சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நேரில் வந்த காதலே சுவசமாக... Khan11

நேரில் வந்த காதலே சுவசமாக...

2 posters

Go down

நேரில் வந்த காதலே சுவசமாக... Empty நேரில் வந்த காதலே சுவசமாக...

Post by சே.குமார் Sun 22 Mar 2015 - 20:51

தேவா சுப்பையா... அண்ணனான ஒரு உறவு...

வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்ததில் இருந்து தொடரும் உறவுகளில் தேவா அண்ணாவும் ஒருவர். இலக்கிய ஆளுமை, அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர், இவரின் எழுத்துக்களைப் படிக்க ஆரம்பித்தால் அப்படியே நம்மை அதற்குள் வசீகரித்துச் செல்லும். தேவா அண்ணா வார்த்தைகளின் ராஜா என்பதை இவரின் பகிர்வுகளில் பார்த்து மயங்கித்தான் தொடர ஆரம்பித்தேன்.

இதோ பக்கத்தில் துபாயில்தான் இருக்கிறார்... மூன்று ஆண்டுகளுக்கு மேலாக எனது எழுத்தை அவரும் அவரின் எழுத்தை நானும் வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நட்பாய்த் தொடர்ந்தோம். சிவகங்கை மண்ணில் விளைந்த எழுத்துக்காரர் அவர் என்பது  பின்னர்தான் தெரியும். என்னதான் இருந்தாலும் நம்ம மண்... நம்ம மக்கள் என்னும் போது பாசம் இன்னும் அதிகமாகும்தானே... அப்படித்தான் தேவா அண்ணன் எனக்குள் நுழைந்தார்.

ஒரு நாள் முகப் புத்தகத்தில் அரட்டையில் வந்து 'தம்பி அபுதாபியிலயா இருக்கீக... போன் நம்பர் தாருங்கள் நான் பேசுகிறேன்' என்றார். மறுநாளே என்னைக் கூப்பிட்டு நீண்ட நேரம் பேசினார். சிவகங்கை மண்ணுக்கே உரிய 'தம்பி எப்படியிருக்கீக?' என்று கேட்டு ஆரம்பித்த பேச்சில் இருந்த அன்பு என்னை அப்படியே ஆட்கொண்டது.

பின்னர் அடிக்கடி இல்லை என்றாலும் எப்போதாவது போனில் பேசுவார்... அதிகம் அவர்தான் தொடர்பில் வருவார்... நான் எப்போதாவதுதான்... என்னைப் பொறுத்தவரை அதிகம் யாரையும் போனில் கூப்பிட்டு விட மாட்டேன். அது என்னவோ தெரியலை... இதற்காகத்தான் எங்க அம்மாவிடம் திட்டு வாங்குவேன். சென்னையில் இருக்கும் போது அம்மாவுக்கு கூட கூப்பிடுவதில்லை. போன்ல கூட பேசக்கூடாதாடா... என்று திட்டுவார். அப்படியே பழகிவிட்டது.

கில்லர்ஜி அண்ணா, மகேந்திரன் அண்ணா என சிலரை நேரில் சந்தித்து உறவாடியது போல் தேவா அண்ணனை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது. ஆனால் அதற்கான நேரம்தான் அமையவில்லை. சென்ற முறை அவர் அபுதாபி வந்தபோது என்னிடம் பேசினார். ஆனால் அலுவலகத்தில் இருந்ததால் சென்று சந்திக்க முடியவில்லை. சரிப்பா அடுத்த முறை பார்ப்போம் என்று சொல்லிச் சென்றார்.

வெள்ளிக்கிழமை என்னை போனில் கூப்பிட்டிருக்கிறார். நாமதான் சமையல் அது இதுன்னு ரொம்ப பிஸியில்ல... போன் வந்ததை பார்க்கவில்லை... உடனே வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி... 'தம்பி நாளை நான் அபுதாபி வாரேன்... ஒரு மணியில் இருந்து மூணு மணிக்குள் நீ பிரியாக இருந்தால் சந்திக்கலாம் 'என்று அனுப்பியிருந்தார். உற்சவ மூர்த்தியே நேரடியாக வரும் போது பக்தனுக்கு அதைவிட என்ன வேலை... உடனே 'நாளைக்கு விடுமுறைதான்... கண்டிப்பாக சந்திப்போம்' என்று தட்டிவிட்டேன். அதற்கு பதிலாய் எப்பவும் பேசும் வாஞ்சையான குரலில் 'தம்பி நாளைக்கு வர்றேம்ப்பா... சந்திப்போம் 'என்று பேசி அனுப்பியிருந்தார்.

மறுநாள் காலையில் சில வேலைகள் முடித்து குளிக்கச் சென்ற போது கூப்பிட்டிருக்கிறார். பின்னர் போன் செய்தபோது 'தம்பி எங்க இருக்கே நான் சலாம்ல இருக்கேன்' என்றார். இடம் சொல்லி வரச்சொல்லி... நான் போய் காத்து நிற்க... அவரும் வந்து சேர்ந்தார். இதுவரை இருவரும் நேரில் பார்க்கவேயில்லை... எழுத்தும் குரலும் மட்டுமே எங்களை இணைத்து வைத்திருந்தாலும் என்னைப் பார்த்ததும் கைகாட்டி கூப்பிட்டார். கம்பீர எழுத்துக்குச் சொந்தக்காரரான தேவா அண்ணா கம்பீரமாகவே இருந்தார்.

என்னைப் பொறுத்தவரை கிராமத்தானின் கிறுக்கலாய்த்தான் எனது எழுத்துக்கள்... அவரின் எழுத்துக்களோ சுவாசமாய்... இலக்கியம் பேசுவதைக் கேட்பது மட்டுமே எனக்குப் பிடிக்கும்... அதிகம் பேசுவதும் இல்லை... அண்ணன் இலக்கிய அருவியாய் பேசிக் கொண்டேயிருந்தார். நான் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். வேலு நாச்சியார், மருது பாண்டியர், குயிலி, சின்னமருதுவின் மகன் என எங்கள் மண்ணின் காவியம் பேசினார். இதை மிகச்சிறந்த வரலாற்றுப் பகிர்வாக எழுத வேண்டும் என்பது அவரின் ஆசை... அவர் பேசியதில் இருந்து இந்த வரலாற்றை மிகச் சிறந்த புத்தகமாக கொண்டு வரும் அவரின் எண்ணம் இன்னும் சிறப்பாக அமையும் என்பதை அறிய முடிந்தது.

இன்னும்... இன்னும்... என நிறையப் பேசினார். 'தம்பி இப்ப வேலை அதிகம்... அதிகம் வலைப்பக்கம் வருவதில்லை... ஆனாலும் உனது எழுத்துக்களை தொடர்ந்து படிப்பேன். எனக்கு நம்ம ஊர் பேச்சு வழக்கில்... நம்ம மக்களின் வாழ்க்கையை நீ ரொம்ப அழகா எழுதுறது ரொம்ப பிடிச்சிருக்கு'ன்னு இலக்கியம் என்னையும் புகழ்ந்தது என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்... எல்லாம் ஒரு விளம்பரம்தான்... இருந்தாலும் என்னோட எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் சிலரில் தேவா அண்ணனும் ஒருவர் என்பதை நான் அறிவேன். மிகச் சிறந்த எழுத்து ஆளுமை பாராட்டும் போது 'அட நம்மளும் பரவாயில்லாம எழுதுறோம் போல...' என்று தோன்றியது.

நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.... அவருக்கு அடுத்த மீட்டிங் இருந்ததால் இன்னொரு நாள் சந்திப்போம் என்று சொல்லி அவரின் டிரைவரிடம் எங்களைப் போட்டோ எடுக்கச் சொல்லி எடுத்துக் கொண்டார். அந்தத் டிரைவரிடம் நாங்கள் இருவரும் நாலாண்டுக்கு மேல் பழக்கம்... இன்றுதான் பார்க்கப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார். அவரோ இதுவரைக்கு பார்த்ததேயில்லையா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.

தேவா அண்ணனைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் தீர்ந்தது. ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் என்ற ஆசை இன்னும் கூடியிருக்கிறது... மீண்டும் ஒரு சந்திப்பில் இன்னும்... இன்னும்... என நிறையப் பேச வேண்டும்...

தேவா அண்ணாவின் நான்கு புத்தகங்கள் தயாராகிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. அவரின் எழுத்துக்கள் வலையில் பகிர்வதோடு இல்லாமல் புத்தகமாக வந்து எல்லோரின் மனதிலும் இடம்பிடிக்க வேண்டும் என்பதே ஆசை... அது நிறைவேறும் நாள் விரைவில் வர இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.

தேவா அண்ணாவின் வலைப்பூ : WARRIOR  

நீங்களும் வாசியுங்கள்... அவரின் எழுத்துக்குள் உங்களுக்கு ஒரு சுகானுபவத்தைக் கொடுக்கும்...

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

நேரில் வந்த காதலே சுவசமாக... Empty Re: நேரில் வந்த காதலே சுவசமாக...

Post by நண்பன் Sun 22 Mar 2015 - 21:52

உங்கள் நட்பு பற்றியும் உங்கள் சந்திப்பு பற்றியும் அழகாய் எழுதுகிறீர்கள் எழுதியுள்ளீர்கள் நீங்களும் அழகாய் எழுதுகிறீர்கள் தேவா அண்ணாவின் வலைப்பூ பக்கம் போகும் சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக படிப்பேன் இப்போது நேரம் குறைவாக உள்ளது கடினமாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் 
நன்றியுடன் நண்பன் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum