இந்தியரை சர் டி.முத்துசாமி ஐயரை நியமித்தனர். இந்த நியமனம் குறித்து அப்போதைய ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் குறைகூறியும் சாதி பேதங்கள் குறித்தும் எழுதின. இதனைக் கண்டித்து எழுதத் தங்களுக்கென்று ஒரு பத்திரிகை தேவை என்பதை ஜி.சுப்ரமணிய ஐயரும் அவரது நண்பர்களும் உனர்ந்தனர். உடனே ஒவ்வொருவரும் கொடுத்த நன்கொடை ஒண்ணே முக்கால் ரூபாயில் 80 பிரதிகள் அச்சிட்டு ஒரு பத்திரிகை வெளியிட்டனர். 1878 செப்டம்பர் 20ஆம் தேதி "இந்து" பத்திரிகை வெளியானது. பொது மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கும் பத்திரிகையாக அப்போதிருந்து 'இந்து' இருந்துவந்தது. ஜி.சுப்பிரமணிய ஐயரோடு சேர்ந்து 'இந்து' பத்திரிகையைத் தொடங்கிய அந்த அறுவர் செங்கல்பட்டைச் சேர்ந்த எம்.வீரராகவாச்சாரியார், டி.டி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், டி. கேசவ ராவ் பந்த் மற்றும் என். சுப்பாராவ் பந்துலு ஆகியோராவர். இவர்களில் ஜி.சுப்பிரமணிய ஐயரும் வீரராகவாச்சாரியாரும் பச்சையப்பன் கல்லூரியில் ட்யூட்டராக பணியாற்றியவர்கள். மற்ற நால்வரும் சட்டக்கல்லூரி மாணவர்கள். அப்போது 'இந்து' பத்திரிகை ஜார்ஜ் டவுனில் மிண்ட் தெருவில் ஸ்ரீநிதி அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு புதன்கிழமையும் மாலையில் இப்போதைய இந்து பத்திரிகையின் அளவில் கால் பகுதியாக எட்டு பக்கங்கள் நாலணா விலையில் அதாவது இப்போதைய இருபத்தைந்து காசுகளுக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த தேசபக்த இளைஞர்கள் அறுவரும் வெளிக்கொண்டு வந்த 'இந்து' பத்திரிகை மக்களின் அபிப்பிராயங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் பத்திரிகையின் கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் எல்லா பிரச்சினைகளிலும் மக்கள் சரியான கோணத்தில் அணுக உதவி செய்தது. இந்தப் பத்திரிகை தொடங்கியதின் நோக்கத்தைப் பற்றி இவர்கள் எழுதிய அந்த ஆங்கிலப் பகுதி இதோ: "......The principles that we propose to be guided by are simply those of fairness and justice. It will always be our aim to promote harmony and union among our fellow countrymen and to interpret correctly the feelings of the natives and to create mutual confidence between the governed and the governors".

'இந்து' பத்திரிகை தொடங்கப்பட்டதே ஆங்கிலேயர்களின் ஆதரவு பத்திரிகைகள் குறிப்பாக "தி மெட்றாஸ் மெயில்" இந்தியர்களை ஏளனமாக எழுதியதை எதிர்த்துத்தான். ஆகவே நீதிபதி முத்துசாமி ஐயர் நியமனத்தை எதிர்த்து அந்த ஆங்கில பத்திரிகை எழுதியபோது 'இந்து' நியமனத்தை ஆதரித்ததோடு, ஆங்கில ஏட்டின் கருத்தைத் தூள்தூளாக்கியது. அதன் பிறகு இந்து பத்திரிகையின் தாக்கம் மக்களுக்கு ஏற்பட்டது செங்கல்பட்டு கலவர வழக்கு 1881இல் தான். இந்த வழக்கு சம்பந்தமாக சென்னை கவர்னருக்கு எதிராக கடுமையான வாதங்களை முன்வைத்தது இந்து பத்திரிகை. அதற்குப் பின் மூன்று ஆண்டுகள் கழித்து 1884இல் சேலம் கலவர வழக்கின் போதும் இந்து பத்திரிகை ஆங்கில அரசுக்கு எதிராக போர்முழக்கம் செய்தது. சேலம் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்த சி.விஜயராகவாச்சாரியார் சம்பந்தப்பட்ட வழக்கு அது. அதுபற்றி 'இந்து'வின் வாதம் இதோ:-
“ the prosecution of the socalled Salem Rioters and their convictions were the result of a premeditated design, hastily formed and executed in a vindictive spirit, not very honourable and utterly unworthy of a civilized Government”.

1880இல் இந்து பத்திரிகை மைலாப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டது. 'தி இந்து அச்சகம்' ரகூநாத ராவ் (Ragoonada Row) என்பவரால் தொடங்கப்பட்டது. 1883 முதல் இது வாரம் மும்முறையாக வெளிவந்தது. 1897இல் திலகரின் கைதை எதிர்த்து இந்து முழக்கமிட்டது. பிறகு 1883 டிசம்பர் 3ஆம் தேதி முதல் இந்து பத்திரிகை மவுண்ட் சாலைக்குத் தனது சொந்த அச்சகமான 'தி நேஷணல் பிரஸ்'க்கு மாறியது. சென்னையில் பிரபல கிரிமினல் வக்கீலாக இருந்த நார்ட்டன் என்பார் சென்னை சட்டமன்ற மேலவைக்குப் போட்டியிட்டார்; அவரை இந்து ஜி.சுப்பிரமணிய ஐயர் அவரை தீவிரமாக ஆதரித்தார். ஆங்கில ஏகாதிபத்தியத்தைக் கடுமையாக எதிர்த்த ஜி.எஸ். நார்ட்டன் துரையுடன் எப்படி இவ்வளவு நெருக்கம் கொண்டார் என்பது தெரியவில்லை.

இந்த 'திருவல்லிக்கேணி அறுவர்' பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சட்டம் படித்த மாணவர்கள் வக்கீல் தொழில் செய்யச் சென்று விட்டனர். ஜி.சுப்பிரமணிய ஐயரும் வீரராகவாச்சாரியாரும் மட்டும் பத்திரிகையை நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. 1898இல் அதாவது இந்து பத்திரிகை வெளிவரத்தொடங்கி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஜி.சுப்ரமணிய ஐயர் இந்த பத்திரிகையை தனது நண்பர் ஒருவருக்கு விற்றுவிட்டார். அதுமுதல் அது கஸ்தூரி ஐயங்கார் குடும்பத்துக்குச் சொந்தமானது. இந்து பத்திரிகை காங்கிரஸ் கட்சி தொடங்குவதற்கு முன் ஏழு ஆண்டுகள் மூத்தது.

இவர் சென்னை மகாஜன சபையில் உறுப்பினர் ஆனார். 1885இல் பம்பாயில் காங்கிரஸ் கட்சி உருவானபோது ஜி.எஸ். அவர்கள் அதன் ஆரம்ப கால உறுப்பினர் ஆனார். 1906இல் கர்சான் பிரபு வங்கத்தை பிரித்தபோது அதனை எதிர்த்துக் கடுமையாக எழுதினார். 1907இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் இவர் மிதவாத தலைவரைத் தலைமைப் பதவிக்கு முன்மொழிந்தாரே தவிர, பிறகு பால கங்காதர திலகரையே பின்பற்றலானார்.

1882ஆம் வருஷம் "சுதேசமித்திரன்" பத்திரிகையை வார இதழாகத் தொடங்கினார். 1889 முதல் இது நாள் இதழாக மலர்ந்தது. மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த பாரதியாரைச் சென்னைக்குக் கொண்டு வந்து ஒரு பத்திரிகையாளராகவும், அதன் மூலம் ஒரு தீவிரமான அரசியல்வாதியாகவும் ஆவதற்கு மூலகாரணமாக இருந்தவர் ஜி.எஸ். மகாகவியை உலகத்துக்கு அறிமுகம் செய்தவர் இவரே.

இவர் சமூக சீர்திருத்தங்களில் அதி தீவிர கவனம் செலுத்தினார். பால்ய விவாகம், விதவைத் திருமணம், தேவதாசி முறை ஒழிப்பு, சாதி ஒற்றுமை இவைகளில் அவர் ஆர்வம் காட்டினார். திருமண வயதை அதிகரிக்கவும், விதவைத் திருமணங்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமுதாயத்தைல் சரிசமமான அந்தஸ்த்தைப் பெற்றுத் தருவதற்கும், குழந்தை திருமணங்களைத் தடை செய்யவும் இவர் அயராது பாடுபட்டார். இவர் ஊருக்கு உபதேசம் செய்வதோடு நிற்கவில்லை, தனது விதவை மக ளான 13 வயதில் விதவையாகிவிட்ட சிவப்பிரியாம்பாளுக்கு பம்பாயில் 1889ஆம் வருஷ காங்கிரஸ் மகாநாடு நடந்த போது அந்தக் காலத்திலேயே அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்பே விதவா மறுவிவாகம் செய்து வைத்தவர். பிற்காலத்தில் இவருக்கு உடல் உபாதை ஏற்பட்டு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அது உடைந்து புண்ணாகி, உடல் முழுவதும் மோசமாக ஆகியது. இது அவரது பொதுத் தொண்டினை மிகவும் பாதித்தது, மனம் வருந்தினார். மகாத்மா காந்தி இவர் இருக்குமிடம் வந்து இவரைக் கண்டு ஆறுதல் கூறிச் சென்றார்.

“சுதேசமித்திரன்" பத்திரிகையை இவர் வாரம் மும்முறையாகக் கொண்டு வந்தார். 1889 முதல் அது தினசரியாக வெளியாகியது. இந்த காலகட்டத்தில் 'சுதேசமித்திரன்' எழுத்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மிக கடுமையான விமரிசனங்களைத் தாங்கி வந்தது அதன் காரணமாக அரசாங்கத்தின் கெடுபிடிகளும் அதிகமாயின. இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் இவரது உடல்நிலையை அதிகம் பாதித்தது. எனினும் இவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு அதாவது 1915இல் சுதேசமித்திரனை கஸ்தூரிரங்க ஐயங்காரின் மருமான் ஏ.ரங்கசாமி ஐயங்காரிடம் ஒப்படைத்தார். தியாகச் செம்மல், பத்திரிகைத் துறையின் முன்னோடி, மகாகவி பாரதியை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்த உத்தமர், சமூக சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்டவர் ஜி.சுப்பிரமணிய ஐயர் தனது 61ஆம் வயதில் 1916இல் காலமானார். வாழ்க ஜி.சுப்பிரமணிய ஐயர் புகழ்!

நன்றி:http://www.tamilnaduthyagigal.blogspot.in/2010/05/blog-post_21.html
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum