Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை
–
–
சித்தர்களில் ஒருவரான போகர், முருகனை தரிசிக்க
பழனிக்குச் சென்றார். அப்போது அவருக்கு வழி
தெரியவில்லை. எனவே இரும்பறையில் தங்கிய
அவர் முருகனை வேண்டி, யாகம் நடத்தினார்.
அப்போது இத்தலத்து முருகன், அவருக்கு வழியைக்
காண்பித்ததாக சொல்லப்படுகிறது.
வழி காட்டிய முருகன் இத்தலத்திலிருந்து சற்று
தொலைவிலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர்
கோயிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார்.
ஆறு முகங்களுடன் உள்ள முருகன், போகருக்கு வழி
காட்ட ஒரு முகத்துடன் சென்றதால், ஓதிமலையில்
ஐந்து முகங்களுடன் அருள்கிறார்.
8 கரங்களில் ஆயுதங்களுடன் காட்சி தருகிறார்.
இந்த அமைப்பிலுள்ள முருகனை “”கவுஞ்சவேதமூர்த்தி’
என்று அழைக்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறந்து
திகழ இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
மலையடிவாரத்தில் சுயம்பு விநாயகர் அருள்கிறார்.
இவரை வணங்கிய பிறகே முருகனை தரிசிக்க வேண்டும்
என்பது ஐதீகம். மலைக்கோயில் சோமாஸ்கந்த வடிவில்
அமைக்கப்பட்டுள்ளது.
முருகனுக்கு வலப்புறத்தில் காசி விஸ்வநாதரும், இ
டப்புறம் காசி விசாலாட்சியும் தனித்தனி சந்நிதிகளில்
காட்சி தருகின்றனர். இடும்பன், சப்தகன்னியருக்கும்
சந்நிதி இருக்கிறது.
படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது,
விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு, முருகனை
வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன்,
பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். அவர்
தெரியாது நிற்கவே, சிறையில் அடைத்து தானே ப
டைப்புத் தொழிலை துவங்கினார்.
அப்போது படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஐந்து
முகங்கள் இருந்தன. எனவே,முருகனும் அவரது அ
மைப்பில் ஐந்து முகங்களுடன் இருந்து உலகைப்
படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”
எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து
உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே
பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள்.
சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி
கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம்
கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி,
பிரம்மாவையும் விடுவித்தார்.
முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி
பரிந்துரைத்த சிவபெருமான், கைலாசநாதராக மலை
அடிவாரத்தில் தனிக் கோயிலில் இருக்கிறார்.
முருகனை சந்திக்க சிவபெருமான் மட்டும் தனித்து
வந்தார். உடன் அம்பிகை வரவில்லை.
எனவே இக்கோயிலில் அம்பிகை சந்நிதி கிடையாது.
பிரம்மாவை முருகன், இரும்பு அறையில் சிறைப்
படுத்தியதால், இவ்வூர் “‘இரும்பறை’ என்று
அழைக்கப்படுகிறது
சுவாமிமலை தலத்தில் சிவனுக்கு பிரணவத்தின்
விளக்கம் சொன்ன முருகன், இத்தலத்தில் வேதம்,
ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு
ஓதிய (உபதேசம் செய்த) மலை என்பதால் தலம்,
“ஓதிமலை’ என்றும், சுவாமி “ஓதிமலையாண்டவர்’
என்றும் பெயர் பெற்றார்.
உற்ஸவர் கல்யாண சுப்பிரமணியர்.
தல விருட்சம் ஒதிமரம்.
தீர்த்தம் சுனை தீர்த்தம்.
1000 வருடங்களுக்கு முற்பட்டது இக்கோயில்.
போகர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல்
தற்போதும் வெண்ணிறமாக இருக்கிறது. விசேஷ
காலங்களில் இதையே பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.
அமைவிடம்: கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம்
செல்லும் சாலையில் 48 கி.மீ. தூரத்தில் புளியம்பட்டி
சென்று, அங்கிருந்து 10 கி.மீ. சென்றால் இரும்பறையை
அடையலாம்.
விசேஷங்கள்: தைப்பூசத்தில் 9 நாட்கள் பிரம்மோற்ஸவம்,
சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு,
கந்த சஷ்டி, பங்குனி உத்திரம்.
-
——————————–
–பார்வதி அருண்குமார் (தினமணி)
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை
ஹிந்துகளின் நம்பிக்கை வியக்க வைக்கிறது ..ஆறுமுகன் முருகனின் செய்திகள் அருமை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஐந்து முகங்களுடன் அருள்புரியும் முருகன் – (இரும்பறை
)(( )(( )((jasmin wrote:ஹிந்துகளின் நம்பிக்கை வியக்க வைக்கிறது ..ஆறுமுகன் முருகனின் செய்திகள் அருமை
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என வழிபடப்படுகிறது.
மலைகளுக்கும் ஆன்மீக உணர்விற்கும் மிக நெருக்கமான உறவு உலகம் முழுவதும் இருந்து வருகிறது.
மலைகள் மனிதனால் அதிகமாக சஞ்சாரம் செய்யாத பகுதி ஆகும்.
மனித மனதிலிருந்து உற்பத்தியாகும் பல வகையான எண்ண அலைகள் மலை பகுதிகளில் குறைவாகவே இருக்கும்.
இதனால் தவம் புரிவதற்கும், தியானம் செய்வதற்கும் மலைகள் பேருதவி புரிகின்றன. இதனாலேயே கடவுள் அம்சமாக மலை கருதப்படுகிறது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» தலைமுடி வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட இருக்காது
» இலக்கியத்தில் முருகன்
» முருகன் அவதாரம்
» முருகன் 108 போற்றி
» முருகன் போல இருப்பதில் உடன்பாடில்லை..!
» இலக்கியத்தில் முருகன்
» முருகன் அவதாரம்
» முருகன் 108 போற்றி
» முருகன் போல இருப்பதில் உடன்பாடில்லை..!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|