Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், கடந்த 6 மாதங்களில் மட்டும், 1,100பேர் தற்கொலை
2 posters
Page 1 of 1
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், கடந்த 6 மாதங்களில் மட்டும், 1,100பேர் தற்கொலை
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், கடந்த 6 மாதங்களில் மட்டும், 1,100 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுபோன்ற துயரங்கள் அதிகரிக்க மதுவும் மறைமுக காரணம் என குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், போதை பழக்கத்தில் இருந்து மீள விரும்புவோருக்கு உதவ, மாவட்டம்தோறும் சிறப்பு மையங்களை தமிழக அரசு திறக்க வேண்டும் என்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் தொகை 24 லட்சம். இதில், மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் 8.78 லட்சம் பேர் வசிக்கின்றனர். பின்னலாடை தொழிலில், உலகளவில் இடம்பிடித்திருக்கும் திருப்பூரில், 2௦௦௦ ஏற்றுமதி நிறுவனங்களும், 12,௦௦௦ உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன.
இங்கு உற்பத்தியாகும் ஆடைகள், ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு ஏறத்தாழ 13,500 கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தருகிறது. தவிர 8,௦௦௦ கோடி ரூபாய் மதிப்பிற்கு உள்நாட்டு வர்த்தகமும் நடக்கிறது. வேலைவாய்ப்பு தேடி வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர், திருப்பூர் வருகின்றனர். இங்குள்ள நிறுவனங்களில் ஏறத்தாழ 4 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தினமும் இரண்டு லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். மாவட்டம் முழுவதும், 10 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
திருப்பூரில் பின்னலாடை தவிர, அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள், கொப்பரை களங்கள், கோழி பண்ணைகள், நுால் மில்கள், இயந்திர உற்பத்தி, பாத்திர உற்பத்தி, சிற்பக்கலை கூடங்கள், காற்றாலைகள் என பல்வேறு சிறப்பு வாய்ந்த தொழில்கள் நுாற்றுக்கணக்கில் உள்ளன. விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் இங்கு பஞ்சமில்லை.
கோவை, நீலகிரியில்...: நடப்பாண்டில் கடந்த ஜூன் வரை, கோவை மாநகரில் 360௦ பேரும், புறநகர் மாவட்டத்தில் ஜூலை வரை 256 பேரும், ஊட்டியில் 130௦ பேரும் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். அதாவது, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ௧,௧௧௦ பேர் தற்கொலை செய்துகொண்டதாக, போலீஸ் ஆவண புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்னை1: வேலைக்குச் செல்லாத சூழ்நிலையிலோ, தொழில் நஷ்டம் காரணமாகவோ, பொருளாதார பிரச்னைகள் எழுந்து, கடன் வாங்கி, சமாளிக்க துாண்டும். அவ்வாறு கடன்வாங்கிய பின், அதற்கு வட்டி செலுத்துதல், கடன் தொகையை அடைத்தல் குடும்பத்துக்கு பெரும் சுமையாக மாறும். குடிகார குடும்ப தலைவர், திருந்திவாழ முடிவெடுத்தால் தவிர, நிச்சயமாக இவற்றிலிருந்து எளிதில் விடுபட வாய்ப்பில்லை. அவ்வாறான நெருக்கடி ஏற்படும்போது, கணவன் - மனைவி இடையே பிரச்னை
அன்றாடம் ஏற்பட்டு, தற்கொலை விரக்தி நிலைக்கு தள்ளக்கூடும்.
பிரச்னை 2: ஒருவேளை, பொருளாதார நெருக்கடியால் கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்படாத நிலையில், கடன் கொடுத்த நபரின் தொந்தரவால், இருவரும் விரக்திக்கு உந்தப்படலாம். குடும்பத்தில் நிகழும் கூட்டுத் தற்கொலைகள் பெரும்பாலும், இது போன்ற காரணங்களால்தான் நிகழ்கின்றன.
பிரச்னை 3: பொருளாதார பிரச்னை ஏதும் இல்லாத .நிலையில், கணவன் தனது மனைவியின் 'தேவை'களை பூர்த்தி செய்ய இயலாதவர் நிலைக்கு தள்ளப்படின், வேறு நபரின், தகாத தொடர்பால், அந்த குடும்பத்தின் அமைதி சிதைக்கப்படலாம்
பிரச்னை 4: தேர்வில் தோல்வியால் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்வதும் நடக்கிறது. குடிகார தந்தையால் அமைதியிழந்த குடும்பத்தில், நிம்மதியற்ற நிலைக்கு ஆளாகும் பிள்ளைகளால் சரிவர படிக்க முடியாது. தேர்வில் தோல்வி அடைய நேரிடும்போது, அவர்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். இப்படி, தற்கொலைக்கான காரணங்கள், வெவ்வேறாக இருப்பினும், நன்கு ஆராய்ந்து பார்த்தால், பல தற்கொலை நிகழ்வுகளில், பெரும்பாலும் குடிபோதையே மூல காரணமாக இருக்கும், என்கின்றனர் ேபாலீசார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில்... அதிர்ச்சி!
கோவை, கஸ்துாரிபா காந்தி குடிபோதை நீக்கு மைய மருத்துவ இயக்குனரும், மனநல மருத்துவருமான சீனிவாசன் கூறியதாவது: தற்கொலை எண்ணிக்கைகளில் 20-30 சதவீதம் பேர், ஏதோ ஒரு வகையில், குடிப்பழக்கத்தை காரணமாக கொண்டுள்ளனர். மது அருந்தும்போது, ஒருவரின் சிந்தனை திறன் மழுங்கடிக்கப்படுகிறது.இதனால், நல்லது - கெட்டது, மனைவி - குழந்தைகள் எதையும் சிந்திக்காமல், மனித குணம், மிருக குணமாக மாறுகிறது.
இதுஒருபுறம் இருக்க, குடிபோதைக்கு அடிமையானவர்கள், பல்வேறு வகைகளில் தங்களது உடலை கெடுத்து, தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தை சீரழிக்கின்றனர். இறுதியில் முடிவெடுக்க முடியாமல் தற்கொலை மூலம், தங்களது உயிரையும் மாய்த்துக்கொள்கின்றனர். எதிர்காலத்தை பற்றிய தன்னம்பிக்கை இல்லாதது, தனக்கு யாரும் ஆதரவு இல்லை என்று நினைப்பது, இறுதியில் வாழ தகுதியில்லை என்று எண்ணுவது ஆகியவை, தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
நண்பர்களின் வற்புறுத்தலின்பேரில், மது அருந்த பழகுபவர்கள், நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். தற்போது ஆண்கள் அதிகளவில் மதுஅடிமையாகியுள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெண்களும் மது பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் நிலவுவதுதான் அதிர்ச்சியளிக்கிறது. 'ஐ.டி.,' கலாசார வாழ்க்கை முறையில், இளம்பெண்களின் நாட்டம் மதுவை நோக்கி மெல்ல பயணிக்க துவங்கியுள்ளது. சில ஆண்டுகளில் கணிசமான அளவு பெண்கள், மதுப்பழக்கத்துக்கு அடிமையாகும் அபாயம் உள்ளது. முன்பு, மது என்றால் பயம் என்ற நிலை இருந்தது; ஆனால், தற்போது சகஜமாகிவிட்டது.மது பழக்கம், மனச்சோர்வு, மனக்கசப்பு போன்றவற்றுக்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை அளித்தால் தற்கொலைகளை கட்டுப்படுத்தலாம். கஸ்துாரிபாய் காந்தி குடிபோதை நீக்கு மையத்தில் குடிப்பழக்கம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த ஆலோசனைகள், சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்த மையத்தை, ௧௦௬ என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். இவ்வாறு, சீனிவாசன் கூறினார்.இதற்கும் பல வழிகள்: தற்கொலை செய்து கொள்வோர், தங்களின் மன நிலை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல், உயிரை மாய்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளை மேலும் அவர் கூறியதாவது:எந்த ஒரு நபரும்,தெளிவான சிந்தனையில் இருக்கும்போதுதான், குடும்பத்தை சரிவர நடத்த முடியும்.
அவரது செயல்பாடும் குடும்பத்துக்கும், அவர்சார்ந்த சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு தொடர் குடிகார கணவனால் மனைவியை சரிவர அணுக முடியாது; வேலைக்குச் செல்ல முடியாது; அவர் சுயதொழில் செய்பவராக இருந்தால் தொழிலை நிர்வகிக்க இயலாது; குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாது.
இதனால், அந்த குடும்பத்தில் சமூக, பொருளாதார பிரச்னைகள் தலைதுாக்கும்.
ஆண்டுக்கு ரூ.1,100 கோடி:திருப்பூர் நகரில் 158 'டாஸ்மாக்' கடைகளும், பிற பகுதிகளில் 120 மதுக்கடைகளும் உள்ளன. தினமும் கடை ஒன்றுக்கு, குறைந்தது லட்சம் ரூபாய்க்கு சரக்கு விற்கிறது. தினமும் மாவட்டத்தில் சராசரி மது விற்பனை, 3.25 கோடி முதல் 3.5 கோடி ரூபாய். சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் 5.5 கோடி ரூபாயை எட்டுமாம். ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடக்கும் மாவட்டமாக திகழ்கிறது திருப்பூர்.
நன்றி: தினமலர்
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் தொகை 24 லட்சம். இதில், மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் 8.78 லட்சம் பேர் வசிக்கின்றனர். பின்னலாடை தொழிலில், உலகளவில் இடம்பிடித்திருக்கும் திருப்பூரில், 2௦௦௦ ஏற்றுமதி நிறுவனங்களும், 12,௦௦௦ உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன.
இங்கு உற்பத்தியாகும் ஆடைகள், ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு ஏறத்தாழ 13,500 கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தருகிறது. தவிர 8,௦௦௦ கோடி ரூபாய் மதிப்பிற்கு உள்நாட்டு வர்த்தகமும் நடக்கிறது. வேலைவாய்ப்பு தேடி வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர், திருப்பூர் வருகின்றனர். இங்குள்ள நிறுவனங்களில் ஏறத்தாழ 4 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தினமும் இரண்டு லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். மாவட்டம் முழுவதும், 10 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
திருப்பூரில் பின்னலாடை தவிர, அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள், கொப்பரை களங்கள், கோழி பண்ணைகள், நுால் மில்கள், இயந்திர உற்பத்தி, பாத்திர உற்பத்தி, சிற்பக்கலை கூடங்கள், காற்றாலைகள் என பல்வேறு சிறப்பு வாய்ந்த தொழில்கள் நுாற்றுக்கணக்கில் உள்ளன. விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் இங்கு பஞ்சமில்லை.
கோவை, நீலகிரியில்...: நடப்பாண்டில் கடந்த ஜூன் வரை, கோவை மாநகரில் 360௦ பேரும், புறநகர் மாவட்டத்தில் ஜூலை வரை 256 பேரும், ஊட்டியில் 130௦ பேரும் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். அதாவது, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ௧,௧௧௦ பேர் தற்கொலை செய்துகொண்டதாக, போலீஸ் ஆவண புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்னை1: வேலைக்குச் செல்லாத சூழ்நிலையிலோ, தொழில் நஷ்டம் காரணமாகவோ, பொருளாதார பிரச்னைகள் எழுந்து, கடன் வாங்கி, சமாளிக்க துாண்டும். அவ்வாறு கடன்வாங்கிய பின், அதற்கு வட்டி செலுத்துதல், கடன் தொகையை அடைத்தல் குடும்பத்துக்கு பெரும் சுமையாக மாறும். குடிகார குடும்ப தலைவர், திருந்திவாழ முடிவெடுத்தால் தவிர, நிச்சயமாக இவற்றிலிருந்து எளிதில் விடுபட வாய்ப்பில்லை. அவ்வாறான நெருக்கடி ஏற்படும்போது, கணவன் - மனைவி இடையே பிரச்னை
அன்றாடம் ஏற்பட்டு, தற்கொலை விரக்தி நிலைக்கு தள்ளக்கூடும்.
பிரச்னை 2: ஒருவேளை, பொருளாதார நெருக்கடியால் கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்படாத நிலையில், கடன் கொடுத்த நபரின் தொந்தரவால், இருவரும் விரக்திக்கு உந்தப்படலாம். குடும்பத்தில் நிகழும் கூட்டுத் தற்கொலைகள் பெரும்பாலும், இது போன்ற காரணங்களால்தான் நிகழ்கின்றன.
பிரச்னை 3: பொருளாதார பிரச்னை ஏதும் இல்லாத .நிலையில், கணவன் தனது மனைவியின் 'தேவை'களை பூர்த்தி செய்ய இயலாதவர் நிலைக்கு தள்ளப்படின், வேறு நபரின், தகாத தொடர்பால், அந்த குடும்பத்தின் அமைதி சிதைக்கப்படலாம்
பிரச்னை 4: தேர்வில் தோல்வியால் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்வதும் நடக்கிறது. குடிகார தந்தையால் அமைதியிழந்த குடும்பத்தில், நிம்மதியற்ற நிலைக்கு ஆளாகும் பிள்ளைகளால் சரிவர படிக்க முடியாது. தேர்வில் தோல்வி அடைய நேரிடும்போது, அவர்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். இப்படி, தற்கொலைக்கான காரணங்கள், வெவ்வேறாக இருப்பினும், நன்கு ஆராய்ந்து பார்த்தால், பல தற்கொலை நிகழ்வுகளில், பெரும்பாலும் குடிபோதையே மூல காரணமாக இருக்கும், என்கின்றனர் ேபாலீசார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில்... அதிர்ச்சி!
கோவை, கஸ்துாரிபா காந்தி குடிபோதை நீக்கு மைய மருத்துவ இயக்குனரும், மனநல மருத்துவருமான சீனிவாசன் கூறியதாவது: தற்கொலை எண்ணிக்கைகளில் 20-30 சதவீதம் பேர், ஏதோ ஒரு வகையில், குடிப்பழக்கத்தை காரணமாக கொண்டுள்ளனர். மது அருந்தும்போது, ஒருவரின் சிந்தனை திறன் மழுங்கடிக்கப்படுகிறது.இதனால், நல்லது - கெட்டது, மனைவி - குழந்தைகள் எதையும் சிந்திக்காமல், மனித குணம், மிருக குணமாக மாறுகிறது.
இதுஒருபுறம் இருக்க, குடிபோதைக்கு அடிமையானவர்கள், பல்வேறு வகைகளில் தங்களது உடலை கெடுத்து, தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தை சீரழிக்கின்றனர். இறுதியில் முடிவெடுக்க முடியாமல் தற்கொலை மூலம், தங்களது உயிரையும் மாய்த்துக்கொள்கின்றனர். எதிர்காலத்தை பற்றிய தன்னம்பிக்கை இல்லாதது, தனக்கு யாரும் ஆதரவு இல்லை என்று நினைப்பது, இறுதியில் வாழ தகுதியில்லை என்று எண்ணுவது ஆகியவை, தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
நண்பர்களின் வற்புறுத்தலின்பேரில், மது அருந்த பழகுபவர்கள், நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். தற்போது ஆண்கள் அதிகளவில் மதுஅடிமையாகியுள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெண்களும் மது பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் நிலவுவதுதான் அதிர்ச்சியளிக்கிறது. 'ஐ.டி.,' கலாசார வாழ்க்கை முறையில், இளம்பெண்களின் நாட்டம் மதுவை நோக்கி மெல்ல பயணிக்க துவங்கியுள்ளது. சில ஆண்டுகளில் கணிசமான அளவு பெண்கள், மதுப்பழக்கத்துக்கு அடிமையாகும் அபாயம் உள்ளது. முன்பு, மது என்றால் பயம் என்ற நிலை இருந்தது; ஆனால், தற்போது சகஜமாகிவிட்டது.மது பழக்கம், மனச்சோர்வு, மனக்கசப்பு போன்றவற்றுக்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை அளித்தால் தற்கொலைகளை கட்டுப்படுத்தலாம். கஸ்துாரிபாய் காந்தி குடிபோதை நீக்கு மையத்தில் குடிப்பழக்கம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த ஆலோசனைகள், சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்த மையத்தை, ௧௦௬ என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். இவ்வாறு, சீனிவாசன் கூறினார்.இதற்கும் பல வழிகள்: தற்கொலை செய்து கொள்வோர், தங்களின் மன நிலை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல், உயிரை மாய்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளை மேலும் அவர் கூறியதாவது:எந்த ஒரு நபரும்,தெளிவான சிந்தனையில் இருக்கும்போதுதான், குடும்பத்தை சரிவர நடத்த முடியும்.
அவரது செயல்பாடும் குடும்பத்துக்கும், அவர்சார்ந்த சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு தொடர் குடிகார கணவனால் மனைவியை சரிவர அணுக முடியாது; வேலைக்குச் செல்ல முடியாது; அவர் சுயதொழில் செய்பவராக இருந்தால் தொழிலை நிர்வகிக்க இயலாது; குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாது.
இதனால், அந்த குடும்பத்தில் சமூக, பொருளாதார பிரச்னைகள் தலைதுாக்கும்.
ஆண்டுக்கு ரூ.1,100 கோடி:திருப்பூர் நகரில் 158 'டாஸ்மாக்' கடைகளும், பிற பகுதிகளில் 120 மதுக்கடைகளும் உள்ளன. தினமும் கடை ஒன்றுக்கு, குறைந்தது லட்சம் ரூபாய்க்கு சரக்கு விற்கிறது. தினமும் மாவட்டத்தில் சராசரி மது விற்பனை, 3.25 கோடி முதல் 3.5 கோடி ரூபாய். சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் 5.5 கோடி ரூபாயை எட்டுமாம். ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடக்கும் மாவட்டமாக திகழ்கிறது திருப்பூர்.
நன்றி: தினமலர்
Last edited by ராகவா on Mon 11 Aug 2014 - 22:35; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், கடந்த 6 மாதங்களில் மட்டும், 1,100பேர் தற்கொலை
கடந்த 6 மாதங்களில் மட்டும், 1,100௦௦ பேர் தற்கொலை
தட்டச்சுப்பிழையோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கிய கோவை பெண்
» தற்கொலை நகரமாக மாறிவரும் பனியன் நகரம் திருப்பூர்
» கடந்த 6 மாதங்களில் ஆப்கானில் 1,462 சிவிலியன்கள் பலி
» தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!
» கராச்சி கலவரம் 100பேர் பலி
» தற்கொலை நகரமாக மாறிவரும் பனியன் நகரம் திருப்பூர்
» கடந்த 6 மாதங்களில் ஆப்கானில் 1,462 சிவிலியன்கள் பலி
» தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!
» கராச்சி கலவரம் 100பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|