சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி Khan11

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி

3 posters

Go down

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி Empty வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி

Post by சே.குமார் Fri 6 Feb 2015 - 13:34

நான் கடந்து வந்த பாதையில் என்னைச் செதுக்கிய சிற்பிகளையும் மகனாகப் பார்த்த உறவுகளையும் பற்றிப் பகிர்ந்து வரும் வெள்ளந்தி மனிதர்களில் இன்று அம்மாவைப் பற்றிப் பார்ப்போம். அம்மா பெயர் ருக்மணி, எல்லாரும் அழைப்பது ருக்கு. எனது நண்பன் முருகனின் அம்மா... எனக்குந்தான். 

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி %E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%2B%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

அம்மா.... கிராமத்தில் பிறந்து கிராமத்தில் வாக்கப்பட்டு நகரத்தில் வாழ்பவர். படித்தவர் அல்ல ஆனால் பாசக்காரர். கல்லூரியில் படிக்கும் போது ஆரம்பத்தில் முருகனின் வீட்டில்தான் பெரும்பாலான பொழுதுகள் கழியும். பின்னர் ஐயா வீடு அதை விட்டால் முருகனின் வீடு என ஆனது. அங்கு போகும் போதெல்லாம் வாஞ்சையுடன் பேசும் வெள்ளந்தியான மனுசி. எப்பவும்... இப்பவும் 'குமார் குட்டி.... நல்லாயிருக்கியாம்மா...' என்று முகத்தில் கையால் வழித்து முத்திடமிடுவார். அந்த பாசத்துக்கு நிகர் ஏதும் இல்லை.

முருகன் எப்பவும் எங்காவது பறந்து கொண்டே இருப்பவன்.... இப்பவும் அப்படித்தான் இருக்கிறான். இந்தா வருகிறேன் என்று சொன்னால் போக வேண்டிய இடத்துக்கு நாம் போய் திரும்பினாலும் அவன் வரமாட்டான். இதனாலே ஐயாவுக்கு முருகன் மீது கோபம் வரும். அப்படித்தான் வீட்டுக்கு வாடா என்று சொல்லி விட்டு நான் போவதற்குள் சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்காவது கிளம்பிவிடுவான். அவசர அவசரமாக வீட்டுக்குப் போனால் அம்மாதான் இருப்பார். 'என்னம்மா... தம்பி வரச்சொன்னுச்சா? இப்பத்தாம்மா அந்த டீச்சரு வீட்டு வரைக்கும் பொயிட்டு வாறேன்னு சொன்னுச்சு... டிவி பாத்துக்கிட்டு இருங்கடி... இப்ப வந்துரும்...' என்று சொல்லி இருக்க வைப்பார். காத்துக் கொண்டிருக்கும் நேரம் கடந்தாலும் அவன் வரமாட்டான் என்பது வேறு விஷயம். 'அம்மா... அவனைக் காணோம்... நான் கிளம்புறேன்... வந்தாச் சொல்லுங்கன்னு' கிளம்பும் போதும், 'சொல்லிட்டுத்தாம்மா போச்சு... இரு... இப்ப வந்துரும்' என்பார்.

நாங்கள் இருவரும் எதாவது பேசிக் கொண்டிருக்கும் போது, 'அம்மா காபி போட்டுக் கொடுங்கம்மா... குமார் வந்திருக்கானுல்ல...' என்றதும் வேகவேகமாக காபி போட்டுக் கொண்டு வருவார்., 'இதென்ன காபியா... ஏம்மா புகை வாசம் வீசுது... இதை எப்படி அவன் குடிப்பான்... வேண்டாம்...' என்று கத்துவான். உடனே 'விடுடா...' என்றால் 'எப்பவும் இப்படித்தாம்மா... எல்லாத்துக்கும் கோபப்படுறான்...  காபி நல்லாயில்லையாம்மா' என்று கேட்பார். 'நல்லா இருக்கும்மா' என்று சொன்னதும் 'எம்புள்ளையே சொல்லிருச்சு... அப்புறம் என்ன...' என்று முருகனைத் திட்டிவிட்டுச் செல்வார்.

வீட்டுக்குப் போனால் சாப்பிட வேண்டும், காபி குடிக்க வேண்டும் என்பதை விரும்புவார். எதாவது சாப்பிடாமல் கிளம்பினால் 'என்ன குமார்க்குட்டி... வந்துட்டு ஒண்ணும் சாப்பிடாமப் போறியேன்னு சொல்லுவார். எல்லா விவரங்களையும் கேட்டுக் கொள்வார். இருவரும் எப்படிப் படிக்கிறோம் என்பதை மட்டும் கேட்கவே மாட்டார்.  எங்கள் இருவரின் மீதும் அவ்வளவு நம்பிக்கை. படிப்பு விஷயத்தில் எனது பெற்றோரும் என்ன படிக்கிறேன்... எப்படிப் படிக்கிறேன்... என்று கேட்டதில்லை என்பதே சந்தோஷம் என்றாலும் அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது அல்லவா? வீட்டில் புத்தகத்தை எடுத்துப் படிடா... என அம்மா ஒருநாள் ஒரு பொழுது சொன்னதில்லை... ரேடியோ கேட்டுக் கொண்டோ, பாட்டுக் கேட்டுக் கொண்டே படித்தால்தான் நமக்கு ஏறும் என்பதால் அப்படிச் செய்தாலும் அவன் படிச்சிருவான்னு இப்ப எதுக்கு பாட்டுன்னு திட்டமாட்டார்கள். அதேபோல்தான் முருகனின் அம்மாவும்...

முருகனின் அப்பா பங்குனி உத்திரத்துக்கு குன்றக்குடியில் வேல் போட்டு பால்குடம் எடுப்பார்கள். அதற்கு நான் வரவேண்டும் என்று நிற்பார். அதேபோல் அவருக்கு சாமி வந்ததும் எல்லாம் விழுந்து விழுந்து கேள்வி கேட்டு தங்கள் நிலையைத் தெரிந்து கொள்வார்கள். பெரும்பாலும் நான் இதில் இருந்து விலகியே நிற்பேன். அம்மாவும் எதுவும் சொல்லமாட்டார்கள். மலையைச் சுற்றி வந்து படியேறப் போகும் போது என்னை அவருக்கு முன்னே இழுத்து விட்டு 'தம்பிக்கு சொல்லிட்டுப் போங்கன்னு' சொல்லி அவர் வாயால் நல்ல வார்த்தை சொல்லவைத்து திருநீறு பூசச் செய்வார்.

இதேபோல்தான் அருணகிரிப்பட்டினம் மாரியம்மனுக்கு முருகன் வேல் போட்டு பால்குடம் எடுக்கும் போது நான் அருகில் இருக்க வேண்டும் என்று நினைப்பான். என்னைப் பொறுத்தவரை சாமி கும்பிடுவது, பால்குடம் எடுப்பதெல்லாம் எனக்கும் விருப்பமே.. ஆனால் சாமி வேல் போடச் சொன்னுச்சாடா என அவனுடன் சண்டையெல்லாம் போட்டிருக்கிறேன். இருந்தாலும் அவனின் விருப்பத்திற்கான அவனுடன் நடந்தே வருவேன். வேல் போடும் போது மட்டும் அந்த இடத்தில் இருக்கவே மாட்டேன். அங்கிருந்து கிளம்பும் போது அவனுடன் இணைந்து கொள்வேன். அங்கு எல்லோருக்கும் திருநீறு போடுபவன் என்னை மட்டும் எல்லைக்கு வாப்பா என்று சொல்லிவிடுவான். கோவிலுக்கு அருகே போனதும் 'குமார்குட்டி நீ தம்பிக்கிட்ட துணூறு வாங்கிக்க...' என்று முன்னே இழுத்து விடுவார்.

அப்பொதெல்லாம் ஒரு நாள் வீட்டுப் பக்கம் போகவில்லை என்றாலும் 'ஏம்ப்பா நேற்று வரவில்லை... தம்பி ஏதாச்சும் சொன்னானா?" என்று கேட்பார். திருமணத்திற்குப் பிறகு வீட்டிற்குச் செல்வது குறைய ஆரம்பித்தாலும் என் மீதான பாசம் குறையவில்லை. இடையில் சில காலங்கள் எனக்கும் முருகனுக்கும் ஏற்பட்ட சின்ன மனஸ்தாபம் தெருவில் சந்திக்கும் போது 'எப்படியிருக்கே?' என்பதோடு நின்று போக சுத்தமாக வீட்டுப்ப்பக்கம் போகவில்லை. அப்போதெல்லாம் 'இந்தக் குமாரு நம்மளை எல்லாம் மறந்துருச்சு... இங்கிட்டு வருதேயில்லை...' என்று சொல்லியிருக்கிறார். எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை இப்போது தீர்ந்து மீண்டும் பழைய அன்போடு நாங்கள் இன்னும் இறுக்கமாக பயணிக்க ஆரம்பித்து விட்டாலும் எங்களுக்குள் எரிந்து அணைந்த அந்தப் பிரச்சினை இதுவரை அவருக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம்.

இப்பவும் என் மனைவி முருகன் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் குமார் எப்படியிருக்கு? நல்லாயிருக்கா? என்று கேட்பாராம். அந்தப் பாசத்துக்கு இணையான பாசத்தை இன்னும் சில அம்மாக்களிடமும் பெற்றிருக்கிறேன். நகரத்துக்குள் வசித்தாலும் ஆடு, மாடு, கோழி, வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில் இருக்கும் தோட்டத்தில் விவசாயம் என கிராமத்து மனுசியாக வாழும் அம்மா நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வெள்ளந்தி மனிதர்கள் தொடர்வார்கள்...


-பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி

Post by Nisha Fri 6 Feb 2015 - 17:30

ருக்குமணி அம்மா போல் அன்பும் ஆதரவுமான ஆட்களை இனியும் காண முடியுமா எனும் ஏக்கம் தொனிக்கும் படியாய் உங்கள் எழுத்து உணர்வு பூர்வமாய் இருக்கின்றது குமார்!

நண்பனும் அவர் அம்மாவும் இன்னும் அதே அன்போடு தொடர்வதும் ஆச்சரியம் தான். பணமும், வளமும் மனித மனசை ஆட்டி வைக்கும் இக்காலத்த்தில் மாறாமல் இருப்பவர்களை நினைவு கூர்ந்தமைக்கு பாராட்டுகள்.

அருமையான அனுபவம். இன்னும் எழுதுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Feb 2015 - 8:57

அண்ணாவின் கதை படிக்கும் போது எங்களது பழைய காலத்தினை ஞாபகப்படுத்துகிறது 

நன்றி அண்ணா பகிர்வுக்கு


வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி

Post by சே.குமார் Sat 7 Feb 2015 - 9:31

Nisha wrote:ருக்குமணி அம்மா போல்  அன்பும் ஆதரவுமான ஆட்களை இனியும் காண முடியுமா எனும் ஏக்கம் தொனிக்கும் படியாய் உங்கள் எழுத்து உணர்வு பூர்வமாய் இருக்கின்றது குமார்!

 நண்பனும் அவர் அம்மாவும் இன்னும் அதே அன்போடு தொடர்வதும் ஆச்சரியம் தான்.  பணமும், வளமும் மனித மனசை ஆட்டி வைக்கும் இக்காலத்த்தில் மாறாமல் இருப்பவர்களை நினைவு கூர்ந்தமைக்கு பாராட்டுகள்.

அருமையான  அனுபவம். இன்னும் எழுதுங்கள்.
வணக்கம் அக்கா...
தங்கள் கருத்துக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி

Post by சே.குமார் Sat 7 Feb 2015 - 9:36

நேசமுடன் ஹாசிம் wrote:அண்ணாவின் கதை படிக்கும் போது எங்களது பழைய காலத்தினை ஞாபகப்படுத்துகிறது 

நன்றி அண்ணா பகிர்வுக்கு
வணக்கம் ஹாசிம்...
இது வாழ்க்கையின் பாதையில் என்னை நேசித்த மனிதர்கள்...
கருத்துக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி

Post by Nisha Sat 7 Feb 2015 - 21:32

குமாரை காண முடியவில்லையே!

என்னாச்சுது? 

நலமாய் இருக்கின்றீர்கள் தானேப்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி

Post by சே.குமார் Sun 8 Feb 2015 - 5:34

Nisha wrote:குமாரை காண முடியவில்லையே!

என்னாச்சுது? 

நலமாய் இருக்கின்றீர்கள் தானேப்பா?
நலம் அக்கா...
வார விடுமுறையில் அபுதாபி போனேன்... கொஞ்சம் வேலை...
இன்று அலுவலகம் முடிந்து வருகிறேன் அக்கா...

வேலையின் காரணமாக மூன்று நாட்களாக பதிவும் எழுதவில்லை - நேற்று வேரும் விழுதுகளும் கூட பதியலை...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி

Post by Nisha Sun 8 Feb 2015 - 21:33

அப்படியா? 

பத்திரமாக இருந்தால் சரிப்பா!  நேரம் கிடைக்கும் போது பெரிய்ய்ய பதிவு போடலாம். ஆனால்  தினம் வந்து அட்டென்சன்  போட்டுட்டு போங்க.. இல்லாட்டால் நாங்கள்  00000007 அனுப்பி தேட ஆரம்பிச்சிருவோம். சிரிப்பு வருது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி

Post by சே.குமார் Sun 8 Feb 2015 - 21:51

Nisha wrote:அப்படியா? 

பத்திரமாக இருந்தால் சரிப்பா!  நேரம் கிடைக்கும் போது பெரிய்ய்ய பதிவு போடலாம். ஆனால்  தினம் வந்து அட்டென்சன்  போட்டுட்டு போங்க.. இல்லாட்டால் நாங்கள்  00000007 அனுப்பி தேட ஆரம்பிச்சிருவோம். சிரிப்பு வருது
அது சரி...
கண்டிப்பாக இந்த அன்புக்காகவாவது கண்டிப்பாக வருவேன் அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி

Post by Nisha Sun 8 Feb 2015 - 22:15

வாங்க வாங்க! 

சமையல் சாப்பாடு எல்லாம் ஆச்சா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum