Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
மருதாணி
4 posters
Page 1 of 1
மருதாணி
- Spoiler:
பேத்தி வைத்த மருதாணியில்
சிவந்து சிரிக்கிறது
நீ வைத்து விட்ட
மருதாணி நினைவுகள்...
மருதாணி இலை பறித்து
கொட்டைப்பாக்கு தானெடுத்து
ஏழு வீட்டு கூரையும்
எதுத்த வீட்டு கோழிக் கழிவுமாய்...
எங்க வீடு ஓடிவந்து
அம்மியில நீ அரைக்க...
மருதாணி அரைக்கிறேன்னு
மனசை அரைச்சிப் போவியே...
வேண்டான்னு மறுத்தாலும்
விடாமல் வைத்துவிட்டு
மறக்காம மறுநாளு
கைபிடித்துப் பாப்பியே...
மருதாணி சிவப்பான
விரல்கள் வீணை மீட்ட
கண்ணுக்குள் காதல் காட்டி
கள்ளச் சிரிப்பு சிரிப்பாயே...
தீபாவளி, பொங்கல்ன்னு
எல்லாத்துக்கும் நீ அரைச்சே...
ரசிச்சு வச்சிக்கிட்டு
அழகி நீ அலையவிட்டே...
பேத்தி வச்ச மருதாணி
அழகா சிவந்திருக்கு...
எனக்கு மட்டும் உன் முகம்
அதுல தெரியுதடி...
நீ பறிச்ச மருதாணிச்செடி
நின்ன இடம் தெரியலையே...
வச்சிவிட்ட கையழகு
மனசை விட்டுப் போகலையே...
வீட்டுலயே வளத்தாலும்
யாரு இப்ப வைக்கிறாக...
நம்மூரும்கூட இப்ப
மெஹந்திக்கு மாறிடிச்சு..
மருதாணி மறைஞ்சாலும்
மறையாம நீ இருக்கே...
அழுதுகிட்டு நீ போன
பாதை மறக்கலையே...
பாவி மனசு இப்போ
வாழத்தான் பழகிருச்சு...
கட்டையில போகும் வரை
கலையாது உன் நினைவு...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மருதாணி
மருதாணிக்கு மலரும் நினைவுகள் அருமை குமார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மருதாணி
பானுஷபானா wrote:மருதாணிக்கு மலரும் நினைவுகள் அருமை குமார்
நன்றி அக்கா.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மருதாணி
மருதாணியோடு சேர்த்து மனசையும் அரைத்துப் போன நினைவுகள் அருமை சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மருதாணி
*சம்ஸ் wrote:மருதாணியோடு சேர்த்து மனசையும் அரைத்துப் போன நினைவுகள் அருமை சார்.
நன்றி சகோதரரே...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மருதாணி
மருதாணி தலைப்பே நினைவை எங்கோ கொண்டு செல்கின்றது. எமக்கும் இந்த அனுபவம் உண்டு.
நினைவுகளாய் நிஜங்கள் அருமை.
நினைவுகளாய் நிஜங்கள் அருமை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மருதாணி
Nisha wrote:மருதாணி தலைப்பே நினைவை எங்கோ கொண்டு செல்கின்றது. எமக்கும் இந்த அனுபவம் உண்டு.
நினைவுகளாய் நிஜங்கள் அருமை.
உண்மையில் அரைத்த மருதாணி வாசம் பொட்டுப் போன்ற வட்டப் புள்ளி பார்த்து ரசித்த அந்த காலத்தை மீண்டும் ஞாபகதிற்கு கொண்டு வந்தது உங்கள் வரிகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மருதாணி
கருத்துக்கு நன்றி.*சம்ஸ் wrote:Nisha wrote:மருதாணி தலைப்பே நினைவை எங்கோ கொண்டு செல்கின்றது. எமக்கும் இந்த அனுபவம் உண்டு.
நினைவுகளாய் நிஜங்கள் அருமை.
உண்மையில் அரைத்த மருதாணி வாசம் பொட்டுப் போன்ற வட்டப் புள்ளி பார்த்து ரசித்த அந்த காலத்தை மீண்டும் ஞாபகதிற்கு கொண்டு வந்தது உங்கள் வரிகள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மருதாணி
சே.குமார் wrote:கருத்துக்கு நன்றி.*சம்ஸ் wrote:Nisha wrote:மருதாணி தலைப்பே நினைவை எங்கோ கொண்டு செல்கின்றது. எமக்கும் இந்த அனுபவம் உண்டு.
நினைவுகளாய் நிஜங்கள் அருமை.
உண்மையில் அரைத்த மருதாணி வாசம் பொட்டுப் போன்ற வட்டப் புள்ளி பார்த்து ரசித்த அந்த காலத்தை மீண்டும் ஞாபகதிற்கு கொண்டு வந்தது உங்கள் வரிகள்.
நன்றி சார் உங்கள் வரிகளால் அக்காலதிற்கு எங்களை கொண்டு சென்றீர்கள். இப்பெல்லாம் மருதாணி அரைப்பதும் இல்லை வைப்பதும் இல்லை எல்லாம் நவின மயம்!அரைத்த மருதாணின் வாசத்தை உங்கள் வரிகளில் உணர முடிகிறது வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மருதாணி
அம்மாடி. ஒரு கவிதைக்கு மூன்று தடவை பின்னூட்டமா? தாங்கல்ல! முடியல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மருதாணி
Nisha wrote:அம்மாடி. ஒரு கவிதைக்கு மூன்று தடவை பின்னூட்டமா? தாங்கல்ல! முடியல்ல!
உண்மைய சொன்னால் மேடம் ஒரு சொந்த ஆக்கத்தை பதிந்து விட்டு அதற்கான பதில் மறுமொழிகளை படிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கே அது தான் மீண்டும் மீண்டும் சிறப்பாக செய்ய தூண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மருதாணி
*சம்ஸ் wrote:Nisha wrote:அம்மாடி. ஒரு கவிதைக்கு மூன்று தடவை பின்னூட்டமா? தாங்கல்ல! முடியல்ல!
உண்மைய சொன்னால் மேடம் ஒரு சொந்த ஆக்கத்தை பதிந்து விட்டு அதற்கான பதில் மறுமொழிகளை படிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கே அது தான் மீண்டும் மீண்டும் சிறப்பாக செய்ய தூண்டும்.
ஆமாம்! நம்ம குமார் ஏன் சம்ஸின் கவிதை திரியை படிக்கவில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மருதாணி
குமார் இந்த திரியில் போய் ச்ச்ச்ச்சும்மா அருமை, கிருமை, எருமை என மட்டும் பின்னூட்டம் இடாமல் உன் கவியழகு என தாடி மாமாவின் கவிதைக்கு கருத்தினை இட்டால் என்னவாம்? அதான் அவர் சிம்மாலிக்கா வந்து சொல்லிட்டார்ல! உங்களுக்கு புரியலையோ? ஹாஹா?
இந்த நூலை பிடித்து சென்றால்..... http://www.chenaitamilulaa.net/t48689p264-topic#465036
இந்த நூலை பிடித்து சென்றால்..... http://www.chenaitamilulaa.net/t48689p264-topic#465036
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|