Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
மரப்பெஞ்சு தந்த போதை…
4 posters
Page 1 of 1
மரப்பெஞ்சு தந்த போதை…
இந்தியா வல்லரசாகிக் கொண்டிருக்கிறது என்று பெருமையடித்துக் கொள்ளும் அதே வேளையில் சென்ற மாதம் நடந்த இரு நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தால் யாருக்குமே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தாமல் இருக்க முடியாது. ஒன்று மதுரை அருகில் உள்ள பள்ளி மாணவர்களின் செயல். மற்றொன்று அரசு மருத்துவமனை மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன தகவல்கள்.
இந்த இரண்டு நிகழ்வுகளையும் பார்த்துவிட்டு இன்றைய அரசும், மக்களும் எத்தகைய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சீர்தூக்கிப் பாருங்கள்.
மதுரை அருகில் உள்ள ஒரு பள்ளியின் மாணவர்கள் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். அன்று சிலபேர் போதை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். கையில் காசு இல்லை. காசுக்காக யோசித்த போது அவர்கள் கண்களில் பட்டது அவர்கள் அமர்ந்து பாடம் கற்றுக்கொள்ளும் மரப்பெஞ்சு. பள்ளி விட்டு அனைவரும் போன பின்னர், மரப்பெஞ்சை துண்டாக உடைத்து, மரத்துண்டுகளை அருகில் உள்ள விறகுக் கடையில் விற்று டாஸ்மாக் கிறக்கத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் 12ம் வகுப்பு மாணவர்கள்.
கோவையில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் கோவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டுவந்த போது இறந்துவிட்டார். அவருக்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் ஆண், பெண் என்று இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இப்போது மனைவியும், குழந்தைகளும் பராமரிக்க வசதியற்ற நிலையில் இருக்கிறார்கள். சாலை விபத்துக்குக் காரணம் அவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதுதான்.
மருத்துவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர், ஆண்டுதோறும் இந்தியாவின் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் மரணமடைகின்றார்கள். அவர்களில் 70% பேர் மது போதையிலேயே விபத்துக்குள்ளானவர்கள். எங்கள் மருத்துவமனைக்கு தினசரி 10 முதல் 15 பேர் தலையிலும், தண்டுவடத்திலும் அடிபட்டு வருகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் அவர்கள் 40% பேர் போதையில் விபத்துக்குள்ளானவர்கள். பெரும்பாலும் அவர்கள் மயக்கநிலையில் தான் இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்” என்றார்.
நான் இந்த நாட்டின் குடிமகன் என்று சொல்வதில் மிகுந்த பெருமை அடைகிறார்களோ இல்லையோ, “நான் குடிக்கும் மகன்” என்று சொல்வதில் மிகுந்த பெருமை அடைகிறார்கள். இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், எல்லாவற்றிலும் சம உரிமை கேட்கும் பெண்கள், குடிப்பதற்கும் சம உரிமை எடுத்துக் கொண்டு ஆண்களுக்கு நிகராக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக, ஒரு மனிதன் பிறக்கும்போதே எந்த ஒரு பழக்கத்தையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை. தான் பார்த்து வளரும் சூழ்நிலைகளும், சுற்றியுள்ள மனிதர்களும் தான் ஒருவனுக்கு பல விசயங்களைக் கற்றுத் தருகிறது. அப்படிப் பார்க்கும்போது இன்றைய நிலையில் மனிதர்களும், சூழ்நிலைகளும் மிக மோசமாகவே இருக்கிறது.
அரசுக்கு வருமானத்தைத் தருகிறது என்பதற்காக அரசு விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு மதுக்கடைகளை ஒரு தெரு பாக்கியில்லாமல் திறந்துள்ளனர். மக்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள், பள்ளிகள், கோயில்கள், பெண்கள் அதிகம் கூடும் இடங்கள் என்ற பாகுபாடை அரசு கண்டுகொள்வதில்லை. அதன் பயன்தான் இன்று பள்ளியில் மரப்பெஞ்சை மாணவர்கள் விற்று சரக்கு வாங்கி அரசு வருமானத்தை உயர்த்தும் அளவிற்குப் போயுள்ளது. இது போன்று மக்களைக் கெடுத்து வாழ்வை இழக்க வைக்கும் சம்பாத்தியம் அரசுக்குத் தேவையா? இப்படிக் காசு பண்ணும் அரசுக்கும், குடிகெடுக்கும் கந்துவட்டிக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
இன்றைய திரைப்படங்கள் இப்பழக்கத்திற்கான வரவேற்பை பலப்படுத்துவதைப் போல, மிகப்பிரபலமான, இளசுகளின் மனங்கவர்ந்த நடிகர்கள் தங்கள் படங்களில் தவறாமல் மது அருந்தி ஆட்டம் போடுவதும், அப்பாவுடன் சேர்ந்து மது அருந்துவதும், அதை நியாயப்படுத்தி பேசுவதும் நம் வளரும் தலைமுறையினரின் மனதில் மது அருந்துவதை நியாயப்படுத்துகிறது. அதுபோன்ற காட்சிகளைக் காசுக்காக வைக்கும் இயக்குநர்கள், பணத்துக்காக அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் காசுக்காக தெருதோறும் மதுபானக்கடைகளைத் திறக்கும் அரசுக்கும் காசுக்காகத் தன்னை கொடுப்பவர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
எத்தனையோ குடும்பங்களை மட்டுமின்றி, நம் கலாச்சாரத்தையும் சீரழிக்கும் இந்த மது போதை தேவை தானா??? “மது விற்பவன் கார் சீட்டில், மது அருந்துபவன் தார் ரோட்டில்” என்பதற்கேற்ப தான் இந்த நாடு இருக்க வேண்டுமா??? முடிவு உங்கள் கையில்…
நன்றி:தன்நம்பிக்கை
இந்த இரண்டு நிகழ்வுகளையும் பார்த்துவிட்டு இன்றைய அரசும், மக்களும் எத்தகைய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சீர்தூக்கிப் பாருங்கள்.
மதுரை அருகில் உள்ள ஒரு பள்ளியின் மாணவர்கள் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். அன்று சிலபேர் போதை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். கையில் காசு இல்லை. காசுக்காக யோசித்த போது அவர்கள் கண்களில் பட்டது அவர்கள் அமர்ந்து பாடம் கற்றுக்கொள்ளும் மரப்பெஞ்சு. பள்ளி விட்டு அனைவரும் போன பின்னர், மரப்பெஞ்சை துண்டாக உடைத்து, மரத்துண்டுகளை அருகில் உள்ள விறகுக் கடையில் விற்று டாஸ்மாக் கிறக்கத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் 12ம் வகுப்பு மாணவர்கள்.
கோவையில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் கோவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டுவந்த போது இறந்துவிட்டார். அவருக்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் ஆண், பெண் என்று இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இப்போது மனைவியும், குழந்தைகளும் பராமரிக்க வசதியற்ற நிலையில் இருக்கிறார்கள். சாலை விபத்துக்குக் காரணம் அவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதுதான்.
மருத்துவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர், ஆண்டுதோறும் இந்தியாவின் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் மரணமடைகின்றார்கள். அவர்களில் 70% பேர் மது போதையிலேயே விபத்துக்குள்ளானவர்கள். எங்கள் மருத்துவமனைக்கு தினசரி 10 முதல் 15 பேர் தலையிலும், தண்டுவடத்திலும் அடிபட்டு வருகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் அவர்கள் 40% பேர் போதையில் விபத்துக்குள்ளானவர்கள். பெரும்பாலும் அவர்கள் மயக்கநிலையில் தான் இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்” என்றார்.
நான் இந்த நாட்டின் குடிமகன் என்று சொல்வதில் மிகுந்த பெருமை அடைகிறார்களோ இல்லையோ, “நான் குடிக்கும் மகன்” என்று சொல்வதில் மிகுந்த பெருமை அடைகிறார்கள். இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், எல்லாவற்றிலும் சம உரிமை கேட்கும் பெண்கள், குடிப்பதற்கும் சம உரிமை எடுத்துக் கொண்டு ஆண்களுக்கு நிகராக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக, ஒரு மனிதன் பிறக்கும்போதே எந்த ஒரு பழக்கத்தையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை. தான் பார்த்து வளரும் சூழ்நிலைகளும், சுற்றியுள்ள மனிதர்களும் தான் ஒருவனுக்கு பல விசயங்களைக் கற்றுத் தருகிறது. அப்படிப் பார்க்கும்போது இன்றைய நிலையில் மனிதர்களும், சூழ்நிலைகளும் மிக மோசமாகவே இருக்கிறது.
அரசுக்கு வருமானத்தைத் தருகிறது என்பதற்காக அரசு விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு மதுக்கடைகளை ஒரு தெரு பாக்கியில்லாமல் திறந்துள்ளனர். மக்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள், பள்ளிகள், கோயில்கள், பெண்கள் அதிகம் கூடும் இடங்கள் என்ற பாகுபாடை அரசு கண்டுகொள்வதில்லை. அதன் பயன்தான் இன்று பள்ளியில் மரப்பெஞ்சை மாணவர்கள் விற்று சரக்கு வாங்கி அரசு வருமானத்தை உயர்த்தும் அளவிற்குப் போயுள்ளது. இது போன்று மக்களைக் கெடுத்து வாழ்வை இழக்க வைக்கும் சம்பாத்தியம் அரசுக்குத் தேவையா? இப்படிக் காசு பண்ணும் அரசுக்கும், குடிகெடுக்கும் கந்துவட்டிக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
இன்றைய திரைப்படங்கள் இப்பழக்கத்திற்கான வரவேற்பை பலப்படுத்துவதைப் போல, மிகப்பிரபலமான, இளசுகளின் மனங்கவர்ந்த நடிகர்கள் தங்கள் படங்களில் தவறாமல் மது அருந்தி ஆட்டம் போடுவதும், அப்பாவுடன் சேர்ந்து மது அருந்துவதும், அதை நியாயப்படுத்தி பேசுவதும் நம் வளரும் தலைமுறையினரின் மனதில் மது அருந்துவதை நியாயப்படுத்துகிறது. அதுபோன்ற காட்சிகளைக் காசுக்காக வைக்கும் இயக்குநர்கள், பணத்துக்காக அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் காசுக்காக தெருதோறும் மதுபானக்கடைகளைத் திறக்கும் அரசுக்கும் காசுக்காகத் தன்னை கொடுப்பவர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
எத்தனையோ குடும்பங்களை மட்டுமின்றி, நம் கலாச்சாரத்தையும் சீரழிக்கும் இந்த மது போதை தேவை தானா??? “மது விற்பவன் கார் சீட்டில், மது அருந்துபவன் தார் ரோட்டில்” என்பதற்கேற்ப தான் இந்த நாடு இருக்க வேண்டுமா??? முடிவு உங்கள் கையில்…
நன்றி:தன்நம்பிக்கை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மரப்பெஞ்சு தந்த போதை…
எவ்வளவு சொன்னாலும் கேட்கவா போகிறார்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மரப்பெஞ்சு தந்த போதை…
இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கும்
விஷயங்கள்...பெரிதுபடுத்த தேவையில்லை...!!!
-
தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியால்,
ஊடகங்கள் மூலம் நமக்கு உடனுக்குடன் விபரங்கள்
தெரிய வருகின்றன...அவ்வளவே...!
-
அமெரிக்காவில் மாணவன் கையில் துப்பாக்கி
ஏந்தி ஆசிரியரகளையே சுட்டுத் தள்ளுகிறான்...
-
அந்த அளவில் இந்தியா எவ்வளோ மேல்...!!!)*
விஷயங்கள்...பெரிதுபடுத்த தேவையில்லை...!!!
-
தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியால்,
ஊடகங்கள் மூலம் நமக்கு உடனுக்குடன் விபரங்கள்
தெரிய வருகின்றன...அவ்வளவே...!
-
அமெரிக்காவில் மாணவன் கையில் துப்பாக்கி
ஏந்தி ஆசிரியரகளையே சுட்டுத் தள்ளுகிறான்...
-
அந்த அளவில் இந்தியா எவ்வளோ மேல்...!!!)*
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» லேட்டஸ்ட் போதை!
» நிக்கவரட்டியவில் 28,600 போதை வில்லைகள்
» சிறந்த போதை இதுதான்...
» பண்டைய நாகரிகங்கள்.
» போதை ஏறி புத்தி மாறி
» நிக்கவரட்டியவில் 28,600 போதை வில்லைகள்
» சிறந்த போதை இதுதான்...
» பண்டைய நாகரிகங்கள்.
» போதை ஏறி புத்தி மாறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|