Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்
+5
நண்பன்
Muthumohamed
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ரத்த ஓட்டத்தை சீராக்கும் தக்காளி
First topic message reminder :
லேசாக காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தாலோ அல்லது உடல் வலிக்கோ, தலைவலிக்கோ `ஆஸ்பிரின்’ மாத்திரை எடுத்துக்கொள்வது பலரது வழக்கம்.
அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் அவற்றில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
ஆனால், இந்த ஆஸ்பிரின் மாத்திரைக்கு பதிலாக தக்காளியை சாப்பிடலாம் என்று ஒரு மருத்துவ ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
தக்காளி விதையில் இயற்கையாக ஜெல் போன்ற திரவம் காணப்படுகிறது.
அந்த திரவமானது ரத்தம் உறைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதும் இந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறும்போது, “ரத்த ஓட்டம் சீராகுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சிறிய அளவில் தினசரி ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அது, வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி அல்சர் ஏற்பட வழிவகுக்கும் தன்மை உடையது. ஆனால் தக்காளி சாப்பிடுவதால் அதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படாது” என்று தெரிவித்தனர்.
லேசாக காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தாலோ அல்லது உடல் வலிக்கோ, தலைவலிக்கோ `ஆஸ்பிரின்’ மாத்திரை எடுத்துக்கொள்வது பலரது வழக்கம்.
அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் அவற்றில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
ஆனால், இந்த ஆஸ்பிரின் மாத்திரைக்கு பதிலாக தக்காளியை சாப்பிடலாம் என்று ஒரு மருத்துவ ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
தக்காளி விதையில் இயற்கையாக ஜெல் போன்ற திரவம் காணப்படுகிறது.
அந்த திரவமானது ரத்தம் உறைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதும் இந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறும்போது, “ரத்த ஓட்டம் சீராகுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சிறிய அளவில் தினசரி ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அது, வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி அல்சர் ஏற்பட வழிவகுக்கும் தன்மை உடையது. ஆனால் தக்காளி சாப்பிடுவதால் அதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படாது” என்று தெரிவித்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்
கத்தரிக்காய் இனிமேலாவது சாப்பிட வேண்டும்
Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்
காய்கறிகளில் உள்ள சத்துக்களையும் காய்கறிகள் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் இங்கே அலசுகிறார் உணவு ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி.
''வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வந்தவுடன், நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பிறகுதான் ஃப்ரிட்ஜில் அடுக்க வேண்டும். காய்களை நறுக்கிய பிறகு கழுவக் கூடாது. சிலர் காய்களை வேகவைத்த நீரை வடித்துக் கொட்டிவிடுவது உண்டு. இது கூடாது. அளவாய்த் தண்ணீரைக் கொதிக்கவைத்து, நறுக்கிய காய்கறிகளை அந்தத் தண்ணீரிலேயே கொட்டி மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்தாலே, சில நொடிகளில் வெந்துவிடும். பிறகு அடுப்பை அணைத்தவுடன் உடனே, திறக்காமல் அப்படியே வைத்திருந்தால் காய்கறிகள் சுவையாக இருக்கும். பச்சையாகச் சாப்பிடும் போது காய்கறிகளை நன்றாகக் கழுவி, லேசாக வெந்நீரில் போட்டு எடுத்த பிறகு சாப்பிடுவது நல்லது'' எனக் காய்கறிகளைப் பயன்படுத்தும் விதம்குறித்து விளக்கியவர் காய்கறிகளில் உள்ள சத்துக்கள்குறித்தும் பட்டியல் போட்டார்.
கேரட்
பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இதில் நிறைய இருக்கின்றன. பொட்டாஷியம், ஃபோலிக் அமிலம், கோலின், கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச் சத்தும் இதில் உண்டு. கண், தோல் மற்றும் எலும்பு உறுதிபடவும், ரத்த விருத்திக்கும் மிகவும் நல்லது.
குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயோதிகர்கள் எல்லோரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிட வேண்டும். துருவியும் சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து அப்படியே சாப்பிடலாம்.
பீன்ஸ்
வைட்டமின் - சி, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. ஓரளவு பொட்டாஷியம், துத்தநாகம், மிகக் குறைந்த அளவு கலோரி ஆகியவை இதில் இருக்கின்றன. அதிக நேரம் வேகவைத்தால் சத்துக்கள் குறைந்துவிடுவதால், மூடி போட்டு அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. ரத்தவிருத்திக்கு நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பொரியல் செய்து சாப்பிடலாம். மலச் சிக்கல் பிரச்னைக்குத் தீர்வு தரும். சிறுநீரகக் கல்லடைப்பு இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம்.
வெள்ளரிக்காய்
நீர்ச்சத்து நிறைந்தது. மிகக் குறைந்த அளவு கலோரி, ஓரளவு ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. பிஞ்சு வெள்ளரிக்காயைப் பச்சையாகவும் தடிமனான வெள்ளரியைக் கூட்டு செய்தும் சாப்பிடலாம். தாகத்தைத் தணிக்கும். சருமப் பிரச்னைகள் நீங்கும். உடல் குளுமைக்காகவும் தினமும் பச்சடி, சாலட் செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
வெண்டைக்காய்
அதிக அளவு ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, பொட்டாஷியம் ஓரளவும், மாவுச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் குறைந்த அளவும் இருக்கின்றன.
உடல் செயல்பாடு நல்லபடியாக இருக்கவும், ரத்த விருத்திக்கும் உதவும். எல்லோருக்கும் ஏற்ற காய். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சாப்பிடலாம். வதக்காமல், மூடி போட்டு அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிட வேண்டும்.
பாகற்காய்
கலோரி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதம் போன்றவை குறைந்த அளவே இருந்தாலும் உடம்புக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைத் தரும்.
பசியைத் தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பாக புற்றுநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், தொற்று நோய்கள் வராமலும் தடுக்கும். உடம்பில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வயிற்றில் பூச்சித் தொல்லையை விரட்டி அடிக்கும். எல்லோருக்கும் ஏற்றது. கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம்.
வாழைத்தண்டு
நீர்ச்சத்து, நார்ச்சத்துக்கள் நிறைந்தது. ஓரளவு வைட்டமின் சி, பாஸ்பரஸ், மிகக் குறைந்த கலோரி ஆகியவை இதில் உண்டு.
சிறுநீரகப் பிரச்னை மற்றும் அதீத உடல் எடை உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம்.
நீர்த்தன்மை அதிகம் இருப்பதால் சிறுநீரை நன்றாக வெளியேற்றும். தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட்டவுடன், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
புடலங்காய்
நீர்ச்சத்து நிறைந்தது. மிகக் குறைந்த அளவு கலோரி, ஓரளவு நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், குறைந்த அளவு இரும்புச்சத்தும் இதில் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு ஏற்ற காய்கறி இது. கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம். ஆனால், சிறுநீரகக் கல்லடைப்பு இருப்பவர்கள் தவிர்க்கலாம்.
அவரைக்காய்
நிறைய நார்ச்சத்து, ஓரளவு புரதம், குறைந்த அளவு பொட்டாஷியம், மிகக் குறைந்த அளவு கலோரி உள்ள காய்கறி இது. பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். மலச் சிக்கல் பிரச்னை தீரும்.
கத்தரிக்காய்
ஃபோலிக் அமிலம், கொலின் மற்றும் நார்ச் சத்து இருக்கிறது. மிகக் குறைந்த கலோரி, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நிறையத் தாது உப்புக்களும் உண்டு. உடல் இயக்கம் சீராவதற்கும் கத்தரிக்காய் பயன்படுகிறது. வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும். கத்தரிக்காயில் இருக்கும் விதைகள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். குழம்பில் போட்டும் பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
சிவப்புப் பூசணி
ஓரளவு பீட்டா கரோட்டின், பொட்டாஷியம், மக்னீஷியம், ஃபோலிக் ஆசிட் இருக்கிறது. கால்சியம், இரும்புச் சத்து குறைவு.
நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைய இருப்பதால் எல்லோரும் சாப்பிட ஏற்றது. சிறிதளவு தித்திப்பு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கலாம்
''வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வந்தவுடன், நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பிறகுதான் ஃப்ரிட்ஜில் அடுக்க வேண்டும். காய்களை நறுக்கிய பிறகு கழுவக் கூடாது. சிலர் காய்களை வேகவைத்த நீரை வடித்துக் கொட்டிவிடுவது உண்டு. இது கூடாது. அளவாய்த் தண்ணீரைக் கொதிக்கவைத்து, நறுக்கிய காய்கறிகளை அந்தத் தண்ணீரிலேயே கொட்டி மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்தாலே, சில நொடிகளில் வெந்துவிடும். பிறகு அடுப்பை அணைத்தவுடன் உடனே, திறக்காமல் அப்படியே வைத்திருந்தால் காய்கறிகள் சுவையாக இருக்கும். பச்சையாகச் சாப்பிடும் போது காய்கறிகளை நன்றாகக் கழுவி, லேசாக வெந்நீரில் போட்டு எடுத்த பிறகு சாப்பிடுவது நல்லது'' எனக் காய்கறிகளைப் பயன்படுத்தும் விதம்குறித்து விளக்கியவர் காய்கறிகளில் உள்ள சத்துக்கள்குறித்தும் பட்டியல் போட்டார்.
கேரட்
பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இதில் நிறைய இருக்கின்றன. பொட்டாஷியம், ஃபோலிக் அமிலம், கோலின், கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச் சத்தும் இதில் உண்டு. கண், தோல் மற்றும் எலும்பு உறுதிபடவும், ரத்த விருத்திக்கும் மிகவும் நல்லது.
குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயோதிகர்கள் எல்லோரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிட வேண்டும். துருவியும் சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து அப்படியே சாப்பிடலாம்.
பீன்ஸ்
வைட்டமின் - சி, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. ஓரளவு பொட்டாஷியம், துத்தநாகம், மிகக் குறைந்த அளவு கலோரி ஆகியவை இதில் இருக்கின்றன. அதிக நேரம் வேகவைத்தால் சத்துக்கள் குறைந்துவிடுவதால், மூடி போட்டு அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. ரத்தவிருத்திக்கு நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பொரியல் செய்து சாப்பிடலாம். மலச் சிக்கல் பிரச்னைக்குத் தீர்வு தரும். சிறுநீரகக் கல்லடைப்பு இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம்.
வெள்ளரிக்காய்
நீர்ச்சத்து நிறைந்தது. மிகக் குறைந்த அளவு கலோரி, ஓரளவு ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. பிஞ்சு வெள்ளரிக்காயைப் பச்சையாகவும் தடிமனான வெள்ளரியைக் கூட்டு செய்தும் சாப்பிடலாம். தாகத்தைத் தணிக்கும். சருமப் பிரச்னைகள் நீங்கும். உடல் குளுமைக்காகவும் தினமும் பச்சடி, சாலட் செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
வெண்டைக்காய்
அதிக அளவு ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, பொட்டாஷியம் ஓரளவும், மாவுச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் குறைந்த அளவும் இருக்கின்றன.
உடல் செயல்பாடு நல்லபடியாக இருக்கவும், ரத்த விருத்திக்கும் உதவும். எல்லோருக்கும் ஏற்ற காய். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சாப்பிடலாம். வதக்காமல், மூடி போட்டு அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிட வேண்டும்.
பாகற்காய்
கலோரி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதம் போன்றவை குறைந்த அளவே இருந்தாலும் உடம்புக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைத் தரும்.
பசியைத் தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பாக புற்றுநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், தொற்று நோய்கள் வராமலும் தடுக்கும். உடம்பில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வயிற்றில் பூச்சித் தொல்லையை விரட்டி அடிக்கும். எல்லோருக்கும் ஏற்றது. கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம்.
வாழைத்தண்டு
நீர்ச்சத்து, நார்ச்சத்துக்கள் நிறைந்தது. ஓரளவு வைட்டமின் சி, பாஸ்பரஸ், மிகக் குறைந்த கலோரி ஆகியவை இதில் உண்டு.
சிறுநீரகப் பிரச்னை மற்றும் அதீத உடல் எடை உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம்.
நீர்த்தன்மை அதிகம் இருப்பதால் சிறுநீரை நன்றாக வெளியேற்றும். தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட்டவுடன், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
புடலங்காய்
நீர்ச்சத்து நிறைந்தது. மிகக் குறைந்த அளவு கலோரி, ஓரளவு நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், குறைந்த அளவு இரும்புச்சத்தும் இதில் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு ஏற்ற காய்கறி இது. கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம். ஆனால், சிறுநீரகக் கல்லடைப்பு இருப்பவர்கள் தவிர்க்கலாம்.
அவரைக்காய்
நிறைய நார்ச்சத்து, ஓரளவு புரதம், குறைந்த அளவு பொட்டாஷியம், மிகக் குறைந்த அளவு கலோரி உள்ள காய்கறி இது. பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். மலச் சிக்கல் பிரச்னை தீரும்.
கத்தரிக்காய்
ஃபோலிக் அமிலம், கொலின் மற்றும் நார்ச் சத்து இருக்கிறது. மிகக் குறைந்த கலோரி, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நிறையத் தாது உப்புக்களும் உண்டு. உடல் இயக்கம் சீராவதற்கும் கத்தரிக்காய் பயன்படுகிறது. வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும். கத்தரிக்காயில் இருக்கும் விதைகள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். குழம்பில் போட்டும் பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
சிவப்புப் பூசணி
ஓரளவு பீட்டா கரோட்டின், பொட்டாஷியம், மக்னீஷியம், ஃபோலிக் ஆசிட் இருக்கிறது. கால்சியம், இரும்புச் சத்து குறைவு.
நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைய இருப்பதால் எல்லோரும் சாப்பிட ஏற்றது. சிறிதளவு தித்திப்பு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கலாம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்
கத்தரிக்காய். ...
தோல் நோயாளிகள், புண், ஒவ்வாமை உள்ளவர்கள்
இக்காயைச் சாப்பிடக்கூடாது.
-
தோல் நோயாளிகள், புண், ஒவ்வாமை உள்ளவர்கள்
இக்காயைச் சாப்பிடக்கூடாது.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்
பலுனுள்ள தகவல்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்
உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்
பீட்ரூட்டின் சுவையானது கேரட்டைப் போன்றே சூப்பராக இருக்கும். அத்தகைய பீட்ரூட் நிறைய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.
அதில் அனைவருக்கும் தெரிந்தது, பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது தான்.
ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேக வைத்தோ அல்லது சாலட் போன்றோ சாப்பிடலாம்.
இப்போது பீட்ரூட்டை சாப்பிட்டால், என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று பார்ப்போமா!
லன்காசிறி
பீட்ரூட்டின் சுவையானது கேரட்டைப் போன்றே சூப்பராக இருக்கும். அத்தகைய பீட்ரூட் நிறைய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.
அதில் அனைவருக்கும் தெரிந்தது, பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது தான்.
ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேக வைத்தோ அல்லது சாலட் போன்றோ சாப்பிடலாம்.
இப்போது பீட்ரூட்டை சாப்பிட்டால், என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று பார்ப்போமா!
அல்சர்
அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும்.சிறுநீரக சுத்திகரிப்பு
பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும்.மூலநோய்
மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும்.இரத்த சோகை
பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.புற்றுநோய்
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட் சாறு குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.கொலஸ்ட்ரால்
நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.செரிமான பிரச்சனை
செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட் ஜூஸை குடித்தால், செரிமானப் பிரச்சனை நீங்கும்.சிவப்பணுக்கள் அதிகரிக்கும்
பீட்ரூட்டை, எலுமிச்சை சாற்றில் நனைத்து பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.மறதி
பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால், மூளையில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முதுமை மறதி (Dementia) மற்றும் ஞாபக மறதியை (Alzheimer) தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.தீப்புண்
கையை தீயில் சுட்டுக் கொண்டால், அப்போது பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.லன்காசிறி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உடலுக்கு ஆரோக்கியம் தரும் அத்திப்பழம்
» உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள்
» ஆரோக்கியம் தரும் வாழைபழம்!!
» ஆரோக்கியம் தரும் மக்காச்சோளம்
» ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்...
» உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள்
» ஆரோக்கியம் தரும் வாழைபழம்!!
» ஆரோக்கியம் தரும் மக்காச்சோளம்
» ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|