Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
+2
சுறா
Nisha
6 posters
Page 1 of 1
வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
வருமொழி இடைச்சொல்லாகவோ, உரிச்சொல்லாகவோ, வடமொழி போன்ற பிறமொழிச் சொல்லாகவோ இருந்தால், அங்கே வலி மிகுவதில்லை என்பது அறிந்த ஒன்று. இந்நிலையில், பன்மை குறித்த "கள்' என்பது இடைச்சொல். ஆதலால் எழுத்துகள், கருத்துகள், வாழ்த்துகள் என்று எழுதுவதே ஏற்புடையதாகும்.
""வன்தொடர் அல்லன முன்மிகா அல்வழி'' என்னும் விதியால், வன்தொடர் குற்றியலுகரத்தின் பின் வருமொழி முதலில் வரும் வல்லினம், அல்வழி வேற்றுமையாகிய இரண்டு இடங்களிலும் மிகும்.
""சுக்குக் கடிது, பதக்குப் பெரிது (எழுவாய்த் தொடர்கள்) என வன்தொடரால் வலி மிக்கதைக் காண்க'' என்பார் மயிலைநாதர்.
கொக்குப் பறக்கும் என அல்வழியிலும், நக்குப் பொறுக்கிகள் என வேற்றுமையிலும் வலி மிகுவது ஏனெனில், பொருள் புணர்ச்சிக் கருதி அங்கே வலி மிகுந்தனவாம். விகுதிப் புணர்ச்சிக்கு அவ்விதியைப் பயன்படுத்துதல் கூடாது.
"வாழ்த்துக்கள்' என்று தவறாக எழுதுகின்ற பலர், தம்மை அறியாமலேயே "வாழ்த்துகிறோம்' என்று சரியாக எழுதுகின்றனர். காரணம் என்ன? "வாழ்த்துகின்றோம்' என்னும் சொல்லைப் பகுபதங்களாகப் பிரிக்கும்போது, வாழ்த்து+கின்று+ஓம் எனப் பிரிக்கிறோம்.
வாழ்த்து என்பது வன்தொடர் குற்றியலுகரமாயினும், பொருள் புணர்ச்சி விதியின்படி "வாழ்த்துக்கின்றோம்' என எழுதுவதில்லை. காரணம், "கின்று' என்பது இடைச்சொல். எனவே, இப்புணர்ச்சியில் வலி மிகவில்லை.
8 ஓரெழுத்து ஒருமொழி அடையெடுத்து அமைந்தாலும் அங்கு வலி மிகும். தேனி-தேனீக்கள்; பூங்கா-பூங்காக்கள். கை-கைகள்; தை-தைகள் என வலி மிகாது இருக்கின்றன. ஏனெனில், கை, தை, பை - "ஐ' கூட்டுயிர். ஆதலால் அங்கே வலி மிகவில்லை.
8 அகர ஈறு: அகர ஈற்றுச் சொற்களின் பின் வலி மிகும். கள-களக்கள்; விள-விளக்கள்.
8 ஆகார ஈறு: ஆகார ஈற்றுச் சொற்களின் பின் வலி மிகும். ஆலா-ஆலாக்கள்; கனா-கனாக்கள்; பலா-பலாக்கள்.
8 உகர ஈறு: உகரத்தை இறுதியாகக்கொண்ட குறிலிணைச் சொற்களின் பின் வலி மிகும். அணு-அணுக்கள்; உடு-உடுக்கள்; கரு-கருக்கள்; தெரு-தெருக்கள்.
8 ஊகார ஈறு: ஊகார ஈற்றுச் சொல்லின் பின் வலி மிகும். கொண்மூ-கொண்மூக்கள்.
"புள்' என்னும் ஒருமைச் சொல்லுக்குப் "புட்கள்' என்பது பன்மையானது போன்று, "நாள்' என்பதன் பன்மையை "நாட்கள்' என்றே பலர் தவறாக எழுதக் காண்கிறோம். நாள்கள் என்பது வேறு; நாட்கள் என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள பொருள் வேறுபாடு தெரியாமல் பலர் பயன்படுத்துகின்றனர். "நாள்கள்' என்பது, "நாள்' என்பதன் பன்மையைக் குறிக்கும். "நாட்கள்' என்பதோ, அன்று இறக்கிய "கள்' (மது) என்னும் பொருளைத் தரும்.
""அன்று இறக்கிய கள்ளைக் குடித்துவிட்டு அதனால் ஏற்படும் மகிழ்ச்சியில், தேரைப் பரிசாகக் கொடுத்தல் யார்க்கும் எளிது'' என்பது இவ் அடிகளின் பொருளாகும். பல்லோராலும் தவறாகப் பயன்படுத்தப்படுவது "நாட்கள்' எனும் சொல். நம் முன்னோர்கள் "நாள்கள்' என்றே எங்கும் பயன்படுத்தக் காணலாம்.
என்று கூறியுள்ளார். மரபின் பெருமையை உணர்ந்து, நமக்கு அதனை உணர்த்தவே தொன்னூலாசிரியர் தொல்காப்பியர் தம் நூலில் மரபு என்னும் சொல்லை 75 இடங்களுக்கு மேற்பட்டுக் கையாண்டிருப்பதைக் காணலாம். மரபுவழி கூறவில்லையெனில் பொருள் வேறுபடும் என்றுணர்ந்து அதற்கென விதி செய்தார்.
எனவே, மரபுவழி நிற்றலே நமக்கு உரிய - உயரிய மாண்பு என்பதை உணர வேண்டும். வாழ்த்துக்கள், கருத்துக்கள், எழுத்துக்கள், நாட்கள், பொருட்கள் என எழுதுவது தவறு. வாழ்த்துகள், எழுத்துகள், கருத்துகள், நாள்கள், பொருள்கள் என எழுதுவதே சரி!
தினமணியில் என்றோ படித்தது!
""வன்தொடர் அல்லன முன்மிகா அல்வழி'' என்னும் விதியால், வன்தொடர் குற்றியலுகரத்தின் பின் வருமொழி முதலில் வரும் வல்லினம், அல்வழி வேற்றுமையாகிய இரண்டு இடங்களிலும் மிகும்.
""சுக்குக் கடிது, பதக்குப் பெரிது (எழுவாய்த் தொடர்கள்) என வன்தொடரால் வலி மிக்கதைக் காண்க'' என்பார் மயிலைநாதர்.
""கொக்குப் பறக்கும் புறாப்பறக்கும்
குருவி பறக்கும் குயில்பறக்கும்
நக்குப் பொறுக்கி களும்பறப்பர்
நானே பறப்பன் நராதிபனே!''
(இராம கவிராயர்)
கொக்குப் பறக்கும் என அல்வழியிலும், நக்குப் பொறுக்கிகள் என வேற்றுமையிலும் வலி மிகுவது ஏனெனில், பொருள் புணர்ச்சிக் கருதி அங்கே வலி மிகுந்தனவாம். விகுதிப் புணர்ச்சிக்கு அவ்விதியைப் பயன்படுத்துதல் கூடாது.
"வாழ்த்துக்கள்' என்று தவறாக எழுதுகின்ற பலர், தம்மை அறியாமலேயே "வாழ்த்துகிறோம்' என்று சரியாக எழுதுகின்றனர். காரணம் என்ன? "வாழ்த்துகின்றோம்' என்னும் சொல்லைப் பகுபதங்களாகப் பிரிக்கும்போது, வாழ்த்து+கின்று+ஓம் எனப் பிரிக்கிறோம்.
வாழ்த்து என்பது வன்தொடர் குற்றியலுகரமாயினும், பொருள் புணர்ச்சி விதியின்படி "வாழ்த்துக்கின்றோம்' என எழுதுவதில்லை. காரணம், "கின்று' என்பது இடைச்சொல். எனவே, இப்புணர்ச்சியில் வலி மிகவில்லை.
""இடைஉரி வடசொல்லின் இயல்பிய கொளாதவும்
போலியும் மரூஉம் பொருந்திய வாற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே''
(நன்னூல்-239)
விதி விலக்கான விதிகள்
8 ஓரெழுத்து ஒருமொழியின் பின் வலி மிகும். ஆ-ஆக் கள்; ஈ-ஈக்கள்; ஊ-ஊக்கள்; ஏ-ஏக்கள்; கா-காக்கள்.8 ஓரெழுத்து ஒருமொழி அடையெடுத்து அமைந்தாலும் அங்கு வலி மிகும். தேனி-தேனீக்கள்; பூங்கா-பூங்காக்கள். கை-கைகள்; தை-தைகள் என வலி மிகாது இருக்கின்றன. ஏனெனில், கை, தை, பை - "ஐ' கூட்டுயிர். ஆதலால் அங்கே வலி மிகவில்லை.
8 அகர ஈறு: அகர ஈற்றுச் சொற்களின் பின் வலி மிகும். கள-களக்கள்; விள-விளக்கள்.
8 ஆகார ஈறு: ஆகார ஈற்றுச் சொற்களின் பின் வலி மிகும். ஆலா-ஆலாக்கள்; கனா-கனாக்கள்; பலா-பலாக்கள்.
8 உகர ஈறு: உகரத்தை இறுதியாகக்கொண்ட குறிலிணைச் சொற்களின் பின் வலி மிகும். அணு-அணுக்கள்; உடு-உடுக்கள்; கரு-கருக்கள்; தெரு-தெருக்கள்.
8 ஊகார ஈறு: ஊகார ஈற்றுச் சொல்லின் பின் வலி மிகும். கொண்மூ-கொண்மூக்கள்.
"புள்' என்னும் ஒருமைச் சொல்லுக்குப் "புட்கள்' என்பது பன்மையானது போன்று, "நாள்' என்பதன் பன்மையை "நாட்கள்' என்றே பலர் தவறாக எழுதக் காண்கிறோம். நாள்கள் என்பது வேறு; நாட்கள் என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள பொருள் வேறுபாடு தெரியாமல் பலர் பயன்படுத்துகின்றனர். "நாள்கள்' என்பது, "நாள்' என்பதன் பன்மையைக் குறிக்கும். "நாட்கள்' என்பதோ, அன்று இறக்கிய "கள்' (மது) என்னும் பொருளைத் தரும்.
""நாட்கள் உண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேரீ தல்லே''
(புறநானூறு-123)
""அன்று இறக்கிய கள்ளைக் குடித்துவிட்டு அதனால் ஏற்படும் மகிழ்ச்சியில், தேரைப் பரிசாகக் கொடுத்தல் யார்க்கும் எளிது'' என்பது இவ் அடிகளின் பொருளாகும். பல்லோராலும் தவறாகப் பயன்படுத்தப்படுவது "நாட்கள்' எனும் சொல். நம் முன்னோர்கள் "நாள்கள்' என்றே எங்கும் பயன்படுத்தக் காணலாம்.
""நடத்தல்அரிது ஆகும்நெறி நாள்கள் சிலதாயர்க்கும்''
(கம்ப.சுந்தர காண்டம்-547)
""நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே''
""தோள்கள் இருந்த வாகாணீரே சுரிகுழலீர் வந்துகாணீரே''
(திவ்யப் பிரபந்தம்-பெரியாழ்வார்-211)
""உரையா தார்இல்லை ஒன்றுநின் தன்மையைப்
பரவா தார்இல்லை நாள்களும்''
(சம்பந்தர் தேவாரம்-596)
""நாளைப்போ வேன்என்று நாள்கள்செலத் தரியாது''
""நீந்துவார் நெடுநாள்கள் நிறைவெம்போர்த் துறைவிளைத்தார்''
(பெரியபுராணம்-1067,1296)
""கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?''
(திருவெம்பாவை-8)
""தமையன்எம் ஐயன் தாள்கள்பாடி''
(திருவாசகம்-207)
மேற்கூறிய இவ்வரலாறுகளின் வழி, நம் முன்னோர்கள் எதை எப்படிச் சொன்னார்களோ, அதை அப்படிக்
கூறுவதே சால்புடையதாகும். பவணந்தி முனிவரும்
இந்நோக்கில்,
""என்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே''
(நன்னூல்-388)
என்று கூறியுள்ளார். மரபின் பெருமையை உணர்ந்து, நமக்கு அதனை உணர்த்தவே தொன்னூலாசிரியர் தொல்காப்பியர் தம் நூலில் மரபு என்னும் சொல்லை 75 இடங்களுக்கு மேற்பட்டுக் கையாண்டிருப்பதைக் காணலாம். மரபுவழி கூறவில்லையெனில் பொருள் வேறுபடும் என்றுணர்ந்து அதற்கென விதி செய்தார்.
""மாற்ற அரும்சிறப்பின் மரபு இயல் கிளப்பின்''
""மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்''
(தொல்.-1500,1591)
எனவே, மரபுவழி நிற்றலே நமக்கு உரிய - உயரிய மாண்பு என்பதை உணர வேண்டும். வாழ்த்துக்கள், கருத்துக்கள், எழுத்துக்கள், நாட்கள், பொருட்கள் என எழுதுவது தவறு. வாழ்த்துகள், எழுத்துகள், கருத்துகள், நாள்கள், பொருள்கள் என எழுதுவதே சரி!
தினமணியில் என்றோ படித்தது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
வரவேற்புகள் என எழுதாமல் வரவேற்புக்கள் என எழுதினால் வரவேற்பின் போது தரும் கள் என புரிந்திடவும்!
இனிமேல் வரவேற்புகள் என எழுதுவோம்
வாழ்த்துகள் என க் தவிர்த்து வாழ்த்துவோம்.
இனிமேல் வரவேற்புகள் என எழுதுவோம்
வாழ்த்துகள் என க் தவிர்த்து வாழ்த்துவோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
இதில் இன்னும் நிறைய விசயங்கள் சொல்கிறேன். விவாதத்திற்கு உரிய விளக்கங்களுடன் வருகிறேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
வாங்க வாங்க, பேசலாம்! விவாதிக்கலாம்!
அதைத்தான் நானும் விரும்புகின்றேன்!
அதைத்தான் நானும் விரும்புகின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
இது வரைக்கும் நான்
வாழ்த்துக்கள்
எழுத்துக்கள்
கருத்துக்கள்
நாட்கள்
பொருட்கள்
நான் தமிழன்தான் ஆனால் இன்னும் தமிழ் கற்க வில்லை
இன்னும் நிறைய கற்க வேண்டும்
விவாதங்கள் தொடரட்டும்
வாங்க சுறா சார் உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்
நான் சொல்லுவது வழ்த்துக்கள்தான் சரி
வாழ்த்துக்கள்
எழுத்துக்கள்
கருத்துக்கள்
நாட்கள்
பொருட்கள்
நான் தமிழன்தான் ஆனால் இன்னும் தமிழ் கற்க வில்லை
இன்னும் நிறைய கற்க வேண்டும்
விவாதங்கள் தொடரட்டும்
வாங்க சுறா சார் உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்
நான் சொல்லுவது வழ்த்துக்கள்தான் சரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
வாழ்த்துக்கள் என்பதுதான் சரி
காரணம் ஒரு உதாரணம் ...
பூ + செடி = பூச்செடி தான் சரி இங்கு ச் வருவதுபோல் ..
வாழ்த்து + கள் என்று வராது ..
வாழ்த்துக்கள் என்பதுதான் சரி
காரணம் ஒரு உதாரணம் ...
பூ + செடி = பூச்செடி தான் சரி இங்கு ச் வருவதுபோல் ..
வாழ்த்து + கள் என்று வராது ..
வாழ்த்துக்கள் என்பதுதான் சரி
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
வாழ்த்துகள் வரவேற்புகள் தான் சரி என எங்கேயோ படித்திருக்கிறேன். அதிலிருந்து நான் எழுதுவதை மாற்றிக் கொண்டேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
க்' வராது என்று நீங்க எடுத்துரைத்த வாதம் மிகவும் அருமை அக்கா
உங்கள் பதிவின் படி பார்த்தால் க்' வரக்கூடாது தான். வாழ்த்துகள் தான் சரி.
இதோ நானும் சிலவற்றை படித்தேன் தருகிறேன் பாருங்க
1) "க்" மிகலாம்...
* ஒற்றோடு வந்தா = மிகலாம் (கவனிங்க: "மிகணும்" ன்னு சொல்லலை, "மிகலாம்")
=> முத்துக்கள், எழுத்துக்கள், பழச் சத்துக்கள் = சரியே
=> முத்துகள், எழுத்துகள், பழச் சத்துகள் = சரியே
* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்கள் = மிகாது!
=> கொலுசுகள், மிராசுகள்
வாழ்த்து: த் வல்லின ஒற்று => மிகலாம் = வாழ்த்துக்கள்!
இரும்பு: ம் வல்லின ஒற்று அல்ல => மிகாது = இரும்புகள்!
கொலுசு: ஒற்றே இல்ல => கொலுசு-க்கள் ன்னு மிகாது! = கொலுசுகள்!
(மூவெழுத்துக்கும் அதிகமான "உ"கரச் சொற்கள்... வல்லின ஒற்றோடு வரும் போது மட்டுமே மிகும்)
------------
2) "க்" மிகணும்
* ஈரெழுத்துச் சொற்கள்.. குறிலா வந்தா = மிகணும்!
=> பசு-க்கள், அணு-க்கள், தெரு-க்கள்
* ஈரெழுத்துச் சொற்கள்.. நெடிலா வந்தா = மிகாது!
=> வீடு-கள், மாடு-கள், ஓடு-கள்
இப்போ புரியுதா? குரு-க்கள் = சரி! வீடு-க்கள் = தவறு:)
* ஓரெழுத்துச் சொற்கள் = மிகணும்!
=> பூ-க்கள், மா-க்கள், ஈ-க்கள்
(ஐகார-ஒளகாரக் குறுக்கம் அற்றவை: கை = கைகள் தான்! கைக்கள் அல்ல!)
------------
3) "க்" மிகவே கூடாது
ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பல எழுத்தோ...."வு" வரும் போது மட்டும், மிகவே கூடாது!
=> ஆய்வுகள், நோவுகள், தீவுகள், உராய்வுகள்
உங்கள் பதிவின் படி பார்த்தால் க்' வரக்கூடாது தான். வாழ்த்துகள் தான் சரி.
இதோ நானும் சிலவற்றை படித்தேன் தருகிறேன் பாருங்க
1) "க்" மிகலாம்...
* ஒற்றோடு வந்தா = மிகலாம் (கவனிங்க: "மிகணும்" ன்னு சொல்லலை, "மிகலாம்")
=> முத்துக்கள், எழுத்துக்கள், பழச் சத்துக்கள் = சரியே
=> முத்துகள், எழுத்துகள், பழச் சத்துகள் = சரியே
* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்கள் = மிகாது!
=> கொலுசுகள், மிராசுகள்
வாழ்த்து: த் வல்லின ஒற்று => மிகலாம் = வாழ்த்துக்கள்!
இரும்பு: ம் வல்லின ஒற்று அல்ல => மிகாது = இரும்புகள்!
கொலுசு: ஒற்றே இல்ல => கொலுசு-க்கள் ன்னு மிகாது! = கொலுசுகள்!
(மூவெழுத்துக்கும் அதிகமான "உ"கரச் சொற்கள்... வல்லின ஒற்றோடு வரும் போது மட்டுமே மிகும்)
------------
2) "க்" மிகணும்
* ஈரெழுத்துச் சொற்கள்.. குறிலா வந்தா = மிகணும்!
=> பசு-க்கள், அணு-க்கள், தெரு-க்கள்
* ஈரெழுத்துச் சொற்கள்.. நெடிலா வந்தா = மிகாது!
=> வீடு-கள், மாடு-கள், ஓடு-கள்
இப்போ புரியுதா? குரு-க்கள் = சரி! வீடு-க்கள் = தவறு:)
* ஓரெழுத்துச் சொற்கள் = மிகணும்!
=> பூ-க்கள், மா-க்கள், ஈ-க்கள்
(ஐகார-ஒளகாரக் குறுக்கம் அற்றவை: கை = கைகள் தான்! கைக்கள் அல்ல!)
------------
3) "க்" மிகவே கூடாது
ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பல எழுத்தோ...."வு" வரும் போது மட்டும், மிகவே கூடாது!
=> ஆய்வுகள், நோவுகள், தீவுகள், உராய்வுகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
இதையும் கொஞ்சம் பாருங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
வாழ்த்துகள் எனத்தான் எழுத வேண்டும். இதை குறித்து விளக்க, விவாதம் செய்ய எனக்கு நேரம் இல்லை!
நேரம் இருக்கும் போது எழுதுகின்றேன்!
இனியவன் அவர்கள் சொன்னது போல் பூச்செடி உதாரணம் தமிழ் இலக்கணத்துடன் வரும் அனைத்து சொற்களுக்கும் பொருந்தாது!
நேரம் இருக்கும் போது எழுதுகின்றேன்!
இனியவன் அவர்கள் சொன்னது போல் பூச்செடி உதாரணம் தமிழ் இலக்கணத்துடன் வரும் அனைத்து சொற்களுக்கும் பொருந்தாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
Nisha wrote:வாழ்த்துகள் எனத்தான் எழுத வேண்டும். இதை குறித்து விளக்க, விவாதம் செய்ய எனக்கு நேரம் இல்லை!
நேரம் இருக்கும் போது எழுதுகின்றேன்!
இனியவன் அவர்கள் சொன்னது போல் பூச்செடி உதாரணம் தமிழ் இலக்கணத்துடன் வரும் அனைத்து சொற்களுக்கும் பொருந்தாது!
இரண்டுமே சரி என்ற விளக்கத்தைதானே தந்திருக்கேன். {_
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
தொடருங்கள் சுறா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
Nisha wrote:தொடருங்கள் சுறா!
அதானே உங்களை யாரு விட்டது. இதோ இன்னும் அதிக செய்திகளை தருகிறேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
சூப்பர் சுறாண்ணா *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
நானும் அதை வழி மொழிகிறேன் காரணம் நீண்ட நாட்களாக நான் அப்படித்தான் எழுதி வருகிறேன் ^)சுறா wrote:Nisha wrote:வாழ்த்துகள் எனத்தான் எழுத வேண்டும். இதை குறித்து விளக்க, விவாதம் செய்ய எனக்கு நேரம் இல்லை!
நேரம் இருக்கும் போது எழுதுகின்றேன்!
இனியவன் அவர்கள் சொன்னது போல் பூச்செடி உதாரணம் தமிழ் இலக்கணத்துடன் வரும் அனைத்து சொற்களுக்கும் பொருந்தாது!
இரண்டுமே சரி என்ற விளக்கத்தைதானே தந்திருக்கேன். {_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
பானுஷபானா wrote:சூப்பர் சுறாண்ணா *_ *_
என் பெயரை சூப்பர் சுறா என்று மாற்றிவிடவா? i*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
சுறா wrote:பானுஷபானா wrote:சூப்பர் சுறாண்ணா *_ *_
என் பெயரை சூப்பர் சுறா என்று மாற்றிவிடவா? i*
ம்ம்ம் மாத்துங்க நல்லா இருக்கும் ^)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
பானுஷபானா wrote:சுறா wrote:பானுஷபானா wrote:சூப்பர் சுறாண்ணா *_ *_
என் பெயரை சூப்பர் சுறா என்று மாற்றிவிடவா? i*
ம்ம்ம் மாத்துங்க நல்லா இருக்கும் ^)
அதென்னமோ எத்தனை பெயரில் வந்தாலும் அந்த மகாபிரபு எனும் பெயரும் அவதாரையும் போல் வராது சார்! அதுக்காக பெயரை மாத்துவதில்லை. {_
சுறா எனும் பெயர் மாறணும் எனில் அது ஜானி எனும் உண்மை பெயரை மாற்றுவதானால் மட்டுமே! கள்வர்கள் தான் அடிக்கடி பெயரை மாற்றுவார்கள். நீங்கள் எதை எவரை எங்கிருந்து திருடப்போகின்றீர்களாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
Nisha wrote:பானுஷபானா wrote:சுறா wrote:பானுஷபானா wrote:சூப்பர் சுறாண்ணா *_ *_
என் பெயரை சூப்பர் சுறா என்று மாற்றிவிடவா? i*
ம்ம்ம் மாத்துங்க நல்லா இருக்கும் ^)
அதென்னமோ எத்தனை பெயரில் வந்தாலும் அந்த மகாபிரபு எனும் பெயரும் அவதாரையும் போல் வராது சார்! அதுக்காக பெயரை மாத்துவதில்லை. {_
சுறா எனும் பெயர் மாறணும் எனில் அது 000000 எனும் உண்மை பெயரை மாற்றுவதானால் மட்டுமே! கள்வர்கள் தான் அடிக்கடி பெயரை மாற்றுவார்கள். நீங்கள் எதை எவரை எங்கிருந்து திருடப்போகின்றீர்களாம்?
நான் ஒரு திருடன்னு உங்களுக்கே தெரியுமே? (_ ))& )(
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
யாரு? நீங்கள் திருடனா?_*_*
அம்மாடியோவ்! நம்பிட்டேன் சார்!
நேரில் காணாவிட்டால் எப்படி நம்பி இருப்பேனோ தெரியாது! ஆனால் நேரில் கண்டபின் சான்ஸே இல்லை ஜானி!
நீங்கள் என் மதிப்புகுரிய நல்ல பிரெண்ட் ஜானி! எனக்கு சிரம்ம் தரகூடாது என நினைக்கும் என் நலனில், மகிழ்வில் அக்கறை காட்டும் உங்களை திருடன் என நான் சொல்வேனோ?
அம்மாடியோவ்! நம்பிட்டேன் சார்!
நேரில் காணாவிட்டால் எப்படி நம்பி இருப்பேனோ தெரியாது! ஆனால் நேரில் கண்டபின் சான்ஸே இல்லை ஜானி!
நீங்கள் என் மதிப்புகுரிய நல்ல பிரெண்ட் ஜானி! எனக்கு சிரம்ம் தரகூடாது என நினைக்கும் என் நலனில், மகிழ்வில் அக்கறை காட்டும் உங்களை திருடன் என நான் சொல்வேனோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
Nisha wrote:யாரு? நீங்கள் திருடனா?_*_*
அம்மாடியோவ்! நம்பிட்டேன் சார்!
நேரில் காணாவிட்டால் எப்படி நம்பி இருப்பேனோ தெரியாது! ஆனால் நேரில் கண்டபின் சான்ஸே இல்லை ஜானி!
நீங்கள் என் மதிப்புகுரிய நல்ல பிரெண்ட் ஜானி! எனக்கு சிரம்ம் தரகூடாது என நினைக்கும் என் நலனில், மகிழ்வில் அக்கறை காட்டும் உங்களை திருடன் என நான் சொல்வேனோ?
அப்பாடா நம்மள நல்லவன்னு நம்பிட்டாங்க :}
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» வாழ்த்துக்கள் 4000 பதிவுகளை தாண்டிய அன்புக்கு வாழ்த்துக்கள்.
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» சரியா..? தவறா..?
» வாழ்த்துக்கள் rifka வாழ்த்துக்கள்
» இவர் சொல்வது சரியா.?
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» சரியா..? தவறா..?
» வாழ்த்துக்கள் rifka வாழ்த்துக்கள்
» இவர் சொல்வது சரியா.?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|