Latest topics
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!by rammalar Today at 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன்
Page 1 of 1
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன்
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: தண்டனையையும் நிறுத்தி வைப்பு!
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை..
ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு டிசம்பர் 18 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், தண்டனையையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது என்றும், 3 மாதத்தில் விசாரித்து முடிக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் வழக்கை கருத்தில் கொள்ளும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், 2 மாதத்திற்குள் கோப்புகளை சரிபார்த்து கர்நாடக நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும் என்றும், வழக்கை தாமதப்படுத்தும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை..
ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு டிசம்பர் 18 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், தண்டனையையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது என்றும், 3 மாதத்தில் விசாரித்து முடிக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் வழக்கை கருத்தில் கொள்ளும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், 2 மாதத்திற்குள் கோப்புகளை சரிபார்த்து கர்நாடக நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும் என்றும், வழக்கை தாமதப்படுத்தும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன்
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதாவ உள்ளிட்டோரின் 4 ஆண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு 18.12.2014 வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது.
கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் 18.12.2014க்குள் மேல்முறையீட்டு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் அது 35,000 பக்கமோ 40,000 பக்கமோ தாக்கல் செய்தாக வேண்டும்.
18.12.2014ம் தேதிக்குப் பின்னர் ஒருநாள் கூட கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மேல்முறையீட்டு வழக்குக்காக ஆவணங்களைத் தாக்கல் செய்வதோடு மட்டுமல்லாமல் தலைமை நீதிபதியிடம் சென்று வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தி மனு ஒன்றையும் அளிக்க வேண்டும்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கின் விசாரணையை கர்நாடகா உயர் நீதிமன்றம் மூன்றே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
நீதிபதி குன்ஹா கன்னடர் என்பதால் தீர்ப்பளித்துவிட்டதாக எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்கக் கூடாது. நீதிபதி குன்ஹா மட்டுமல்ல நானும் (தத்து) ஒரு கன்னடர்தான்.
நீதிபதிகள் மீதோ, சுப்பிரமணியன் சுவாமி மீதோ எந்த ஒரு விமர்சனத்தையும் அதிமுகவினர் முன்வைக்கக் கூடாது.
தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களும் சகிக்க முடியாதவை. வன்முறை சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிடவேண்டும்.
இதற்கு மேலும் நீதிபதிகளை விமர்சிப்பது, சுப்பிரமணியன் சுவாமியை விமர்சிப்பது, மிரட்டுவது, வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது அப்படி விமர்சனங்களை முன்வைப்பது அல்லது வன்முறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் நாங்கள் ஜாமீன் பற்றி மறுபரிசீலனை செய்ய நேரிடும்.
பாலி நாரிமன் மூத்த வழக்கறிஞர் என்பதால் அவரது உறுதிமொழிகளை நம்பி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.
உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதாவ உள்ளிட்டோரின் 4 ஆண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு 18.12.2014 வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது.
கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் 18.12.2014க்குள் மேல்முறையீட்டு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் அது 35,000 பக்கமோ 40,000 பக்கமோ தாக்கல் செய்தாக வேண்டும்.
18.12.2014ம் தேதிக்குப் பின்னர் ஒருநாள் கூட கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மேல்முறையீட்டு வழக்குக்காக ஆவணங்களைத் தாக்கல் செய்வதோடு மட்டுமல்லாமல் தலைமை நீதிபதியிடம் சென்று வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தி மனு ஒன்றையும் அளிக்க வேண்டும்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கின் விசாரணையை கர்நாடகா உயர் நீதிமன்றம் மூன்றே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
நீதிபதி குன்ஹா கன்னடர் என்பதால் தீர்ப்பளித்துவிட்டதாக எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்கக் கூடாது. நீதிபதி குன்ஹா மட்டுமல்ல நானும் (தத்து) ஒரு கன்னடர்தான்.
நீதிபதிகள் மீதோ, சுப்பிரமணியன் சுவாமி மீதோ எந்த ஒரு விமர்சனத்தையும் அதிமுகவினர் முன்வைக்கக் கூடாது.
தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களும் சகிக்க முடியாதவை. வன்முறை சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிடவேண்டும்.
இதற்கு மேலும் நீதிபதிகளை விமர்சிப்பது, சுப்பிரமணியன் சுவாமியை விமர்சிப்பது, மிரட்டுவது, வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது அப்படி விமர்சனங்களை முன்வைப்பது அல்லது வன்முறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் நாங்கள் ஜாமீன் பற்றி மறுபரிசீலனை செய்ய நேரிடும்.
பாலி நாரிமன் மூத்த வழக்கறிஞர் என்பதால் அவரது உறுதிமொழிகளை நம்பி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன்
ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியிருந்தும், இன்றே அவர் சிறையில் இருந்து விடுதலையாக முடியாமல் போனது துரதிருஷ்டமே.
ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பு தனது வாதத்தை முன் வைத்தது. குறிப்பாக, ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காண்பித்து, அவரை ஜாமீனில் வெளியே விட வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் பாலி நாரிமன் கேட்டார்.
ஏற்கனவே பரப்பனஅக்ரஹாராசிறை மருத்துவர்களிடமிருந்து தேவைப்படும் மருத்துவ ஆவணங்களை ஜெயலலிதாவின் வக்கீல்கள் பெற்றதால், அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்
அரசு வக்கீல் இல்லாமலேயே விசாரணையை எதிர்கொண்ட இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. ஆனால் அந்த தீர்ப்பின் பிரதி, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். சிறப்பு நீதிமன்றம் அதை பரிசீலித்து ஜாமீனுக்கு தேவையான பிணையை பெற்ற பிறகு, பெங்களூர் மத்திய சிறைச்சாலைக்கு ஆர்டர் அனுப்ப வேண்டும். அந்த ஆர்டர் மத்திய சிறை அதிகாரிகளின் கைகளுக்கு சேர்ந்த பிறகே ஜெயலலிதாவை விடுதலை செய்ய முடியும்.
எனவே சிறப்பு நீதிமன்றம், அங்கிருந்து சிறை என இந்த அலைச்சலுக்கு கால அவகாசம் தேவைப்படும். இன்றே அந்த பணிகளை முடிப்பது சிரமம்தான் என்றாலும் சிறை அதிகாரி ஜெய்சிம்ஹா தான் ஆர்டர் வந்ததும் ஜெயலலிதாவை விடுதலை செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டதாக பேட்டி அளித்தார்.
எனவே சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் நடைமுறையை முடித்துவிட்டால் ஜெயலலிதாவை விடுதலை செய்யலாம் என்று அதிமுக தரப்பு குஷியாக இருந்தது.
பிணை கொடுப்பதற்காக தமிழகத்தில் இருந்து வக்கீல்கள் வந்து சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ள பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட் ஆர்டர் சிறப்பு நீதிமன்றத்துக்கு வராததால் வக்கீல்கள் நகத்தை கடித்தபடி அமர்ந்திருந்தனர். சிட்டி சிவில் கோர்ட் ரிஜிஸ்டார் சந்திரசேகர் மார்கூரை சென்று அவ்வப்போது பார்த்து, ஆர்டர் வந்துவிட்டதா, ஆர்டர் வந்து விட்டதா என்று கேட்டபடி இருந்தனர். சுமார் ஐந்து முறை இவ்வாறு அவர்கள் கேட்டனர். ஆனால் ரிஜிஸ்டரோ, இன்னும் பேக்ஸ் மூலமாக கூட வரவில்லை. நீங்கள் வேண்டுமானால் பேக்ஸ்சை செக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதனிடையே டெல்லி சென்றிருந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா, மதியத்துக்கு மேலே பெங்களூர் திரும்பினார். அவரும் சிவில் கோர்ட்டுக்கு வந்து அலுவல்களில் மூழ்கியிருந்தார். மாலை 5.30 மணியானதும் கோர்ட் நேரம் முடிந்தது. குன்ஹாவும் கிளம்பி சென்றுவிட்டார்.
ஆனால் அதுவரை சுப்ரீம் கோர்ட் ஆர்டர் வராததால் ஜெயலலிதாவை இன்று ரிலீஸ் செய்ய முடியாது என்பது உறுதியாகிவிட்டது. ஆர்டர் காப்பி வந்த பிறகு ஜெயலலிதா நாளைக்குத்தான் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு உள்ளது. எனவே சிறையில் அடைக்கப்பட்டு 22வது நாள்தான் ரிலீஸ் ஆக உள்ளார் ஜெயலலிதா.
oneindia
ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பு தனது வாதத்தை முன் வைத்தது. குறிப்பாக, ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காண்பித்து, அவரை ஜாமீனில் வெளியே விட வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் பாலி நாரிமன் கேட்டார்.
ஏற்கனவே பரப்பனஅக்ரஹாராசிறை மருத்துவர்களிடமிருந்து தேவைப்படும் மருத்துவ ஆவணங்களை ஜெயலலிதாவின் வக்கீல்கள் பெற்றதால், அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்
அரசு வக்கீல் இல்லாமலேயே விசாரணையை எதிர்கொண்ட இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. ஆனால் அந்த தீர்ப்பின் பிரதி, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். சிறப்பு நீதிமன்றம் அதை பரிசீலித்து ஜாமீனுக்கு தேவையான பிணையை பெற்ற பிறகு, பெங்களூர் மத்திய சிறைச்சாலைக்கு ஆர்டர் அனுப்ப வேண்டும். அந்த ஆர்டர் மத்திய சிறை அதிகாரிகளின் கைகளுக்கு சேர்ந்த பிறகே ஜெயலலிதாவை விடுதலை செய்ய முடியும்.
எனவே சிறப்பு நீதிமன்றம், அங்கிருந்து சிறை என இந்த அலைச்சலுக்கு கால அவகாசம் தேவைப்படும். இன்றே அந்த பணிகளை முடிப்பது சிரமம்தான் என்றாலும் சிறை அதிகாரி ஜெய்சிம்ஹா தான் ஆர்டர் வந்ததும் ஜெயலலிதாவை விடுதலை செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டதாக பேட்டி அளித்தார்.
எனவே சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் நடைமுறையை முடித்துவிட்டால் ஜெயலலிதாவை விடுதலை செய்யலாம் என்று அதிமுக தரப்பு குஷியாக இருந்தது.
பிணை கொடுப்பதற்காக தமிழகத்தில் இருந்து வக்கீல்கள் வந்து சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ள பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட் ஆர்டர் சிறப்பு நீதிமன்றத்துக்கு வராததால் வக்கீல்கள் நகத்தை கடித்தபடி அமர்ந்திருந்தனர். சிட்டி சிவில் கோர்ட் ரிஜிஸ்டார் சந்திரசேகர் மார்கூரை சென்று அவ்வப்போது பார்த்து, ஆர்டர் வந்துவிட்டதா, ஆர்டர் வந்து விட்டதா என்று கேட்டபடி இருந்தனர். சுமார் ஐந்து முறை இவ்வாறு அவர்கள் கேட்டனர். ஆனால் ரிஜிஸ்டரோ, இன்னும் பேக்ஸ் மூலமாக கூட வரவில்லை. நீங்கள் வேண்டுமானால் பேக்ஸ்சை செக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதனிடையே டெல்லி சென்றிருந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா, மதியத்துக்கு மேலே பெங்களூர் திரும்பினார். அவரும் சிவில் கோர்ட்டுக்கு வந்து அலுவல்களில் மூழ்கியிருந்தார். மாலை 5.30 மணியானதும் கோர்ட் நேரம் முடிந்தது. குன்ஹாவும் கிளம்பி சென்றுவிட்டார்.
ஆனால் அதுவரை சுப்ரீம் கோர்ட் ஆர்டர் வராததால் ஜெயலலிதாவை இன்று ரிலீஸ் செய்ய முடியாது என்பது உறுதியாகிவிட்டது. ஆர்டர் காப்பி வந்த பிறகு ஜெயலலிதா நாளைக்குத்தான் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு உள்ளது. எனவே சிறையில் அடைக்கப்பட்டு 22வது நாள்தான் ரிலீஸ் ஆக உள்ளார் ஜெயலலிதா.
oneindia
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்
» ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி
» அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 11 பேர் மீது நடவடிக்கை: ஜெயலலிதா அதிரடி அறிவிப்ப
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்
» ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி
» அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 11 பேர் மீது நடவடிக்கை: ஜெயலலிதா அதிரடி அறிவிப்ப
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|