சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி? Khan11

மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி?

Go down

மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி? Empty மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி?

Post by ahmad78 Wed 21 Jan 2015 - 10:51

மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி? Hemorrhoids
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும்­பாடு சொல்லில் அடங்­கா­து. உயிர் போகுமளவிற்கு வலியால் துடி­து­டித்து போவார்கள். இதற்கு அறுவைச் சிகிச்சை தீர்வு என்­றாலும், உண­வுப்­ப­ழக்கம் மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் தேசமானிய வைத்திய நிபுணர் கிர்ஷாந்த்.
மூல நோய் எவ்வாறு ஏற்படுகின்றது?
மூல நோயானது சிக்கல் கார­ண­மாக ஏற்­ப­டு­கின்­றது. அதா­வது நாம் உண்ணும் உணவு சரி­யான முறையில் ஜீரண­மாகா­மையால் மலச் சிக்கல் ஏற்­படுவதால் மூல நோய் ஏற்­ப­டு­கின்­றது.
இதற்கு மூலகாரணம் உரிய நேரத்தில் உணவு உண்­ணாமை. அதிக மாப்பொருள் அடங்­கிய உண­வு­களை உண்ணுதல், காபோ­வை­தரேட் அடங்­கிய உண­வு­களை உண்­ணுதல், தொடர்ந்து ஒரே வகை­யான உண­வு­களை உண்­ணுதல். நாம் உண்ணும் உணவில் பழங்கள், காபோ­வை­தரே­ட்டு உண­வுகள், கலோரின், புரோட்டின் அடங்­கிய உண­வு­களை உண்­ண­வேண்டும். ஒரு சிலர் தொடர்ந்து ஒரே வகை­யான உணவை உட்­கொள்­வதால் உதா­ர­ண­மாக மா உணவை அதிகம் உட்­கொள்வதால் மூல நோய் ஏற்­ப­டு­கின்­றது.
மூல நோய் எத்தனை வகையானது ? இந்நோயை இரண்டு மூன்று வகை­யாக பிரிக்­கலாம்?
உதா­ர­ண­மாக சொல்வதானால் பரம்­பரை நோயாக இருக்­கலாம். கர்ப்­பிணி தாய்­மார்­க­ள் குழந்­தையை பிர­சவித்த பின் தாய்க்கு கர்ப்பை பை கீழே இறங்­கு­வதால் சில­ருக்கு குதம் வெளியே தள்­ளப்­பட்டு ஏற்­படும் நோய் ஒன்­றாக காணலாம். பாஸ்பூட் அதா­வது இலகு உண­வு­களை உட்­கொள்­வதால் இந்த உண­வுகள் சமி­பா­டடை­யாமல் மலச்­சிக்­க­லினால் மூல நோய் ஏற்­ப­டலாம். சில­ருக்கு குருதி வெளி­யேறு­வதால் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. குதம் வெளி­யேறி பார­தூ­ர­மான ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்ற நோயாக சில­ருக்கு ஏற்­படும். ஒரு சில­ருக்கு மலம் கழிக்கும் போது வலி ஏற்­பட வாய்ப்­புள்­ளது.
இந்நோய்க்­கான அறி­கு­றிகள் என்ன?
ஆச­னவாய் பகு­தியில் இரத்­தக்­குழாய் தடிமன் ஆவ­தன் மூல­மாக உரு­வெ­டுக்­கி­றது. இதன் அறி­கு­றி­யாக முதலில் அரிப்பு ஏற்­படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிர­மப்­பட வேண்­டி­யி­ருக்கும். வழக்­கத்­துக்கு மாறாக மலச்­சிக்கல் இருக்கும். சில நேரங்­களில் இரத்தம் வெளி­யேறும். அதன்­பி­றகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்­றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்­பதால் ஆச­ன­வாயின் வெளிப்­ப­கு­தியில் சதை வளர்ச்சி ஏற்­படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்­தள்ளும் போது வெளி­மூலம் என்றும் கூறு­கிறோம்.
இந்நோயை வருமுன் காக்­கலாம். உதா­ர­ண­மாக மூச்சு எடுப்­ப­தற்கு கடி­ன­மாக இருக்கும். வயிறு நிறைந்­தது போல் காணப்­படும். வாயுத் தன்மை நிறைந்­தது போல் காணப்­படும். பசி­த்தன்மை அதி­க­மாக இருக்­காது.
மலம் கழிக்கும் போது இலகு­வாக இருக்­காது. மிகவும் கடி­ன­மாக இருக்கும். குடல் காயும் ­தன்மை அதா­வது குடல் காய்­வுத்­தன்மை காணப்­ப­டு­வதால் மலம் கழிக்­கும்­போது கடி­னமாக காணப்­ப­டும்­போது எதிர்­கா­லத்தில் மூல நோய் வர­ வாய்ப்­புள்­ளது. இதனால் முறை­ப்படி உண­வு­களை எடுத்து மூல நோய் வராமல் பாது­காத்­துக்­கொள்­ள­வேண்டும்.
உணவு முறையை கடை­பி­டிப்­பது அவ­சி­ய­மா? இது பற்றி விளக்கம் தாருங்கள்?
ஒருவர் உணவில் கல்­சியம், புரதம், காபோ­வை­தரேட், கொழுப்பு ஆகிய உண­வுகள் கட்­டாயம் உண்­ண ­வேண்டும். உணவை உரிய நேரத்தில் எடுக்­க­வேண்டும். அதா­வது ஆறு மணித்­தி­யா­லத்­திற்கு ஒரு முறை உணவு உண்­ண­ வேண்டும். ஒரு சிலர் எட்டு, பத்து மணித்­தி­யா­ல­த்திற்கு பின் உணவு உண்­ணுதல், இன்னும் ஒரு சிலர் விரதம் இருப்­பதால் இந்த நோய் வரு­வ­தற்கு அதிக வாய்ப்­புகள் உண்டு. காலை முதல் மாலை­வரை உணவு உண்­ணாமல் இரவில் உணவு உண்­பதால் உணவு சமி­ப­பாடடை­யாமல் இந்நோய் வர ­வாய்­ப்புள்­ளது. உதா­ர­ண­மாக மூச்சு எடுப்­ப­தற்கு கடி­ன­மாக இருக்கும். வயிறு நிறைந்­தது போல் காணப்­படும்.
வாயுத் தன்மை நிறைந்­தது போல் காணப்­படும். பசித்­தன்மை அதி­க­மாக இருக்­காது. இந்த கு­ணாதி­சயங்கள் காணப்­பட்டால் கட்­டா­ய­மாக விரதம் இருப்­பதை தவிர்க்­க­வேண்டும். உதா­ர­ண­மாக அதிக மிளகாய் தூள் கலந்த உண­வுகள் உண்­பதை தவிர்த்­து­கொள்­ள­வேண்டும். மேலும் காயத்­தன்மை உள்ள உண­வுகள் உட்­கொள்­வதை தவிர்த்து கொள்­ள­வேண்டும்.
உட­ன­டி­யாக சமி­பாடடையக் கூடிய திர­வ­மான உண­வு­களை உட்­கொள்­வதால் யாரையும் மூல நோய் பாதிக்­காது. நாம் அருந்தும் நீரின் அளவு குறைந்தால் இது வர­ வாய்ப்­புள்­ளது. நீரை அதி­க­மாக அருந்து­ப­வர்­க­ளுக்கு இந்த நோய் பாதிக்­காது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி? Empty Re: மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி?

Post by ahmad78 Wed 21 Jan 2015 - 10:52

வயது அடிப்­ப­டையில் ஏற்­ப­டுமா?
பொது­வாக எல்லா வய­தி­ன­ருக்கும் இந்த நோய் வர வாய்ப்­புள்­ளது. உணவு பழக்­க­வ­ழக்­கங்கள், இலகு உண­வுகள் (பாஸ் பூட்) உதா­ர­ண­மாக சீஸ், கொத்து ரொட்டி போன்­ற­வற்றை உண்­பதால் வர அதிக வாய்­ப்புள்­ளது. பட்டர், மாப் பொருட்கள் போன்ற மேலைத் தேய பொருட்­களை உண்­பதால் இந்நோய் வர ­வாய்ப்­புள்­ளது. உட­ன­டி­யாக சமிபாடு அடையக் கூடிய பொருட்­களை உண்­ண­ வேண்டும். உதா­ர­ண­மாக சோறு உண்ணும் ஒருவர் மூன்று நேரமும் சோறு உண்டால் அது சமி­பாடு அடையக் கூடி­ய­தாக இருக்கும்.
உதா­ர­ண­மாக இரவு நேரத்தில் கோதுமை மாவால் தயா­ரிக்­கப்­பட்ட கொத்து ரொட்டி, ரொட்டி போன்ற­வற்றை உண்­பதால் இவர்­க­ளுக்கு மறு நாள் காலையில் காலை­க்க­டனை செய்­வ­தற்கு அசௌக­ரி­ய­மாக இருக்கும். அதா­வது பொது­வாக இலகு­வாக மலம் கழிப்­ப­தற்கு பதி­லாக மிக கஷ்­டப்­ப­டு­வார்கள்.
இதற்­காக பழங்­களை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்­ள­வேண்டும். சைவ உணவை எடுத்துக் கொண்டால், உணவின் பின் ரசம், பாயாசம் போன்றவை கடை­களில் வழங்­கப்­ப­டு­கின்றன. இவற்றை உண்­பதால் இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முடியும். மேலும் உண­வுக்கு பின் டெசட் சாப்­பி­டு­கின்றோம். உணவு இலகுவில் சமிபா­டடைய சாப்­பி­டு­கின்றோம். பப்­பாளி, வாழைப்­பழம், யோகட் போன்­ற­வற்றை உட்­கொள்­வதால் இந்த பிரச்­சி­னை­யி­லி­ருந்து விடுப­டலாம்.
ஆதி­கா­லத்தை எடுத்து கொண்டால் அக்­கால மக்­க­ளி­டையே இந்த பிரச்­சினை காணப்­ப­ட­வில்லை. காரணம், இந்த கா­லத்தில் இலகு உண­வுகள், பிஸ்கட் போன்­ற­வற்றை உண்­பதால் சமி­பாடு அடை­வதில் பிரச்­சினை ஏற்­படும்.
உதார­ண­மாக இடியப்ப உரலில் இட்ட மாவு சரி­யான முறையில் பிணைந்­தி­ருந்தால் இலகு­வாக இடியப்பம் வெளியில் வரும். எதிர்­பாராத வித­மாக அந்த மாக் கல­வையில் ஏதா­வது சிக்கல் இருந்தால் மா வெளியில் வரு­வது கடி­ன­மாக இருக்கும். அந்த இடியப்ப உரலின் அடி தட்­டோடு கழன்று வரும். அதே போல் தான். மலம் சரி­யான முறையில் வெளி­வ­ரு­வதில் பிரச்­சினை இருந்தால் ஆசனப்­ப­குதி வெளி­யே வ­ர­வாய்ப்­புள்­ளது.
இந்த நோயை முற்­றாக கட்­டுப்­ப­டுத்­த­லாமா?
ஒரு­சிலர் அறு­வைச்­சி­கிச்சை செய்த பின்னர் உணவில் கட்­டு­ப்பாடு இன்மையால் மீண்டும் அவர்­க­ளுக்கு வர­ வா­ய்ப்­புள்­ளது.
இந்த நோய்க்­கா­க சிகிச்சை பெறு­வ­தற்கு சில வகை­யான ஒயின்மன்ட், கிரீம் வகை­களை நேர­டி­யாக பாவித்தல், மருந்­து­களை உட்கொண்டு சமிபாட்டுத் தொகு­தியை நல்ல முறையில் வைத்­துக்­கொள்­ள­வேண்டும்.
இந்நோய் உள்­ள­வர்கள் உணவு பழக்­க­வ­ழக்­கங்­களை கண்­டிப்­பாக கடைப்­பி­டிக்க வேண்டும். பழங்­களை அதி­க­மாக உண்­ண­வேண்டும், உட­ன­டி­யாக சமி­பாடு அடையக் கூடிய உண­வு­க­ளான பொங்கல், பாற்சோறு போன்­ற­வற்றை அதிக உண்­ண­வேண்டும்.
அதி­கா­லையில் எழுந்­த­வுடன் ஒரு போத்தல் தண்ணீர் அருந்த வேண்டும். குளி­ரான தண்­ணீரை குடித்தால் சமி­பாட்டு தொகு­தி­யி­லி­ருந்து வெளி­யே­று­வது கடி­ன­மாக இருக்கும். கொதித்து ஆறிய தண்­ணீரை குடித்தால் சமி­பாட்டு தொகு­தியில் சரி­யாக செயற்­பட்டு மலம் வெளி­யே­று­வது மிக இலகு­வாக இருக்கும். இவர்­க­ளுக்கு தொடர்ந்து உளுந்தங் கஞ்சி, தோசை போன்றவற்றை இரவில் உண்­பதால் மலம் கழிப்­பதில் பிரச்­சினை ஏற்­ப­டாது.
மூல நோய் உண்­டா­வ­தற்கு முக்­கிய கார­ணமே மலச்­சிக்கல் தான். பரம்­ப­ரை­யா­கவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்­ப­வர்கள், தொந்தி உள்­ள­வர்­க­ளுக்கு வயிறு அழுத்தம் அதி­க­ரித்து மூலநோய் உரு­வாக்­கு­கி­றது. பொது­வாக பெண்­க­ளுக்கு கர்ப்ப காலத்தில் இது ஏற்படலாம் என்கிறார் தேசமானிய வைத்திய நிபுணர் கிர்ஷாந்த்.
உடற் பயிற்சி அவ­சி­யமா?
காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்­வது நன்று.
நோய் உள்­ள­வர்கள் உணவு உண்­டபின் 15-–20 நிமிடம் நடப்­பது சிறந்தது. உடற்­ப­யிற்சி செய்வது நன்று. அப்­போது தான் உணவு சமி­பாடடையும் இந்த நோயை பொறுத்த­வ­ரையில் இவர்கள் கேட்­டுதான் வாங்­குகிறார்கள் என்று சொல்­லலாம். சரி­யான முறையில் உணவை எடுக்காமல் கழி­வ­றைக்கு சென்று சிரமப்பட்டு மலத்தை கழிக்க முயற்­சிப்­ப­தாலும் இந்நோய் வர­ வாய்ப்­புள்­ளது. நாம் உண்ணும் உணவு சமி­பாட்டு தொகு­தியில் சமிபாடடைந்து சிறுகு­ட­லி­லிருந்து பெருங்­கு­ட­லுக்கு தள்­ளப்­படும் போது நாம் கழி­வ­றைக்கு சென்று இலகு­வாக மலம் கழிப்­பதால் இந்த நோய் வர வாய்ப்பில்லை ஆனால், உணவை தவிர்த்தல், சிலர் அவ­சர பிர­யா­ணத்தை மேற்­கொள்­வதன் நிமித்­தம் வாக­னங்­களில் செல்­ல வேண்டியிருப்­பதால் கழி­வ­றைக்கு சென்று வற்­பு­றுத்­தி­யிருப்­பது போன்றவற்றால் மூல நோய் வர வாய்ப்புள்­ளது. தொடர்ந்து அமர்ந்து வேலை செய்­ப­வர்­க­ளுக்கு இந்நோய் வர வாய்ப்புள்­ளது. சார­திக்கு இந்நோய் வர வாய்ப்புள்­ளது. தொடர்ந்து எட்டு பத்து மணித்­தி­யாலங்கள் அமர்ந்து வேலை­செய்­வதால் இந்நோய் வர வாய்ப்புள்­ளது.
பெருங்­குடல், சிறு­கு­டலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா?
ஆம், பெருங்­குடல் சிறு­கு­டலில் பாதிப்பு ஏற்­படும். கோலிக், எப்­பன்­டையிஸ் போன்­றன வர­வாய்ப்­புள்­ளது. சரி­யாக சமி­பா­டடைந்து இந்த நோய் உள்­ள­வர்­க­ளுக்கு குருதி அதிகம் செல்­வதால் இவர்­க­ளுக்கு லோ பிரசர் வர­வாய்ப்­புள்­ளது. இவர்­கள் அன்­றாட வேலை­களை தாங்­க­ளாக செய்து கொள்­வதில் அசௌ­க­ரி­ய­மாக இருக்கும். நாற்­கா­லி­களில் அமர்­வது கடி­ன­மாக இருக்கும். கடி­ன­மான வேலை­ செய்­வதில், பாரங்­களை தூக்­குதல் போன்ற வேலை­களை செய்ய முடி­யாது. அதே நேரத்தில் செய்­யக்­கூ­டாது. குனிந்து வேலை செய்யக் கூடாது, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை­ செய்யக் கூடாது. சரி­யான உணவை சரி­யான நேரத்­தில் உட்­கொள்­ளா­மை­சரி­யான முறையில் தண்ணீர் உறிஞ்­சப்­ப­டாததாலும் சமிபாட்டில் பாதிப்பு ஏற்­பட்டு பெருங்குடல், சிறுகு­டலில் பாதிப்பு ஏற்­ப­ட­ வாய்ப்­புள்­ளது.
உடலில் மாற்றம் ஏற்­ப­டுமா?
ஆணாக இருந்­தாலும் சரி பெண்­ணாக இருந்­தாலும் சரி மூல நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் உணவு உட்­கொண்டவுடன் உட­ன­டி­யாக மலம் கழிக்க நேரி­டு­வதால் உடலின் நிறை குறைய வாய்ப்­புள்­ளது. குருதி அதிகம் வெளி­யே­று­வதால் லோ பிரசர் ஏற்­ப­டலாம். பார்வை குறைய வாய்ப்­புள்­ளது. இதனால் இடுப்பு வலி ஏற்­பட வாய்ப்­புள்­ளது. கழி­வ­றையைப் பொறுத்த மட்டில் மூல நோயா­ளர்­க­ளுக்கு கொமட்டை பாவிப்­பதால் இலகு­வாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி? Empty Re: மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி?

Post by ahmad78 Wed 21 Jan 2015 - 10:53

மூலநோயை தவிர்ப்பது குறித்து வைத்­தி­யர் என்ற வகையில் உங்­களின் கருத்தை தாருங்கள்?
நோயை வரும் முன் காப்போம் என்றால், உதா­ர­ண­மாக அதிகமாக விரதம் இருப்­பதை தவிர்த்­து­க்கொள்­ள­வேண்­டும். உண்மை­யாக விரதம் இருப்­பது நல்ல விடயம். ஆனால், எங்­களின் ஆராய்ச்­சியின் படி அதிக இளம் பெண்­க­ளுக்கு இந்த நோய­்வ­ரு­வ­தாக ஆராய்ச்­சி­யில் தெரி­ய­வந்­துள்­ளது. இதனால் உடலின் நிலை­மையை அறிந்து அதற்கேற்ப செயற்­ப­ட­ வேண்டும்.
கோழி இறைச்சி, முட்டை, பன்றி இறைச்சி போன்­ற­வற்றை அதி­க­மாக உண்­பதால் இலகுவில் சமி­பா­டடை­யா­ததால் இவற்றை குறைத்து கொள்­வது நல்­லது. தேவை­யற்ற நேரத்தில் அவ­ச­ரத்­திற்­காக கழிப்­பறையில் சென்று மலத்தை உந்தித் தள்­ளுதல் கூடாது உதா­ர­ண­மாக பழுக்­காத வாழைப்­பழத்தை அடிக்க வைத்து பழுக்­க­ வைக்க கூடாது. சூடு போட்டு பழுக்­க­வைத்தல், யூரியா போட்டு பழுக்­க­வைத்தல், நசுக்கி வைத்து உண்­பது கடினம்.
அதே போல் தான் எமக்கு மலம் கழிக்க வராத நேரத்தில் வற்­புறுத்தி மலம்­ க­ழிக்க முற்படக் கூடாது. எம்மில் சிலர் மலம் கழிக்க பயந்து காலை உணவை உண்­ணாமல் தவிர்ப்­பதை நாம் காணக்கூடிய­தாக இருக்­கி­றது. (பாஸ்பூட்) இலகு உண­வு­களை தவிர்த்து கொள்­ளுங்கள். காலையில் குளிர் பானங்­களை அருந்­து­வதால் சிறு­குடல், பெருங்­கு­டலை பாதிக்க வாய்ப்­புள்­ளது. மூன்று நேர உண­வு­களை சரி­யான நேரத்தில் உண்­ண­வேண்டும்.
ஒவ்­வொரு உண­வு­களை உண்ட பின்பும் ஏதா­வது பழங்கள், இரசம், பாயாசம், பான­வ­கைளை உட்கொள்வது நல்­லது. இது 30 – 40 வயது என்றில்லாமல் இளம் வய­தி­னரும் இதனை கடை­பி­டிக்­க­வேண்டும். தொடர்ந்து ஒரே உண­வு­களை உட்­கொள்ளக் கூடாது.
சிலர் மா என்றால் உட்­கொள்­வார்கள், சிலர் சோற்றை தொடர்ந்து மூன்று நேரம் உட்­கொள்­வார்கள். இதனால் பெரும் பாதிப்பு வராது. இருப்­பினும், புரதம், கல்­சியம் போன்­றவை குறை­வாக இருப்­பதால் 35 வய­துக்கு மேல் நீரி­ழி­வு போன்ற நோய்கள் வர­ வாய்ப்­புள்­ளது. கடி­ன­மாக வேலை செய்­ப­வர்கள் மூன்று நேரம் சோறு உண்­ணலாம். ஆனால், வயது செல்ல செல்ல சோறு உண்ணும் அளவை குறைத்­து­கொள்­வது நல்­லது. இரண்டு நேரம் அல்­லது ஒரு நேரம் என குறைப்­பது நல்­லது. உரிய நேரத்தில் உணவை உண்ணுதல் வேண்டும்.
இந்த நோய் வந்து விட்டால் எண்ணெய், கொழுப்பு சத்து நிறைந்த உண­வுகள் உட்­கொள்­வதை தவிர்த்துக் கொள்ள­வேண்டும். கோழி இறைச்சி, ஏனைய இறைச்சி வகை­களை குறைத்து கொள்­வது அவ­சியம். பாயாசம், கஞ்சி போன்­ற­வற்றை உண்­பது சிறந்­தது. மேலும் நோயால் பாதிக்கப்பட்டு அறு­வைச்­சி­கிச்சை செய்­த­வர்கள் கடின வேலை­களை செய்யக்கூடாது. அவ்­வாறு செய்­வதால் குருதி வெளி­யேறி உயிராபத்து எற்பட வாய்ப்­புள்­ளது. இதனால் மூல நோயா­ளர்கள் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாடி வைத்­தி­ய ­ஆ­லோ­சனை படி செயற்­ப­டு­வது நல்­லது.
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும்­பாடு சொல்லில் அடங்­கா­து. உயிர் போகும் வலியால் துடி­து­டித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்­றாலும், உண­வுப்­ப­ழக்கம், உடற்­ப­யிற்சி மூலமும் தீர்வு காணலாம். மூல நோயை கண்­டு­கொள்­ளாமல் விடு­வதால் புற்றுநோயாக மாறலாம் எச்­ச­ரிக்­கிறார்.
மூல நோய் உண்­டா­வ­தற்கு முக்­கிய கார­ணமே மலச்­சிக்கல் தான். பரம்­ப­ரை­யா­கவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்­ப­வர்கள், தொந்தி உள்­ள­வர்­க­ளுக்கு வயிறு அழுத்தம் அதி­க­ரித்து மூலநோய் உரு­வாக்­கு­கி­றது. பொது­வாக பெண்­க­ளுக்கு கர்ப்ப காலத்தில் இது ஏற்படலாம். ஆரம்­பக்­கட்­டத்­தி­லேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளி­யேற்றம் ஆகிய சுழற்­சியில் பிரச்­சினை உள்­ளதா என்­பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்­சினை பெரி­தாகி விடும். முதலில் உணவில் கவனம் செலுத்­து­வது அவ­சியம். மலச்­சிக்­கலைப் போக்கும் உணவு முறை­களை பின்­பற்­ற­வேண்டும்.
போது­மான உடற்­ப­யிற்சி செய்ய வேண்டும். இதற்­கென பிரத்­தியேக யோகா பயிற்­சி­களும் உள்­ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்­கின்­றனர். ஆனால் அறுவை சிகிச்­சைக்கு பின்னர் உண­வுக் ­கட்­டுப்­பாடு மிகவும் அவ­சியம். இல்லையென்றால் மீண்டும் வளர வாய்ப்­புள்­ளது.
முறை­யான சிகிச்சை எடுக்­காத பட்­சத்தில் ஆசன வாய்ப்­ப­கு­தியில் வெடிப்பு போன்று புண் ஏற்­பட்டு ஆறாது. இதிலிருந்து இரத்தம் வெளி­யேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்­புள்­ளது.
இதில் ஏற்­படும் கொப்­புளங்கள் புரை­யோடி குடல் பகு­தியில் துளையை உரு­வாக்கும். எனவே மூலப் பிரச்­சினை உள்­ள­வர்கள் வைத்­தி­யரின் ஆலோ­ச­னைப்­படி ஆரம்­பத்­தி­லேயே சரி செய்து கொள்­வது அவ­சியம்.
நார்ச்­சத்துள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்­பி­டு­வதன் மூலம் இதை தவிர்க்­கலாம். மேலும் மூலப்­பி­ரச்­சினை உள்­ள­வர்கள் அசைவம் மற்றும் மிளகாய் உணவு வகை­களை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்­ள­வர்­களும், பரு­மனா­ன­வர்­களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்­ப­யிற்­சியை வழக்­கப்­ப­டுத்தி கொள்­வது நல்­லது. குறைந்­த­ளவு தண்ணீர் குடிப்­ப­தாலும், இந்த பிரச்­சினை ஏற்­ப­டு­கி­றது. எனவே போதியளவு நீர் அருந்தவேண்டும்.
 
 


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி? Empty Re: மூல நோய் வரா­ம­ல் பாது­கா­த்­து­க் கொள்­வ­து எப்ப­டி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum