சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

உணவு சேமிப்பே உலகைக் காக்கும் Khan11

உணவு சேமிப்பே உலகைக் காக்கும்

Go down

உணவு சேமிப்பே உலகைக் காக்கும் Empty உணவு சேமிப்பே உலகைக் காக்கும்

Post by ahmad78 Tue 28 Oct 2014 - 15:56

உணவு சேமிப்பே உலகைக் காக்கும் Kalams_2174009f
உணவில் பாதியை உண்டு, மீதியை வீணாக ஒதுக்குவது இன்று நாகரிக அடையாளமாக மாறியுள்ளது. மனதிற்குப் பிடிக்காமல் உணவை வெறுத்து ஒதுக்குபவர்களும் உண்டு. அதேசமயம் உணவின் மணத்திலேயே பசியாறுபவர்களும் உண்டு. உணவு கிடைக்காமல் உலகில் அலைபவர்கள் எண்ணிக்கை, வீணாக்கப்படும் உணவின் அளவைவிட நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும்.
மிதமிஞ்சி நாம் ஒதுக்கும் ஒரு பிடி உணவு, பலருக்கு ஒருவேளை உணவாக இருக்கிறது. இந்த விழிப்புணர்வைப் பள்ளிகளில் இருந்து தொடங்கினால் பெரிய மாற்றம் கிடைக்கும் என ஆதங்கத்துடன் பேசுகிறார் ஸ்பைஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனீஸ்.
அனைத்துப் பள்ளிகளிலும்..
கோவையில் ஸ்பைஸ் அமைப்பு உணவு வீணாக்கு தலுக்கு எதிரான இயக்கத்தைக் கையில் எடுத்துள்ளது.
2014-ல் வெவ்வேறு கல்லூரி களில் பொறியியல் முடித்த 17 பட்டதாரிகளால் உருவானது இந்த அமைப்பு. சமூகத்துக்கும், மாணவர் உலகத்திற்கும் ஏதேனும் கற்றுக் கொடுக்க வேண்டுமென ஒரு மாற்றத்தை நோக்கிக் களம் இறங்கியுள்ளனர் இந்த இளைஞர்கள்.
அக்.16 முதல் நவ.14 வரை கோவையில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உணவு சேமிப்பு குறித்த விழிப்புணர்வு உரைகள், போட்டிகள், மாரத்தான், மனிதச் சங்கிலி எனப் பல போட்டிகளைத் திட்டமிட்டுள்ளனர். இறுதியாக அதைச் சாதனை முயற்சியாக மாற்றும் சவாலையும் ஏற்றுள்ளனர்.
இந்த அமைப்பின் நிர்வாகி பத்மநாபன் கூறுகையில், மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கியது தான் ஸ்பைஸ் அமைப்பு. ஏன், எதற்காக என எந்தக் கேள்வியும் இல்லாமல் வெறும் பாடமாகப் பொறியியலைப் படிக்கும் மாணவர்களுக்கு, எங்களது செய்முறைப் பயிற்சி வகுப்பு நல்ல பலனைக் கொடுத்தது. அந்த ஊக்கம் தான் சமூக நோக்கமுள்ள அடுத்த முயற்சிக்கு எங்களை நகர்த்தியது என்கிறார் அவர் .
தேவைப்படுபவர்களுக்கு..
மேலும் இதுபற்றி அவர் கூறும்போது “உற்பத்தி செய்யப்படுவதில் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாக்கப்படுகிறது. விளைவு எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் வீணாக்குகிறோம். இதனைச் சரிசெய்வது எப்படி என யோசித்தபோது, பள்ளிகளிலிருந்து திட்டத்தை ஆரம்பிக்கலாம் என்ற யோசனை கிடைத்தது. ஒரு நாளைக்கு ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 20 கிலோ உணவுப்பொருள் வீணாகிறது. கோவையில் உள்ள 300க்கும் அதிகமான பள்ளிகளை இந்தக் கணக்கில் சேர்த்தால், ஒரு நாளில் வீணாகும் உணவு மட்டும் 6000 கிலோவைத் தாண்டும். தேவையில்லை என ஒதுக்கும் உணவைத் தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதிலும் மிஞ்சுகிறது என்றால், அதனை உயிரி எரிபொருளாக, உயிரி வாயுவாக மாற்ற வேண்டும்.
அழைப்புகளை ஏற்கும் பள்ளிகளைப் பதிவு செய்து, அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பள்ளி மாணவர்களைத் தன்னார்வலர்களாகக் குழு அமைத்து எங்களது முயற்சியால் ஏற்படும் மாற்றத்தைக் கண்காணிப்போம்.அதில் எங்களது முயற்சியின் வெற்றி தெரியவரும். மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்குக் கருத்துகளைக் கொண்டு செல்ல மராத்தான் ஓட்டம், மனிதச் சங்கிலி என நடத்துகிறோம். பதிவுசெய்த பள்ளிகளில் இறுதி நாளன்று உணவு வீணாக்குதலே இல்லை என்ற இலக்கை நோக்கிய முயற்சியை எடுக்கிறோம். அதாவது தேவைக்கு அதிகமாக உணவு இருந்தால் அது தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்கப்படும். அதையும் மீறி வீணாகும் உணவுப் பொருட்களை உயிரி உரங்களாக மாற்றி சாதனை முயற்சியும் பதிவுசெய்யப்படுகிறது.
பொறியியல் பட்டதாரிகள் என்பதால் தேவையான கருவிகளையும் நாங்களே தயாரிக்கிறோம். முழுமையாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முடிக்கும் போது உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் ஓரளவுக்காவது பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் புரிந்திருக்கும்.” என்கிறார் அவர்.
கோவையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இதனை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர். சிறிய இடைவெளியிலேயே ஒரு மாற்றம் கிடைக்கும் என்பது இவர்களது எண்ணம். இதேநிலைத் தொடரும்பட்சத்தில் வருங்காலத்தில் உணவின் அவசியம் உணர்ந்த பலர் உருவாக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6536049.ece


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum