Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை
2 posters
Page 1 of 1
2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை
லோக்சபா தேர்தல் முடிவுகள், அகில இந்திய அளவில் பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக வந்திருப்பதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் ரொம்பவும் சந்தோஷமாகி விட்டார். கொஞ்ச காலம், தமிழகத்தில் அரசியல் சூழ்நிலைகள் சரியில்லாததால், தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை அமுக்கிப் போட்டிருந்த அவர், மீண்டும் எதிர்கால திட்டத்துடன், பல்வேறு காரியங்களில் இறங்கி இருப்பதாக, அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் செய்தி பரவி இருக்கிறது.
கருத்து வேறுபாடு
இது தொடர்பாக, விஜய் ஆதரவாளர்கள் வட்டாரங்களில் கூறியதாவது:கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், தலைமையிடம் நெருக்கமாக இருந்து செயல்பட்டார் விஜய். ஆனால், சில விஷயங்களில் தி.மு.க., தரப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட, விஜய்யின் தந்தை சந்திரசேகர், தி.மு.க., தரப்பு மீது கோபமானார்.இதனால், சந்தடியில்லாமல் இருந்த விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தை, அரசியல் இயக்கமாக மாற்ற முடிவெடுத்து, அதற்கான காரியங்களை மெல்ல மெல்ல செய்து கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைத்தால், தன் மகன் விஜய்யை தமிழகத்தின் முதல்வராக்கி விட வேண்டும் எனவும் முடிவெடுத்தார். இந்ந நேரத்தில், 2011ல் சட்டசபை தேர்தல் வந்தது. அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளித்து, விஜய் நற்பணி மன்றத்தினருக்கு, 'சீட்' கேட்டனர். சீட் கொடுக்கவில்லை. இருந்தாலும், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்தனர். அ.தி.மு.க., வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனார்.ஆனால், அ.தி.மு.க.,வின் வெற்றி தங்களால் தான் ஏற்பட்டது என்கிற ரீதியில் விஜய்யின் அப்பா சந்திரசேகர் பேச ஆரம்பித்தார். இந்த விவரம் அ.தி.மு.க., தலைமைக்கு செல்ல, ஜெயலலிதா, விஜய் தரப்பு மீது கோபமடைந்தார்.
இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாள் விழாவை சென்னை, தாம்பரம் ஜெயின் கல்லூரியில் வைத்து கொண்டாட ஏற்பாடு செய்தார் விஜய். அந்த விழாவுக்கு, கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது போலீஸ். இதனால், அ.தி.மு.க., தலைமை மீது விஜய் தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். தொடர்ச்சியாக, விஜய் படம் துப்பாக்கிக்கு, அரசு தரப்பில் இருந்து குடைச்சல்கள் ஆரம்பமாகின. இதனால், அறிவிக்கப்பட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகவில்லை. நீண்ட இழுபறிக்குப் பின் படம் ரிலீசானதால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால், ரொம்பவும் அப்செட் ஆனது விஜய் தரப்பு. கொஞ்ச நாட்கள் சினிமா, அரசியல் என்று எந்த நடவடிக்கையும் இல்லாமல் அமைதியாக இருந்தனர்.இந்த நிலையில், 2014 லோக்சபா தேர்தல் வர, இந்தியா முழுவதிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக அலை அடிப்பதை உணர்ந்து, நரேந்திர மோடி பக்கம் தன் பார்வையைத் திருப்பினார் விஜய். பிரசாரத்துக்காக கோவைக்கு வந்த மோடியை நேரில் சந்தித்து, தன் ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.எதிர்பார்த்தது போலவே, நரேந்திர மோடி ஆட்சி மத்தியில் அமைந்துவிட, மீண்டும் விஜய்க்கு அரசியல் ஆசை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தின் பிரதான கட்சியான தி.மு.க., தோல்வி அடைந்ததோடு, ஓட்டு வங்கியில் சரிவும் ஏற்பட்டுவிட, அ.தி.மு.க.,வுக்கு எதிரான பிரதான கட்சி இல்லாத வெற்றிட சூழல் தமிழகத்தில் ஏற்பட்டிருப்பதாக விஜய் தரப்பு உணருகிறது.
சரியாக அரசியல் செய்தால், தி.மு.க., இடத்தை நிரப்புவதோடு, 2016ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் எனவும் நம்புகின்றனர். இதற்காக, ம.தி.மு.க., - தே.முதி.க., - பா.ம.க., - காங்கிரஸ், தி.மு.க., போன்ற கட்சிகளில் அதிருப்தியாக இருக்கும் பலரிடமும் பேசி வருகின்றனர். அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, 2016 தேர்தலுக்கு முன், அரசியல் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்பது, விஜய் தரப்பின் எண்ணம். அதற்கு முன்னதாக, தன்னை தமிழக அரசியல் களத்தில் பிரதானப்படுத்தும் வேலையை செய்வது என முடிவெடுத்துள்ளனர்.
கடித பின்னணி
அந்த வகையில் தான், தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டாராக தன்னை காட்டும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறார். அதேபோல, சினிமா சேவை வரியை குறைப்பது குறித்து, மோடிக்கு கடிதம் எழுதிய பின்னணியும் இதுதான். அடுத்து, தமிழகம் முழுவதும் தன் பிறந்த நாள் விழாவை, பிரமாண்டமாக கொண்டாடவிருக்கிறார்.'கத்தி' படத்தை ரிலீசுக்கு முன், பிரதமர் மோடிக்கு போட்டு காட்டி, அரசியல் மற்றும் சினிமா அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும், ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தவும் திட்டங்கள் தீட்டப்படுகிறது. இப்படி, தன்னுடைய எல்லா நடவடிக்கைகளிலும் அரசியல் நோக்கத்தை பிரதானமாக வைத்து செயல்படுகிறார் விஜய். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -
கருத்து வேறுபாடு
இது தொடர்பாக, விஜய் ஆதரவாளர்கள் வட்டாரங்களில் கூறியதாவது:கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், தலைமையிடம் நெருக்கமாக இருந்து செயல்பட்டார் விஜய். ஆனால், சில விஷயங்களில் தி.மு.க., தரப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட, விஜய்யின் தந்தை சந்திரசேகர், தி.மு.க., தரப்பு மீது கோபமானார்.இதனால், சந்தடியில்லாமல் இருந்த விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தை, அரசியல் இயக்கமாக மாற்ற முடிவெடுத்து, அதற்கான காரியங்களை மெல்ல மெல்ல செய்து கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைத்தால், தன் மகன் விஜய்யை தமிழகத்தின் முதல்வராக்கி விட வேண்டும் எனவும் முடிவெடுத்தார். இந்ந நேரத்தில், 2011ல் சட்டசபை தேர்தல் வந்தது. அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளித்து, விஜய் நற்பணி மன்றத்தினருக்கு, 'சீட்' கேட்டனர். சீட் கொடுக்கவில்லை. இருந்தாலும், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்தனர். அ.தி.மு.க., வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனார்.ஆனால், அ.தி.மு.க.,வின் வெற்றி தங்களால் தான் ஏற்பட்டது என்கிற ரீதியில் விஜய்யின் அப்பா சந்திரசேகர் பேச ஆரம்பித்தார். இந்த விவரம் அ.தி.மு.க., தலைமைக்கு செல்ல, ஜெயலலிதா, விஜய் தரப்பு மீது கோபமடைந்தார்.
இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாள் விழாவை சென்னை, தாம்பரம் ஜெயின் கல்லூரியில் வைத்து கொண்டாட ஏற்பாடு செய்தார் விஜய். அந்த விழாவுக்கு, கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது போலீஸ். இதனால், அ.தி.மு.க., தலைமை மீது விஜய் தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். தொடர்ச்சியாக, விஜய் படம் துப்பாக்கிக்கு, அரசு தரப்பில் இருந்து குடைச்சல்கள் ஆரம்பமாகின. இதனால், அறிவிக்கப்பட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகவில்லை. நீண்ட இழுபறிக்குப் பின் படம் ரிலீசானதால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால், ரொம்பவும் அப்செட் ஆனது விஜய் தரப்பு. கொஞ்ச நாட்கள் சினிமா, அரசியல் என்று எந்த நடவடிக்கையும் இல்லாமல் அமைதியாக இருந்தனர்.இந்த நிலையில், 2014 லோக்சபா தேர்தல் வர, இந்தியா முழுவதிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக அலை அடிப்பதை உணர்ந்து, நரேந்திர மோடி பக்கம் தன் பார்வையைத் திருப்பினார் விஜய். பிரசாரத்துக்காக கோவைக்கு வந்த மோடியை நேரில் சந்தித்து, தன் ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.எதிர்பார்த்தது போலவே, நரேந்திர மோடி ஆட்சி மத்தியில் அமைந்துவிட, மீண்டும் விஜய்க்கு அரசியல் ஆசை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தின் பிரதான கட்சியான தி.மு.க., தோல்வி அடைந்ததோடு, ஓட்டு வங்கியில் சரிவும் ஏற்பட்டுவிட, அ.தி.மு.க.,வுக்கு எதிரான பிரதான கட்சி இல்லாத வெற்றிட சூழல் தமிழகத்தில் ஏற்பட்டிருப்பதாக விஜய் தரப்பு உணருகிறது.
சரியாக அரசியல் செய்தால், தி.மு.க., இடத்தை நிரப்புவதோடு, 2016ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் எனவும் நம்புகின்றனர். இதற்காக, ம.தி.மு.க., - தே.முதி.க., - பா.ம.க., - காங்கிரஸ், தி.மு.க., போன்ற கட்சிகளில் அதிருப்தியாக இருக்கும் பலரிடமும் பேசி வருகின்றனர். அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, 2016 தேர்தலுக்கு முன், அரசியல் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்பது, விஜய் தரப்பின் எண்ணம். அதற்கு முன்னதாக, தன்னை தமிழக அரசியல் களத்தில் பிரதானப்படுத்தும் வேலையை செய்வது என முடிவெடுத்துள்ளனர்.
கடித பின்னணி
அந்த வகையில் தான், தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டாராக தன்னை காட்டும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறார். அதேபோல, சினிமா சேவை வரியை குறைப்பது குறித்து, மோடிக்கு கடிதம் எழுதிய பின்னணியும் இதுதான். அடுத்து, தமிழகம் முழுவதும் தன் பிறந்த நாள் விழாவை, பிரமாண்டமாக கொண்டாடவிருக்கிறார்.'கத்தி' படத்தை ரிலீசுக்கு முன், பிரதமர் மோடிக்கு போட்டு காட்டி, அரசியல் மற்றும் சினிமா அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும், ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தவும் திட்டங்கள் தீட்டப்படுகிறது. இப்படி, தன்னுடைய எல்லா நடவடிக்கைகளிலும் அரசியல் நோக்கத்தை பிரதானமாக வைத்து செயல்படுகிறார் விஜய். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை
தம்பி விஜய்க்கு சொல்லி வைங்கோ அரசியல் அரசியல் வாதிகளுக்குத்தான் என்று நடிகர்களுக்கல்ல.. இன்று நடிகர்மார் இந்தியாவை ஆழ வந்து எல்லாவற்றையும் நடிப்பாக நினைக்கினம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|