சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்... Khan11

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

5 posters

Go down

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்... Empty கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

Post by ராகவா Sun 10 Aug 2014 - 15:52

கடவுள் என்றவொரு கதாபாத்திரம் இந்த உலகில் இருக்கிறதா என்ற கேள்வியை நாம் அனைவரும் அடிக்கடி கடந்து சென்றிருப்போம். சில நேரங்களில், கடவுளின் இருப்பை நம்பலாம் மற்றும் சில நேரங்களில், கடவுளின் இருப்பை கட்டுக்கதை என்றோ, மாயை என்றோ, பொய்மை என்றோ கடுமையாக மறுக்கலாம். எதன் அடிப்படையில் கடவுளைப் பற்றி இவ்வாறு மாற்றி மாற்றி சிந்திக்கிறோம்? கடவுள் ஏன் நம்மால் அடைய முடியாதவராகவும், அதே நேரத்தில் இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டளிப்பவராகவும் மற்றும் வியக்கத்தக்கவராகவும், அதே நேரத்தில் தொலை தூரத்தில் இருப்பவராகவும் இருக்க வேண்டும்?

கடவுளை படைப்பாளராகவோ, சர்வலோகத்தின் உன்னத ஆட்சியாளராகவோ, காப்பானாகவோ கருதினால், உலகெங்கும் உள்ள கணக்கில்லா மக்கள் துன்பத்திலும், துயரத்திலும் உழலுவதின் உள்ளார்ந்த ரகசியம் என்னவோ? மேய்ப்பனாக இருப்பின் சொந்த படைப்புகளை துயரத்தில் இருந்து மீட்க மறுப்பதன் காரணம் என்னவோ? நம்பிக்கையற்றிருக்கும் தன் குழந்தைகளை கையறு நிலையிலிருந்து விடுதலை செய்யாமையின் சூட்சுமத்தின் காரணம் என்னவோ? அவனே அனைவரையும் படைத்திருந்தால், உலக மக்கள் தாங்கொணாத்துயரில் சிக்கித் தவிப்பதை பார்த்து மகிழ விரும்புவானா? வேதனையிலிருந்தும், பாவத்திலிருந்தும், மீளாத் துயரிலிருந்தும் மீட்டு காத்தருளும் தருணம் எப்போது பிறக்கும்? விடையளிப்பவர் எவருமின்றி இப்படி வினாக்கள் பற்பல. மேற்கண்ட வினாக்களுக்கு பதிலளிக்கவோ, நாம் மனதில் குடிகொண்டுள்ள ஆர்வமிகுதிக்கு விளக்கம் அளிக்கவோ, விடையில்லா புதிர்களை தீர்க்கவோ, கடவுளைச் சுற்றியுள்ள மாயைகளை களையவோ எவரையும் கடவுள் சொர்க்கத்திலிருந்தோ, வானிலிருந்தோ நேரடியாக அனுப்பவில்லை. மாறாக, சொந்த அறிவிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் இக்கேள்விகளுக்கு பதில் தேடத் தன் மக்களை அவரவர் போக்கிற்கு விட்டுவிட்டான். எல்லாவற்றிக்கும் மேலான ஒரு சக்தியின் இருப்பை மறுதலித்தல் என்பது மேலோட்டமான சிந்தனையாக இருக்கும். பரந்த அண்டவெளி, அறிவான மனித இனம், கணக்கிலா படைப்புகள், ஆற்றலை அள்ளித்தரும் ஆதவன், உலகம் அமைய அடிப்படையான நீர் மற்றும் இவை எல்லவாற்றிக்கும் மேலான பற்பல உயிர்கள் போன்றவை திடிரெனத் தோன்றிவிடவில்லை. இப்படிப்பட்ட அற்புதப் படைப்பும், அவற்றின் சுழற்சியும், இருப்பும் ஒவ்வொரு நாளும் தடையின்றி, தவறின்றி நடைபெறுவதென்பது தற்செயலாகத் தோன்றியதொரு அதிசயம் இல்லை. ஒரு பரந்த அர்த்தத்தில் பார்க்கையில், கடவுளே இறுதியானவனாகவும், முற்று முகவரியாகவும், மூலாதாரமானவனாகவும், கழிநனியாகவும், குறைபாடற்ற ஆனால் வரையறுக்கப்படாதனாகவும் அறியப்படுகிறான். கடவுள் எல்லா வழிகளிலும் முழுநிறைவுடைய பொருளாகவும் சாத்தியப்படும் படியும் உள்ளான். சர்வ வல்லமை படைத்த இறைவன் எங்கும் எப்போதும் நீக்கமற நிறைந்தவனாகவும், இவ்வுலகில் உள்ளோர்க்கெல்லாம் குறையாத இரக்கமுள்ளவனாகவும் உள்ளான். அவனுடைய செயல்களும் வழிகளும் பலமுள்ளவையாக இருப்பதாலும், வெல்ல முடியாதவனாகவும், எப்பேர் செய்தாலும் தடுத்த நிறுத்த முடியாதவனாகவும் இருப்பதாலும் தான், அவ்வபோதும் எப்பொழுதும், நம்மால் கட்டுபடுத்த முடியாத கடவுளின் செயல்களை, படைப்புகளை "எல்லாம் அவன் வழி" என்றும் விழிக்கிறோம்.

இறை நம்பிக்கையாளர்கள் இறைவனை சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஏற்றுக் கொள்வதும் நடைபெறுகிறது. இறைவன் இல்லை என்ற இயல்பு நிலையை இறை நம்பிக்கையாளர்களுக்கு சுட்டிக்காட்டவும், உண்மைநிலையை நிருபிக்கவும் ஆதாரங்களை இறை மறுப்பாளர்கள் தேடுகிறார்கள். "என்னை அப்படியே நம்பு" என்றுரைப்பது பகுத்தறிவுக்கு எட்டாதவொன்றாகவும், இயங்கியல் தத்துவத்திற்கு எதிரானதாகவும் இருப்பதாலும், எவரையும் இறைவனை ஏற்றுக் கொள்ள வைக்க எந்த விதத்திலும் உதவாத வாதமாகவே இருக்கும்.

இக்கேள்விக்கு பதில் கண்டுபிடிக்கும் பணிகளுக்கு இடையில் உயிர்கள் அடிக்கடி உட்கொள்ளப்படுவதால், இந்தக் கேள்வி பெரும் சிக்கலான ஒன்றாகும். ஓரிரவு சிந்தித்து, விடியற்காலை அல்லது ஓரிரு நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் தேடுதலின் பலனாகவோ பதில் கிடைக்ககூடிய வினாவல்ல இது. இறைவன் என்பவன் உண்மை அல்லது முழுமுதற்பொய் என ஏற்றுக்கொள்ளுவது மிக எளிதல்ல. ஆனால் பரந்த நோக்குடையது மற்றும் சிக்கலானது. நம்பிக்கையுடன் தேடுங்கள், தேடிக்கொண்டே இருங்கள். உங்களுக்கு தெரியாது கடவுள் உங்கள் வாயிற்கதவை எப்போது தட்டுவான் என்பது. தேடுங்கள் தேடுங்கள் கிடைக்கும் வரை தேடுங்கள்.


நன்றி:இந்து சமயம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்... Empty Re: கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

Post by நண்பன் Sun 10 Aug 2014 - 16:00

நான் பெரிதாக கருத்திட விரும்ப வில்லை
உங்கள் கேள்வியே தவறாகத்தான் உள்ளது
எதத்தேட வேண்டும் கடவுள் இல்லை என்று நீங்கள் சொன்னால்
உங்களால் எதையும் தேடவும் முடியாது அடையவும் முடியாது.
நன்றி ராகவா

இப்போதெல்லாம் அதிகமானோர் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்

கடவுளை படைப்பாளராகவோ, சர்வலோகத்தின் உன்னத ஆட்சியாளராகவோ, காப்பானாகவோ கருதினால், உலகெங்கும் உள்ள கணக்கில்லா மக்கள் துன்பத்திலும், துயரத்திலும் உழலுவதின் உள்ளார்ந்த ரகசியம் என்னவோ? மேய்ப்பனாக இருப்பின் சொந்த படைப்புகளை துயரத்தில் இருந்து மீட்க மறுப்பதன் காரணம் என்னவோ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்... Empty Re: கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

Post by Nisha Sun 10 Aug 2014 - 19:41

இப்படி கேள்விகள் கேட்டு அவனையே ஆய்வுக்குள்ளககும் படி இந்த புத்தி கெட்ட நன்றியற்ற மனிதரை படைத்தோமோ என கடவுள் தலையில் கை வைத்திட்டு மூலையில் உட்கார்ந்து இவனை இனி என்ன செய்யலாம் என யோசிப்பதாக தரிசனம் கண்டேன்.. கவனமா இருந்துக்கங்க!

அதான் தெரியிது இல்லை தம்மை போல் தம் சாயலாக தம்ககு பிரியமானவர்களாக தம் சொல் கேட்டு நடப்பவராக நாம் இருப்போம் என நினைத்து படைத்தர்.. நாம் அவர் சொல் கேட்டு நடக்காமல் நம் சொந்த புத்தியில் .. அட அந்த சொந்த புத்தியும் அவர் தாம் நமக்கு தந்தார் எனபதினை மறந்து .. நடக்கும் போது தண்டிக்கின்றார்..

நாம் பெற்றோம் என்பதற்காக் நம் குழந்தைகளை நாம் கண்டிக்காமல் அடிக்காமலா வளர்க்கின்றோம்.கண்டிக்க்கின்றோம். அடிக்கின்றோம். தண்டனை கொடுக்கின்றோம் தானே? அதே போல் தான் கடவுளும் தம் சொல் கேளாமல் தம்மை அசட்டை செய்பவர்களை தண்டிக்கின்றார். கண்டிக்கின்றார்..

அவருக்கு பயந்து வாழும் மக்கள் இன்னும் இருப்பதால் அவருக்கு கீழ்ப்படியோர் அவரை நேசிப்போம் இன்னும் இருப்பதால் அவர்களுடன் கூடி வாழும் ஏனையோரையும்.. அவர்களுக்காக மன்னிக்கின்றார்..

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.


இப்படி யோசித்து பாருங்கள்.ஏன் எதுக்குன்னு காரணம் புரியும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்... Empty Re: கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

Post by Nisha Sun 10 Aug 2014 - 19:48

நாம் எப்பவும் நல்லதே செய்கின்றோமே நல்லதாய் நினைக்கின்றோமே.. நடக்கின்றோமே நம்மை ஏன் கடவுள் சோதிக்கணும் என நினைத்தால்..

நாம் நமக்கு சோதனை வரும் நேரம் தான் க்டவுளே காப்பாத்து .. எனக்கு உதவி செய்.. ஏன் எனக்கு இதை அனுமதித்தே.. கடவுள் நீ இருக்கியா.. உனக்கு காது இருக்கா.. மூக்கு இருக்கா என இஷ்டபப்டி திட்டுகின்றோம். நினைக்கின்றோம். அப்படி நாம் நினைக்கணும் என அவர் நமக்கு சோதனை தருவார்.. நாம அதை நல்ல விதமாய் புரிந்து கொண்டால் சோதனையை சாதனையாக்கியும் விடுவார்.

எனக்கு கண்,காதில் பிரச்சனை தந்தவர் தானே என்னை பலர் முன்னால் உயர்த்தி சாதிக்க வைத்து இன்று நிஷாந்தி என்றால் யாரென பலரறிய வைத்திருக்கின்ரார்..

நம்ம வீட்டில் அம்மாவும் அப்படித்த்தானே.. நம்மை சுமந்து பெற்று வளர்த்து ஆளககி சமைத்து எப்படில்லாம் நம்மை வளர்ப்பார். நாம் நமக்குனு ஒரு குடும்பம் வந்ததும் அம்மாவை மறந்திருவோம். மனைவி சண்டை போட்டால் மட்டும் தானே அம்மா நினைவு வருது. அப்பத்தான் அம்மா நினைவு அம்மா சமையல் என அம்மாவை தேடுவிங்க.. அப்படித்தான்பா கடவுளும். நீங்க தேடுவதில்லை என நொந்து போய் நீங்க தேடணும்னு உங்களால் அனுபவிக்க கூடிய துன்பங்களை மட்டும் தான் தருவார் என நம்புங்க கடவுள் இருக்கார் என்பதையும் புரிந்துக்குவிங்க.. !.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்... Empty Re: கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

Post by பானுஷபானா Mon 11 Aug 2014 - 14:04

இந்தக் கேள்வியே தவறு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்... Empty Re: கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

Post by ராகவா Mon 11 Aug 2014 - 14:47

பானுஷபானா wrote:இந்தக் கேள்வியே தவறு
சரி அக்கா..மன்னித்து விடுங்கள்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்... Empty Re: கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

Post by நண்பன் Mon 11 Aug 2014 - 14:55

ராகவா wrote:
பானுஷபானா wrote:இந்தக் கேள்வியே தவறு
சரி அக்கா..மன்னித்து விடுங்கள்....
நீங்க எதுக்குப்பா மன்னிப்பு கேட்டீர்கள் இது உங்கள் சொந்தக் கருத்து இல்லையே  #) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்... Empty Re: கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon 11 Aug 2014 - 15:05

கடவுளை நிருபிக்க முடியாது... ஆனால் பிரபஞ்சத்தின் முதற்பொருள் கடவுளாக இருந்திருக்கக் கூடும் என்று நம்புவோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்... Empty Re: கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

Post by ராகவா Mon 11 Aug 2014 - 15:22

நண்பன் wrote:
ராகவா wrote:
பானுஷபானா wrote:இந்தக் கேள்வியே தவறு
சரி அக்கா..மன்னித்து விடுங்கள்....
நீங்க எதுக்குப்பா மன்னிப்பு கேட்டீர்கள் இது உங்கள் சொந்தக் கருத்து இல்லையே  #) 
ஆமாமில நானும் என்னைதான் சொன்னாங்க என்று கேட்டுவிட்டேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்... Empty Re: கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

Post by நண்பன் Mon 11 Aug 2014 - 15:26

ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:
பானுஷபானா wrote:இந்தக் கேள்வியே தவறு
சரி அக்கா..மன்னித்து விடுங்கள்....
நீங்க எதுக்குப்பா மன்னிப்பு கேட்டீர்கள் இது உங்கள் சொந்தக் கருத்து இல்லையே  #) 
ஆமாமில நானும் என்னைதான் சொன்னாங்க என்று கேட்டுவிட்டேன்..
இப்ப என்ன செய்யலாம் கேட்டதை வாபஸ் பெற்று விடுங்கள் சரியோ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்... Empty Re: கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

Post by ராகவா Mon 11 Aug 2014 - 15:27

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:
பானுஷபானா wrote:இந்தக் கேள்வியே தவறு
சரி அக்கா..மன்னித்து விடுங்கள்....
நீங்க எதுக்குப்பா மன்னிப்பு கேட்டீர்கள் இது உங்கள் சொந்தக் கருத்து இல்லையே  #) 
ஆமாமில நானும் என்னைதான் சொன்னாங்க என்று கேட்டுவிட்டேன்..
இப்ப என்ன செய்யலாம் கேட்டதை வாபஸ் பெற்று விடுங்கள் சரியோ
வா பஸ்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்... Empty Re: கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum