சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Khan11

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

5 posters

Go down

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Empty நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

Post by மதி Wed 9 Apr 2014 - 14:59

என் சிறு வயதில் காசு கொடுத்து வாங்கிய விளையாட்டுப் பொருள்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைக்காவது கிடைக்க வேண்டும் என்று தீஷுவிற்கு நிறைய‌ விளையாட்டுப் பொருட்கள் வாங்கி குவித்து, அதனைத் தொடவே மாட்டேனென்கிறாள் என்று நான் குறைப்பட்டதுண்டு.

குறைவு என்பதே நிறைவு என்பது குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களுக்கு முற்றிலும் உண்மை. சில ஆண்டுகளில் நிறைய விளையாட்டுப் பொருட்கள் குழந்தைக்குத் தேவையில்லை என்பது புரிந்தது. அதனால் இந்த முறை சம்முவிற்கு மிகவும் தேவையானதைத் தவிர வேறு எதுவும் வாங்கவில்லை.

மேலும் அவளிடம் இருக்கும் பொருட்களிலும் இரண்டு மட்டும் அவள் கண்ணில்படும் படி வைத்துவிட்டு மற்றதை உள்ளே எடுத்து வைத்துவிடுவோம். ஒவ்வொரு வாரமும் இரண்டு பொருட்கள் மாற்றி வைக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் சில நேரங்களில் இரண்டு மூன்று வாரங்களில் தான் மாற்றுகிறோம்.

அவள் விளையாடுவது பொதுவாக விளையாட்டுப் பொருட்களுடன் அல்ல. நான் மிகவும் சாதாரணமாக நினைக்கும் பொதுவான விஷயங்கள் அவளுக்கு விளையாட்டுப் பொருட்கள் கொடுக்காத மகிழ்ச்சி தருகின்றன. அவற்றில் சில.

1. வெளியில் நடந்து செல்வது : பொதுவாக பகல் நேரத்தில் 8 முதல் 10 மணி நேரம் வீட்டில் அடைந்து கிடக்கும் அவளுக்கு மிகவும் விருப்பமானது வாக்கிங். தானாக நடக்க வேண்டும் என்று அடம் பிடித்து நடந்து, ஒவ்வொரு புதிய பொருளுக்கும் நின்று, தொட்டு ரசித்து வருகிறாள். இப்பொழுது எங்களுக்குப் பிடித்த பொழுது போக்கு வாக்கிங்.

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. IMG_1090

2. தண்ணீர் : அவளுக்கு நிறைய தண்ணீர் இருக்க வேண்டும் என்பது கூட இல்லை. வாட்டர் பலூன், பாட்டிலிருந்து வடியும் தண்ணீர், தரையில் தெளித்து இருக்கும் தண்ணீர் என்று அனைத்தும் இஷ்டம்.

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. DSCF3337

3. சோப்பு ஊதி (Bubbles) : அவளால் ஊத முடியாவிட்டாலும், அக்கா ஊதுவதைப் பார்ப்பதிலும் பறக்கும் பபிள்ஸைப் பிடிப்பதிலும் விருப்பம்.

4. வேடிக்கைப் பார்த்தல் : ஜன்னல் வழியாக அசையும் செடிகளைப் பார்ப்பதில் விருப்பம் அதிகம். அங்கே இருக்கும் பொருட்களின் பெயர்களைச் சொல்ல சொல்ல சில நேரங்களில் ஓரிரு வார்த்தைகள் அவளிடமிருந்து வரும்.

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. DSCF3274

5. புத்தகம் : புத்தகத்தை தலை கீழாக வைத்து படிப்பதில் ஆர்வம் அதிகம். நாங்கள் அருகில் இல்லாவிட்டாலும் அவள் வாசித்துக் கொண்டுயிருக்கிறாள்.

6.பாட்டு : யார் பாடினாலும் (நான் பாடினால் கூட) பிடிக்கும். என்ன பாடினாலும் பிடிக்கும். சம்மு பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு ஸ்லோகத்தைப் பாடலாகப் பாடி தீஷுவிற்கு கற்றுக் கொடுத்தேன். இன்றும் அந்தப் பாடல் தான் சம்மு தூங்குவதற்கு பாடிக் கொண்டிருக்கிறேன்.

7. சிறு விளையாட்டுக்கள் : முகத்தை கை வைத்து மறைப்பது, ஒளிந்து கொள்ளுதல், பொருட்களை ஒளித்து வைத்து விளையாடுதல், நண்டு வருது நரி வருது போன்ற விளையாட்டுக்கள் விருப்பமானவை. ஆனால் திரும்ப திரும்ப விளையாடி நாங்கள் சோர்ந்து விடுவோம்.

8. சமையலறைப் பொருட்கள்: காலை வேளையில் பெரும்பாலும் கடுகு டப்பாவையோ அல்லது வெந்தய டப்பாவையோ ஆட்டி கிலுகிலுப்பையாக மாற்றிக் கொள்கிறாள். ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த பால், காய்கறித் தோல் போன்றவற்றின் குளிர் பிடிக்கிறது. அவைகளைப் பாத்திரத்தில் போட்டு எடுத்து விளையாடுகிறாள்.

தங்கள் வீட்டுச் சுட்டிகள் வாங்கிய விளையாட்டுப் பொருட்கள் இல்லாமல் எவ்வாறு விளையாடுகிறார்கள்?

நன்றி dheekshu.blogspot
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Empty Re: நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

Post by Nisha Wed 9 Apr 2014 - 15:19

அருமையான ஒரு திரி ஆரம்பித்து இருக்கின்றீர்கள் மதி!

குழந்தைகள் இருவருமே ஒன்றுசேர்ந்து விளையாடும் அழகே அழகு.

பகிர்ந்து கொள்ளப்ப ட்ட அனுபவமும்  அருமை!

 எனினும்  நமக்கு கிடைக்காதது நம்ம பசங்களுக்காவது கிடைக்கட்டுமே எனும் நினைப்பை நாங்கள் வி்ளையாட்டுபொருட்களில் காட்டவில்லை.

பெரும்பாலும் தினமும் வேலை விட்டு வந்தால்  சிற்றுண்டி பழம் கொடுக்கவெனவே நான் அரு்கில் இருக்கும் பார்க் அழைத்து சென்று விடுவேன்.
 
அங்கே மணலில் ஊஞ்சலில்சறுக்கில் என  ஓடி ஆடி விளையாடி ஆறுமணிபோல் வீடுக்கு கொண்டு வந்து   குளிக்க வைத்து   உணவும் கொடுத்து விட்டால் இருவருமே அயர்ந்து உறங்குவார்கள்! இதுவே வின்ரர் நேரம் ஐஸ் கொட்டி ஐசில் விலையாட்டுனு மாறும்.  அதற்கான  உபகரணம் வாங்கி கொடுப்போம்.

விளையாட்டு பொருட்கள் என  அவங்கள் பிறந்ததும் பிறந்த நாள் என  பரிசாக வந்தவைதான் பெரும்பாலும்.   பத்து வயது வரை கிறிஸ்மஸ்  பரிசாக  கார் சம்பந்த ப்ட்ட விளையட்டு பொருட்களை மகனும் பார்பி டால்  வீடுன்னு மகளும் கேட்கும் போது மட்டும் அந்த பரிசு வாங்க சம்மதிப்பேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் என் மகனுக்கு இபோது 17 வயது அவனுக்கு ஒருவயதில் வந்த  பிறந்த நாள் பரிசிலிருந்து  அவனுக்கு அப்பபோ கொடுத்த கிறிஸ்மஸ் பரிசு வரை பெட்டியிலேயே பத்திரமாக இப்பவும் வைச்சிருக்கான்.  எப்பவாவது நினைச்சால் குழந்தைபோல் எடுத்து தரையெலலாம்  உருட்டி  கார் ஓடி விளையாடி  திரிவான்.

மத்தப்படி கடைகளுக்கு போனால் அதையிதை காட்டி காட்டி கேட்பாங்க தான். அவசியமில்லைன்னால் வாங்கி கொடுக்க மாட்டேன். அல்லது இதுக்கு பதில் நல்ல ட்ரெஸ் வாங்கலாம். சைக்கிள் வாங்கலாம்னால் புரிந்துப்பாங்க. சின்ன வயதில் இருந்து மகனுக்கு காசு அதன் அருமை தெரியும் என்பதால்  பெரிய குழப்பம் வரவில்லை.சின்ன வயதிலிருந்தே  இருவருக்கும் விளையாட்டு  பொருளுக்கென நாங்க செலவு செய்தது குறைவுதான். விளையாட்டை பெருமபாலும் அவுட்டோரில் விட்டு விடுவேன்.   

மகள் கொஞ்சம் பிடிவாதம், அப்பா செல்லம் எனினும்  அழுது புரண்டாலும் உடனே கிடைக்காது எனபது தெரியும்.

சம்மர் நேரம்  ஸ்விமிமிங்க் போவாங்க. இருவருமே ஸ்விம்மிஞ்க்   கோர்ஸ் முறையாக படித்ததால்  கொஞ்சம் வெயில் எறித்தால்  ரவலை தூக்கிட்டு  கிளம்மிருவாங்க.

இதுவே சின்ன வயசில் எங்க வீ்ட்டு  பல்கனியில் பிளாஸ்டிக்கில்  குட்டி ஸ்விம் டப் வாங்கி அதில் தண்ணீரை நிறைத்து விளையாட விடுவேன்.

எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் மதி!  பத்து வயதின் பின் தாங்க தங்களை கவனிக்க ஆரம்பித்த பின் நம்மை தேடுவது குறைந்து போகும். அதனால் பத்து வயது வ்ரை தான் நமக்கும் பசங்களுக்கும் நமக்குமான் காலம் என புரிந்துகொண்டு அந்த காலத்தினை மிஸ் செய்யாமல் இருக்கணும்.


Last edited by Nisha on Wed 9 Apr 2014 - 17:28; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Empty Re: நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

Post by மதி Wed 9 Apr 2014 - 15:29

நன்றி அக்கா இந்த பதிவை நான் பதியும் போது இப்படி ஒரு அருமையான அனுபவ பதில் பகிரப்படுமென்று நினைக்க வில்லை உங்களின் உண்மையான வெளிப்பாடு கண்டு வியக்கிறது என் உள்ளம் நன்றிகள் சொல்லி மகிழ்கிறேன்.
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Empty Re: நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

Post by Nisha Wed 9 Apr 2014 - 15:32

அப்புறம் நேரம் கிடைத்தால்  இரண்டு மூன்று குடும்பமாக அருகில் இருக்கும் ஏரி  க்கரை போவோம்.  போகும் போது பிரெட்  இறைச்சின்னு  வாங்கி போனால்  கபடி ,கால் பந்துன்னு சிறியோர் பெரியோர் வித்தியாசமின்றி பிரிந்து  விளையாடி அப்படியே நெருப்பு மூட்டி சுட்டு சாபபிட்டு வருவோம்.

யூலை, ஆக்ஸ்ட் மாதங்கள் தினம்  இந்த ஏரிக்கரை விசிட் இருக்கும். நாங்கள் லேடிஸ் சேர்ந்து பசங்களோடு போனல  எங்க வீட்டுகாரங்க  வேலை முடிந்து வந்து ஜாயின் ஆகிக்குவாங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Empty Re: நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

Post by Nisha Wed 9 Apr 2014 - 15:50

மதி wrote:நன்றி அக்கா இந்த பதிவை நான்  பதியும் போது இப்படி ஒரு அருமையான அனுபவ பதில் பகிரப்படுமென்று நினைக்க வில்லை உங்களின் உண்மையான வெளிப்பாடு கண்டு வியக்கிறது என் உள்ளம் நன்றிகள் சொல்லி மகிழ்கிறேன்.

குழந்தைகள்  இயல்பிலேயே நாம் என்ன செய்கிறோமோ அதனை பார்த்து செய்பவர்கள்மதி! அவர்களோட முதல் முன் மாதிரி நாம்தான் . நாம் சரியாக நம் சூழலை கற்பித்து  வளர்த்தால் அவங்க நம்மை புரிந்துப்பாங்க.

மகனோ, மகளோ என்னிடம் தேவையில்லன்னு நான் நினைக்கும் பொருள் கேட்டால் கேட்கும் கேள்வி ஒன்று  இது கூட இல்லாமல்  இலங்கையில் எத்தனை சின்னகுழந்தைங்க கஷ்டப்டுராங்கன்னு  தெரியும்தானேன்னு

அவங்களுக்கு தெரியணும் என்பதுக்காகவே  நாங்க இலங்கை  போன மூன்று தடவையும் அனாதைகுழந்தைகள்  விடுதிக்கு சென்று ஒரு நாள் முழுக்க செலவு செய்வோம்.  என் பசங்க கையில்  பணம் கொடுக்க செய்வோம். அவங்களுக்கு அதை பார்த்து தெரியும்.  தங்களுக்கு நல்ல அப்பா அம்மா இருக்காங்க அதுவே போதும்னு புரியும். வல்து கு்றைந்தோர் விடுதிக்கு அழைத்துசெல்வோம். எங்கள் பயண  திட்டத்தில்  இது கட்டாயம் இருக்கும்.


அப்புறம் ரெம்ப முக்கியமான் விடயம்.. நம் எல்லா சிக்கனமும் கட்டுப்பாடும்  10, 12 வயதுக்குள் முடிந்து விடணும். அதன் பின் அவர்கள் வளர்ந்து ஊருலகம் உணர ஆரம்பித்தபின்    ஸ்டேஜ் , பார்க்கவும், மார்க் பொருட்கள் வாங்கவும் ஆசைபடுவாங்க.  மற்றவங்க  சேர்ந்து விளையாடும் ப்சங்க, கூடப்படிக்கும்  பசங்க  முன்னால் அவங்க தன்மானம் காக்க விரும்பும் போது  நம அவங்க விருப்பம்கேட்டு செய்யணும்.

சின்ன வயதில் செய்வது அவங்களுக்கு தெரியாது. வளர்ந்த பின் செய்வது அவர்கள் மனதில் பதிந்து நமக்காக மதிப்பை அவர்கள் மனதில் உயர்த்தும்.  

ஆனால் நம்மில் பலரிந்த விடயத்தில் அப்படியே எதிர்மறையாய் தான் இருக்கோம் மதி!

 நான் என் மகனுடன் இப்ப மகன் மக்ள் என பேசுவதை விட பிரெண்டு  என பேசுவதால் அவர்கள் நிரம்ப விடயம்  என்கிட்ட பேசி பரிந்துக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு அடியும் எனக்கு தெரியும் என்பதே போதும் அல்லவா.


Last edited by Nisha on Wed 9 Apr 2014 - 17:32; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Empty Re: நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

Post by மதி Wed 9 Apr 2014 - 16:05

நன்றிகள் சொல்ல வார்தைகள் இல்லை எனக்கு அறியாத பலவிடயங்களை இந்த பதிவின் வழியாக அறிந்து கொண்டடேன்
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Empty Re: நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

Post by பானுஷபானா Thu 10 Apr 2014 - 11:11

அருமையான பதிவு மதி நிஷாவின் மறுமொழியும் சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Empty Re: நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

Post by ahmad78 Thu 10 Apr 2014 - 16:32

இதை படிக்கும்போது நிறைய விஷயங்களை நான் இழந்துவிட்டேனோ என தோன்றுகிறது.

மதி நிஷா உங்கள் இருவரின் அனுபவங்களும் அழகாக சொல்லியுள்ளீர்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Empty Re: நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

Post by மதி Thu 10 Apr 2014 - 17:45

பானுஷபானா wrote:அருமையான பதிவு மதி நிஷாவின் மறுமொழியும் சூப்பர்

நன்றி அக்கா  )( 
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Empty Re: நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

Post by மதி Thu 10 Apr 2014 - 17:47

ahmad78 wrote:இதை படிக்கும்போது நிறைய விஷயங்களை நான் இழந்துவிட்டேனோ என தோன்றுகிறது.

மதி நிஷா உங்கள் இருவரின் அனுபவங்களும் அழகாக சொல்லியுள்ளீர்கள்.

நன்றி ஐயா

அதிகம் இழந்தீர்கள் என்று தெரிந்தால் இனியாது இழக்கவேண்டாம் உங்களின் பதிலுக்கு நன்றி
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Empty Re: நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

Post by Nisha Thu 10 Apr 2014 - 18:53

ahmad78 wrote:இதை படிக்கும்போது நிறைய விஷயங்களை நான் இழந்துவிட்டேனோ என தோன்றுகிறது.

மதி நிஷா உங்கள் இருவரின் அனுபவங்களும் அழகாக சொல்லியுள்ளீர்கள்.

ஆம் ! முஹைதீன் . சந்தர்ப்ப சூழலாம்  குடும்பத்தினை காக்கவென  புறபட்டு  தனியாய் வாழும் ஒவ்வொரு ஆணும்  இந்த இழப்பை அனுபவிப்பதோடு தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்குமான  இனிய  அனுபவங்கள், வாழ்க்கைப்பாடங்களையும் இழக்கின்றார்கள்.

எங்கள் சின்ன வயதில் அப்பாவை நாங்கள் ரெம்ப பிரிந்திருந்ததால் எனக்கு திருமணமானாலுமெங்கே போனாலும் கணவரை விட்டு போககூடாது சேர்ந்தே போய் சேர்ந்தே வரணும் என  திரும்ணத்துக்கு முன்னாடியே முடிவெடுத்து விட்டேன்! பிள்ளைகளுக்கு அப்பாவின் அன்புடன் கண்டிப்பும் வேண்டும் எனபது என் அனுபவம்!

 அப்பா எங்களுடன்  இல்லாமல் இருந்தது எங்களை ரெம்ப பாதித்தது!

வெளி நாட்டு வாழ்க்கை புலிவால் பிடித்த நிலைதானே! குடும்பமா வருமானமா என்றால்  எதை முடிவெடுப்பதென  தெரியாதுதிண்டாடுதல்தான் நடக்கிறது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Empty Re: நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

Post by ராகவா Thu 10 Apr 2014 - 19:54

மதி wrote:நன்றிகள் சொல்ல வார்தைகள் இல்லை எனக்கு அறியாத பலவிடயங்களை இந்த பதிவின் வழியாக அறிந்து கொண்டடேன்
 !_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது. Empty Re: நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum