Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
2 posters
Page 1 of 1
சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
ஒரு ஊரு இருந்துச்சு அந்த ஊருல எல்லோரும் உழவர்கள்தான் அது வாணம் பாத்த பூமி அதாங்க மழைபெஞ்சாத்தான் பயிர்செய்யமுடியும் அந்த வருஷம் எல்லோரும் வயல்ல ஏர் ஓட்டி பயிர்செய்ய தயார்செஞ்சு வைச்சுருந்தாங்க ஆனா பாருங்க மழையே வரலை அதனால யாரும் பயிர்செய்ய முடியல அடுத்த வருஷமும் அதேபோல ஏர்ஓட்டி தயாரா இருந்தும் மழைவரல இப்படியே 16 வருஷம் ஆச்சுங்க மழைமட்டும் பெய்யவே இல்லை அதனால இனிமே எங்க மழைவரபோகுதுன்னு யாரும் ஏர்ஓட்டறது இல்லைங்க கடும் பஞ்சம் வேற வந்துருச்சு ஆனாலும் ஒருத்தருமட்டும் வருஷா வருஷம் தவறாம ஏர்ஓட்டுவாரு இந்த 16வது வருஷமும் இவரு ஏர் ஓட்றத பார்த்த இன்னொருத்தர் எந்த நம்பிக்கைல ஏர் ஓட்டறிங்கன்னு கேட்டாராம்
அதுக்கு அவரு சொன்னாறாம் மழைவருமோ வராதோ எனக்கு தெரியாது ஆனா திடீர்னு வந்துச்சுன்னா 16 வருஷமா ஏர்ஓட்றத நிறுத்தின எனக்கு ஏர் ஓட்றது எப்படின்னே மறந்திடும் அப்போ எப்படி என்னால ஏர் ஓட்ட முடியும்னு கேட்டாறாம்
இது மழைக்கடவுளான வருனபகவான் காதுல விழுந்துச்சாம்
ஏன்னா ஒருவேலைய தொடர்ந்து செய்யாம இருந்தா அது மறந்துரும்னு அந்த உழவன் சொன்னது. இவரோட வேலை மழைபெய்ய வைக்கறதுதனே அதுக்குதான் மக்கள் எல்லோரும் நம்மளை கும்பிடுறாங்க இல்லையின்னா நம்மள மதிக்கவே மாட்டாங்களேன்னு பயந்துபோய் அப்ப மழைய பெய்ய வச்சாறாம் அதனால அந்த ஊரு பஞ்சம் நீங்கி செழிப்பா ஆயிருச்சாம்.
இந்த நிகழ்ச்சிக்கப்புறம் தான் உழவன் சொல்லால் ஒழிந்தது வழக்குன்னு ஒரு பழமொழியும் வந்துச்சாம்
நாம உழவர்களப்பத்தி அவங்க சேத்துல கால்வைக்கலன்ன நாம சோத்துல கைவைக்கமுடியாதுன்னு நல்லா பெருமையா பேசுவோம் ஆனா அவங்களுக்கு எதுவுமே செய்யமாட்டோம் உழவர் திருநாள் அன்றைக்காவது அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்
நான் பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும்போது எனக்கு படிக்கறதெல்லாம் மறந்துடுது சார் அப்படின்னு சொல்ற பசங்களுக்கு இந்த கதையத்தான் சொல்லி ஞாபகமறதிங்கறது எல்லோருக்கும் உண்டு நாமதான் படிச்சதெல்லாம் திரும்பவும் அப்பப்போ படிக்கணும் இல்லன்னா கடவுளேயானாலும் மறந்துறுவாங்க நீ போய் நல்லா படி மறக்காதுன்னு சொல்லிருவேன் நீங்களும் உங்க வீட்ல இருக்குற சுட்டிகளுக்கு இந்த கதைய சொல்லி படிக்க சொல்லுங்க நண்பர்களே.
தமிழ் அறிவுக்கதைகள்
அதுக்கு அவரு சொன்னாறாம் மழைவருமோ வராதோ எனக்கு தெரியாது ஆனா திடீர்னு வந்துச்சுன்னா 16 வருஷமா ஏர்ஓட்றத நிறுத்தின எனக்கு ஏர் ஓட்றது எப்படின்னே மறந்திடும் அப்போ எப்படி என்னால ஏர் ஓட்ட முடியும்னு கேட்டாறாம்
இது மழைக்கடவுளான வருனபகவான் காதுல விழுந்துச்சாம்
ஏன்னா ஒருவேலைய தொடர்ந்து செய்யாம இருந்தா அது மறந்துரும்னு அந்த உழவன் சொன்னது. இவரோட வேலை மழைபெய்ய வைக்கறதுதனே அதுக்குதான் மக்கள் எல்லோரும் நம்மளை கும்பிடுறாங்க இல்லையின்னா நம்மள மதிக்கவே மாட்டாங்களேன்னு பயந்துபோய் அப்ப மழைய பெய்ய வச்சாறாம் அதனால அந்த ஊரு பஞ்சம் நீங்கி செழிப்பா ஆயிருச்சாம்.
இந்த நிகழ்ச்சிக்கப்புறம் தான் உழவன் சொல்லால் ஒழிந்தது வழக்குன்னு ஒரு பழமொழியும் வந்துச்சாம்
நாம உழவர்களப்பத்தி அவங்க சேத்துல கால்வைக்கலன்ன நாம சோத்துல கைவைக்கமுடியாதுன்னு நல்லா பெருமையா பேசுவோம் ஆனா அவங்களுக்கு எதுவுமே செய்யமாட்டோம் உழவர் திருநாள் அன்றைக்காவது அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்
நான் பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும்போது எனக்கு படிக்கறதெல்லாம் மறந்துடுது சார் அப்படின்னு சொல்ற பசங்களுக்கு இந்த கதையத்தான் சொல்லி ஞாபகமறதிங்கறது எல்லோருக்கும் உண்டு நாமதான் படிச்சதெல்லாம் திரும்பவும் அப்பப்போ படிக்கணும் இல்லன்னா கடவுளேயானாலும் மறந்துறுவாங்க நீ போய் நல்லா படி மறக்காதுன்னு சொல்லிருவேன் நீங்களும் உங்க வீட்ல இருக்குற சுட்டிகளுக்கு இந்த கதைய சொல்லி படிக்க சொல்லுங்க நண்பர்களே.
தமிழ் அறிவுக்கதைகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
கதை படிக்க நேரம் இருக்கோ சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
Nisha wrote:கதை படிக்க நேரம் இருக்கோ சார்?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
ஒரு மொட்டை தலையனைக் கொசு கடித்துவிட்டது. கோபத்தில் அதைக் கொன்றுவிடும் எண்ணத்துடன் தலையில் பளேர் என்று அடித்துக்கொண்டான். கொசு சுலபமாகப் பறந்து சென்று சற்று தூரத்திலிருந்து சின்னதாகச் சிரித்தது. “ஒரு சிறிய கொசுக்கடியை உன்னால் தாங்க முடியவில்லையே! இதற்காக உன்னையே வருத்திக்கொள்கிறாயே, தலை வலிக்கிறதா” என்றது.
அதற்கு அவன் “ என்னை நானே அடித்துக்கொண்டாலும், அதற்காக என்னை நானே மன்னிக்கவும் முடியும். ஆனால் என் ரத்தத்தை ஓசியாகக் குடிக்கும் உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன். என்னிடம் மாட்டமலா போய்விடுவாய் ” என்றான்
நீதி:*பழிவாங்கல் இருவரையும் பாதிக்கும்*.
அதற்கு அவன் “ என்னை நானே அடித்துக்கொண்டாலும், அதற்காக என்னை நானே மன்னிக்கவும் முடியும். ஆனால் என் ரத்தத்தை ஓசியாகக் குடிக்கும் உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன். என்னிடம் மாட்டமலா போய்விடுவாய் ” என்றான்
நீதி:*பழிவாங்கல் இருவரையும் பாதிக்கும்*.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
ஆஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
Nisha wrote:ஆஹா!
இதுபோல குட்டிக்கதைகள் போட்டா பிடிக்குமா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
கெடுவார் கேடுநினைப்பார்!
ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.
அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.
எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.
ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.
நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது
ஆமை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது
சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன்.அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.ஆனால நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவில்லை ,இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத்தது
தேள் ஆமையின் முதுகில் கொட்டியது .அனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து. உடனே தேள் ஆமையைப் பார்த்து
ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை, அனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.
ஓகோ ;அப்படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்த்து .
தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது.
தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந்தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.
ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்
ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.
அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.
எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.
ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.
நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது
ஆமை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது
சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன்.அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.ஆனால நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவில்லை ,இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத்தது
தேள் ஆமையின் முதுகில் கொட்டியது .அனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து. உடனே தேள் ஆமையைப் பார்த்து
ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை, அனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.
ஓகோ ;அப்படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்த்து .
தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது.
தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந்தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.
ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்
நிஜம் தான். ஆனால் இப்ப இப்படி யாருமே நினைப்பதில்லைப்பா. அன்பும் பண்பும் வத்திப்போச்சி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
சுறா wrote:Nisha wrote:ஆஹா!
இதுபோல குட்டிக்கதைகள் போட்டா பிடிக்குமா?
நல்ல படிப்பினை தரும் கதைகள். தொடர்ந்து போடுங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
Nisha wrote:ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்
நிஜம் தான். ஆனால் இப்ப இப்படி யாருமே நினைப்பதில்லைப்பா. அன்பும் பண்பும் வத்திப்போச்சி!
எனக்கு வேலை வாங்கிக்கொடுத்த வாத்தியார் ஒருவரை இன்னும் நான் அவரை பார்த்து அவர் பாதம் எப்போதும் தொட்டு வணங்குவேன். நான் வேலையில்லாமல் இருந்தபோது என்னை அவர் வேலை செய்த பள்ளியில் சேர்த்துவிட்டு கூடவே ஒருமாதம் அவர் வண்டியிலும் அழைத்து சென்றார் இரண்டு ஆண்டுகள் எனக்கு பணஉதவிகளும் செந்து என்னை ஆதரித்தார்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
உயிர் காக்கும் தந்திரம்
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”
“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.
அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.
நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.
நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”
“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.
அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.
நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.
நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» தாமதம் - சிங்கிள் வரி சிறுகதைகள்
» ஈழத்து சிறுகதைகள்
» சிங்கிள் வரி சிறுகதைகள்
» சிங்கிள் வரி சிறுகதைகள்
» பிரார்த்தனை - சிங்கிள் வரி சிறுகதைகள்
» ஈழத்து சிறுகதைகள்
» சிங்கிள் வரி சிறுகதைகள்
» சிங்கிள் வரி சிறுகதைகள்
» பிரார்த்தனை - சிங்கிள் வரி சிறுகதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|