Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள்
[img][/img]
-
இராகுல் சாங்கிருத்தியாயன்
(1893 ஏப்ரல் 9 -1963 ஏப்ரல் 14)
=======
பயண இலக்கியத்தின் தந்தை என
அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட
காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப்
பயணத்தில் செலவழித்தவர்;
பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத்
துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர்.
அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான
கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால
சிறைவாசம் அனுபவித்தவர்.
இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப்
பிரதேசத்தில் கட்டுக்கோப்பான ஒரு பிராமணக்
குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார்.
பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கேதார்நாத்
என்பதாகும். இவரின் இளம் வயதிலேயே இவரின்
பெற்றோர்கள் இறந்து விட இவர் தனது பாட்டியால்
வளர்க்கப்பட்டார். 1897 ஆம் ஆண்டுப் பஞ்சம் பற்றி
இவர் எழுதியதே இவரின் ஆரம்பகால வாழ்க்கை
நினைவாகும்.
இராகுல்ஜி ஆரம்பப் பள்ளி வரைதான் படித்தார்.
ஆனால் தன் வாழ்வில் பல்வேறு மொழிகளையும்
தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய்
விளங்கினார். இவர் அறிந்த மொழிகளில் தமிழும்
ஒன்று,
இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது,
பாரசீகம், கன்னடம் போன்ற இந்தியாவில் பேசப்படும்
மொழிகளும், சிங்களம், ப்ரெஞ்சு, ரசிய மொழி ஆகிய
பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார்.
அத்தோடு புகைப்படக்கலையையும் படித்திருந்தார்.
பயணம்
–
இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு
மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம்,
முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும்
சென்றிருக்கிறார். திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச்
சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும்
ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார்.
இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில்
இருந்தவை ஆகும். ஆகவே ராகுலைப் பெருமைப்படுத்தும்
வகையில் பாட்னா அருங்காட்சியகம் இப்பொருட்களைச்
சிறப்புப் பிரிவொன்றில் காட்சிப்படுத்தி உள்ளது
புத்தகங்கள்
–
இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு
துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர்
எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது
வால்கா முதல் கங்கை வரை
வரலாற்றுப் புனைவு நூலாகும்.
கி.மு. ஆறாயிரத்தில் துவங்கும் இந்நூல் கி.பி. 1942இல்
முடிகிறது. இந்நூல் கே.என். முத்தையா என்பவரால்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு மற்றும்
மலையாள மொழிபெயர்ப்புகளும் அம்மொழிகளில் புகழ்
பெற்றுத் திகழ்கின்றன.
விருதுகள்
1958 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும்
மிக உயரிய விருதான சாகித்திய அகாதெமி விருது
மத்திய ஆசியாவின் இதிகாசம் எனும் இவரது
புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு இவருக்கு
பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
பேராசிரியர்
–
இராகுல்ஜி முறைப்படிக் கல்லாதவரெனினும் அவரது
நுண்மாண் நுழைபுலத்தைக் கருதி சோவியத் யூனியனின்
லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல்
பேராசிரியராய் நியமித்தது.
–
————————————
-
இராகுல் சாங்கிருத்தியாயன்
(1893 ஏப்ரல் 9 -1963 ஏப்ரல் 14)
=======
பயண இலக்கியத்தின் தந்தை என
அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட
காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப்
பயணத்தில் செலவழித்தவர்;
பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத்
துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர்.
அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான
கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால
சிறைவாசம் அனுபவித்தவர்.
இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப்
பிரதேசத்தில் கட்டுக்கோப்பான ஒரு பிராமணக்
குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார்.
பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கேதார்நாத்
என்பதாகும். இவரின் இளம் வயதிலேயே இவரின்
பெற்றோர்கள் இறந்து விட இவர் தனது பாட்டியால்
வளர்க்கப்பட்டார். 1897 ஆம் ஆண்டுப் பஞ்சம் பற்றி
இவர் எழுதியதே இவரின் ஆரம்பகால வாழ்க்கை
நினைவாகும்.
இராகுல்ஜி ஆரம்பப் பள்ளி வரைதான் படித்தார்.
ஆனால் தன் வாழ்வில் பல்வேறு மொழிகளையும்
தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய்
விளங்கினார். இவர் அறிந்த மொழிகளில் தமிழும்
ஒன்று,
இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது,
பாரசீகம், கன்னடம் போன்ற இந்தியாவில் பேசப்படும்
மொழிகளும், சிங்களம், ப்ரெஞ்சு, ரசிய மொழி ஆகிய
பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார்.
அத்தோடு புகைப்படக்கலையையும் படித்திருந்தார்.
பயணம்
–
இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு
மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம்,
முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும்
சென்றிருக்கிறார். திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச்
சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும்
ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார்.
இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில்
இருந்தவை ஆகும். ஆகவே ராகுலைப் பெருமைப்படுத்தும்
வகையில் பாட்னா அருங்காட்சியகம் இப்பொருட்களைச்
சிறப்புப் பிரிவொன்றில் காட்சிப்படுத்தி உள்ளது
புத்தகங்கள்
–
இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு
துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர்
எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது
வால்கா முதல் கங்கை வரை
வரலாற்றுப் புனைவு நூலாகும்.
கி.மு. ஆறாயிரத்தில் துவங்கும் இந்நூல் கி.பி. 1942இல்
முடிகிறது. இந்நூல் கே.என். முத்தையா என்பவரால்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு மற்றும்
மலையாள மொழிபெயர்ப்புகளும் அம்மொழிகளில் புகழ்
பெற்றுத் திகழ்கின்றன.
விருதுகள்
1958 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும்
மிக உயரிய விருதான சாகித்திய அகாதெமி விருது
மத்திய ஆசியாவின் இதிகாசம் எனும் இவரது
புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு இவருக்கு
பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
பேராசிரியர்
–
இராகுல்ஜி முறைப்படிக் கல்லாதவரெனினும் அவரது
நுண்மாண் நுழைபுலத்தைக் கருதி சோவியத் யூனியனின்
லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல்
பேராசிரியராய் நியமித்தது.
–
————————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
» ஹிரோஷிமா நினைவு நாள்
» ஜவஹர்லால் நேரு நினைவு நாள் – மே 27
» ஏப்ரல் - 21 பாரதிதாசன் நினைவு நாள் . . .
» பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்...!!
» ஹிரோஷிமா நினைவு நாள்
» ஜவஹர்லால் நேரு நினைவு நாள் – மே 27
» ஏப்ரல் - 21 பாரதிதாசன் நினைவு நாள் . . .
» பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்...!!
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|