சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வெளி நாட்டு வாழ்க்கையும்  வாழ்வும்! Khan11

வெளி நாட்டு வாழ்க்கையும் வாழ்வும்!

3 posters

Go down

வெளி நாட்டு வாழ்க்கையும்  வாழ்வும்! Empty வெளி நாட்டு வாழ்க்கையும் வாழ்வும்!

Post by Nisha Tue 28 Oct 2014 - 8:32

ஏன் நண்பா, ஏற்கனவே அப்பா கடன் இவ்வளவு இருக்கு? இதுக்கு மேலயும் கடன் வாங்குற?
இல்ல நண்பா, விசாக்கு ஏஜெண்டுக்கு பணம் கட்டணும். ஒரு ஒன்றை வருஷம் ஒழச்சா கடன கட்டிடலாம். இருக்க பிரச்சனைக்கு அங்க போனாத்தான் சரியா வரும்.
(ஒன்றறை வருஷத்துக்கு பிறகு)
என்னங்க, கடனை எல்லாம் அடச்சுட்டீங்க. பேசாம கெளம்பி வந்துருங்க இங்க.
இல்டி, தங்கச்சி கல்யாணத்துக்கு கையில ஒன்னுமில்ல. இந்த ஒரு வருஷம் மட்டும் பல்ல கடிச்சிட்டு நின்னா எப்படியாவது கல்யாணாத்த முடிச்சிடலாம்.
இரண்டரை வருடத்திற்கு பிறகு,
ஏங்க, உங்க அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூப்டு போயி காமிச்சோம். டாக்டர் உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க.
சரிடி, நான் பணம் எப்படியாவது ஏற்பாடு பண்ணறேன். முடிச்சிட்டு வரலாம்னு இருந்தேன் இந்த வருஷம். ஆனா, முடியாது போல இருக்கு. இங்க வேலை புழிஞ்சு எடுக்குறாங்க. சரியா தூங்க கூட நேரம் கெடைக்கல.
இன்னும் ஒரு வருடத்திற்கு பிறகு,
என்னங்க, மாசம் இன்னும் கொஞ்சம் பணம் கூட அனுப்ப முடியுமா? ஸ்கூல்ல அதுக்கு இதுக்குன்னு ஃபீஸ் புடுங்குறாங்க. பத்த மாட்டுங்குது. புள்ள வேற வளந்திட்டான். அது வேணும், இது வேணும்னு கேக்குறான். சொல்லி புரிய வைக்க முடியல. உங்க அம்மாவுக்கும் மாத்திரை செலவு மாசத்துக்கு 4000 வரை வந்துருது.
எங்கடி, நான் ஓவர் டைம் பார்த்து தங்கச்சி கல்யாண கடனை கட்டிட்டு வாயை கட்டி வயித்த கட்டி தான் அனுப்பறேன். பத்தல. எனக்கும் இங்க க்ளைமேட் ஒத்து வரல. மூச்சு திணறலா இருக்கு. ஆஸ்பத்திரி போனா காசு புடுங்கிடுவாய்ங்க. அடுத்த வாரம் ஒருத்தவரு வர்றாரு. அவருட்ட கொஞ்சம் மருந்து வாங்கி கொடுத்து விடு.
(பல வருடங்களுக்கு பிறகு)
முடியலடி, முடிச்சிட்டு வந்து கைல இருக்க கொஞ்சம் பணத்தை வச்சு நம்ம ஊர்ல சின்ன மளிகை கடை, இல்லனா ஒரு ஃபேன்சி ஸ்டோர் ஒன்னு போடவா?
ஏங்க, இவ்வளவு நாள் இருந்துட்டீங்க. இன்னும் கொஞ்சம் நாள் மட்டும் இருந்தீங்கண்ணா, சொந்தமா ஒரு வீட்ட கட்டிறலாம். இருக்க ஒரு எடம் இல்லைங்க நமக்கு..
-----------------------------------------
மார்டின் சட்டையும், கண்ணில் கூலிங் க்ளாஸும் , பெட்டியில் கோடாரி தைலமும், இண்டர்நேஷனல் லக்ஸும்,ரோத்மான்ஸ் சிகெரெட்டுமாக வருடத்திற்கு 40 நாள் விடுமுறையில் வரும் நண்பர்களை மட்டும் தான் நமக்குத்தெரியும்.
செய்தி: வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்திற்கு ஏற்கனவே இருக்கும் Convertion Charges போக 12.5% சேவை வரி.


 நன்றி 
ராஜா முகமது
பேஸ்புக். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெளி நாட்டு வாழ்க்கையும்  வாழ்வும்! Empty Re: வெளி நாட்டு வாழ்க்கையும் வாழ்வும்!

Post by நண்பன் Tue 28 Oct 2014 - 9:34

//இது என் நண்பரிடமிருந்து வந்த மடல்// 2010ல் நான்கு ஆண்டுகளின் பின் மீண்டும் சேனையில் பதிகிறேன்..

வளைகுடா மாப்பிள்ளை

துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்.


அன்புள்ள மனைவிக்கு,

நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..

என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது

அன்புள்ள கணவனுக்கு

தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.

நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களுக்கு இனையாக இருக்கலாம்.

மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.

பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்.


அன்புள்ள மனைவிக்கு,

நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.

உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.

கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.

ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,

அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.

புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது

மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று. மனிதனை இறைவன் படைப்பதற்க்கு முன்னே அவனுககு தேவையான அனைத்தையும் படைத்து விட்டான் இது தெரியாத மனிதன் இறைவனை குறை கூறுகிறான்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெளி நாட்டு வாழ்க்கையும்  வாழ்வும்! Empty Re: வெளி நாட்டு வாழ்க்கையும் வாழ்வும்!

Post by Nisha Tue 28 Oct 2014 - 9:41

வெளி நாட்டு வாழ்க்கையும் அதனால் தொடரும் ஆசைகளும் படிக்கும் போது கண்களில் கண்ணீர் வருவதை தவிர்க்க இயலவில்லை! 

பாவம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெளி நாட்டு வாழ்க்கையும்  வாழ்வும்! Empty Re: வெளி நாட்டு வாழ்க்கையும் வாழ்வும்!

Post by ahmad78 Tue 28 Oct 2014 - 14:18

உண்மைதான்.

நானும் குடும்பத்தோட வாழலாம்னு ஒவ்வொரு நாளும் கனவு மட்டும் கண்டுகொண்டிருக்கிறேன்.

நான் மட்டுமல்ல. என்போன்ற பலரும்

உள்ளே அழுது வெளியே சிரித்துக்கொண்டிருக்கிறோம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வெளி நாட்டு வாழ்க்கையும்  வாழ்வும்! Empty Re: வெளி நாட்டு வாழ்க்கையும் வாழ்வும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum