Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
104 அணைகளை புனரமைக்கும், தமிழக அரசின் திட்டம் அம்போ!!
2 posters
Page 1 of 1
104 அணைகளை புனரமைக்கும், தமிழக அரசின் திட்டம் அம்போ!!
உலக வங்கி நிதி உதவியுடன், 104 அணைகளை புனரமைக்கும், தமிழக அரசின் தொலைநோக்கு திட்டத்தில், எந்த முன்னேற்றமும் இல்லை. அணைகள் வறண்டு கிடந்த, கடந்த இரண்டு ஆண்டுகளை பயன்படுத்தாமல் விட்டதால், குறித்த காலக்கெடுவிற்குள், இந்த பணிகளை முடிக்க இயலாது என, தெரிகிறது.
தமிழகத்தில், 85 பெரிய அணைகளும், பல்வேறு சிறிய அணைகளும் உள்ளன. இவற்றின் மொத்த நீர் தேக்க திறன், 240 டி.எம்.சி., தற்போது, பராமரிப்பு குறைவு போன்ற காரணங்களால், முழு திறனையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதனால், இவற்றில், 104 அணைகளை புனரமைக்க, 2012 - 13ல், 'அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம்' தமிழக அரசு வெளியிட்ட முதல் தொலைநோக்கு திட்ட ஆவணத்தில் அறிவிக்கப்பட்டது. அணைகளின் கொள்ளளவு திறனை உயர்த்துவது, தேக்கப்படும் நீரை, திறம்பட உபயோகிப்பது, அணையின் நீண்ட கால செயல்திறனை உறுதி செய்வது ஆகியவை, இந்த திட்டத்தின் நோக்கங்கள்.
உலக வங்கி நிதி: இந்த திட்டத்திற்கான மதிப்பீடு, 745 கோடி ரூபாய். இதில், 80 சதவீதம், உலக வங்கி கடனாகவும், 20
சதவீதம், மாநில அரசின் பங்களிப்பாகவும் இருக்கும் என, உலக வங்கியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. திட்ட பணிகளை, 2012ல் துவங்கி, 2018க்குள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. பணிகளில், பல்வேறு துறைகளின் பங்களிப்புகளை ஒருங்கிணைக்க, தலைமை செயலரின் தலைமையில், மாநில திட்ட மேலாண்மை குழுவும் உருவாக்கப்பட்டது. முதல் கட்ட பணிகளுக்கான விரிவான மதிப்பீட்டிற்கு, இந்த குழு ஒப்புதல் அளித்ததோடு சரி; மேற்கொண்டு எந்த பணியும் நடக்கவில்லை. அதே போல், நீர்வள ஆதார துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வேளாண் பொறியியல் துறை ஆகியவை இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்தும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது ஆவணத் தில், வேளாண் பொறி யியல் துறை கழற்றி விடப்பட்டுள்ளது.
முடிவது சந்தேகம்: இது குறித்து, ஓய்வு பெற்ற பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2018க்குள் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 'காலம் பொன் போன்றது' என்ற, பழமொழியை மறந்த அரசு, பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், 30 சதவீத பணிகளை முடித்து இருக்கலாம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. எஞ்சியுள்ள நான்கு ஆண்டுகளில்,
Advertisement
104 அணைகளை புனரமைக்க முடியுமா என்பது, சந்தேகம் தான். இவ்வாறு அவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளிலும், பருவமழை பொய்த்ததால், பெரும்பாலான அணைகள் வறண்டு கிடந்தன. அந்த நேரத்தில், அணைகளை மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை திட்ட பணிகள் துவங்கவில்லை.
மதிப்பீட்டில் மட்டும் மாற்றம்: கடந்த, 2012ல் வெளியிடப்பட்ட தொலைநோக்கு திட்ட ஆவணத்தில், இந்த திட்டத்திற்கு, 745 கோடி ரூபாய் செலவாகும் என, தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட, இரண்டாவது ஆவணத் தில், 750 கோடி ரூபாயாக மதிப்பீடு மாற்றப்பட்டு உள்ளது.
எங்கு துவங்கும்? அணைகள் புனரமைப்பு திட்டத்தை, நான்கு கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டத்தில் - 18 அணைகள், இரண்டாம் கட்டத்தில் - 42 அணைகள், மூன்றாம் கட்டத்தில் - 28 அணைகள், நான்காம் கட்டத்தில் - 16 அணைகள் புனரமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. முதல் கட்டத்தில், நீர்வள ஆதார துறை மூலம், 12 அணைகளிலும்; மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம், ஆறு அணைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
- நமது நிருபர் -
தமிழகத்தில், 85 பெரிய அணைகளும், பல்வேறு சிறிய அணைகளும் உள்ளன. இவற்றின் மொத்த நீர் தேக்க திறன், 240 டி.எம்.சி., தற்போது, பராமரிப்பு குறைவு போன்ற காரணங்களால், முழு திறனையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதனால், இவற்றில், 104 அணைகளை புனரமைக்க, 2012 - 13ல், 'அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம்' தமிழக அரசு வெளியிட்ட முதல் தொலைநோக்கு திட்ட ஆவணத்தில் அறிவிக்கப்பட்டது. அணைகளின் கொள்ளளவு திறனை உயர்த்துவது, தேக்கப்படும் நீரை, திறம்பட உபயோகிப்பது, அணையின் நீண்ட கால செயல்திறனை உறுதி செய்வது ஆகியவை, இந்த திட்டத்தின் நோக்கங்கள்.
உலக வங்கி நிதி: இந்த திட்டத்திற்கான மதிப்பீடு, 745 கோடி ரூபாய். இதில், 80 சதவீதம், உலக வங்கி கடனாகவும், 20
சதவீதம், மாநில அரசின் பங்களிப்பாகவும் இருக்கும் என, உலக வங்கியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. திட்ட பணிகளை, 2012ல் துவங்கி, 2018க்குள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. பணிகளில், பல்வேறு துறைகளின் பங்களிப்புகளை ஒருங்கிணைக்க, தலைமை செயலரின் தலைமையில், மாநில திட்ட மேலாண்மை குழுவும் உருவாக்கப்பட்டது. முதல் கட்ட பணிகளுக்கான விரிவான மதிப்பீட்டிற்கு, இந்த குழு ஒப்புதல் அளித்ததோடு சரி; மேற்கொண்டு எந்த பணியும் நடக்கவில்லை. அதே போல், நீர்வள ஆதார துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வேளாண் பொறியியல் துறை ஆகியவை இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்தும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது ஆவணத் தில், வேளாண் பொறி யியல் துறை கழற்றி விடப்பட்டுள்ளது.
முடிவது சந்தேகம்: இது குறித்து, ஓய்வு பெற்ற பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2018க்குள் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 'காலம் பொன் போன்றது' என்ற, பழமொழியை மறந்த அரசு, பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், 30 சதவீத பணிகளை முடித்து இருக்கலாம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. எஞ்சியுள்ள நான்கு ஆண்டுகளில்,
Advertisement
104 அணைகளை புனரமைக்க முடியுமா என்பது, சந்தேகம் தான். இவ்வாறு அவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளிலும், பருவமழை பொய்த்ததால், பெரும்பாலான அணைகள் வறண்டு கிடந்தன. அந்த நேரத்தில், அணைகளை மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை திட்ட பணிகள் துவங்கவில்லை.
மதிப்பீட்டில் மட்டும் மாற்றம்: கடந்த, 2012ல் வெளியிடப்பட்ட தொலைநோக்கு திட்ட ஆவணத்தில், இந்த திட்டத்திற்கு, 745 கோடி ரூபாய் செலவாகும் என, தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட, இரண்டாவது ஆவணத் தில், 750 கோடி ரூபாயாக மதிப்பீடு மாற்றப்பட்டு உள்ளது.
எங்கு துவங்கும்? அணைகள் புனரமைப்பு திட்டத்தை, நான்கு கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டத்தில் - 18 அணைகள், இரண்டாம் கட்டத்தில் - 42 அணைகள், மூன்றாம் கட்டத்தில் - 28 அணைகள், நான்காம் கட்டத்தில் - 16 அணைகள் புனரமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. முதல் கட்டத்தில், நீர்வள ஆதார துறை மூலம், 12 அணைகளிலும்; மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம், ஆறு அணைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
- நமது நிருபர் -
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 104 அணைகளை புனரமைக்கும், தமிழக அரசின் திட்டம் அம்போ!!
இந்த திட்டம் முடிவடையும் வரை
ஒரே கட்சி ஆட்சியில இருக்கணுமே...!
-
மாற்று கட்சி வந்ததும் இது உருப்படாத
திட்டம்னு ஒதுக்கினாலும் ஒதுக்கிடுவாங்க..!!!
ஒரே கட்சி ஆட்சியில இருக்கணுமே...!
-
மாற்று கட்சி வந்ததும் இது உருப்படாத
திட்டம்னு ஒதுக்கினாலும் ஒதுக்கிடுவாங்க..!!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: 104 அணைகளை புனரமைக்கும், தமிழக அரசின் திட்டம் அம்போ!!
!_ !_ !_ !_rammalar wrote:இந்த திட்டம் முடிவடையும் வரை
ஒரே கட்சி ஆட்சியில இருக்கணுமே...!
-
மாற்று கட்சி வந்ததும் இது உருப்படாத
திட்டம்னு ஒதுக்கினாலும் ஒதுக்கிடுவாங்க..!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்
» தமிழக அரசின் ஆனவம் அடக்கப்படுமா?
» தமிழக அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது
» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
» 2018ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிப்பு
» தமிழக அரசின் ஆனவம் அடக்கப்படுமா?
» தமிழக அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது
» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
» 2018ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|