சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

ராஜபாளையம் ஸ்பேசல்..... Khan11

ராஜபாளையம் ஸ்பேசல்.....

Go down

ராஜபாளையம் ஸ்பேசல்..... Empty ராஜபாளையம் ஸ்பேசல்.....

Post by ராகவா Thu 29 May 2014 - 16:14

ராஜபாளையம் ஸ்பேசல்..... Rajapalayam_Hound

வெளிநாடுகளுக்கு ராஜபாளையம் நாய்கள்!

ராஜபாளையம் ஸ்பேசல்..... Images


ராஜபாளையம் : வெளிநாடுகளுக்கு ராஜபாளையம் நாய்கள் செல்லும் நிலையில் , நாய்குட்டிகள் உற்பத்தியில் போலிகள் புகுந்துள்ளதால் இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். உலகில் உள்ள 350 இன நாய்களில் இந்திய வகையில் 6 இனங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் ராஜபாளையம், சிப்பிபாறை, கன்னி, கோம்பை என நான்கு இனங்கள் தென்தமிழகத்தை சேர்ந்தவை. வீட்டு உணவை சாப்பிட்டு வளர்பவை. இதற்கு வெளிநாட்டு நாய்களை போன்று எஜமான் விசுவாசம், கீழ்படிதல், நுகர்வு தன்மை, சுறுசுறுப்பு உண்டு. வீட்டு காவலுக்கு ராஜபாளையம் நாய்கள், வேட்டைக்காக சிப்பிபாறை, கோம்பை, கன்னி வகை நாய்கள் பயன்படுகின்றன.



நன்றி:http://kavitamilan.blogspot.in/2011/08/blog-post_7984.html
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராஜபாளையம் ஸ்பேசல்..... Empty Re: ராஜபாளையம் ஸ்பேசல்.....

Post by ராகவா Thu 29 May 2014 - 16:16

ராஜபாளையம் ஸ்பேசல்..... DSC00528

ராஜபாளையத்தில் "கென்னல் கிளப்' அங்கீகாரம் இல்லாத சில பண்ணைகளும் உள்ளன. இங்கு குடிசை தொழில் போல் நாய்குட்டி உற்பத்தியும் மாறி வருவதால் சிலர் லாப நோக்குடன் , தெருநாய்களை கலந்து, கலப்பின குட்டிகள் உருவாக்குகின்றனர். இந்த கலப்பின குட்டிகளோ பார்வை கோளாறு, காது கேட்கும் தன்மை குறைவு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. குட்டியாக இருக்கும்போது தெரியாத இந்த குறைகள், வளரும்போது தான் தெரிகிறது. இதில் ஏமாறும் பலரும் எங்கு புகார் செய்வது என தெரியாமல் உள்ளனர். ராஜபாளையம் வகை நாய்களுக்கு தேவை அதிகமாக இருப்பதால், இத்தொழிலை அரசு முறைப்படுத்தி, நாய் உற்பத்தியை பெருக்கலாம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராஜபாளையம் ஸ்பேசல்..... Empty Re: ராஜபாளையம் ஸ்பேசல்.....

Post by ராகவா Thu 29 May 2014 - 16:17

ராஜபாளையம் ஸ்பேசல்..... SalemDog

ராஜபாளையம் கான்டம்: பிளேட் கென்னல் கிளப் நாய்பண்ணை உரிமையாளர் சுரேந்திரன்பாபு கூறியதாவது: ராஜபாளையம் வகை நாய்கள் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு மாறும் தன்மை கொண்டவை. இதற்கு எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு . ஜம்முவில் உள்ள பாராமுல்லா ராணுவ முகாம், அந்தமான் தீவிற்கு அனுப்பி உள்ளோம். வெளிநாட்டு மோகத்தால், நம்நாட்டு நாய்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது கேரளாவில் வீடு, எஸ்டேட்களுக்கு இங்கிருந்து குட்டிகள் செல்கின்றன. ஆந்திரா, கர்நாடகாவிற்கும் குட்டி செல்கின்றன. இத்தொழிலை அரசு முறைப்படுத்தி, வங்கி கடனுக்கு ஏற்பாடு செய்தால், வேலை இல்லா இளைஞர்கள் பலர் இத்தொழிலில் ஈடுபடுவர், என்றார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராஜபாளையம் ஸ்பேசல்..... Empty Re: ராஜபாளையம் ஸ்பேசல்.....

Post by ராகவா Thu 29 May 2014 - 16:20

ஊருக்குள் நுழையும்
பொழுதே "நாய்களின் நகரம்" உங்களை வரவேற்கிறது
என்றுதான் போர்டு வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு
ராஜபாளையத்து நாய்கள் மிகவும் புகழ் பெற்றவை.

 
ராஜபாளையம் ஸ்பேசல்..... Dog1ராஜபாளையம் ஸ்பேசல்..... Dog2

             பல வருடங்களுக்கு முன்பு, ஆந்திராவிலிருந்து
'ராஜூக்கள்' என்னும் சமூகத்தினர் இங்கு புலம்பெயர்ந்து
ஆட்சிபுரிந்ததால் ராஜாக்களின் கோட்டை அதாவது
"ராஜபாளையம்" என்று அழைக்கப்படுவதாக
படித்திருக்கிறேன். மேலும் இங்கு சஞ்சீவி மலை என்ற ஒரு
மலை உள்ளது. இது லக்ஷ்மனனுக்காக, அனுமன் எடுத்து
வந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்கிறார்கள்.

ராஜபாளையம் ஸ்பேசல்..... Dog3ராஜபாளையம் ஸ்பேசல்..... Dog
 

           ராஜபாளையத்திற்கு அருகில் அய்யனார்கோவில் என்ற
ஒரு இடம் உள்ளது. இது மேற்குத்தொடர்ச்சி மலையின்
அடிவாரத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதி. இங்கு அருவியும், பல
அரிய வகை மூலிகைகளும், உயிரினங்களும் உள்ளன. இது
பிக்னிக் செல்வதற்கு ஏற்ற இடம். ராஜபாளையத்தைச் சுற்றி
பல காட்டன் மில்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலோர்  
வேலை பார்ப்பது இந்த ஆலைகளில்தான்.

ராஜபாளையம் ஸ்பேசல்..... Sanjராஜபாளையம் ஸ்பேசல்..... San



ராஜபாளையம் ஸ்பேசல்..... Ay1ராஜபாளையம் ஸ்பேசல்..... Ay2


ராஜபாளையம் ஸ்பேசல்..... Ay3ராஜபாளையம் ஸ்பேசல்..... Ay4



ராஜபாளையம் ஸ்பேசல்..... Va
இந்த ராஜபாளையத்தைப் பற்றி சமீபத்தில் படித்த கட்டுரை :
சரித்திரங்களின் சங்கமம் ராஜபாளையம் :-

            ' தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை
அழித்திடுவோம்...' என்ற இந்த வரிகளுக்கு சொந்தக்காரரான
முண்டாசுக் கவிஞர் பாரதியார், ஒருமுறை பாழடைந்த தனது
வீட்டை சீரமைக்க எண்ணி, மனைவி செல்லம்மாள்
வற்புறுத்தலால், ராஜபாளையம் ஜமீன்தாரை பார்க்க வந்தார்.
அவர் ஊரில் இல்லாததால், பசியும், களைப்புமாய்
ராஜபாளையத்தில் எழுதிய அனல் வரிகள்தான் இவை. கி.பி.15
ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னரின் தலைமுறையைச்
சேர்ந்த சின்னராஜா இங்கு கோட்டை கட்டி ராஜ்ஜியம்
செய்ததால், இந்த ஊரின் பெயர் ராஜபாளையமாயிற்று.
பாளையம் என்றால் கோட்டை என்று பொருள்.
ஆரம்பத்தில் கீழராஜகுலராமன் என்ற பகுதியில் தங்கி நகரை
விரிவுபடுத்தினர். பின், கி.பி. 1483 ல் ராஜபாளையத்தில் உள்ள
சஞ்சீவி மலையில் இருப்பிடத்தை மாற்றினர்.
              விஜயநகரத்தில் நடந்த கள்ளிக்கோட்டை போரால்
மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இதனால்
அங்கிருந்து ராஜூக்கள் சமூகத்தினர் ராஜபாளையத்தில்
குடியேறினர். இதன் அடையாளமாக தற்போதும்
சமுதாயசாவடி இருக்கிறது. இங்கு கி.பி.12 ம்
நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய மன்னர்களால்
விரிவு படுத்தப்பட்ட வெங்கடேசப் பெருமாள் கோவில்
உள்ளது. மதுரையை ஆண்ட முதலாம் ஜடாவர்ம
குலசேகரபாண்டியன் இக்கோயிலின் பராமரிப்பு
செலவுகளுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினார்.
இவ்விபரங்கள் கோயில் கர்ப்பகிரகத்தில் கல்வெட்டுகளாக
பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் தாமரைக்கண்ணன் என்பவர்,
தினமும் எண்ணெய் விளக்கேற்றும்  செலவுக்காக, தனது
ஆஸ்தியை வழங்கிய விவரமும் கல்வெட்டில் உள்ளது.
முகமண்டபத்தின் தூண்கள் கிருஷ்ணமாராஜா மற்றும்
சோழராஜா என்பவர்களால் உருவாக்கப்பட்டன.

               மதுரை ரோட்டில் வடுக ஊரணி என்னும் ஊரணி
உள்ளது. பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக
கருதப்படும் இந்த ஊரணி சமீபத்தில் தூர்
வாரப்பட்டிருக்கிறது. அப்போது சிவலிங்கம், நந்திகள்
உட்பட பல சிலைகள் கிடைத்துள்ளன.




ராஜபாளையம் ஸ்பேசல்..... Siராஜபாளையம் ஸ்பேசல்..... Nan



              மேலும் 600 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று
இன்றும் ராஜபாளையத்தில் இருக்கிறது. இதன் பெயர்
"ஆப்பிரிக்கன் போபாப்". ஆப்பிரிக்கக் காடுகளில் மட்டுமே
காணப்படும் இந்த மரம், அதிக வயதுடைய மரங்களில்
ஒன்று. பிற்கால பாண்டிய மன்னர்கள் தங்களது  கடல்
பயணத்தின் மூலம் இதைக் கொண்டு வந்திருக்கலாம்
எனக் கூறப்படுகிறது.



ராஜபாளையம் ஸ்பேசல்..... Tt

  
             
  சுதந்திரப் போராட்டக் காலத்தில், வீரர்கள் நமது
தேசியக் கொடியை சஞ்சீவி மலையின் உச்சியில் பறக்க
விட்டு புரட்சி செய்தனர். இவ்வாறு திரும்பும் இடமெல்லாம்
வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கும் ராஜபாளையம்,
சரித்திரங்களின் சங்கமமாக உள்ளது.



நன்றி:http://vaarthaichithirangal.blogspot.in/2011/04/blog-post.html

  
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராஜபாளையம் ஸ்பேசல்..... Empty Re: ராஜபாளையம் ஸ்பேசல்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum