Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
+4
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
கவிதை ரசிகன்
ந.க.துறைவன்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
விடுமுறை ஜாலியா?
*
என்ன தம்பி,
ரொம்ப சந்தோஷமாயிருக்கே
தெரியாதா?
மூணு நாளைக்கு
அய்யாவுக்கு விடுமுறை.
அதான்
சுதந்திரமா மகிழ்ச்சியா?
இருக்கேன் போதுமா?
விடுமுறை ஜாலியா?
*
என்ன தம்பி,
ரொம்ப சந்தோஷமாயிருக்கே
தெரியாதா?
மூணு நாளைக்கு
அய்யாவுக்கு விடுமுறை.
அதான்
சுதந்திரமா மகிழ்ச்சியா?
இருக்கேன் போதுமா?
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
தடை…!!
*
பூக்களோடு
பேசக் கூடாதென்று
தடை.
வண்டுகளைக்
காதலிக்கக்
கூடாதென்று
தடை.
ஆடைக் கட்டிய
பால் அருந்தக்
கூடாதென்று
தடை.
காக்கைகள்
பானையில் தண்ணீர்
குடிக்கக் கூடாதென்று
தடை.
என் அப்பா
எனக்குப் போட்டத்
தடை.
ஏனென்று தெரியுமா?
யாருக்கேனும்
அதற்கான விடை?.
*
தடை…!!
*
பூக்களோடு
பேசக் கூடாதென்று
தடை.
வண்டுகளைக்
காதலிக்கக்
கூடாதென்று
தடை.
ஆடைக் கட்டிய
பால் அருந்தக்
கூடாதென்று
தடை.
காக்கைகள்
பானையில் தண்ணீர்
குடிக்கக் கூடாதென்று
தடை.
என் அப்பா
எனக்குப் போட்டத்
தடை.
ஏனென்று தெரியுமா?
யாருக்கேனும்
அதற்கான விடை?.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
திரும்பி வந்தான்…!!
*
கிராமத்திலிருந்து
நகரத்திற்குப் போனான்.
பிழைப்பதற்கு,
மீண்டும் ஊர்
திரும்பி வந்தான்
உழைப்பதற்கு….!!
*
சாணித் தெளிக்கும்
பெண்ணைப்
பார்த்துவிட்டு
எழுந்து ஒடியது
வேகமாய்
தெரு நாய்…!!.
*
உயரமான மரத்தில்
எத்தனை அழகாக
வரிசையில் போய்
அச்சமின்றி ஏறுகிறது
கட்டெறும்புகள்….!!.
*
திரும்பி வந்தான்…!!
*
கிராமத்திலிருந்து
நகரத்திற்குப் போனான்.
பிழைப்பதற்கு,
மீண்டும் ஊர்
திரும்பி வந்தான்
உழைப்பதற்கு….!!
*
சாணித் தெளிக்கும்
பெண்ணைப்
பார்த்துவிட்டு
எழுந்து ஒடியது
வேகமாய்
தெரு நாய்…!!.
*
உயரமான மரத்தில்
எத்தனை அழகாக
வரிசையில் போய்
அச்சமின்றி ஏறுகிறது
கட்டெறும்புகள்….!!.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
குடியிருப்பு..!!.
*
யார் குடியிருக்கவோ?
அழகானக் குகைப் போன்று
மரத்தைப்
பொந்து பொந்துவாக்கிக்
கட்டியிருக்கிறது
வீடுகளாய்
மரக்கொத்திப் பறவைகள்…!!.
*
குடியிருப்பு..!!.
*
யார் குடியிருக்கவோ?
அழகானக் குகைப் போன்று
மரத்தைப்
பொந்து பொந்துவாக்கிக்
கட்டியிருக்கிறது
வீடுகளாய்
மரக்கொத்திப் பறவைகள்…!!.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
மனச் சலிப்பு…!!
*
பெண்வீட்டாருக்கு மாப்பிள்ளைப்
பிடித்திருந்தது.
மாப்பிள்ளை வீட்டாருக்கு
பெண்வீட்டாரின் குடும்பப்
பின்னணிப் பிடிக்கவில்லை
பிடிப்பதும் பிடிக்காததும்
அவரவர்கள் விருப்பம்
பெண் மனம் சலித்தாள்
மாப்பிள்ளை மனம் அலுத்தான்.
*
மனச் சலிப்பு…!!
*
பெண்வீட்டாருக்கு மாப்பிள்ளைப்
பிடித்திருந்தது.
மாப்பிள்ளை வீட்டாருக்கு
பெண்வீட்டாரின் குடும்பப்
பின்னணிப் பிடிக்கவில்லை
பிடிப்பதும் பிடிக்காததும்
அவரவர்கள் விருப்பம்
பெண் மனம் சலித்தாள்
மாப்பிள்ளை மனம் அலுத்தான்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
அனைத்துமே அருமை ஐயா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
மிக்க நன்றி அகமது...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
எளிது… எளிது…!!“
*
எது விரும்புகின்றோமோ
அது எளிதில் கிடைப்பதில்லை.
எது விருப்பமில்லையோ
அது எளிதில் கிடைத்துவிடுகிறது.
இது மனசின்
விளையாட்டா? விசித்திரமா?
உங்கள் அனுபவம் எப்படி?
*
எளிது… எளிது…!!“
*
எது விரும்புகின்றோமோ
அது எளிதில் கிடைப்பதில்லை.
எது விருப்பமில்லையோ
அது எளிதில் கிடைத்துவிடுகிறது.
இது மனசின்
விளையாட்டா? விசித்திரமா?
உங்கள் அனுபவம் எப்படி?
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
விசித்திரம்தான் விதியை மாற்ற முடியுமா?
எல்லோருக்கும் இது நடப்பதுண்டு எனக்கு கொஞ்சம் அதிகமாகவே நடக்கிறது நாம் நினைப்பது ஒன்று கண் முன் நடப்பது இன்னொன்று
நாம் எதிர் பார்ப்பது ஒன்று நமக்கு கிடைப்பது வேறொன்று
இதுதான் நடக்கிறது
எல்லோருக்கும் இது நடப்பதுண்டு எனக்கு கொஞ்சம் அதிகமாகவே நடக்கிறது நாம் நினைப்பது ஒன்று கண் முன் நடப்பது இன்னொன்று
நாம் எதிர் பார்ப்பது ஒன்று நமக்கு கிடைப்பது வேறொன்று
இதுதான் நடக்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
விடுமுறை என்றாலே குதூகலம்தான் *_ந.க.துறைவன் wrote:*
விடுமுறை ஜாலியா?
*
என்ன தம்பி,
ரொம்ப சந்தோஷமாயிருக்கே
தெரியாதா?
மூணு நாளைக்கு
அய்யாவுக்கு விடுமுறை.
அதான்
சுதந்திரமா மகிழ்ச்சியா?
இருக்கேன் போதுமா?
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
வெற்றி…!!
*
இளமையில் தோல்வி
கல்வியில் தோல்வி
காதலில் தோல்வி
வேலையில் தோல்வி
வாழ்க்கையில் தோல்வி
கடைசியாய்
அவனுக்குக் கிடைத்தது
மரணத்தில் வெற்றி…!!.
*
*
இளமையில் தோல்வி
கல்வியில் தோல்வி
காதலில் தோல்வி
வேலையில் தோல்வி
வாழ்க்கையில் தோல்வி
கடைசியாய்
அவனுக்குக் கிடைத்தது
மரணத்தில் வெற்றி…!!.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
கம்மங் கதிரு…!!
காடுகழனிப் பார்த்து ரொம்ப
வருஷமாச்சின்னு
காலார நடந்துப் போய்
பார்த்து வரலாமுன்னு
நினைச்சி புறப்பட்டுப் போனேன்.
பச்சை பசேல்லுன்னு அங்கே
பசுமையான அழகு காட்சி.
வரப்பிலே நடந்து போகையில்
குருவிங்களெல்லாம் உற்சாகமா
தலைக்கு மேலே பறக்கின்றன.
வரப்பிலிருந்தவாறே
செண்டாக முதிர்ந்த ரெண்டு
கம்மங் கதிரை கைநீட்டி பறிச்சி
உள்ளங்கையில் வைச்சி
நுமிட்டி நுமிட்டி ஊதி ஊதி
வாயிலிட்டுச் சுவைத்தேன்
பச்சைக் கதிரி்ன் பால்சுவை
அத்தனையும் ருசியான
தெவிட்டாத தேன்சுவை.
செழிப்பான மண்ணின்சுவை.
மீண்டும் நடந்தபோது எதிரில்
எதிர்ப்பட்டது என் மாணவப்
பருவத்து காதலி.
அவள் இன்று இரண்டு
குழந்தைகளின் தாய்.
அவளின் அழகு முன்னைவிட
மங்கலமாய் பிரகாசிக்கின்றது.
அவளை நலம் விசாரித்து
அவளுக்கே தெரியாமல்
கண்ணீர் வெளியி்ல் தெரியாமல்
வரப்புப் பார்த்து வழிநடந்தேன்
பசுமையான நினைவுகளோடு…!!.
*.
காடுகழனிப் பார்த்து ரொம்ப
வருஷமாச்சின்னு
காலார நடந்துப் போய்
பார்த்து வரலாமுன்னு
நினைச்சி புறப்பட்டுப் போனேன்.
பச்சை பசேல்லுன்னு அங்கே
பசுமையான அழகு காட்சி.
வரப்பிலே நடந்து போகையில்
குருவிங்களெல்லாம் உற்சாகமா
தலைக்கு மேலே பறக்கின்றன.
வரப்பிலிருந்தவாறே
செண்டாக முதிர்ந்த ரெண்டு
கம்மங் கதிரை கைநீட்டி பறிச்சி
உள்ளங்கையில் வைச்சி
நுமிட்டி நுமிட்டி ஊதி ஊதி
வாயிலிட்டுச் சுவைத்தேன்
பச்சைக் கதிரி்ன் பால்சுவை
அத்தனையும் ருசியான
தெவிட்டாத தேன்சுவை.
செழிப்பான மண்ணின்சுவை.
மீண்டும் நடந்தபோது எதிரில்
எதிர்ப்பட்டது என் மாணவப்
பருவத்து காதலி.
அவள் இன்று இரண்டு
குழந்தைகளின் தாய்.
அவளின் அழகு முன்னைவிட
மங்கலமாய் பிரகாசிக்கின்றது.
அவளை நலம் விசாரித்து
அவளுக்கே தெரியாமல்
கண்ணீர் வெளியி்ல் தெரியாமல்
வரப்புப் பார்த்து வழிநடந்தேன்
பசுமையான நினைவுகளோடு…!!.
*.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
அடைக்கலம்…!!.
*
வாய்விட்டு சொல்லாமல்
மனசுக்குள்ளேயே வைச்சி
எத்தனையோ பேருக்கு
இரகசியமாய்
அடைக்கலம் கொடுத்து
பாதுகாத்திருக்கின்றது
மௌனமான – அந்த
மறைவான
மலைக் குன்றுகள்…!!..
*
*
வாய்விட்டு சொல்லாமல்
மனசுக்குள்ளேயே வைச்சி
எத்தனையோ பேருக்கு
இரகசியமாய்
அடைக்கலம் கொடுத்து
பாதுகாத்திருக்கின்றது
மௌனமான – அந்த
மறைவான
மலைக் குன்றுகள்…!!..
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
பழைய டைரி…!!
*
பரணையிலிருந்து கிடைத்தது
தாத்தாவின் பழைய டைரி
பிரித்துப் படித்தால்
பக்கமெல்லாம் எழுதியிருந்தது
கடன் கணக்கு.
*
அந்தக் காலத்துப்
பாட்டிகளெல்லாம்
குடும்பத்திற்கு
வழிகாட்டிகள்
இப்பொழுது
அனைவருக்கும்
அவர்கள் வெறும்
மூதாட்டிகள்.
*
தாத்தா நிலம்
வாங்கிப் போட்டார்.
அப்பா வீடு
கட்டி வாழ்ந்தார்.
விற்று தீர்த்தான்
குடிகார மகன்.
*
*
பரணையிலிருந்து கிடைத்தது
தாத்தாவின் பழைய டைரி
பிரித்துப் படித்தால்
பக்கமெல்லாம் எழுதியிருந்தது
கடன் கணக்கு.
*
அந்தக் காலத்துப்
பாட்டிகளெல்லாம்
குடும்பத்திற்கு
வழிகாட்டிகள்
இப்பொழுது
அனைவருக்கும்
அவர்கள் வெறும்
மூதாட்டிகள்.
*
தாத்தா நிலம்
வாங்கிப் போட்டார்.
அப்பா வீடு
கட்டி வாழ்ந்தார்.
விற்று தீர்த்தான்
குடிகார மகன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
துணை…!!
*
பாதையில்
நடந்துப் போகையில்
அழகானப் பெண்
எதிரில் வந்தாள்.
ரசிக்காமலிருக்க
முடியவில்லை
யார் அந்தப் பெண்?
இளம் பசுமாடு….!!
*
தூக்கம்
வரவில்லையென
தவிப்பவர்க்கு
தூக்க மாத்திரையே
துணை…!!
*
*
பாதையில்
நடந்துப் போகையில்
அழகானப் பெண்
எதிரில் வந்தாள்.
ரசிக்காமலிருக்க
முடியவில்லை
யார் அந்தப் பெண்?
இளம் பசுமாடு….!!
*
தூக்கம்
வரவில்லையென
தவிப்பவர்க்கு
தூக்க மாத்திரையே
துணை…!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
ஹாஹா!
யாருப்பா அந்த பெண் என பார்த்தால்!!*!*
அன்றாட வாழ்க்கையில் கண்டதும் கேட்டதும் கூழாங்கற்களாய் பதிவாகுவது அருமை!
இன்னும் தொடருங்கள்.
யாருப்பா அந்த பெண் என பார்த்தால்!!*!*
அன்றாட வாழ்க்கையில் கண்டதும் கேட்டதும் கூழாங்கற்களாய் பதிவாகுவது அருமை!
இன்னும் தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
சிலந்தி…!!
*
எப்பொழுது
வெளியேறலாமென்று
எதிர்ப்பார்த்துக்
காத்திருக்கின்றது
அடக்கி
வைக்கப்படடடிருக்கும்
பெருந் துக்கம்.
*
உறவினருக்கு
உபசரிக்கக் கொண்டு
வந்து வைத்தப்
பிஸ்கடடும் மிக்ஸரும்
மறைக்கின்றன
பீங்கான் தட்டில்
வரைந்துள்ள
அழகான ஓவியங்கள்.
*
கவலையைப் பற்றி
கவிதை எழுத
நினைத்தேன்.
சிரித்துக் கொண்டே
வலையில் நகர்ந்தது
சிலந்தி.
*
*
எப்பொழுது
வெளியேறலாமென்று
எதிர்ப்பார்த்துக்
காத்திருக்கின்றது
அடக்கி
வைக்கப்படடடிருக்கும்
பெருந் துக்கம்.
*
உறவினருக்கு
உபசரிக்கக் கொண்டு
வந்து வைத்தப்
பிஸ்கடடும் மிக்ஸரும்
மறைக்கின்றன
பீங்கான் தட்டில்
வரைந்துள்ள
அழகான ஓவியங்கள்.
*
கவலையைப் பற்றி
கவிதை எழுத
நினைத்தேன்.
சிரித்துக் கொண்டே
வலையில் நகர்ந்தது
சிலந்தி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
சிலந்தி சிரிக்குமா அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
மிக்க நன்றி பானுஷா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
ந.க.துறைவன் wrote:மிக்க நன்றி பானுஷா...
பானுஷா பெயர் நல்லா இருக்கு ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
மயக்கம்…!!
*
பொழுது சாய்ந்தால்
பூக்களுக்கு
மயக்கம் வரும்
உதிர்கிறோமே என்று
தயக்கம் வரும்
விதியை நொந்து
துக்கம் வரும்
*
காலையில் எழுந்து
இரைத் தேடிக்
குப்பையைக் கிளறிக்
கொண்டிருக்கின்றன
கூவி முடித்தக்
கோழிகள்.
*
உபயோகப்படுத்தாமல்
பரண்மேல்
சும்மா
படுத்திருக்கின்றது
நெல்லுக் குத்தும்
உலக்கை.
*
கோள்மூட்டிகளின் பொறாமைப்
பேச்சினைக் கேட்டு
மனம் நொறுங்கிப் போனாள்
நெருங்கிய நண்பி.
*
பொழுது சாய்ந்தால்
பூக்களுக்கு
மயக்கம் வரும்
உதிர்கிறோமே என்று
தயக்கம் வரும்
விதியை நொந்து
துக்கம் வரும்
*
காலையில் எழுந்து
இரைத் தேடிக்
குப்பையைக் கிளறிக்
கொண்டிருக்கின்றன
கூவி முடித்தக்
கோழிகள்.
*
உபயோகப்படுத்தாமல்
பரண்மேல்
சும்மா
படுத்திருக்கின்றது
நெல்லுக் குத்தும்
உலக்கை.
*
கோள்மூட்டிகளின் பொறாமைப்
பேச்சினைக் கேட்டு
மனம் நொறுங்கிப் போனாள்
நெருங்கிய நண்பி.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
» எஸ்.எம்.எஸ்.கவிதை!
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
» எஸ்.எம்.எஸ்.கவிதை!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|