சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு Khan11

மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு

2 posters

Go down

மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு Empty மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு

Post by சே.குமார் Mon 6 Jul 2015 - 15:17

சேனைத்தமிழ் உலா நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதையும் அந்தக் கதையையும் மனசில் பகிர்ந்திருந்தேன். அதற்கான பரிசுத் தொகையை நிர்வாகத்தினர் தில்லியில் இருக்கும் காயத்ரி அக்காவுக்கு அனுப்பி அவர் மூலமாக எனது மனைவியின் வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்துவிட்டது. சிறப்பாக போட்டியினை நடத்தி பரிசுத் தொகையையும் விரைவாய் அனுப்பி வைத்த சேனைத்தமிழுக்கு நன்றி.

கோதரர் ரூபன் அவர்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பெற்ற பரிசுக்கான பதக்கமும் சான்றிதழும் நான் ஊருக்குப் போவதற்கு முன்பே வந்து எங்கள் வீட்டில் ஆள் இல்லை என தபால்காரர் கொடுக்க மறுத்தபோதும் மனைவியின் அம்மா சண்டை போட்டு வாங்கி வைத்திருந்தார்கள். தற்போது அந்தப் பதக்கமும் சான்றிதழும் எங்கள் வீட்டு ஷோகேசை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. சிரத்தையுடன் அதுவும் அடிக்கடி போட்டிகள் நடத்தி சிறப்பாக செயல்படும் சகோதரர் ரூபன் மற்றும் நண்பர் யாழ்பாவாணன் அவர்களுக்கும் நன்றி.

ப்ரதிலிபி இணையத் தளத்தில் நானும் இணைந்திருக்கிறேன். என்னைப் பற்றியும் எனது பதிவுகளில் சிலவற்றையும் அங்கு பகிர்ந்திருக்கிறார்கள். அதற்கான இணைப்பையும் அவர்களது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். என்னைப் பற்றிய பகிர்வுக்கு இங்கே சொடுக்குங்கள். 
ப்ரதிலிபி தளம் அறிய இங்கு சொடுக்குங்கள். 

பாக்யாவில் தொடர்ந்து எனது கருத்துக்கள் மக்கள் மனசு பகுதியில் வெளிவந்து கொண்டிருக்கிறது. முகநூலில் கேள்வியைப் பகிர்ந்து அதற்கு வரும் கருத்துக்களில் சிறந்தவற்றை அழகாக தொகுத்தளிக்கும் திரு. எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு வாழ்த்துக்கள். 

திருச்செந்தூர் செல்லும் போது அங்கிருந்து ஒரு இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வனதிருப்பதி சென்று பெருமாளை தரிசித்து வந்தோம். இந்தக் கோவில் நம்ம சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி அவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு உண்டியல்கள் இல்லை. சிலைகள் அனைத்துமே மிக அழகாய் தத்ரூபமாய் இருக்கின்றன. மிகப்பெரிய இடத்தில் கோவில் அமைந்துள்ளது. உள்ளே ஹோட்டல்கள் கடைகள் எல்லாம் இருக்கின்றன. இருபது மாடுகளுக்கு மேல் வைத்துப் பராமரிக்கிறார்கள். மாட்டின் பால் அனைத்தும் அபிஷேகத்துக்கு மட்டும்தான் பயன்படுத்துகிறார்களாம். 

காக்கா முட்டை படம் பார்த்தேன். சேரிச் சிறுவர்கள் இருவரின் பீட்சா ஆசையும் அதன் பின்னான நிகழ்வுகளும் அதை அரசியலாக்கி லாபம் சம்பாதிக்க நினைக்கும் அல்லக்கைகளும், எம்.எல்.ஏவும் என நகரும் படத்தில் அந்த இரண்டு சிறுவர்களும் அருமையாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள். அதிலும் சின்னவன்... நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறான். கூடை மேல கூடை வச்சு கூடலூரு போன ரம்யா இதில் சேரிப்பெண்ணாக, வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பத் தலைவியாக அருமையாக நடித்திருக்கிறார். பேரன்களுக்கு பீட்சா செய்கிறேன் என தோசை மீது குடை மிளகாய் வைத்து செய்து கொடுக்கும் பாட்டி, பேரனின் கேள்வியோடு மரணத்தைத் தழுவி எல்லார் மனதிலும் நிற்கிறார். நல்லதொரு படம்.

போன வருடம் எனது சான்றிதழுக்கு அரபியில் சான்றிதழ் வாங்கும் முயற்சி எடுத்து ஒவ்வொரு படியாக மேலேறி கடையில் கல்வி அமைச்சகத்தில் எனது படிப்புக்கான அரபி சான்றிதழை வெற்றிகரமாக இன்று பெற்றுவிட்டேன். இதற்கான செலவு அதிகம்தான் என்றாலும் இனி அரசாங்க அலுவலத்தில் வேலைக்கு தீவிரமாக முயற்சிக்கலாம். சென்ற முறை இந்தச் சான்றிதழ் இல்லாமல்தான் கிடைக்க வேண்டிய வேலை கிடைக்காமல் போனது. பார்க்கலாம் இறையருள் இருந்தால் மீண்டும் அந்த அலுவலகத்திலே வேலை கிடைக்கும்.

ருக்குப் போகும்போது நிறுத்திச் சென்ற வேரும் விழுதுகளும் தொடர்கதையை மீண்டும் தொடரலாம் என்று நினைக்கிறேன். அடுத்த பதிவோ அல்லது அதற்கடுத்த பதிவோ இல்லை முன்பு போல் சனிக்கிழமையோ அடுத்த பகுதியைப் பதியலாம் என்று நினைக்கிறேன். இனிமேல்தான் எழுதணும்... எப்பவுமே அந்தந்த வாரம்தான் எழுதுவது வழக்கம் என்பதால் எழுதி பதிவிடுகிறேன். நான்கு அல்லது ஐந்து பகுதிகளோடு முடித்துவிடலாம் என்ற எண்ணம்... பார்க்கலாம் மனசுக்குள் வேர்விடுகிறதா என்பதை...

ந்த குருபெயர்ச்சியில் கடனை அடைக்க வேண்டும், நகைகளை திருப்ப வேண்டும், கிராமத்தில் வீடு கட்ட வேண்டும், நல்ல வேலையில் அமர வேண்டும், சிறுகதை தொகுப்பு கொண்டு வரவேண்டும், தொடர்கதையையோ அல்லது கிராமத்து நினைவுகளையோ புத்தகமாக்க வேண்டும் என ஏகப்பட்ட வேண்டும்... நிறைவேற வேண்டும்... குருவின் பார்வை கிடைக்கிறதா பார்ப்போம்.

மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு Empty Re: மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு

Post by Nisha Mon 6 Jul 2015 - 15:45

வேண்டுதல்களும் வேண்டும்ங்களும்  சீக்கிரமாய் பலித்திட  பிரார்த்தனைகள். 

கதைபோட்டிகளில் பரிசில்களும் சான்றிதழ்களும்  பெற்றமைக்கு வாழ்த்துகள். 

தொடர்கதையை தொடர இருப்பதற்கு பாராட்டுகள் . 

மொத்தத்தில் இந்தப்பதிவுக்கும் பகிர்வுக்கும்  நன்றிகள்!

 நலம் தானே குமார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு Empty Re: மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு

Post by சே.குமார் Mon 6 Jul 2015 - 16:02

Nisha wrote:வேண்டுதல்களும் வேண்டும்ங்களும்  சீக்கிரமாய் பலித்திட  பிரார்த்தனைகள். 

கதைபோட்டிகளில் பரிசில்களும் சான்றிதழ்களும்  பெற்றமைக்கு வாழ்த்துகள். 

தொடர்கதையை தொடர இருப்பதற்கு பாராட்டுகள் . 

மொத்தத்தில் இந்தப்பதிவுக்கும் பகிர்வுக்கும்  நன்றிகள்!

 நலம் தானே குமார்?
வணக்கம் அக்கா...
கருத்துக்கு நன்றி அக்கா...
பரிசுத் தொகை கிடைத்துவிட்டது... அதை தங்களிடம் சொல்லும் முன் மனசில் பதிஞ்சாச்சு...
தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி...
நல்ல சுகம் அக்கா...
ஊரில் இருந்து வந்து இன்னும் சோர்வு அகலவில்லை...
தொடர்கதை இந்த வாரத்தில் தொடர்கிறேன்.  நன்றி.
வீட்டில் அனைவரின் நலம் காண ஆவல் அக்கா...
ஒரு வாரமாக தங்களை இந்தப் பக்கம் காணோம்... இரண்டு பதிவு போட்டிருக்கிறேன்.... தாங்கள் படிக்கவில்லை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு Empty Re: மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு

Post by Nisha Mon 6 Jul 2015 - 16:10

படிச்சேன்பா.. பின்னூட்டம் இடத்தான் தாமதம். 
இதே இப்பவே பின்னூட்டி விடுகின்றேன். 

ஒருவாரமா என்னமோ  கொஞ்சம் இல்ல ரெம்ப வேலை, கொஞ்சம் சோர்வுன்னு நெட் பக்கம் வராமல் இருந்தாச்சு. 

சனிக்கிழமையிலிருந்து பசங்களுக்கு அடுத்த ஐந்து வாரம் சம்மர் ஹாலிடேஸ்.  அதனால் அவர்கள் இருவரும் ஆளுக்கொரு திசையில் பயணம். எங்களால் எல்லா நேரமும் அவர்களை அழைத்து செல்ல முடியாது என்பதால்  சர்ச் ரிதியில்  அந்தந்த வயதினருக்கு செல்லும் ரூர் பக்கேஜில் அனுப்பி விடுவேன். 

மகள் இத்தாலி போகவும். மகன்   ரூர் போகவும் என துணிகள் கழுவி அடுக்கி என ரெம்ப வேலை. அப்படியே ஹோட்டல் ஆர்டர்களுமாய் நேரம் ஓடிட்டே இருக்கு..

இங்கே ரெம்ப வெயில்.. தாங்க முடியல்ல.. ஏ. சியும் இல்லையா.. எல்லோரும்  வியர்த்து வழிந்து கொண்டு மர நிழல்களாய் தேடிகிட்டிருக்கோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு Empty Re: மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு

Post by சே.குமார் Mon 6 Jul 2015 - 17:11

Nisha wrote:படிச்சேன்பா.. பின்னூட்டம் இடத்தான் தாமதம். 
இதே இப்பவே பின்னூட்டி விடுகின்றேன். 

ஒருவாரமா என்னமோ  கொஞ்சம் இல்ல ரெம்ப வேலை, கொஞ்சம் சோர்வுன்னு நெட் பக்கம் வராமல் இருந்தாச்சு. 

சனிக்கிழமையிலிருந்து பசங்களுக்கு அடுத்த ஐந்து வாரம் சம்மர் ஹாலிடேஸ்.  அதனால் அவர்கள் இருவரும் ஆளுக்கொரு திசையில் பயணம். எங்களால் எல்லா நேரமும் அவர்களை அழைத்து செல்ல முடியாது என்பதால்  சர்ச் ரிதியில்  அந்தந்த வயதினருக்கு செல்லும் ரூர் பக்கேஜில் அனுப்பி விடுவேன். 

மகள் இத்தாலி போகவும். மகன்   ரூர் போகவும் என துணிகள் கழுவி அடுக்கி என ரெம்ப வேலை. அப்படியே ஹோட்டல் ஆர்டர்களுமாய் நேரம் ஓடிட்டே இருக்கு..

இங்கே ரெம்ப வெயில்.. தாங்க முடியல்ல.. ஏ. சியும் இல்லையா.. எல்லோரும்  வியர்த்து வழிந்து கொண்டு மர நிழல்களாய் தேடிகிட்டிருக்கோம்.
அக்கா பிஸியின்னு தெரியும்...
அவங்க எஞ்சாய் பண்ணிட்டு வரட்டும்.
இங்கும் வெயில் அதிகம் அக்கா...
வெளியில் செல்ல முடிவதில்லை...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு Empty Re: மனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum