Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை
Page 1 of 1
வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை
ஒரு மனிதன் நீண்ட நாட்கள் கடவுளை நினைத்து
ஊண் உறக்கமின்றி தவம் இருந்தான்.அவனது தவத்தை
மெச்சி கடவுள் அவன் முன் தோன்றி,‘பக்தா! உன்
தவத்தை மெச்சினோம்.உனக்கு என்ன வரம் வேண்டும்
கேள்.’ என்றார்.
அதற்கு அந்த மனிதன் ‘இறைவா! இப் பிறவியில்
நான் பார்த்த வேலைகள் எனக்கு பிடிக்கவில்லை.
மன நிறைவும் கிடைக்கவில்லை.எனவே அடுத்த
பிறவியிலாவது நான் விரும்பும் வேலை கிடைக்க
வரம் தரவேண்டுகிறேன்.’ என்றான்
.
கடவுளும் ‘சரி அப்படியே ஆகட்டும்.நீ என்ன
வேலையில் சேர விரும்புகிறாய் ?’என்றார்.
‘ஈசனே! நான் அடுத்த பிறவியில் ஒன்று
திரைப்பட நடிகனாக வேண்டும் அல்லது
இந்திய அரசுப் பணியில் (I.A.S.) சேரவேண்டும் அல்லது வங்கி மேலாளராக வேண்டும்.’என்றான்.
கடவுளுக்கு ஒரே ஆச்சர்யம். இவ்வுலகில்
எத்தனையோ வேலைகள் இருக்க இந்த மூன்றை
மட்டும் ஏன் இவன் தேர்ந்தெடுத்திருக்கிறான்
என எண்ணி, ’ஏனப்பா, நடிகனாக வேண்டும்
என்கிறாய்?’ என்றார்.
‘ஐயனே! திரைப்பட நடிகனானால் வயதானாலும்
கூட நடித்துக்கொண்டு இருக்கலாம். எப்போதும்
இளைஞனாக நடிப்பதால் தன்னைவிட பல மடங்கு
வயதில் குறைந்த குமரிகளோடு ‘டூயட்’ பாடி
காதல் செய்ய இயலும். தயாரிப்பாளர் செலவில்
உலகில் உள்ள எல்லா நாடுகளையும் பார்க்கமுடியும்.
ஒரே ஆளாக இருந்து அநேகம் பேரை ஒரே சமயத்தில்
துவம்சம் செய்ய முடியும். சீறி வரும் ‘புல்லெட்’டை
கூட பல்லால் கடித்து பிடித்து திரும்ப வந்த இடத்திற்கே
அனுப்பமுடியும்.
நடிப்புக்காக தரும் பணத்தை கறுப்பு பணமாக
வாங்கிக்கொண்டு வருமான வரித்துறையையும்
அரசையும் ஏமாற்ற முடியும். அப்பாவி/ஏமாளி
இரசிகனை உசுப்பேற்றி மன்றம் வைக்க ஆதரவு
கொடுத்து பின்னால் அதை அரசியல் கட்சியாக மாற்றி
பதவியில் அமர முடியும்.மொத்தத்தில் படிக்காமலேயே
எல்லா வசதிகளையும் அனுபவிக்க முடியும்.’ என்றான்.
‘சரி.ஏன் I.A.S. ஆக வேண்டும் என்கிறாய்?’ என்றார் கடவுள்.
‘I.A.S. ஆனால் தொழில் நுட்ப படிப்பு
படிக்க வில்லை என்றாலும் கூட,ஓராண்டு முசோரியில்
தரும் பயிற்சிக்கு பிறகு ‘எல்லாம் தெரிந்தவராக’
ஆகிவிடலாம். பணிக்காலத்தில் Electronics Corporation
தலைவராகவும் ஆகலாம். Atomic Energy Commission
தலைவராகவும் ஆகலாம். The Indian Council of
Agricultural Research (ICAR) தலைவராகவும்
ஆகலாம் அல்லது Hindustan Aeronautics Limited (HAL)
தலைவராகவும் ஆகலாம். மொத்தத்தில் நினைத்த
துறைக்கு தலைவராக ஆகலாம்.
‘ஊதிய கமிஷன்’ சம்பளம் நிர்ணயிக்கும்போது
தங்களுக்கு எல்லோரை விடவும் அதிகம் வருமாறு
பார்த்து கொள்ளலாம். பணியின் போது அரசு செலவில்
வெளி நாட்டில் சென்று படித்தும் வரலாம்.
பணி நிறைவுக்கு பின் ‘World Bank அல்லது
'Asian Development Bank’ போன்றவைகளில்
கொழுத்த சம்பளத்தில் அமர்ந்துவிடலாம்.
அதனால் தான் I.A.S. ஆக விரும்புகிறேன்’
என்றான்.
‘அது சரி.ஏன் வங்கி மேலாளராக ஆக
வேண்டுமென்கிறாய்?’ என்றார் கடவுள்.
‘இறைவா, வங்கி மேலாளராக ஆனால்,
தொழில் நுட்பம் தெரியாவிட்டாலும் கூட,
தொழிற்சாலைகளுக்கு கோடிக்கணக்கில் கடன்
அனுமதி வழங்கமுடியும். காரணம் இல்லாமலேயே
கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கவும் முடியும்.
பெரிய முதலாளிகளுக்கு கடனைக்கொடுத்துவிட்டு
அவைகளை வாராக்கடன் என அறிவித்து அதற்கான
‘பலனை’ அனுபவிக்க முடியும்.
மொத்தத்தில் ஒரு அரசனைப்போல் வாழமுடியும்.’
என்றான்.
அவனுடைய பதிலைக்கேட்ட கடவுள்
‘மறைந்தே’ போனார்!!
ஊண் உறக்கமின்றி தவம் இருந்தான்.அவனது தவத்தை
மெச்சி கடவுள் அவன் முன் தோன்றி,‘பக்தா! உன்
தவத்தை மெச்சினோம்.உனக்கு என்ன வரம் வேண்டும்
கேள்.’ என்றார்.
அதற்கு அந்த மனிதன் ‘இறைவா! இப் பிறவியில்
நான் பார்த்த வேலைகள் எனக்கு பிடிக்கவில்லை.
மன நிறைவும் கிடைக்கவில்லை.எனவே அடுத்த
பிறவியிலாவது நான் விரும்பும் வேலை கிடைக்க
வரம் தரவேண்டுகிறேன்.’ என்றான்
.
கடவுளும் ‘சரி அப்படியே ஆகட்டும்.நீ என்ன
வேலையில் சேர விரும்புகிறாய் ?’என்றார்.
‘ஈசனே! நான் அடுத்த பிறவியில் ஒன்று
திரைப்பட நடிகனாக வேண்டும் அல்லது
இந்திய அரசுப் பணியில் (I.A.S.) சேரவேண்டும் அல்லது வங்கி மேலாளராக வேண்டும்.’என்றான்.
கடவுளுக்கு ஒரே ஆச்சர்யம். இவ்வுலகில்
எத்தனையோ வேலைகள் இருக்க இந்த மூன்றை
மட்டும் ஏன் இவன் தேர்ந்தெடுத்திருக்கிறான்
என எண்ணி, ’ஏனப்பா, நடிகனாக வேண்டும்
என்கிறாய்?’ என்றார்.
‘ஐயனே! திரைப்பட நடிகனானால் வயதானாலும்
கூட நடித்துக்கொண்டு இருக்கலாம். எப்போதும்
இளைஞனாக நடிப்பதால் தன்னைவிட பல மடங்கு
வயதில் குறைந்த குமரிகளோடு ‘டூயட்’ பாடி
காதல் செய்ய இயலும். தயாரிப்பாளர் செலவில்
உலகில் உள்ள எல்லா நாடுகளையும் பார்க்கமுடியும்.
ஒரே ஆளாக இருந்து அநேகம் பேரை ஒரே சமயத்தில்
துவம்சம் செய்ய முடியும். சீறி வரும் ‘புல்லெட்’டை
கூட பல்லால் கடித்து பிடித்து திரும்ப வந்த இடத்திற்கே
அனுப்பமுடியும்.
நடிப்புக்காக தரும் பணத்தை கறுப்பு பணமாக
வாங்கிக்கொண்டு வருமான வரித்துறையையும்
அரசையும் ஏமாற்ற முடியும். அப்பாவி/ஏமாளி
இரசிகனை உசுப்பேற்றி மன்றம் வைக்க ஆதரவு
கொடுத்து பின்னால் அதை அரசியல் கட்சியாக மாற்றி
பதவியில் அமர முடியும்.மொத்தத்தில் படிக்காமலேயே
எல்லா வசதிகளையும் அனுபவிக்க முடியும்.’ என்றான்.
‘சரி.ஏன் I.A.S. ஆக வேண்டும் என்கிறாய்?’ என்றார் கடவுள்.
‘I.A.S. ஆனால் தொழில் நுட்ப படிப்பு
படிக்க வில்லை என்றாலும் கூட,ஓராண்டு முசோரியில்
தரும் பயிற்சிக்கு பிறகு ‘எல்லாம் தெரிந்தவராக’
ஆகிவிடலாம். பணிக்காலத்தில் Electronics Corporation
தலைவராகவும் ஆகலாம். Atomic Energy Commission
தலைவராகவும் ஆகலாம். The Indian Council of
Agricultural Research (ICAR) தலைவராகவும்
ஆகலாம் அல்லது Hindustan Aeronautics Limited (HAL)
தலைவராகவும் ஆகலாம். மொத்தத்தில் நினைத்த
துறைக்கு தலைவராக ஆகலாம்.
‘ஊதிய கமிஷன்’ சம்பளம் நிர்ணயிக்கும்போது
தங்களுக்கு எல்லோரை விடவும் அதிகம் வருமாறு
பார்த்து கொள்ளலாம். பணியின் போது அரசு செலவில்
வெளி நாட்டில் சென்று படித்தும் வரலாம்.
பணி நிறைவுக்கு பின் ‘World Bank அல்லது
'Asian Development Bank’ போன்றவைகளில்
கொழுத்த சம்பளத்தில் அமர்ந்துவிடலாம்.
அதனால் தான் I.A.S. ஆக விரும்புகிறேன்’
என்றான்.
‘அது சரி.ஏன் வங்கி மேலாளராக ஆக
வேண்டுமென்கிறாய்?’ என்றார் கடவுள்.
‘இறைவா, வங்கி மேலாளராக ஆனால்,
தொழில் நுட்பம் தெரியாவிட்டாலும் கூட,
தொழிற்சாலைகளுக்கு கோடிக்கணக்கில் கடன்
அனுமதி வழங்கமுடியும். காரணம் இல்லாமலேயே
கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கவும் முடியும்.
பெரிய முதலாளிகளுக்கு கடனைக்கொடுத்துவிட்டு
அவைகளை வாராக்கடன் என அறிவித்து அதற்கான
‘பலனை’ அனுபவிக்க முடியும்.
மொத்தத்தில் ஒரு அரசனைப்போல் வாழமுடியும்.’
என்றான்.
அவனுடைய பதிலைக்கேட்ட கடவுள்
‘மறைந்தே’ போனார்!!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை
ஒரு வங்கி நடத்திய நேர்முகத்தேர்வில், அலுவலராக
பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இளைஞர் பணியில்
சேர ஆவலோடு குறிப்பிட்ட நாளில் அவர் வேலையில்
சேரவேண்டிய வங்கியின் கிளைக்கு காலையில் சென்றார்.
அவர் சென்ற நேரம் காலை 9 மணி. அந்த வங்கியின்
கிளையின் முன் ஒரே கூட்டம்.என்னவென்று
எட்டிப்பார்த்ததில் வங்கியின் பூட்டப்பட்ட‘ஷட்டருக்கு’
வெளியே ஒரு கழுதை படுத்திருந்தது.
அதை எழுப்ப அங்கிருந்த வங்கிப் பணியாளர்கள்
உட்பட அனைவரும் முயற்சி செய்தும் அது சிறிதும்
அசைந்து கொடுக்கவில்லை. சில விளயாட்டு
பிள்ளைகள் அதன் வாலைக்கடித்தும் அது
எழுந்திருக்கவில்லை.
நேரமோ ஓடிக்கொண்டிருந்தது.வங்கி பணி ஆரம்பிக்கும்
நேரமான 10 மணி நெருங்கிக்கொண்டிருந்தது.
வாடிக்கையாளர்கள் வேறு வார ஆரம்பித்துவிட்டார்கள்.
வேலையில் சேர வந்த இளைஞனோ,‘என்ன இது.முதன்
முதல் வேலையில் சேர வந்த போதே தடங்கலாக
இருக்கிறதே’என எண்ணினாலும்,கழுதையைப்
பார்த்தால்,‘நல்ல சகுனம்‘ யாரோ சொன்னது
நினைவுக்கு வர சமாதானமானார்.
அந்த நேரத்தில் அந்த வங்கியின் கிளை மேலாளர்
அங்கு வந்து ‘ஏன், கிளையை திறக்கவில்லை?’
என விசாரித்தார். ஊழியர்களும்,
அலுவலர்களும் நிலைமையை சொன்னபோது,
அவர் ஒன்று சொல்லாமல் அந்த கழுதை அருகே
சென்று அதன் காதில் ஏதோ சொன்னார்.
அவ்வளவுதான் அந்த கழுதை திடீரென எழுந்து
ஓட்டம்பிடித்தது.
அதைப் பார்த்த எல்லோருக்கும் ஆச்சர்யம். அந்த
மேலாளர் என்ன சொன்னார் அல்லது ஏதேனும்
மந்திரம் சொன்னாரா என்று அறிய எல்லோருக்கும்
ஆவல்.ஏன் வேலைக்கு சேர வந்த இளைஞனுக்கும்தான்.
வங்கியின் உள்ளே சென்றதும்,அலுவலர்கள் எல்லோரும்,
மேலாளரின் அறைக்கு சென்று அவர் எவ்வாறு
அந்த கழுதையை விரட்டினார் விசாரித்தார்கள்.
வெளியே வரும்போது எல்லோரும் சிரித்துக்கொண்டே
வந்தனர்.வேலையில் சேர வந்த இளைஞனுக்கோ
அதை தெரிந்த கொள்ள ஆவல் இருந்தும், தான்
வேலையில் சேர்வதுதான் முதல் வேலை என்பதால்
தயக்கத்தோடு மேலாளரின் அறைக்கு சென்று தனக்கு
வந்த நியமன உத்திரவை காண்பித்து வேலையில்
சேர்ந்தார்.
அவருக்கு தரப்பட்ட பணியை ஒரு முது நிலை
அலுவலரின் உதவியோடு செய்தாலும், மேலாளர்
எவ்வாறு கழுதையை விரட்டினார் என்பதே அவரது
மனதில் இருந்தது.
உணவு இடைவேளையில் பிற அலுவலர்களை
சந்தித்து அறிமுகம் செய்து கொண்டபோது,எல்லோரும்
ஒருவருக்கொருவர் ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டனர்.
தயங்கிக்கொண்டே,அந்த புதிய அலுவலர், தனக்கு
வேலை சொல்லிக்கொடுத்த மூத்த அலுவலரிடம்.
‘சார். ஒரு சந்தேகம்.எல்லோராலும் முடியாததை
என்ன செய்து மேலாளர் அந்த கழுதையை விரட்டினார்?
தயை செய்து சொல்லுங்கள் என்றார்.
அவரும் சிரித்துக் கொண்டே‘அது ஒன்றும் இல்லையப்பா.
மேலாளர் அந்த கழுதையின் காதில் நீ இங்கிருந்து
செல்லாவிடில் உன்னை இங்கு ஆபீசராக ஆக்கிவிடுவேன்
என்றாராம். அதனால்தான் கழுதை பயந்து கொண்டு
ஓடிவிட்டது!’ என்றார்.
‘அது சரி சார். உணவு இடைவேளையின் போது
என்னைப்பார்த்து மற்ற ‘ஆபீசர்கள்’ஏதோ சொல்லி
சிரித்தார்களே என்ன சார் அது?’என்றார் அந்த இளைஞர்.
‘அதுவா,உன்னைப்பார்த்ததும் காலையில் மேலாளர்
சொன்னது அவர்களுக்கு ஞாபகத்துக்கு வந்துவிட்டது,
அதனால் "பொதியை சுமக்க இன்னொரு கழுதை
வந்துவிட்டது", என சொல்லி சிரித்தார்கள்.’ என்றார்!!
பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இளைஞர் பணியில்
சேர ஆவலோடு குறிப்பிட்ட நாளில் அவர் வேலையில்
சேரவேண்டிய வங்கியின் கிளைக்கு காலையில் சென்றார்.
அவர் சென்ற நேரம் காலை 9 மணி. அந்த வங்கியின்
கிளையின் முன் ஒரே கூட்டம்.என்னவென்று
எட்டிப்பார்த்ததில் வங்கியின் பூட்டப்பட்ட‘ஷட்டருக்கு’
வெளியே ஒரு கழுதை படுத்திருந்தது.
அதை எழுப்ப அங்கிருந்த வங்கிப் பணியாளர்கள்
உட்பட அனைவரும் முயற்சி செய்தும் அது சிறிதும்
அசைந்து கொடுக்கவில்லை. சில விளயாட்டு
பிள்ளைகள் அதன் வாலைக்கடித்தும் அது
எழுந்திருக்கவில்லை.
நேரமோ ஓடிக்கொண்டிருந்தது.வங்கி பணி ஆரம்பிக்கும்
நேரமான 10 மணி நெருங்கிக்கொண்டிருந்தது.
வாடிக்கையாளர்கள் வேறு வார ஆரம்பித்துவிட்டார்கள்.
வேலையில் சேர வந்த இளைஞனோ,‘என்ன இது.முதன்
முதல் வேலையில் சேர வந்த போதே தடங்கலாக
இருக்கிறதே’என எண்ணினாலும்,கழுதையைப்
பார்த்தால்,‘நல்ல சகுனம்‘ யாரோ சொன்னது
நினைவுக்கு வர சமாதானமானார்.
அந்த நேரத்தில் அந்த வங்கியின் கிளை மேலாளர்
அங்கு வந்து ‘ஏன், கிளையை திறக்கவில்லை?’
என விசாரித்தார். ஊழியர்களும்,
அலுவலர்களும் நிலைமையை சொன்னபோது,
அவர் ஒன்று சொல்லாமல் அந்த கழுதை அருகே
சென்று அதன் காதில் ஏதோ சொன்னார்.
அவ்வளவுதான் அந்த கழுதை திடீரென எழுந்து
ஓட்டம்பிடித்தது.
அதைப் பார்த்த எல்லோருக்கும் ஆச்சர்யம். அந்த
மேலாளர் என்ன சொன்னார் அல்லது ஏதேனும்
மந்திரம் சொன்னாரா என்று அறிய எல்லோருக்கும்
ஆவல்.ஏன் வேலைக்கு சேர வந்த இளைஞனுக்கும்தான்.
வங்கியின் உள்ளே சென்றதும்,அலுவலர்கள் எல்லோரும்,
மேலாளரின் அறைக்கு சென்று அவர் எவ்வாறு
அந்த கழுதையை விரட்டினார் விசாரித்தார்கள்.
வெளியே வரும்போது எல்லோரும் சிரித்துக்கொண்டே
வந்தனர்.வேலையில் சேர வந்த இளைஞனுக்கோ
அதை தெரிந்த கொள்ள ஆவல் இருந்தும், தான்
வேலையில் சேர்வதுதான் முதல் வேலை என்பதால்
தயக்கத்தோடு மேலாளரின் அறைக்கு சென்று தனக்கு
வந்த நியமன உத்திரவை காண்பித்து வேலையில்
சேர்ந்தார்.
அவருக்கு தரப்பட்ட பணியை ஒரு முது நிலை
அலுவலரின் உதவியோடு செய்தாலும், மேலாளர்
எவ்வாறு கழுதையை விரட்டினார் என்பதே அவரது
மனதில் இருந்தது.
உணவு இடைவேளையில் பிற அலுவலர்களை
சந்தித்து அறிமுகம் செய்து கொண்டபோது,எல்லோரும்
ஒருவருக்கொருவர் ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டனர்.
தயங்கிக்கொண்டே,அந்த புதிய அலுவலர், தனக்கு
வேலை சொல்லிக்கொடுத்த மூத்த அலுவலரிடம்.
‘சார். ஒரு சந்தேகம்.எல்லோராலும் முடியாததை
என்ன செய்து மேலாளர் அந்த கழுதையை விரட்டினார்?
தயை செய்து சொல்லுங்கள் என்றார்.
அவரும் சிரித்துக் கொண்டே‘அது ஒன்றும் இல்லையப்பா.
மேலாளர் அந்த கழுதையின் காதில் நீ இங்கிருந்து
செல்லாவிடில் உன்னை இங்கு ஆபீசராக ஆக்கிவிடுவேன்
என்றாராம். அதனால்தான் கழுதை பயந்து கொண்டு
ஓடிவிட்டது!’ என்றார்.
‘அது சரி சார். உணவு இடைவேளையின் போது
என்னைப்பார்த்து மற்ற ‘ஆபீசர்கள்’ஏதோ சொல்லி
சிரித்தார்களே என்ன சார் அது?’என்றார் அந்த இளைஞர்.
‘அதுவா,உன்னைப்பார்த்ததும் காலையில் மேலாளர்
சொன்னது அவர்களுக்கு ஞாபகத்துக்கு வந்துவிட்டது,
அதனால் "பொதியை சுமக்க இன்னொரு கழுதை
வந்துவிட்டது", என சொல்லி சிரித்தார்கள்.’ என்றார்!!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை
ஒரு நாள் காலை ஒரு கால்நடை மருத்துவ மனைக்கு
ஒருவர் வந்து, அங்கிருந்த மருத்துவரைப் பார்த்து,
‘டாக்டர்,நான் பக்கத்து ஊரில் வேலை பார்க்கிறேன்.
தங்களிடம் சிக்கிச்சை பெறுவதற்காக விடுப்பில்
வந்திருக்கிறேன்.எனவே தயவு செய்து தாங்கள் எனக்கு
சிச்சை அளிக்கவேண்டும்.’என்றார்.
டாக்டர் அவரை ஆச்சரியத்தோடு பார்த்து,‘நீங்கள்
தவறாக இங்கு வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
நீங்கள் செல்லவேண்டிய‘கிளினிக்’எதிர் சாரியில்
உள்ளது.’என்றார்.
உடனே அவர்,’இல்லை இல்லை டாக்டர். நான்
தங்களிடம் சிகிச்சைப் பெறத்தான் வந்திருக்கிறேன்.’
என்றார்.
டாக்டர் அவரிடம்,உங்களுக்கு தெரியும் என
நினைக்கிறேன்.நான் ஒரு கால்நடை மருத்துவர்.
மிருகங்களுக்கு வைத்தியம் பார்க்கும் ஸ்பெஷலிஸ்ட்’
என்றார்.
அதற்கு வந்தவர்,‘எனக்கு தெரியும் டாக்டர் நீங்கள்
ஒரு கால்நடை மருத்துவர் என்று.ஆனாலும் நீங்கள்
தான் எனக்கு வைத்தியம் பார்க்கவேண்டும்.’என்றார்
விடாப்பிடியாக.
டாக்டரோ பொறுமையாக,‘அது என்னால் முடியாது.
ஏனெனில் நீங்கள் என்னைப்போல் பேசுகிறீர்கள்.
என்னைப்போல் சிந்திக்கிறீர்கள். எனவே நீங்கள்
மிருகமல்ல.நீங்களும் என்னைபோன்ற ஒரு மனிதன்.
ஆகையால் நீங்கள் எதிரில் உள்ள ‘கிளினிக்’குக்கு
சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.’என்றார்.
அதற்கு அவர்,‘எனக்கு தெரியும் டாக்டர்.நானும்
ஒரு மனிதன் தான் என்று.ஆனால் எனக்கு ஒரு
சிக்கல்.
காலையில் எழுந்திருக்கும்போது ஒரு’குதிரை’
போல் எழுகிறேன். அலுவலகத்திற்கு ஒரு’மான்’
போல் ஓடுகிறேன். நாள் முழுதும் அலுவலகத்தில்
ஒரு’கழுதை’போல் வேலை செய்கிறேன்.எனது
மேலாளர் முன் ஒரு‘நாய்’போல்வாலாட்டிக்
கொண்டிருக்கிறேன்.வீட்டிற்கு வந்ததும்,
என் குழந்தைகளுடன்,ஒரு’குரங்கு’போல்
விளையாடிக்கொண்டிருக்கிறேன்.என் மனைவி
முன் ஒரு‘முயல்’போல் பதவிசாக
நடந்துகொள்கிறேன்.அதனால் தான் தங்களிடம்
வந்தேன்.’என்றார்.
டாக்டர் அவரிடம்,‘நீங்கள் வங்கியில் வேலை
செய்கிறீர்களா?’ என்றார்.
அவர்‘ஆமாம்.'என்றதும்,டாக்டர்,உற்சாகத்தோடு,
‘அப்படியானால் என்னைத்தைவிர வேறு யாராலும்
உங்களுக்கு சிகிச்சை தர இயலாது.
உட்காருங்கள்.’என்றார்!!
ஒருவர் வந்து, அங்கிருந்த மருத்துவரைப் பார்த்து,
‘டாக்டர்,நான் பக்கத்து ஊரில் வேலை பார்க்கிறேன்.
தங்களிடம் சிக்கிச்சை பெறுவதற்காக விடுப்பில்
வந்திருக்கிறேன்.எனவே தயவு செய்து தாங்கள் எனக்கு
சிச்சை அளிக்கவேண்டும்.’என்றார்.
டாக்டர் அவரை ஆச்சரியத்தோடு பார்த்து,‘நீங்கள்
தவறாக இங்கு வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
நீங்கள் செல்லவேண்டிய‘கிளினிக்’எதிர் சாரியில்
உள்ளது.’என்றார்.
உடனே அவர்,’இல்லை இல்லை டாக்டர். நான்
தங்களிடம் சிகிச்சைப் பெறத்தான் வந்திருக்கிறேன்.’
என்றார்.
டாக்டர் அவரிடம்,உங்களுக்கு தெரியும் என
நினைக்கிறேன்.நான் ஒரு கால்நடை மருத்துவர்.
மிருகங்களுக்கு வைத்தியம் பார்க்கும் ஸ்பெஷலிஸ்ட்’
என்றார்.
அதற்கு வந்தவர்,‘எனக்கு தெரியும் டாக்டர் நீங்கள்
ஒரு கால்நடை மருத்துவர் என்று.ஆனாலும் நீங்கள்
தான் எனக்கு வைத்தியம் பார்க்கவேண்டும்.’என்றார்
விடாப்பிடியாக.
டாக்டரோ பொறுமையாக,‘அது என்னால் முடியாது.
ஏனெனில் நீங்கள் என்னைப்போல் பேசுகிறீர்கள்.
என்னைப்போல் சிந்திக்கிறீர்கள். எனவே நீங்கள்
மிருகமல்ல.நீங்களும் என்னைபோன்ற ஒரு மனிதன்.
ஆகையால் நீங்கள் எதிரில் உள்ள ‘கிளினிக்’குக்கு
சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.’என்றார்.
அதற்கு அவர்,‘எனக்கு தெரியும் டாக்டர்.நானும்
ஒரு மனிதன் தான் என்று.ஆனால் எனக்கு ஒரு
சிக்கல்.
காலையில் எழுந்திருக்கும்போது ஒரு’குதிரை’
போல் எழுகிறேன். அலுவலகத்திற்கு ஒரு’மான்’
போல் ஓடுகிறேன். நாள் முழுதும் அலுவலகத்தில்
ஒரு’கழுதை’போல் வேலை செய்கிறேன்.எனது
மேலாளர் முன் ஒரு‘நாய்’போல்வாலாட்டிக்
கொண்டிருக்கிறேன்.வீட்டிற்கு வந்ததும்,
என் குழந்தைகளுடன்,ஒரு’குரங்கு’போல்
விளையாடிக்கொண்டிருக்கிறேன்.என் மனைவி
முன் ஒரு‘முயல்’போல் பதவிசாக
நடந்துகொள்கிறேன்.அதனால் தான் தங்களிடம்
வந்தேன்.’என்றார்.
டாக்டர் அவரிடம்,‘நீங்கள் வங்கியில் வேலை
செய்கிறீர்களா?’ என்றார்.
அவர்‘ஆமாம்.'என்றதும்,டாக்டர்,உற்சாகத்தோடு,
‘அப்படியானால் என்னைத்தைவிர வேறு யாராலும்
உங்களுக்கு சிகிச்சை தர இயலாது.
உட்காருங்கள்.’என்றார்!!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை
ஒரு குடியிருப்பைச் சேர்ந்த அனைவரும் கோடை
விடுமுறை நாட்களில் ஒன்றாக வெளியூர் செல்ல
எண்ணினார்கள். வெளிநாடு சென்று வரலாமே என
சிலர் யோசனை தெரிவித்தபோது, அதை எல்லோரும்
முழு மனதோடு ஒத்துக்கொண்டு,வெளிநாடு செல்ல,
ஒரு பயண ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் பணத்தை
செலுத்தி, குறிப்பிட்ட நாளில் பயணத்தை தொடங்கினர்.
அவர்கள் சென்ற விமானத்தில் பெரும்பாலோர் அவர்கள்
குழுவைச் சேர்ந்தவர்கள் ஆதலால், விமானப் பயணம்
தொடங்கியது முதல் ஒரே கொண்டாட்டம் தான்.
அவர்கள் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.காரணம்
விமானம் நடுக்கடலின் மேலே சென்று கொண்டிருந்த
போது விமான ஒட்டி செய்த ஒரு அறிவிப்புதான்.
திடீரென விமானத்தின் இன்ஜின்கள் பழுதடைந்ததால்
விமானத்தை அருகில் ஏதேனும் தீவு இருந்தால் அங்கே
கீழே இறக்கபோவதாகவும், எல்லோரும் தயாராக
இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
திடீரென எல்லோருடைய மகிழ்ச்சியும் காணாமல்
போய் அனைவரும் தங்களது இஷ்ட தெய்வத்திடம்
வேண்டத் தொடங்கிவிட்டார்கள்
நல்ல வேளையாக விமானியும், ஒரு ஆள் அரவமற்ற,
அனாந்தர தீவில் எந்தவித சேதாரமும், யாருக்கும்
ஏற்படாவண்ணம் சாமர்த்தியமாய் விமானத்தை
இறக்கிவிட்டார்.
எல்லோரும் பத்திரமாக தரை இறக்கியதற்கு
விமானிக்கு நன்றி சொன்னபோது அவர் ‘எனக்கு
நன்றி சொல்லவேண்டாம். இறைவனுக்கு நன்றி
சொல்லுங்கள்.
அதோடு இந்த தீவில் நம்மை யாராவது
வந்து காப்பாற்றும் வரை உயிர் வாழ தேவையான
எதுவுமே இல்லை. மேலும் இந்த தீவிற்கு அருகில்
ஆழம் இல்லாததால் கப்பல்கள் கூட வர வாய்ப்பு
இல்லை. எனவே யாராவது வந்து நம்மை காப்பாற்றி
அழைத்து செல்ல இறைவன் அருள் புரியவேண்டி
பிரார்த்திப்போம்.
இல்லாவிடிலோ அனைவரும் உண்ண உணவு இல்லாமல்,
எந்த வித உதவியும் கிடைக்காமல், அனாதைபோல்
மடியவேண்டியதுதான்.’ என்று சொன்ன பின்தான்
எல்லோருக்கும் தாங்கள் ஒரு ஆபத்திலிருந்து தப்பி,
இன்னொரு பேராபத்தில் சிக்கியிருக்கிறோம்
எனப்புரிந்தது.
அவ்வளவுதான் பழையபடி எல்லோரும் அலறத்
தொடங்கிவிட்டார்கள். வயதான தாய் தந்தையரை
யார் பார்த்துக்கொள்வார்கள் என்று சிலரும்,
மகளுக்கு திருமணம் நடத்த தாம் இல்லாமல்
போய்விடுவோமே என்று சிலரும், வாழவேண்டிய
வயதில், எல்லா வசதி இருந்தும்,வாழ்க்கையை
அனுபவிக்காமல் அற்பாயிசில் போகப்போகிறோமே
என்று பலரும் அழுதுகொண்டு, கடவுளிடம் காப்பாற்ற
வேண்டிக்கொண்டிருந்த போது அந்த குழுவில் இருந்த
ஒருவர் மட்டும், சந்தோஷமாக சிரித்துக்கொண்டு
கவலைப்படாமல் இருந்தார்.
அதைப்பார்த்த அனைவரும், கோபத்தோடு ‘என்ன,
நாங்கள் எல்லோரும் கவலையோடு இருக்கையில்,
நீ மட்டும் கவலைப்படாமல், சிரித்துக்கொண்டு
இருக்கிறாயே? உனக்கு என்னவாயிற்று?’ எனக்
கேட்டபோது, அவர் ‘அது ஒன்றுமில்லை.
நான் XYXYX வங்கியில் இந்த மாதம் கிரெடிட்
கார்டுக்கான பணம் ரூபாய் 50,000 கட்டவேண்டும்.
அதை எப்படி கட்டுவது என எண்ணிக்கொண்டிருந்தேன்.
நல்ல வேளை. தப்பித்தேன் என நினைத்து
சிரித்துக்கொண்டு இருக்கிறேன்.’ என்றார்.
அப்போது அதைக் கேட்ட விமான ஒட்டி உற்சாகம்
பொங்க சொன்னார்,‘பயணிகளே. கவலை வேண்டாம்.
நாம் அனைவரும் பத்திரமாக ஊர் போய் சேர்ந்துவிடலாம்.
ஏனெனில் அந்த வங்கிக்காரர்கள் பணம் கட்டத்தவறிய
வாடிக்கையார்கள் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து
விடுவார்கள். அப்படி அவர்கள் இந்தநண்பரைத்
தேடிவரும்போது அவர்கள் உதவியுடன்
நாம் தப்பிவிடலாம்’ என்றார்!
விடுமுறை நாட்களில் ஒன்றாக வெளியூர் செல்ல
எண்ணினார்கள். வெளிநாடு சென்று வரலாமே என
சிலர் யோசனை தெரிவித்தபோது, அதை எல்லோரும்
முழு மனதோடு ஒத்துக்கொண்டு,வெளிநாடு செல்ல,
ஒரு பயண ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் பணத்தை
செலுத்தி, குறிப்பிட்ட நாளில் பயணத்தை தொடங்கினர்.
அவர்கள் சென்ற விமானத்தில் பெரும்பாலோர் அவர்கள்
குழுவைச் சேர்ந்தவர்கள் ஆதலால், விமானப் பயணம்
தொடங்கியது முதல் ஒரே கொண்டாட்டம் தான்.
அவர்கள் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.காரணம்
விமானம் நடுக்கடலின் மேலே சென்று கொண்டிருந்த
போது விமான ஒட்டி செய்த ஒரு அறிவிப்புதான்.
திடீரென விமானத்தின் இன்ஜின்கள் பழுதடைந்ததால்
விமானத்தை அருகில் ஏதேனும் தீவு இருந்தால் அங்கே
கீழே இறக்கபோவதாகவும், எல்லோரும் தயாராக
இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
திடீரென எல்லோருடைய மகிழ்ச்சியும் காணாமல்
போய் அனைவரும் தங்களது இஷ்ட தெய்வத்திடம்
வேண்டத் தொடங்கிவிட்டார்கள்
நல்ல வேளையாக விமானியும், ஒரு ஆள் அரவமற்ற,
அனாந்தர தீவில் எந்தவித சேதாரமும், யாருக்கும்
ஏற்படாவண்ணம் சாமர்த்தியமாய் விமானத்தை
இறக்கிவிட்டார்.
எல்லோரும் பத்திரமாக தரை இறக்கியதற்கு
விமானிக்கு நன்றி சொன்னபோது அவர் ‘எனக்கு
நன்றி சொல்லவேண்டாம். இறைவனுக்கு நன்றி
சொல்லுங்கள்.
அதோடு இந்த தீவில் நம்மை யாராவது
வந்து காப்பாற்றும் வரை உயிர் வாழ தேவையான
எதுவுமே இல்லை. மேலும் இந்த தீவிற்கு அருகில்
ஆழம் இல்லாததால் கப்பல்கள் கூட வர வாய்ப்பு
இல்லை. எனவே யாராவது வந்து நம்மை காப்பாற்றி
அழைத்து செல்ல இறைவன் அருள் புரியவேண்டி
பிரார்த்திப்போம்.
இல்லாவிடிலோ அனைவரும் உண்ண உணவு இல்லாமல்,
எந்த வித உதவியும் கிடைக்காமல், அனாதைபோல்
மடியவேண்டியதுதான்.’ என்று சொன்ன பின்தான்
எல்லோருக்கும் தாங்கள் ஒரு ஆபத்திலிருந்து தப்பி,
இன்னொரு பேராபத்தில் சிக்கியிருக்கிறோம்
எனப்புரிந்தது.
அவ்வளவுதான் பழையபடி எல்லோரும் அலறத்
தொடங்கிவிட்டார்கள். வயதான தாய் தந்தையரை
யார் பார்த்துக்கொள்வார்கள் என்று சிலரும்,
மகளுக்கு திருமணம் நடத்த தாம் இல்லாமல்
போய்விடுவோமே என்று சிலரும், வாழவேண்டிய
வயதில், எல்லா வசதி இருந்தும்,வாழ்க்கையை
அனுபவிக்காமல் அற்பாயிசில் போகப்போகிறோமே
என்று பலரும் அழுதுகொண்டு, கடவுளிடம் காப்பாற்ற
வேண்டிக்கொண்டிருந்த போது அந்த குழுவில் இருந்த
ஒருவர் மட்டும், சந்தோஷமாக சிரித்துக்கொண்டு
கவலைப்படாமல் இருந்தார்.
அதைப்பார்த்த அனைவரும், கோபத்தோடு ‘என்ன,
நாங்கள் எல்லோரும் கவலையோடு இருக்கையில்,
நீ மட்டும் கவலைப்படாமல், சிரித்துக்கொண்டு
இருக்கிறாயே? உனக்கு என்னவாயிற்று?’ எனக்
கேட்டபோது, அவர் ‘அது ஒன்றுமில்லை.
நான் XYXYX வங்கியில் இந்த மாதம் கிரெடிட்
கார்டுக்கான பணம் ரூபாய் 50,000 கட்டவேண்டும்.
அதை எப்படி கட்டுவது என எண்ணிக்கொண்டிருந்தேன்.
நல்ல வேளை. தப்பித்தேன் என நினைத்து
சிரித்துக்கொண்டு இருக்கிறேன்.’ என்றார்.
அப்போது அதைக் கேட்ட விமான ஒட்டி உற்சாகம்
பொங்க சொன்னார்,‘பயணிகளே. கவலை வேண்டாம்.
நாம் அனைவரும் பத்திரமாக ஊர் போய் சேர்ந்துவிடலாம்.
ஏனெனில் அந்த வங்கிக்காரர்கள் பணம் கட்டத்தவறிய
வாடிக்கையார்கள் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து
விடுவார்கள். அப்படி அவர்கள் இந்தநண்பரைத்
தேடிவரும்போது அவர்கள் உதவியுடன்
நாம் தப்பிவிடலாம்’ என்றார்!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை
விவசாயி :(வங்கி மேலாளரிடம்) ஐயா,
கறவை மாடு வாங்க கடன் கிடைக்குமா?
வங்கி மேலாளர்: நிச்சயம் கிடைக்கும் ஆனால்
எப்படி கட்டுவீர்கள்?
விவசாயி : கயிற்றால்தான்.
வங்கி மேலாளர்: ?????
கறவை மாடு வாங்க கடன் கிடைக்குமா?
வங்கி மேலாளர்: நிச்சயம் கிடைக்கும் ஆனால்
எப்படி கட்டுவீர்கள்?
விவசாயி : கயிற்றால்தான்.
வங்கி மேலாளர்: ?????
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை
டாக்டர் (இதய நோயாளியிடம்): உங்கள்
இதயம் பழுதடைந்துவிட்டதால், மாற்று இதயம்
பொறுத்தவேண்டும். விபத்தில் இறந்த
சிலருடைய இதயம் தயாராக இருக்கிறது.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.
நோயாளி: டாக்டர் அவைகளில், வங்கி
மேலாளருடைய இதயம் இருக்கிறதா? இருந்தால்
அதை பொருத்துங்கள்.
டாக்டர்: இருக்கிறது. ஏன் வங்கி மேலாளரின்
இதயம் அத்தனை சிறப்பானதா? அதுதான்
வேண்டும் என்கிறீர்கள்
.
நோயாளி: வேறொன்றும் இல்லை டாக்டர்.
அதுதான் அதிகம் உபயோகப் படுத்தப்பட்டிருக்காது.
அதனால்தான்
.
டாக்டர்: !!!!!!!!!
இதயம் பழுதடைந்துவிட்டதால், மாற்று இதயம்
பொறுத்தவேண்டும். விபத்தில் இறந்த
சிலருடைய இதயம் தயாராக இருக்கிறது.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.
நோயாளி: டாக்டர் அவைகளில், வங்கி
மேலாளருடைய இதயம் இருக்கிறதா? இருந்தால்
அதை பொருத்துங்கள்.
டாக்டர்: இருக்கிறது. ஏன் வங்கி மேலாளரின்
இதயம் அத்தனை சிறப்பானதா? அதுதான்
வேண்டும் என்கிறீர்கள்
.
நோயாளி: வேறொன்றும் இல்லை டாக்டர்.
அதுதான் அதிகம் உபயோகப் படுத்தப்பட்டிருக்காது.
அதனால்தான்
.
டாக்டர்: !!!!!!!!!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு நாள் - அவர் சொன்ன ஒரு நகைச்சுவை
» பஸ் நகைச்சுவை
» நகைச்சுவை...
» நகைச்சுவை
» ஒரு நகைச்சுவை கதை…!
» பஸ் நகைச்சுவை
» நகைச்சுவை...
» நகைச்சுவை
» ஒரு நகைச்சுவை கதை…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|