சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

முல்லைவாசன் கவிதைகள் Khan11

முல்லைவாசன் கவிதைகள்

4 posters

Go down

முல்லைவாசன் கவிதைகள் Empty முல்லைவாசன் கவிதைகள்

Post by முல்லைவாசன் Tue 27 May 2014 - 17:12

விடுபடல்

விடுபடத்தான்
விரும்புகிறோம்
விருப்பங்களைத் தாண்டிய
கட்டாயங்கள்
எப்போதும் துரத்துகின்றன

ஒவ்வொரு கட்டமும்
நிறைவடையாமல்
அடுத்த கட்டத்தில்
வந்து சேர்கின்றன

பாறையின் இடுக்குகளில்
வேரின் பற்றாய்
வாய்க்கும் சிறு கணங்கள்
தவிக்கவும் துடிக்கவும்
தயவின்றி விரட்டுகின்றன.

முல்லைவாசன்
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முல்லைவாசன் கவிதைகள் Empty Re: முல்லைவாசன் கவிதைகள்

Post by முல்லைவாசன் Tue 27 May 2014 - 17:14

ஓடுபாதை

இன்றுவரை
குழந்தை மனசு கைகூடாமல்
மழலைப் பருவத்தின் பிசிறுகளோடு
விழுந்து எழுந்து
போய்க் கொண்டு இருக்கிறோம்.

வேட்டை நாயின்
அதே தயார் நிலை
தயவு செய்து
அருள் கூர்ந்து
முகஸ்துதி
ஒப்பனைகளோடு
இரண்டறக் கலந்து விட்டோம்

எந்த துர்பாக்கியத்தின்
தாக்கத்தில் நாம்
பின்தங்கிவிட முடியும்?

ஓட்டமும் நடையுமாய்
வடிவமைக்கப்பட்டு விட்டோம்
நின்று நிதானிக்க நேரமில்லை
ஓடுபாதையில்
ஒவ்வொரு கணமும் போராட்டமே.

முல்லைவாசன்
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முல்லைவாசன் கவிதைகள் Empty Re: முல்லைவாசன் கவிதைகள்

Post by Nisha Tue 27 May 2014 - 17:23

ம்ம் முகஸ்துதி ஒப்பனைகள் இல்லாவிட்டல வாழ்க்கை ருசிப்பதில்லை தான். முகஸ்துதியும் மனசாற வந்தால் இன்னும் ஊக்கம் தரும் என்பதும் நிஜமே..

எப்படியோ எதை நினைத்து எதையோ நோக்கி ஓடிக்கொண்டோ இருக்கின்றோம் என்பது மட்டும் நிஜமாய் போனது

அருமை ஐயா. இன்னும் எழுதுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முல்லைவாசன் கவிதைகள் Empty Re: முல்லைவாசன் கவிதைகள்

Post by முல்லைவாசன் Thu 29 May 2014 - 18:37

வேர்கள்


பாகுபாடுகள் பார்க்காமல்
பரவி விடுகின்றன வேர்கள்
வேர் பற்றை
நம்மால் பின்பற்ற முடியவில்லை

அடையாளங்களை
விரும்பாமலேயே வேர்கள்
வியாபித்து வியாபித்து
காற்றையும் நிழலையும்
வாரி வழங்குகின்றன.

திசைகளை பிரிக்காமல்
வேர்கள் திண்மையோடு இருக்கின்றன
விதவிதமான பிரிவினைகளால்
நமது வானத்திலும் பூமியிலும்
விரிசல்கள்.

மண் பிடிக்கும் வேராய்
மலர் பிடிக்கும் கிளையாய்
பூச்சுக்கள் அற்று இருப்போம்
மெருகுகள்
எப்போதும் கருகும்.

முல்லைவாசன்
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முல்லைவாசன் கவிதைகள் Empty Re: முல்லைவாசன் கவிதைகள்

Post by முல்லைவாசன் Thu 29 May 2014 - 18:46

நிறைவு


மவுனங்களின் இடைவெளியை
குறைப்பது யார்?
சளைக்காத போட்டி
சம நிலையிலேயே முடிகின்றது.

உனக்கும் எனக்குமான
காதல் சுடருக்குள்
கருவட்டம் விழாத வரை
ஒருவரை ஒருவர்
விரும்பிக் கொண்டே இருப்போம்

உனது
எண்ணங்களின் தொகுப்பில் நானும்
எனது 
எண்ணங்களின் தொகுப்பில் நீயும்
எப்போதும் வாழ்வோம்

மனசு நிறைந்தவர்கள்
மட்டுமே
மண்ணில் வாழ்பவர்கள்

முல்லைவாசன்
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முல்லைவாசன் கவிதைகள் Empty Re: முல்லைவாசன் கவிதைகள்

Post by ராகவா Thu 29 May 2014 - 18:59

அருமை அன்பரே!!
முல்லைவாசன் கவிதைகள் Images?q=tbn:ANd9GcSLXh09XgvfGPQXiC2m7g6eS4MUTNWsoELPAO9hwS5Y7LerUd78
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முல்லைவாசன் கவிதைகள் Empty Re: முல்லைவாசன் கவிதைகள்

Post by இராமஜெயம் Sat 31 May 2014 - 18:29

கோலம்


புள்ளிகளில் பூக்கிறது
கோலம்
கோலங்களில் பூக்கிறது
வாசல்.

ரசித்தும்...
மிதித்தும்...
தாண்டியும்...
மலரும் கோலங்களின்
மாண்புகள் மறையவே இல்லை

வீடு மாறுகிறது
வாசல் மாறுகிறது
போடும் கோலங்கள் தான்
பூமியின் வடிவத்தை புரிய வைக்கின்றன

சிறியதாய்...
பெரியதாய்...
மனசின் திரைகள்
எப்படி விலகுமோ
கோலத்தின் காட்சியும் அப்படியே

ஒவ்வொரு முறையும்
கோலப்போட்டி வலுக்கிறது
கோடுகளில் மறையும் புள்ளியாய்...
போட்டியும்...
கோலம் மட்டுமே வெற்றி கொள்கிறது
இராமஜெயம்
இராமஜெயம்
புதுமுகம்

பதிவுகள்:- : 61
மதிப்பீடுகள் : 10

http://www.rmsudarkodi.blogspot.in/

Back to top Go down

முல்லைவாசன் கவிதைகள் Empty Re: முல்லைவாசன் கவிதைகள்

Post by இராமஜெயம் Sat 31 May 2014 - 18:38

கோடு


இடம் விட்டு
இடம் நகர்கிறோம்
நமது இடம்
கோடிட்ட இடமாகவே உள்ளது

நிற்காமல் நீள்கிறத
நமது கோடு
கோடுகள் அற்ற உலகத்தை 
கனவுகளிலும் காண முடியவில்லை

கோடுகளின் துணையுடனே
போகிறோம் வருகிறோம்
நமது கோடே
நீளம் என்ற
கர்வத்தில் நெகிழ்ந்து போகிறோம்

நீளமான கோடு
இன்னும் கிழைிக்கப்படாமலேயே
கிடக்கிறது.


(கோலம் மற்றும் கோடு இரண்டும் முல்லைவாசன் கவிதைகள்)
இராமஜெயம்
இராமஜெயம்
புதுமுகம்

பதிவுகள்:- : 61
மதிப்பீடுகள் : 10

http://www.rmsudarkodi.blogspot.in/

Back to top Go down

முல்லைவாசன் கவிதைகள் Empty Re: முல்லைவாசன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum