Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1by rammalar Today at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25
மரகதவல்லிக்கு மணக்கோலம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
மரகதவல்லிக்கு மணக்கோலம்
--
மதுரை மாதரசி, அன்னை மீனாட்சி, இன்று
சுந்தரேஸ்வரப்பெருமானை திருமணம் செய்து
கொள்கிறாள்.
மீனாட்சியின் தாய் காஞ்சனமாலை. இவள்
முற்பிறவி ஒன்றில், வித்யாவதி என்னும்
பெயரில் மீனாட்சியின் பக்தையாக இருந்தாள்.
தன் வாழ்நாளை, மீனாட்சியின் திருப்
பணிக்காகவே அர்ப்பணித்தாள். கோயிலைச்
சுத்தம் செய்வாள். மீனாட்சியை தன் மகளாக
எண்ணி அவளையே பார்த்துக் கொண்டிருப்பாள்.
தன்னைப் பெறாத அந்தத்தாய்க்கு மீனாட்சி
காட்சியளித்து, ""என்னை மகளாய் நினைப்பவளே!
உனக்கு என்ன வரம் வேண்டும்?'' என்றாள்.அம்மா,
""பிறவி என்ற ஒன்று வேண்டாம். அப்படி
இருந்தால், இனி வரும் பிறவி ஒன்றில் எனக்கு
நீ மகளாய்ப் பிறக்க வேண்டும். உன்னைப் பெற்ற
பயனால் நான் முக்தியடைய வேண்டும்,'' என்றாள்
அந்தப்பெண்.மீனாட்சி மனமுவந்து அந்தவரத்தை
வழங்கினாள். அதுமட்டுமல்ல, அப்பிறவியில்
கோயிலில் குப்பை கூட்டுபவளாக இருந்தவள்,
இன்னொரு பிறவியில் மகாராணியாகப் பிறந்தாள்.
பெயர் காஞ்சனமாலை. "காஞ்சனா' என்றால்
"தங்கம்'. தங்கமாலை எவ்வளவு அழகாக
இருக்குமோ, அதுபோல் அழகு படைத்தவள்
காஞ்சனமாலை.
அவள் மதுரை மன்னன் மலையத்துவஜனை
திருமணம் செய்தாள். பாண்டியர்களின் கொடியில்
"பொதிகை மலை' தான் சின்னமாக இருந்துள்ளது.
"மலையத்துவஜனை' "மலை+ துவஜன்' என்று
பிரிப்பார்கள். "துவஜம்' என்றால் "கொடி'. "மலைக்
கொடியை உடையவன்' என்று இதற்குப் பொருள்.
மீனாட்சியின் பிறப்புக்கு பிறகு தான் அவர்கள்
மீன்கொடிக்கு மாறியிருக்க வேண்டும்.இவர்களுக்கு
குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, பெரியோர்
அறிவுரைப்படி புத்திரப்பேறுக்கான யாகம் செய்தான்.
அந்த யாகத்தீயில் இருந்து எழுந்த மூன்று வயது
பெண் குழந்தை அவனது மடியில் அமர்ந்தது.
அவளுக்கு "தடாதகை' என்று பெயரிட்டனர்.
பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்கள் இருந்ததால்
பெற்றோர் கவலை கொண்டனர்.அப்போது, அசரீரி
ஒலித்தது.""மகனே! கவலை வேண்டாம். இவள்
யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற விதி
இருக்கிறதோ, அவர் அவள் எதிரே வரும் போது,
ஒரு ஸ்தனம் மறைந்து விடும்,'' என்றது.
அவளை ஆணுக்கு நிகராக பெற்றோர் வளர்த்தனர்.
வயது வந்ததும் பட்டம் சூட்டினர். அந்த பட்டத்துராணி
உலகையே வென்றாள். கடைசியாக,
கைலாயத்துக்குப் போருக்கு அழைத்த போது,
சிவபெருமான் அவள் எதிரே வர ஸ்தனம் மறைந்தது.
தன் மணாளன் அவர் என்பதை அறிந்து போரை
நிறுத்தினாள். மாப்பிள்ளை மிகவும் அழகானவராக
இருந்ததால், "சுந்தரேஸ்வரர்' என பெயர் பெற்றார்.
"சுந்தரம்' என்றால் "அழகு'. மதுரை வந்து மீனாட்சிக்கு
மாலையிட்டார். மதுரையின் மன்னராகப் பொறுப்பேற்றார்.
அவரை "சுந்தர பாண்டியன்' எனமக்கள் அழைத்தனர்.
தாய், தந்தையின் திருமணத்தைக் காண திருப்பரங்குன்றம்
முருகனும், தங்கையை தாரை வார்த்துக்கொடுக்க
பவளக்கனிவாய் பெருமாளும் வந்தனர்.
மதுரையில் பெண்களுக்கே மவுசு அதிகம்.
அவர்களுக்கெல்லாம் மாங்கல்ய பாக்கியம் தந்து,
மங்கல வாழ்வு அளிக்கிறாள் மீனாட்சி.
-
-----------------------------------
சுந்தரேஸ்வரப்பெருமானை திருமணம் செய்து
கொள்கிறாள்.
மீனாட்சியின் தாய் காஞ்சனமாலை. இவள்
முற்பிறவி ஒன்றில், வித்யாவதி என்னும்
பெயரில் மீனாட்சியின் பக்தையாக இருந்தாள்.
தன் வாழ்நாளை, மீனாட்சியின் திருப்
பணிக்காகவே அர்ப்பணித்தாள். கோயிலைச்
சுத்தம் செய்வாள். மீனாட்சியை தன் மகளாக
எண்ணி அவளையே பார்த்துக் கொண்டிருப்பாள்.
தன்னைப் பெறாத அந்தத்தாய்க்கு மீனாட்சி
காட்சியளித்து, ""என்னை மகளாய் நினைப்பவளே!
உனக்கு என்ன வரம் வேண்டும்?'' என்றாள்.அம்மா,
""பிறவி என்ற ஒன்று வேண்டாம். அப்படி
இருந்தால், இனி வரும் பிறவி ஒன்றில் எனக்கு
நீ மகளாய்ப் பிறக்க வேண்டும். உன்னைப் பெற்ற
பயனால் நான் முக்தியடைய வேண்டும்,'' என்றாள்
அந்தப்பெண்.மீனாட்சி மனமுவந்து அந்தவரத்தை
வழங்கினாள். அதுமட்டுமல்ல, அப்பிறவியில்
கோயிலில் குப்பை கூட்டுபவளாக இருந்தவள்,
இன்னொரு பிறவியில் மகாராணியாகப் பிறந்தாள்.
பெயர் காஞ்சனமாலை. "காஞ்சனா' என்றால்
"தங்கம்'. தங்கமாலை எவ்வளவு அழகாக
இருக்குமோ, அதுபோல் அழகு படைத்தவள்
காஞ்சனமாலை.
அவள் மதுரை மன்னன் மலையத்துவஜனை
திருமணம் செய்தாள். பாண்டியர்களின் கொடியில்
"பொதிகை மலை' தான் சின்னமாக இருந்துள்ளது.
"மலையத்துவஜனை' "மலை+ துவஜன்' என்று
பிரிப்பார்கள். "துவஜம்' என்றால் "கொடி'. "மலைக்
கொடியை உடையவன்' என்று இதற்குப் பொருள்.
மீனாட்சியின் பிறப்புக்கு பிறகு தான் அவர்கள்
மீன்கொடிக்கு மாறியிருக்க வேண்டும்.இவர்களுக்கு
குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, பெரியோர்
அறிவுரைப்படி புத்திரப்பேறுக்கான யாகம் செய்தான்.
அந்த யாகத்தீயில் இருந்து எழுந்த மூன்று வயது
பெண் குழந்தை அவனது மடியில் அமர்ந்தது.
அவளுக்கு "தடாதகை' என்று பெயரிட்டனர்.
பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்கள் இருந்ததால்
பெற்றோர் கவலை கொண்டனர்.அப்போது, அசரீரி
ஒலித்தது.""மகனே! கவலை வேண்டாம். இவள்
யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற விதி
இருக்கிறதோ, அவர் அவள் எதிரே வரும் போது,
ஒரு ஸ்தனம் மறைந்து விடும்,'' என்றது.
அவளை ஆணுக்கு நிகராக பெற்றோர் வளர்த்தனர்.
வயது வந்ததும் பட்டம் சூட்டினர். அந்த பட்டத்துராணி
உலகையே வென்றாள். கடைசியாக,
கைலாயத்துக்குப் போருக்கு அழைத்த போது,
சிவபெருமான் அவள் எதிரே வர ஸ்தனம் மறைந்தது.
தன் மணாளன் அவர் என்பதை அறிந்து போரை
நிறுத்தினாள். மாப்பிள்ளை மிகவும் அழகானவராக
இருந்ததால், "சுந்தரேஸ்வரர்' என பெயர் பெற்றார்.
"சுந்தரம்' என்றால் "அழகு'. மதுரை வந்து மீனாட்சிக்கு
மாலையிட்டார். மதுரையின் மன்னராகப் பொறுப்பேற்றார்.
அவரை "சுந்தர பாண்டியன்' எனமக்கள் அழைத்தனர்.
தாய், தந்தையின் திருமணத்தைக் காண திருப்பரங்குன்றம்
முருகனும், தங்கையை தாரை வார்த்துக்கொடுக்க
பவளக்கனிவாய் பெருமாளும் வந்தனர்.
மதுரையில் பெண்களுக்கே மவுசு அதிகம்.
அவர்களுக்கெல்லாம் மாங்கல்ய பாக்கியம் தந்து,
மங்கல வாழ்வு அளிக்கிறாள் மீனாட்சி.
-
-----------------------------------
நன்றி: தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24284
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|