சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

படித்த சிறுவர் கதைகள் Khan11

படித்த சிறுவர் கதைகள்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

படித்த சிறுவர் கதைகள் Empty படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:18

கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை
------------

அக்பர் நடத்தும் அனைத்து சோதனைகளிலும் பீர்பால் வெற்றி பெற்று வந்ததை பொறாமைக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அக்பரும் பீர்பாலை ஏதாவது ஒரு வகையில் திணற வைத்து அவருக்கு தோல்வியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும் காய்ச்சலால் அவதிப்படுவது போலவும் நடித்தார். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்.

அக்பர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்பதைக் கேள்விபட்ட பீர்பால் பதட்டத்தோடு சென்றுப் பார்த்தார். தன்னை வைத்தியர்கள் வந்து பார்த்து விட்டதாகவும் உடல்நிலை தேறவில்லை என்றும் கூறினார். பீர்பால் வருத்தத்துடன் அக்பரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பீர்பால் எனது உடல்நிலை குணமடைய வைத்தியர் ஒரு வைத்தியம் கூறினார். அதை யாராலும் செயல்படுத்த முடியவில்லை. உங்களால் மட்டும் தான் முடியும் செய்வீர்களா? என்றார் அக்பர்.என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள், என்றார் பீர்பால்.எருதின் பாலை கொண்டு வந்து அதை சூடாக காய்ச்சி கல்கண்டு போட்டு குடித்தால் சரியாகி விடும் என்று வைத்தியர் கூறினார். என்றார் அக்பர். பீர்பால் வசமாக மாட்டிக் கொண்டார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
எருதின் பால் என்றதும் பீர்பால் அதிர்ச்சியில் உறைந்து போனார். இது அரசரின் விபரீத சோதனை என்பதை புரிந்து கொண்டார்.

அரசே….. எருதின் பாலை கொண்டு வர எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுங்கள். எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு மன்னரிடம் விடைபெற்றார். இந்த முறை நிச்சயம் பீர்பால் வெற்றி பெற இயலாது என்று இறுமாப்புடன் சிறித்துக் கொண்டார் அக்பர். வீட்டுக்கு சென்ற பீர்பால் இரவு முழுவதும் தூங்காமல் அரசரிடண் கொடுத்த வாக்கை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்துக் கொண்டேயிருந்தார். முடிவில் அருமையான யோசனை ஒன்றைக் கண்டுபிடித்த பிறகு தான் அவர் நிம்மதி பெருமூச்சுவிட்டு உறங்கினார்.

பீர்பாலின் மனைவி நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்த அழுக்குத் துணிகளை மூட்டையாக கட்டிக் கொண்டு அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த குளக்கரைக்குச் சென்றார். மூட்டையிலிருந்து ஒவ்வொரு துணியாக எடுத்து பெரிய கல் ஒன்றின் மீது பலமாக துவைக்க ஆரம்பித்தாள். அமைதியான அந்த நேரத்தில் துணி துவைக்கும் ஓசை அரண்மனையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்த அக்பரின் காதுகளை எட்டியது.

இந்த ராத்திரியில் எதற்காக துணி துவைக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு அரண்மனையிலிருந்து வெளியில் வந்து குளக்கரைக்குச் சென்றார்.பீர்பாலின் மனைவியை இதற்கு முன்னால் அக்பர் பார்க்காதபடியால் ஏனம்மா எதற்காக நடு இரவில் துணிகளை துவைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கோபமாகக் கேட்டார்

அரசே, ரெண்டு நாட்களுக்கு முன்புதான் என் கணவர் பெண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தார். உதவிக்காக சேர்ந்திருந்த வேலைக்காரியும் இன்று வரவில்லை. துவைக்க வேண்டிய துணி நிறைய சேர்ந்து விட்டது. வேறு என்ன செய்வது. எல்லா வேலைகளையும் பார்த்து விட்டு துவைப்பதற்காக இப்போது கொண்டு வந்தேன்! என்று துக்கம் தொண்டையை அடைக்க கூறினாள் பீர்பாலின் மனைவி. இதைக் கேட்ட அக்பர் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனார். ஆண்களுக்கு பிரசவமா? கேள்விக் குறியோடு யோசித்தார் மன்னர். இதுதான் சமயம் என்று எண்ணிய பீர்பாலின் மனைவி எருதின் பாலை அரசர் கொண்டு வர சொல்லுவதை விட ஆண்கள் பிள்ளை பெறுவதில் ஆச்சர்யமோ, அதிசயமோ இல்லையே! என்றாள். பொறுமையாக அதன் பிறகு தான் பீர்பாலின் மனைவி என்பதை தெரிந்து கொண்டார். தனக்கு சரியாக பாடம் புகட்டியதை உணர்ந்தார்ய வேறு வழியில்லாமல் அக்பர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பீர்பாலை வரச்சொல்லி பரிசுகளை கொடுத்து அனுப்பினார்.


நன்றி ;தமிழ்கடல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:19

நன்றி மறக்காத எறும்பு.
------

ஒரு கட்டெறும்பு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது.

எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு.

மற்றொரு நாள்.

ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு.

ஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு.

விரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது.

கடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது.

அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.

எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:20

கடன் வாங்கிய ஏழை
----

முல்லா ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரரிடம் சென்றார். "ஒரு மனிதனுடைய கஷ்ட நிலைகண்டு மனம் பொறாமால் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு பணக்காரரிடம் கொஞ்சம் பணத்தை கடனாக வாங்கிவிட்டான் அது இப்பொழுது வட்டிக்கு வடடியெனக் கூடி இனறு இத்தொகையினைத் திருப்பிக்கொடுக்க முடியாது தினறுகின்றான். அவன் தற்கொலை செய்து விடுவானோ என்று கூட எனக்குப்பயமாக இருக்கின்றது. நீங்கள் ஒரு ஆயிரம் பொற்காசுகள் அந்த மனிதனுக்கு அவனின் கடனை அடைப்பதற்கு கொடுத்தால் அவன் உரிய காலத்தில் அதைத் திருப்பிக் கொடுத்து விடுவான். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்" என்று முல்லா மிகவும் உருக்கமாகக் கூறினார்.
             அதைக்கேட்டு மனம் உருகிய செல்வந்தர் முல்லாவிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து "அவ்வளவு கஷ்டப்படும் மனிதன் யார்?" என்று கேட்டார். "வேறு யாருமல்ல நான்தான்" என்று கூறிச்சிரித்தவாறு முல்லா சென்று விட்டார். இரண்டொரு மாதங்கள் கழித்து முல்லா அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். இரண்டொரு மாதங்கள் கழிந்தபின்பு மீண்டும் ஒருநாள் முல்லா அப்பணக்காரரிடம் வந்தார். "யாரோ ஒருவர் பணம் வாங்கிக் கஷ்டப்படுகின்றாராக்கும் அதை என்னிடம் வாங்கிக் கொடுக்க வந்நிருகின்றீராக்கும்" என்றார் செல்வந்தர். "ஆமாம்" என்றார் முல்லா.

             "அந்தக் கஷ்டப்படும் ஆள் நீர்தானே" என்று செல்வந்தர் கேட்டார். "இல்லை உண்ணமையிலையே ஒரு ஏளைதான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகின்றான்" என்றார் முல்லா. "உம்மை எவ்வாறு நம்புவது பணத்தை வாங்கிய பின் 'நான்தான் அந்த ஏழை' என்று கூறமாட்டீர் என்பதற்கு என்ன நிச்சயம்" என்று செல்வந்தர் கேட்டார். "நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள் என்று தெரிந்துதான் அந்த ஆளை நேரில் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருக்கிறேன்" என்றார் முல்லா.

                 பிறகு வாசல்ப்பக்கம் சென்று ஒரு ஏழையை அழைத்து வந்தார். " நீர்தான் கடன் வாங்கி கஷ்டப்படும் ஏழையா? " என்று கேட்டார் செல்வந்தர். "ஆமாம்" என்று அந்த ஏழை பதில் சொன்னான். செல்வந்தர் முல்லா சொன்ன தொகையினை ஏழையிடம் நீட்டினார். அதனை முல்லா கை நீட்டி வாங்கிக்கொண்டார். " என்ன பணத்தை நீர் வாங்குகிறீர் பளையபடி என்னை ஏமாற்றுகிறீரா?" என செல்வந்தர் கேட்டார். " நான் பொய் சொல்ல வில்லையே கடன்வாங்கியது அந்த ஏழைதான் ஆனால் கடன் கொடுத்தவன் நான். கொடுத்த கடனை இப்பொழுது வசூல் செய்கிறேன்" என்று கூறியவாறு ஏழையை அழைத்துக்கொண்டு முல்லா நடந்தார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:22

தானத்தில் சிறந்தவர் ...

ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.

இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.

தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, "இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,'' என்று கூறினார்.

பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.

மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது கண்ணா!'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.

"கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,'' என்று கூறினார்.

உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,'' என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, "இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.

பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.

சிறுவர் கதைகள் | இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:23

குட்டித் தோழி
----
இரயில் அரை மணி நேரம் தாமதம். எந்த ரயில் சரியான நேரத்திற்கு வருகிறது? இரயில் நிலையத்தில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த ஞாயிற்றுக்கிழமை அதிக கூட்டம். காட்பாடியில் இருந்து பெங்களூர் செல்ல எப்படியும் நான்கு மணி நேரம் பிடிக்கும். எப்படி நேரத்தை செலவு செய்வது? புதிதாய் வாங்கிய புத்தகம் இரண்டையும் வீட்டிலேயே விட்டுவிட்டேன். ஹிக்கின்போத்தம்ஸ் கடை எதிர் பிளாட்பாரத்தில் தான் இருந்தது. அங்கு சென்றுவர சோம்பேறித்தனம்! 
"டங் டங். பயணிகள் கவனத்திற்கு, சென்னையில் இருந்து பங்காருப்பேட்டை வழியாக பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஒன்றாவது பிளாட்பாரத்தில் வந்து சேரும்."

என்னுடைய சிறு வயதில், 'எப்படி இந்த அக்கா வார்த்தை தவறாமல், ஒரு தவறில்லாமல் அறிவிக்கிறாங்க'ன்னு அதிசயித்தது உண்டு.

வண்டி வந்தது. என் இருக்கையைத் தேடிப் பிடித்து உட்காருவதற்குள் பெரும் சிரமமாகிவிட்டது. எதிரிலே மூன்று நாள் தாடியுடன் முப்பத்தைந்து வயதான கணவன், முப்பதை சற்றே கடந்திருக்கும் மனைவி மற்றும் எல்லாம் வாழ்ந்து முடிந்தது போன்ற தோற்றத்தில் ஒரு பெரியவர். இரயிலின் சத்தத்தைவிட அதிகமாக அருகே அழுகுரல். குழந்தைகளின் சண்டை. சண்டையிட்டது ஒரு ஆறு வயது பெண்குழந்தையும் நான்கு வயது சிறுவனும்.

"விடுடா விடு" ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளுக்காக சண்டை. "மம்மி அந்தப் பையன் பீப்பீல எச்சி வெச்சிட்டான்". லேசான சிணுங்கல் அந்தப் பெண் குழந்தையிடம்.

"அமுதா.. இங்க வா. தம்பி தானே.. வா வந்து தாத்தாகிட்ட உட்கார்." அப்போது தான் தெரிந்தது அந்தக் குழந்தை எதிரே அமர்ந்திருந்த 35-30ன் குழந்தை என்று.

"தா அதை முதலில்; பையில் வைக்கிறேன். அமைதியா எங்காச்சும் இருக்கியா நீ?" இது அமுதாவின் அப்பா.

ஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை. பயணம் முழுவதும் அமுதாவின் அட்டகாசங்களை மட்டுமே நோட்டமிட்டபடி நான். மடிக்கு மடி தாவினாள். தாத்தாவிடம் கொஞ்சினாள். அம்மாவிடம் அடாவடித்தாள். அந்தச் சிறுவனிடம் "உன் பேச்சு டூ" என்றாள். அப்பாவிடம் அடக்கமாக சில நிமிடம். என் மடிக்கும் வந்து சேர்ந்தாள்.

"பாப்பா பேரு என்ன?"

"பாப்பாவா? யாரு பாப்பா? I am a big girl"

"ஓ அப்படிங்களா மேடம்? சொல்லுங்க உங்க பேரு என்ன?

"அமுதா.. உங்க பேரு என்ன?" மழலைத் தமிழில் கேட்டாள்.

தமிழே அழகு! அதுவும் மழலைத்தமிழ் அழகோ அழகு..

"விழியன்"

"குட் நேம். ஹலோ விழியன். ஹவ் டு யு டு?" என் கையைக் குலுக்கினாள்.

அடடா எனக்கு இது தோன்றாமல் போச்சே. பக்கத்தில் கடன் வாங்கிய வார இதழை மூடி வைத்து விட்டேன். அடுத்த ஒரு மணி நேரம் என்னைப் படாதபாடு படுத்திவிட்டாள். கேள்வி மேல் கேள்வி. "நீங்க எங்க வேலை செய்யறீங்க. என்ன கேம்ஸ் விளையாடுவீங்க? ஏன் இவ்வளவு குண்டா இருக்கீங்க? எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?" சலிக்காமல் பதில் தந்தேன்.

ஒரு கட்டத்தில் அவள் கேள்விகளில் இருந்து தப்பிக்க அவளிடம் சின்ன விளையாட்டு விளையாடினேன்.

"அமுதா இது என்ன?"

"இது கூட எனக்குத் தெரியாதா? சர்க்கிள்"

"சரி. இந்த வட்டம் மாதிரி என்ன என்ன பொருள் உனக்குத் தெரியும்? சொல்லு பார்ப்போம்."

"இட்லி, தோசை, அம்மா வளையல், நிலா, சன், பாட்டி பொட்டு, ம்ம்ம் காயின், என் டாலர்... .." எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆரம்பித்தவள் கூட்ஸ் வண்டிபோல சொல்லிக்கொண்டே போனாள்.

அதன் பின்னர் பாட்டு ஒன்றை சொல்லித் தந்தேன். அவளும் ஆடிக்கொண்டே பாட்டு பாடி என்னையும் ஆட வைத்தாள். பேசிப் பேசி என் சக்தியே குறைந்துவிட்டது. ரயில்வே கேண்டீனில் இருந்து பஜ்ஜி போண்டா வந்தது. ஒரு ப்ளேட் கொடுக்கச் சொன்னேன். மூன்று போண்டா பதினாறு ரூபாய். ஒன்றை எடுத்து அமுதாவிடம் கொடுத்தேன். அவள் அம்மாவைப் பார்த்து சாப்பிடட்டுமா என்று கேட்பாள் என எதிர்பார்த்தேன்.

எதிர்பாராத பதில்!

"அங்கிள். இது பேட் ஆயில்ல (bad oil) செய்து இருப்பாங்க. ஸ்டொமக் ப்ராப்ளம் வரும். நீங்க இப்பவே குண்டா இருக்கீங்க. இன்னும் சாப்பிட்டா அவ்வளவு தான்"

சுரீர் என்று மண்டை மீது அடித்தது போல இருந்தது. கேண்டீன் சர்வர் வேகமாக நடையைக் கட்டினார். மிகவும் நெருடலாகிவிட்டது. வாயில் வைத்ததை உண்டுவிட்டு மீதி இருந்த இரண்டு போண்டாவை அந்த வழியே யாசகம் கேட்டு வந்த ஒரு வயதான பாட்டியிடம் கொடுத்தேன்.

அமுதா என்னைப் பார்த்து அநாயசமாக, "அவங்க ஒடம்பு கெட்டுப்போனா பரவாயில்லையா?" எனக் கேட்டுவிட்டு அவள் அம்மாவின் மடியினில் குடிபெயர்ந்தாள்.

என்ன செய்வதென தெரியாமல் கண்ணயர்ந்தேன். குப்பம் ரயில் நிலையத்தில் ஜன்னலோர சீட் காலியானது. அமுதா மீண்டும் வந்து மடி மீது உட்கார்ந்து கொண்டாள்.

அவள் வகுப்புக் கதைகளைக் கூற ஆரம்பித்தாள். தன் தோழி ஜெனி·பர் வைத்திருக்கும் பென்சில் பாக்ஸ் முதல் அவள் வகுப்பு ஆசிரியை வரை ஓயாமல் பேசினாள். எத்தனை உன்னிப்பான பார்வைகள், நினைவுகள், கவனிப்புகள். அவள் பேசி எனக்குத் தாகம் எடுத்தது.

"அமுதா காபி, டீ, பால் ஏதாச்சும் குடிக்கறியா, இல்ல இதுக்கும் ஏதாச்சும் வெச்சிருக்கியா?"

"நீங்க குடிங்க"

டீ குடித்தேன். பிளாஸ்டிக் கப்பை கீழே போட வந்தேன், அமுதாவின் பார்வையில் ஏதோ இருப்பது புரிந்தது.

"கீழே போடாதே" என்ற எச்சரிக்கை கண்களாலே. நானும் என்ன செய்ய என்று கேட்டேன்.

உடனே தன் அம்மா அருகிலிருந்த கவரை எடுத்து நீட்டினாள். அதில் ஏற்கெனவே 4-5 கப்புகளும், பிஸ்கட் கவர்களும் இருந்தன. வார்த்தைகள் தேவையில்லை அவள் செய்கைக்கு. எத்தனை பாடங்களை சொல்லாமல் சொல்லித் தருகிறாள்.

அள்ளி அணைத்தபடி "யாருடா உனக்கு இதெல்லாம் சொல்லித் தந்தது?" ஆனந்த ஆச்சரியத்தில் நான். அவள் முகத்தில் புன்னகை. அப்பாவையும் அம்மாவையும் பார்த்தாள். அப்பாவிற்கு சந்தோஷம். மெல்லத் தலையாட்டியபடி என் காதருகே வந்து "எங்க புவனா மிஸ்" என்று ரகசியம் பேசினாள்.

இதன் நடுவே, காட்பாடியருகே ஒரு சிறுவனிடம் சண்டையிட்டாளே அந்தக் குடும்பம் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கியது. அமுதா ஓடிச்சென்று அந்தப் பீப்பீயை அவனுக்குப் பரிசளித்து வந்தாள்.

"உனக்கு இதே தொழிலாப் போச்சு". அமுதாவின் அப்பா தன் பணத்தை இப்படியே விரயப்படுத்துகிறாள் என்று வருத்தப்பட்டார்.

"அங்கிள், நாம ஏதாச்சும் கேம் விளையாடலாமா?" என்றாள்.

நான் "இப்போ ஐந்து கண்ணாடிப் பொருள்களை சொல்லு பார்ப்போம்" என்றேன்.

"உங்க மூக்குக் கண்ணாடி" விழுந்து விழுந்து சிரித்தாள் கள்ளமில்லாமல். "ஜன்னல் கண்ணாடி" "கிஸான் பாட்டில்" "அப்புறம்..ம் ம்.. அதோ லைட் மேல கண்ணாடி" "அங்ங். அப்பா குடிப்பாரே அந்த old monk பாட்டில்.. .." நிசப்தம். எங்கள் உரையாடலை சுற்றி இருந்த அனைவரும் ரசித்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் ஆச்சர்யம்.

படால்..படால் என்று அமுதாவின் கன்னம் பதம் பார்க்கப்பட்டது. அவளைத் தன் பக்கம் இழுத்தார் அவள் அப்பா. "சார்.." என்று நான் தடுக்க..முறைத்தார்.

அமுதா அழுது அழுது தூங்கிவிட்டாள். கலகலவென இருந்த இடம் காலியானது போல இருந்தது.

கே.ஆர்.புரத்தில் வண்டி நின்றது. அந்தக் குடும்பம் இறங்கியது. இன்னமும் அம்மா தோள்மீது தூங்கியபடி அமுதா. பத்தடி நடந்த பின்னர், மெல்லக் கண்களைத் திறந்தவள் மெல்லிய சிரிப்பை என் மீது வீசிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.

அந்தக் குட்டித் தோழியை இனி எப்போது காண்பேனோ என்ற ஏக்கம் மனதை நிறைத்தது

சிறுவர் கதைகள் | : இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:25

கஞ்ச மகா பிரபு
----
பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன்.

எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில் அமர்ந்து செல்வார்.

ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டது.

கோபத்துடன் அவர் வண்டியோட்டியைப் பார்த்து, "டேய் வண்டியை நிறுத்து. சக்கரத்திற்கு என்ன ஆயிற்று பார்?'' என்று கத்தினார். 

நடுக்கத்துடன் கீழே இறங்கிய வண்டியோட்டி சக்கரத்தைப் பார்த்தான். "ஐயா! சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது. அந்த ஆணியைச் சரி செய்தால்தான் வண்டியை ஓட்ட முடியும்,'' என்றான்.

"முட்டாளே! புறப்படும்போதே இதைப் பார்த்திருக்க வேண்டாமா? பக்கத்தில் உள்ள ஊருக்கு வண்டியை இழுத்துச் செல். அங்கே கொல்லனிடம் காட்டி வண்டியைச் சரி செய். நேரத்தை வீணாக்காதே,'' என்று வண்டியில் இருந்தபடியே கத்தினார் ஜம்பு.

குதிரைகளுடன் வண்டியை மெதுவாக இழுத்துச் சென்றான் அவன். சிறிது நேரத்தில் வண்டி கொல்லனின் உலைக்களத்தின் முன் நின்றது.

அவன் குரல் கொடுக்க வெளியே வந்த கொல்லன் வண்டியைப் பார்த்தான்.
கேசவனை பார்த்தக் கொல்லன், "உடைந்திருக்கும் கடையாணிக்குப் பதில் வேறொரு ஆணியை மாட்டினால் வண்டி பழையபடி ஓடும். ஒரு வெள்ளிப் பணம் கூலி ஆகும்,'' என்றான்.

"என்ன ஒரு ஆணியை மாட்டக் கூலி ஒரு வெள்ளிப் பணமா? நீ கொல்லனா அல்லது கொள்ளைக்காரனா?'' என்று கோபத்துடன் கேட்டார் ஜம்பு.

"எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கேட்ட கூலி தருவதாக இருந்தால் சொல்லுங்கள். வண்டியைச் செப்பனிட்டுத் தருகிறேன். இல்லையேல் வேறு ஆளைப் பாருங்கள்,'' என்றான் அவன்.

வேறு வழியில்லாத ஜம்பு, "சரி'' என்றார்.

சிறிது இரும்புத்துண்டு ஒன்றை எடுத்தான் அவன். உலைக்களத்து நெருப்பில் அதைப் போட்டான். பழுக்கக் காய்ந்த அந்த இரும்புத்துண்டை கத்தியால் நன்கு அடித்தான். ஆணியாக மாறிய அதை சக்கரத்தில் மாட்டினான்.

"இனிமேல் வண்டி நன்றாக ஓடும். கூலியைத் தாருங்கள்,'' என்றான் அவன்.
நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஒரு வெள்ளிப் பணத்தைத் தந்துவிட்டு புறப்பட்டார்.

வண்டி ஓடிக் கொண்டிருந்தது. "இந்தச் சிறிய வேலைக்கு ஒரு வெள்ளிப் பணம் கூலியா? இப்படிப் பொருள் ஈட்டினால் இவன் என்னை விடச் செல்வனாகி விடுவானே. இந்த வேலையை நான் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் வருமே. நாள்தோறும் இங்கு வந்து இவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்ப்பேன். எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்ட பிறகு இவனை இங்கிருந்து விரட்டி விடுவேன்' என்று நினைத்தார் அவர்.

அதன்படி நாள்தோறும் அந்த உலைக்களத்திற்கு வந்தார். கொல்லன் எப்படி வேலை செய்கிறான் என்பதை கவனித்தபடி இருந்தார். சில நாட்கள் சென்றன. கொல்லனுடைய தொழிலில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்தார் அவர்.

கொல்லனைப் பார்த்து, "இனி உனக்கு இங்கு வேலை இல்லை. எங்காவது ஓடிப்போ. என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நீ மீண்டும் என் கண்ணில் பட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்,'' என்று மிரட்டினார்.

அவருக்கு அஞ்சிய அவன், "இனி நான் இங்கு வரமாட்டேன்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

மகிழ்ச்சியுடன் உலைக்களத்திற்குள் நுழைந்தார் அவர். வண்டியோட்டியைப் பார்த்து, "இன்று முதல் கொல்லன் தொழிலை நான் செய்யப் போகிறேன். நீ என் உதவியாளர்,'' என்றார்.

"ஐயா! இந்தத் தொழிலில் எனக்கு ஏதும் தெரியாதே,'' என்றான் அவன்.

"நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய். அது போதும். வெளியே நின்று யாராவது இங்கு வருகிறார்களா பார்?'' என்றார் அவர்.

"ஐயா, பெரிய இரும்புத் துண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆள் இங்கு வருகிறான்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

"பக்கத்து ஊரில் வாழும் உழவன் நான். இந்த இரும்பில் எனக்கு ஒரு கலப்பை செய்ய வேண்டும்,'' என்றான் அவன்.

அந்த இரும்புத் துண்டைத் துõக்கிப் பார்த்தார். அவர். மிகுந்த கனம் உடையதாக இருந்தது. அதை உருட்டி மேலும் கீழும் பார்த்தார்.

"நல்ல இரும்பு இது. இதில் உறுதியான, நீடித்து உழைக்கும் கலப்பை செய்ய முடியும்,'' என்றார்.

பிறகு அந்த இரும்பைத் துõக்கி உலைக்களத்தில் போட்டார். சக்கரத்தைச் சுற்றச் சுற்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இரும்புத் துண்டு பழுக்கக் காய்ந்தது.
உதவியாளைப் பார்த்து, "ஏய்! பழுக்கக் காய்ந்த இந்த இரும்புத் துண்டை, அந்த இரும்புக் கட்டையின் மேல் வை. இந்தப் பெரிய சுத்தியால் அதை அடித்துக் கூர்மையாக்கு. எவ்வளவு வலிமையாக அடிக்கிறாயோ அந்த அளவு கலப்பை உறுதியாக இருக்கும்,'' என்றார்.

உதவியாளும் அவர் சொன்னது போலப் பெரிய சுத்தியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். சின்ன சுத்தியலுடன் அவரும் அவனுடன் சேர்ந்து இரும்புத் துண்டை அடித்தார்.

களைப்பு அடைந்த அவன் சுத்தியலால் அடிப்பதை நிறுத்தினான். "ஐயா! என்னால் முடியவில்லை,'' என்றான்.

உழவனைப் பார்த்து அவர், "இன்னும் சிறிது நேரம் சுத்தியால் அடித்தால் போதும். அழகான கலப்பை கிடைக்கும் உதவி செய்,'' என்றார்.

பெரிய சுத்தியலை எடுத்தான் உழவன். அதனால் இரும்புத் துண்டை ஓங்கி அடிக்கத் தொடங்கினான். களைப்பு அடைந்த அவனும் அடிப்பதை நிறுத்தினான்.

நீண்ட நேரம் சுத்தியால் வலிமையாக அடித்ததால் இரும்புத் துண்டு சிறியதாகிவிட்டது. அதை மேலும் கீழும் புரட்டிப் பார்த்தார்.
உதட்டைப் பிதுக்கிய அவர், "என்ன இரும்புத் துண்டைக் கொண்டு வந்திருக்கிறாய். மட்டமான இரும்பு. இதில் கலப்பை செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரு கோடரி செய்து தருகிறேன். பல பரம்பரைக்குத் தொடர்ந்து அது உழைக்கும். என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.

"சரி கோடரியே செய்து தாருங்கள், '' என்றான் அவன்.
மீண்டும் அந்த இரும்புத் துண்டை உலைக்களத்தில் போட்டுத் தீ மூட்டினார் அவர். பழுக்கக் காய்ந்த அந்த இரும்பை உதவியாளும் அவரும் சேர்ந்து சுத்தியலால் அடித்தனர்.

சிறிது நேரம் சென்றது. அடிப்பதை நிறுத்திய அவர் இரும்புத் துண்டைப் பார்த்தார்.

மிகவும் சிறியதாக இருந்தது அது. "இதில் கோடரி செய்ய முடியாது. கூர்மையான அழகான சுத்தி செய்து தருகிறேன். இது போன்று வேலைப்பாடு அமைந்த சுத்தி யாரிடமும் இருக்க முடியாது. என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.

"ஏதாவது செய்யுங்கள்,'' என்று கடுப்புடன் சொன்னான் உழவன்.

பழையபடி அந்த இரும்பை நெருப்பில் போட்டு எடுத்து அவரும் உதவியாளும் அடித்தார்கள். அந்த இரும்பு மெல்லியதாக ஆகிவிட்டது. அதைப் பார்த்த அவர், "நீ கொண்டு வந்த இரும்பு மிக மோசம். அதில் ஒரு ஊசி தான் செய்ய முடியும். என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.

நடந்ததை எல்லாம் பார்த்து வெறுப்படைந்த உழவன், "எதையாவது செய்து தாருங்கள்,'' என்றான்.

அந்த இரும்புத் துண்டை சுத்தியலால் தட்டி ஊசி போல ஆக்கினார் ஜம்பு. மகிழ்ச்சியுடன் அதைக் கையில் எடுத்த அவர், "இந்த ஊசி சாதாரண ஊசி அல்ல. அருமையான ஊசி. நீண்ட காலம் உழைக்கும் ஊசி. இதைப் போன்ற அழகான ஊசியை இதுவரை யாரும் உருவாக்கி இருக்க முடியாது,'' என்று அதை உழவனிடம் தந்தார்.

"நான் இதற்காக அதிகக் கூலி கேட்கமாட்டேன். நான் உழைத்த உழைப்பு உனக்கே தெரியும். ஐந்து வெள்ளிப் பணம் கொடு. அது போதும்,'' என்றார்.

"ஒரு காசுகூடப் பெறாத ஊசி இது. பெரிய இரும்புத் துண்டை வீணாக்கியதோடு ஐந்து வெள்ளிப் பணமா கேட்கிறாய்? அந்தப் பணத்திற்கு பத்துப் புதிய கலப்பைகளையே வாங்க முடியுமே. என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்,'' என்று உள்ளத்திற்குள் கருவினான் அவன்.

"இப்பொழுது என்னிடம் வெள்ளிப் பணம் ஏதும் இல்லை. என் வீட்டில் ஏராளமாக நெல் உள்ளது. அங்கு வாருங்கள். பத்து வெள்ளிப் பணத்திற்கு உரிய நெல்லைத் தருகிறேன்,'' என்றான் அவன்.

மகிழ்ச்சி அடைந்த அவர், "நீ முன்னால் செல். நான் வண்டியுடன் பின்னால் வருகிறேன்,'' என்றார்.

உலைக்களத்தைப் பூட்டிவிட்டு வண்டியில் அமர்ந்தார் அவர். வண்டியோட்டி வண்டியை உழவனின் வீட்டின் முன் நிறுத்தினான்.

வண்டியோட்டியைப் பார்த்து, "நான் இந்தக் காலி சாக்கு மூட்டைகளுடன் உள்ளே செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே உள்ளிருந்து வரும் பேச்சுக் குரலைக் கவனி. சாக்கு மூட்டைகளில் எல்லாம் நெல்லை நிரப்பும் அவன் "போதுமா' என்று கேட்பான். நீ உடனே, "போதாது, நானும் வேலை செய்திருக்கிறேன். என் பங்கையும் அவரிடம் தாருங்கள் என்று குரல் கொடு,'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவரின் வருகைக்காக உழவனும் அவன் உறவினர்களும் கோபத்துடன் காத்திருந்தனர்.

அவர் உள்ளே நுழைந்ததும் எல்லாரும் அவரைப் பிடித்து இழுத்தனர். வலிமை கொண்ட அளவுக்கு அவரை உதைத்தனர்.

வலி பொறுக்க முடியாத அவர், "ஐயோ! என்னை விட்டு விடுங்கள் போதும்,'' என்று அலறினார்.

வெளியே இருந்த வண்டியோட்டி, "போதாது! போதாது! என் பங்கையும் சேர்த்து அவரிடம் தாருங்கள்,'' என்று உரத்த குரலில் கத்தினான்.

"கேட்டீர்களா? இன்னும் இவனை உதையுங்கள்,'' என்றான் உழவன்.
எல்லாரும் சேர்ந்து அவரை மேலும் அடித்து உதைத்தனர்.

உடலெங்கும் காயத்துடன் பரிதாபமாக முனகியபடி வெளியே வந்தார் அவர்.
வண்டியோட்டி உதவி செய்யத் தடுமாறியபடி வண்டியில் அமர்ந்தார்.

"அய்யா! எங்கேய்யா, நம்ம மூட்டை, நான் போய் வாங்கி வரவா?"

"டேய்! வண்டியை விடு. சீக்கிரம் இங்கிருந்து புறப்பட வேண்டும். கொல்லனாக இருந்தால் இப்படி அடி உதை கிடைக்கும் என்பதை அறியாமல் போனேனே! என் வாழ்நாளிலேயே இப்படி வேதனைப்பட்டது கிடையாது. இனி இந்த வேலையே வேண்டாம்,'' என்றுஅலறினார் செல்வந்தர்.

 சிறுவர் கதைகள் | இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:27

நயவஞ்சக நரி
-----

ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது.

மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே என்றெண்ணிற்று நரி.

அதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன.

“நரியாரே! நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்?'' என்று கேட்டது ஆண் கழுகு.

“கழுகாரா... வாங்க... கூட யாரு? மன்னியா?'' என்று கேட்டது.


“ஆமாம்!'' “நான் கேட்டதற்கு நீர் இன்னமும் பதில் சொல்லவில்லையே!'' என்று கேட்டது.

“ஆமாம்...! இம்மரப் பொந்தில் பல வருஷங்களாக இருக்கிறேன்...! ஏன் கேட்கிறீர்?'' என்று கேட்டது நரி.

“என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை!'' என்றது ஆண் கழுகு.

“ரொம்ப ராசியான மரம் இது... முன்பு கூட ஒரு பருந்து இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்து, சுகமாக வாழ்ந்தது!'' என்றது நரி.

“ஆபத்து ஏதாவது உண்டாகுமா?'' என்று கவலையோடு கேட்டது பெண் கழுகு.

“நான் வயதானவன் இந்த பொந்தே கதி என்று கிடக்கிறேன். நீங்கள் பயப்படவே வேண்டாம். நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்!'' என்றது நரி.

பிறகு மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “அங்கு கூடு கட்டிக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்!'' என்றது.

ஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடு கட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடிச் செல்லும் பொழுது, “என் மனைவி மட்டும் கூட்டிலிருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை... இன்றோ, நாளையோ முட்டை இடப்போகிறாள்... கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே!'' என்றது.

“கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே! நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் அண்டாது!'' என்றது நரி.

நமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணி இரை தேட பறந்து சென்றது ஆண் கழுகு.

பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவை சுமாராக பெரிதானதும், எல்லாவற்றையும் சாப்பிட்டு விட வேண்டுமென்று நரி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, மரத்தடியில் புதிதாக வந்த பன்றியும், அதன் கொழு கொழு குட்டிகளும் அதன் பார்வையில் பட்டது.

பன்றிக் குட்டிகளை சாப்பிட்டு பல நாள் பசியாறலாம் போலிருக்கிறதே என்றெண்ணிற்று நரி. மேலே கழுகு குஞ்சுகள், கீழே பன்றிக் குட்டிகள்... பேஷ் பேஷ்...

“நரியாரே இந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா?'' என்று கேட்டது அம்மா பன்றி.

“பேஷாக தங்கலாம்!'' என்றது நரி.

“எனக்கும், என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே?'' என்று கவலையோடு கேட்டது அம்மா பன்றி.

“நான் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாய் பன்றியே... கவலையே படாதே...! நான் வயதானவன். இந்த பொந்தே கதி என்று கிடப்பவன்...! எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்...! நானிருக்க பயமேன்?'' என்றது நரி.

பன்றி தன் குட்டிகளுடன் மரத்தடியில் தங்கிக் கொண்டது. நாளடைவில் மரத்தின் மேலுள்ள கூட்டில் பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. நான்கைந்து குஞ்சுகள் இருக்கும். கத்தியபடி இருந்தன. மரத்தடியில் பன்றிக் குட்டிகளும் "கர், கர்' என்று உறுமியபடி உலாவிக் கொண்டிருந்தன.

வந்ததற்கு இப்போது பன்றிக் குட்டிகள் மிகவும் பருத்திருந்தன. அம்மா பன்றியும் தான். அவைகளை எப்படி சாப்பிடலாம் என்று யோசித்த நரி, ஆண் கழுகையும், பெண் கழுகையும் அழைத்தது.

“இதோ பாருங்கள்...! மரத்தடியில் இருக்கிறதே பன்றி அது சுத்த மோசம்... உங்கள் குஞ்சுகளை எப்பொழுது சாப்பிடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது!'' என்றது.

இரண்டு கழுகுகளும் இரை தேடக் கூட வெளியில் செல்லாமல், கூட்டிலுள்ள குஞ்சுகளை காவல் காக்கத் தொடங்கின. வெளியே எங்கேயும் போக பயந்தன.

மேலே ஒருமுறை பார்த்துவிட்டு குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த பன்றியிடம் வந்தது நரி.

“பன்றியே...! நீ உன் குட்டிகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலே இருக்கிற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாத கழுகுகள். அவை நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட்டுவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன!'' என்றது நரி.

பன்றி ஒரேயடியாக பயந்து போய்விட்டது. குட்டிகளை எல்லாம் தன் காலின் கீழ் அழைத்துக் கொண்டது. மரத்தடியிலேயே இருக்க வேண்டும். குட்டிகளை தனியாக விட்டு விட்டு போய் விடக்கூடாது.

கழுகுகள் சாப்பிடவா என் குட்டிகளை கண் போல வளர்க்கிறேன் என்றெண்ணியது பன்றி. அதன் பிரகாரமே இருக்கவும் ஆரம்பித்தது அம்மாப் பன்றி.

ஆண், பெண் கழுகுகளும், அம்மா பன்றியும், பன்றிக் குட்டிகளும் இரை தேடாததால் வாடி இளைத்து, சோர்ந்து, துவண்டு ஒரு நாள் எல்லாமே இறந்து போயின.

நரி விரும்பியதுபோல் நிறைய சாப்பிட கழுகுகளும், பன்றிகளும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன.

யார் யாரிடம் நட்பு கொள்ள வேண்டுமென்று யோசித்து நட்புக் கொள்ளாததால் கழுகுகளுக்கும், பன்றிகளுக்கும் நேர்ந்த பரிதாபமான முடிவைப் பார்த்தீர்களா, நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்.

சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:28

தொலைந்த மூக்கு
-----
அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் மகா குறும்பன். இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் இருக்கிறார்கள். பரத் , நந்தினி குடும்பம் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். அந்த குடியிருப்பில் மொத்தம் 5 மாடி. மூன்றாவது மாடியில் இவர்கள் குடியிருக்கின்றார்கள்.

ஒரு சனிக்கிழமை காலை அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றபின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தனர். தாத்தா வெளியே தன் நண்பர்களைக் காண கிளம்பினார்

"பரத் தங்கையை சீண்டாமல் விளையாடு. சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்துவிடுகின்றேன்"

"சரிங்க தாத்தா" - இருவரும்.

விளையாட்டு சாமான்கள் எடுத்துக்கொண்டு இருவரும் மொட்டைமாடியில் விளையாடச் சென்றனர். நிழலாக இருந்த ஓரத்தில் விளையாடினர்.எந்த பொருள் பரத் எடுத்தாலும் உடனே நந்தினி அது வேண்டும் என்பாள். அப்போது திடீர் என்று பரத் "உஷ் உஷ்" என்று கத்தியபடி ஓடினான்.

"அண்ணா என்ன ஆச்சு?" பயத்துடன் அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்..

"ஒரு பருந்து வந்தது பார்த்தியா?"

"இல்லையே"

"பெரிய பருந்து"

''அச்சோ அப்புறம்?. ஏன் விரட்டிக்கொண்டு ஓடினீர்கள்?"

"அழக்கூடாது சரியா. அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய் விட்டது. அது தான் துரத்திக்கொண்டு சென்றேன். அதற்குள் பறந்தே போய்விட்டது"..

இவன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்.."அம்மா என் மூக்கு..என் மூக்கு" என்று அழுதபடி படிக்கட்டுகளில் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள். அவள் விட்ட சத்தத்திற்கு அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நின்ற பாடில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை.அண்ணன் விளையாடுகிறான் என்றாள். கேட்கவே இல்லையே. அழுதபடியே இருந்தாள்.கை கால் உதைத்தாள்.

தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். "என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் அழுகின்றது?"

தன் அழுகையை நிறுத்தி "தாத்தா, நானும் அண்ணனும் விளையாடிக் கொண்டு இருந்தோம்.ஒரு பெரிய பருந்து கறுப்பு நிறத்தில் வந்தது. என் மூக்கை..." மீண்டும் அழுகை...

"அழாமல் சொன்னால் தானே புரியும்..."

"என் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய்விட்டது..ம்ம்ம்..ம்ம்ம்"
நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. "ஓ உன் மூக்கு தானா அது? " என்றார்.
அமைதியானாள் நந்தினி. "நான் தெருவில் வந்த போது ஒரு பருந்து வந்து என்னிடம் பேசியது.ஒரு அழகான குட்டி பெண்ணின் மூக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண், சமத்து பெண், என்று சொல்லிவிட்டு மூக்கை என்னிடம் கொடுத்து விட்டு பறந்து சென்றது."

"இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.எங்கே கிட்டவா..கண்ணை மூடிக்கொள்.."

பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார்.

"ஆகா. மூக்கு ஒட்டியாச்சே..போய் கண்ணாடியில் பார்." நந்தினி கண்ணாடியை நோக்கி ஓடினாள்.."படவா..குழந்தையை ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்" என்று செல்லமாக பரத் கன்னத்தை கிள்ளினார் தாத்தா..

"ஹைய்யா மூக்கு வந்துடுச்சே..ஜாலி..ஜாலி..அண்ணா மூக்கு வந்துடுச்சு...ஜாலி ஜாலி..." மீண்டும் மாடிக்கு சென்று விளையாட துவங்கினர் ஆனந்தமாக.

 சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:30

பட்டாணி
----
ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, "என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்'' என்று கத்தியது.

"மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?'' என்றாள்.

ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது "நில் நில் ஓடாதே' உன்னுடன் நானும் வருகிறேன்'' என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி.

"அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்'' என்றது, நிலக்கரி.

"என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்''. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.

"சரி, வா போகலாம்'' என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.

மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

"இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்'' என்றது, நிலக்கரி.

"அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்'' என்றது பட்டாணி.

"நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்'' என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல்.

முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.

"ஷ்..ஷ்..ஷ்...''தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது.

அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.

அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.

தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.

இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது.

 சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:31

மெய்ப்பொருள் நாயனார்
----
இப்ப நான் உங்களுக்கு ஒரு நாயன்மாரைப் பற்றி சொல்லப்போறேன்.
நாயன்மார்னா யாரு தெரியுமா? சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தூக்கம் எப்பவும் சிவனையே நினைச்சுக்குட்டு இருப்பாங்க.

அதமாதிரி ஒரு ராஜா ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி பண்ணிண்டுருந்த்தார். அவரு பேரு மெய்ப்பொருள் நாயனார்.

அவர வேற எந்தநாட்டு ராஜாவலயும் ஜயிக்கமுடியல. காரணம் அவர்கிட்ட இருந்த சிவ பக்தியும், விசுவாசமான வீரர்களூம். அதில்லாம அவரும் எல்லாருக்கும் நிறைய வாரி வாரிகொடுத்து உதவி செய்வாரு. அதுனால எல்லாரும் அவர சாமி மாதிரி கும்பிட்டாங்க.

இதப்பார்த்த மத்த நாட்டு ராஜாக்குல்லாம் பொறாமையாப் போச்சு, இவர எப்படியாவது தோக்கடிச்சு, இவரோட நாட்ட புடிக்கணும்னு பல தடவை முயற்சி பண்ணி தோத்துட்டாங்க.

விபூதி பூசி ருத்ராக்ஷம் போட்டுகிட்டு யார் வந்தாலும் அவுங்களுக்கு தேவையான துணி, சாப்பாடுன்னு கொடுப்பார்..

இதத் தெரிஞ்சுகிட்ட எதிரி நாட்டு ராஜா ஒருத்தன் என்ன பண்ணினான், தங்கிட்ட இருந்த ஒற்றன் ஒருத்தன திருக்கோவிலூருக்கு சிவனடியார் வேஷத்துல அனுப்பிவச்சான். அவன் பேரு முத்தநாதன்.

அவனும் வேஷம் கட்டிக்கிட்டு நாட்டுக்குள்ள நுழைஞ்சுட்டான். நேரே அரண்மனைக்கு போனான். இவனோட விபூதியையும் ருத்ராக்ஷத்தையும் பார்த்த காவல்காரங்க உள்ளே விட்டுட்டாங்க.

மன்னர் மெய்ப்பொருள் நாயனார் அரச சபையில் இருந்தார். சபைக்கு ஒரு சிவனடியார் வருகிறார் என்றவுடன், அவரை ஓடி வந்து வரவேற்றார்.

சிவனடியார் வேஷத்துல இருந்த முத்தநாதன், தன்னோட வேலய ஆரம்பித்தான். அவன் மன்னனை நோக்கி, மன்னா நான் பல அரிய மந்திரங்களையெல்லாம் பல காலம் தவம் செய்து பெற்றிருக்கிறேன். அவற்றில் சிலவற்றை உங்களுக்குத் தரவே நான் வந்திருக்கிறேன் என்றான்.

இதைகேட்ட மன்னனும் மகிழ்ந்து, ஐயா நாங்கள் செய்த பாக்கியம் இது. உங்கள் விருப்பப்படி பெற்றுக்கொள்ள தயாராயிருக்கிறேன் என்றார். இதை சற்றும் எதிர் பார்க்காத முத்த நாதன் சமாளித்துக்கொண்டு, ஐயா இதை நான் எல்லார் முன்னாலும் உங்களுக்கு தரமுடியாது.

தங்களது தனியான இடத்தில் தான் தரமுடியும் ஆக அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றான்.

மன்னனும் தன்னுடைய தனிமாளிகைக்கு முத்தநாதனை அழைத்து சென்றார். சிவனடியார் வேஷத்திலிருந்த முத்த நாதன் ஏதோ மந்திரம் ஜபிப்பது போல் நடித்து, மன்னர் காணாத வேளையில், தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த கோடரியாலே, மன்னர் மெய்ப்பொருள் நாயனாரை வயிற்றில் குத்தி கீழே தள்ளினான்.

இதை அரண்மனை ஒற்றன் ஒருவன் பார்த்து விட்டு, முத்தநாதனை கையும் களவுமாய் பிடித்து, கொலை செய்ய பாய்ந்துவிட்டான்.

இதைக்கண்ட மன்னர் மெய்ப்பொருள் நாயனார், முத்தநாதனை பிடித்த தனது வீரனை, "தத்தா நமர்" இவர் நம்மவர், இவர் கெடுதல் செய்திருந்தாலும், இவருக்கு நாம் தீங்கு செய்யக்கூடாது. ஆகவே இவரை நம் நாட்டு எல்லைவரை ஜாக்கிரதையாய் கொண்டுவிட்டு வரவேண்டியது உன்பொறுப்பு என்று கூறி உயிரை விட்டார்.

மன்னரை சிவனடியார் வேஷத்தில் வந்த ஒருவன் கொன்றுவிட்டான் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவி மக்களனைவரும் அரண்மனைமுன் கூடிவிட்டனர்.

தனக்கு சதி மூலம் தீங்கு செய்வதனுக்கும் கருணை காட்டி உயிர் பிச்சையளித்த மன்னர் மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தி இன்றளவும் பக்தியுடன் போற்றப்படுகிறது.

சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:33

காணாமல் போனவன் - ஜப்பானிய சிறுவர் கதை
------

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி,காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் இருந்தாங்க. தினமும் காட்டுல இருக்கிற மரங்களை வெட்டி, விறகாக்கி அதை பக்கத்து கிராமத்தில வித்து வந்தார் தாத்தா. ஒரு நாள்  மதியம் ரொம்ப களச்சு போய் சாப்பிட உக்காந்தார். பாட்டி அவருக்கு

கேழ்வரகு களி கொடுத்து அனுப்பி இருந்தாங்க. களிய கையில எடுத்ததும் களி


தவறி கீழ விழுந்து உருண்டு ஓடிடுச்சு. பாவம் தாத்தா, அந்த தள்ளாத வயசுல களிய துரத்திட்டு ஓடினார். களி ஒரு பொந்துக்குள்ள விழுந்துடுச்சு. அது எலி பொந்து போல இருந்துச்சு.அய்யோ இனி சாப்பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சார்.நல்ல பசி வேற. அப்ப திடீர்னு ஒரு அழகான எலி எட்டி பாத்து..”மிக்க நன்றி தாத்தா” அப்படின்னு சொல்லுச்சு.அட எலி பேசுதேன்னு பாத்தாரு.”நல்லா சாப்பிடுங்க எலி. அழகா இருக்கீங்களே” ன்னு சொன்னாரு. எலி சிரிச்சிட்டு..”நீங்க எங்க அரண்மனைக்கு வரீங்களா?”ன்னு கேட்டுச்சு.



“இந்த சின்ன பொந்துக்குள்ள நான் எப்படி வர முடியும்”ன்னு தாத்தா கீழ உக்கார்ந்துகிட்டாரு. கால் வலி இருந்துச்சு போல. “என் வாலை பிடிச்சிக்கோங்க தாத்தா.கண்ணை மூடிக்கோங்க” ன்னு சொல்லுச்சு எலி. வாலை பிடிச்சிகிட்டார்.கண்ணை மூடிக்கிட்டார்.

எங்கயோ பறக்கற மாதிரி இருந்துச்சு தாத்தாவுக்கு. “தாத்தா வாங்க வாங்க” அப்படி சத்தம் கேட்டு கண்ணை த் தொறந்தார் தாத்தா. எலிக்களோட அரண்மனை தான் அது.நிறைய தங்கம் இருந்தது. எலிகள் சமைத்துக்கொண்டு இருந்தது. சில எலிகள் ஓடி ஆடி விளையாடிட்டு இருந்துச்சு. சில எலிகள் சாப்பாட்டு பொருள்களை எங்கிருந்தோ எடுத்துட்டு வந்துச்சு. எங்க பாத்தாலும் தங்கமா இருந்துச்சு. பெண் எலி ஒன்னு வந்து “தாத்தா உங்களுக்கு பசிக்கும், இந்தாங்க சாப்பாடு” ன்னு சாப்பாடு கொடுத்தது. எலிகள் எல்லாம் பாட்டு பாடிட்டு இருந்துச்சு..

“நாங்கள் இங்கே எலிகள்


நல்ல நல்ல எலிகள்


பூனை சத்தம் வேண்டாமே


எங்கும் அமைதி வேண்டுமே


திலக்கலக்கா திலக்கலக்கா”

தாத்தா பாட்டு கேட்டுகிட்டே சந்தோஷமா சாப்பிட்டார். ராஜா போல இருந்த எலி ஒன்னு தாத்தாவுக்கு மூட்டை நிறைய தங்கம் கொடுத்து அனுப்பிச்சாம்.மறுபடியும் அதே எலி வாலை புடிச்சிக்கிட்டு,கண்ணை மூடிகிட்டு பறந்து அவர் வீட்டுக்கு வந்துட்டார்.

வீட்டுக்கு வந்த தாத்தா, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பாட்டிகிட்ட சொன்னாரு. தங்கத்தை எல்லாம் காண்பிச்சாரு.பக்கத்து வீட்டில இருந்த ஒருத்தன் இதை எல்லாம் கேட்டான். அதே பொந்திற்கு போய் ஒரு களி உருண்டைய போட்டான்.அதே எலி வந்துச்சு, அதே போலவே அவனை அவங்க அரண்மனைக்கு கூட்டிட்டு போச்சு.

“நாங்கள் இங்கே எலிகள்


நல்ல நல்ல எலிகள்


பூனை சத்தம் வேண்டாமே


எங்கும் அமைதி வேண்டுமே


திலக்கலக்கா திலக்கலக்கா”

எலிகள் பாடும் சத்தம்.அரண்மனையில எங்க பாத்தாலும் தங்கமா இருந்துச்சாம். இவனுக்கு பேராசை. ஒரு மூட்டை தங்கம் மட்டும் பத்தாது, இதை எல்லாம் எடுத்துக்கலாம்ன்னு யோசிச்சான்.பெண் எலி இவனுக்கு சாப்பாடு எடுத்து வரும் போது “மியாவ் மியாவ்” என சத்தம் போட்டான். எல்லா எலியும் பயந்து எங்க போச்சுன்னே தெரியல.கொஞ்ச நேரத்தில ஒரு எலியும் அரண்மனையில் இல்ல. எல்லா தங்கத்தையும் அள்ளி எடுத்தான். ஆனா அங்கிருந்து எப்படி வெளிய போறாதுன்னு தெரியல.இருட்டா மாறிடுச்சு. கத்தி அழுது பாத்தான். ஒருத்தரும் வரல.அவனை காணம்னு இன்னும் கூட தேடிட்டி இருக்காங்க.பாவம்.

 சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:34

சின்னு மரம் - சிறுவர் கதை
------
சின்னு மரம்.”உஷ் உஷ்” என்ற சத்தமிட்டபடியே இருக்கும் இந்த மரம்.காட்டின் நடுவிலே இருக்கின்றது.அனேகமாக எல்லா விலங்கிற்கும் அணில் மரத்தை பற்றி தெரிந்து இருக்கும். அதன் பெயர் காரணம் தெரியாமல் போனாலும் அது எந்த இடத்தில் இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும். இந்த மரத்தை “சின்னு மரம்” “சின்னு மரம்” என்று தான் அழைப்பார்கள். பக்கத்து காட்டில் இருந்து ஏதாவது விலங்கு இந்த காட்டிற்கு வந்து, வழி கேட்டால் “சின்னு மரத்திற்கு முன்னால் போங்க” , ” சின்னு மரத்திற்கு இரண்டாம் மரம்” என மற்ற விலங்குகள் வழி காட்டும். அந்த அளவிற்கு சின்னு மரம் காட்டின் முக்கிய சின்னமாக கருதப்பட்டது.

அது சரி அது என்ன அணில் மரம். அந்த கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்குமா?. முன்னொரு காலத்தில் இதே மரத்தில் செம்பன், செம்பி என்று இரண்டு அணில் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கு சின்னு என்ற அழகான அணில் குழந்தை பிறந்தது.பிறந்த சில மாதங்களுக்கு இது மற்ற அணில்களை போல அமைதியாக நல்ல பிள்ளையாக தான் இருந்தது..ஓட ஆரம்பித்த பிறகு வால்தனம் வந்துவிட்டது. கொஞ்ச வால்தனம் எல்லாம் இல்லை, பயங்கர வால்தனம். எந்த மரத்திற்கு சென்றாலும் கலாட்டா தான். கலாட்டா செய்தால் பரவாயில்லையே, அடாவடி செய்ய ஆரம்பித்துவிட்டது.குறும்பு செய்யும் குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் அடாவடி செய்தால், அடம்பிடித்தால் யாருக்கு தான் பிடிக்கும் சொல்லுங்க.மற்ற அணில்கள் விளையாடும் போது தான் மட்டும் தான் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என சொல்லும்.வயதான காலத்திலும் செம்பனும் செம்பியும் சின்னுவிற்கு உணவினை தேடி எடுத்து வந்து தந்தனர்.சின்னு ஒரு வேலையும் செய்யாமல் இருந்தது.

சின்னு என்ற பெயரை கேட்டாலே சக வயது அணில்கள் ஓடி ஒளிய ஆரம்பித்துவிட்டன. சின்னுவிற்கு நண்பர்கள் என்றே யாரும் இல்லை. இப்படி இருந்தால் எப்படி நண்பர்கள் கிடைப்பார்களாம்? பெரிய அணில்களுக்கு மரியாதையே தராது சின்னு. இப்படி எல்லாம் செய்யக்கூடாது என சொல்லும் தன் அம்மா அப்பாவையும் சில சமயம் விட்டுவைக்காது சின்னு. இந்த கவலையில் செம்பன் செம்பி இருவரும் மனம் வருந்தி இறந்துவிட்டன்ர்.

சரி பெற்றோர் இறந்த துக்கத்திலாவது சின்னு சரியாகிவிடும் என நினைத்த அனைவருக்கும் ஏமாற்றம் தான். அப்பா அம்மா உயிருடன் இருந்த போது கொஞ்சமாவது அவர்களுக்கு பயந்து இருந்தது.இப்போது அட்டகாசம் தாங்கமுடியவில்லை.எல்லா அணிலும் கூடி ஒரு முடிவினை எடுத்தது.” நாங்கள் அனைவரும் உனக்கு தினமும் வேண்டிய உணவினை தருகிறோம்.இந்த மரத்தைவிட்டு வரவே வராதே” என்று வேண்டின. சின்னுவால் மற்ற அணில்களின் தின வாழ்கையே பாதிக்கபடும் நிலையில் இருந்ததால் இப்படி ஒரு முடிவினை அனைவரும் எடுத்தனர்.

அதன்படி தினமும், பழம், உணவு அனைத்தும் மரம் தேடி வந்தது. எந்த வேலையும் செய்யாமல் தினசரி உணவு உண்பதே வேலையாக இருந்தது. காடே அதிசயிக்கும்படி ஒன்று நிகழ்ந்தது. சின்னுவின் வால் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போனது. காட்டில் இது தான் பேச்சு. சிங்கம்,புலி, யானை, மான், பாம்பு என எல்லா உயிரினமும் இந்த அதிசயத்தை காண வந்தது.

மரத்தின் உச்சியில் சின்னு இருந்தால் தரை வரை வால் நீண்டுவிட்டது. மரத்தில் உயரம் முப்பது அடி இருக்கும்.பெருத்த வால் இருப்பதால் நகர்ந்து செல்வதே சிரமமாகிவிட்டது. வால் எங்காவது சிக்கி கொள்ளும்.காட்டிலே ஒரு காட்சி பொருளாகிவிட்டது சின்னு,மற்ற காடுகளில் இருந்துகூட விலங்குகள் வர ஆரம்பித்துவிட்டன.முதலில் பெருமையாக இருந்தது, பிறகு அவர்களின் கேலிப்பேச்சு சின்னுவை என்னவொ செய்தது.

தன் தவறுகளை எல்லாம் எண்ணி வருத்தப்பட்டது.அப்பா அம்மா சொல்லை கேட்கவில்லையே, யாருக்கும் மரியாதை தரவில்லையே என நினைத்து அழுதது.சின்ன சின்ன வேலைகளை மெதுவாக செய்ய ஆரம்பித்தது.உணவு கொண்டு வருபவர்களிடம் மரியாதையாக நடக்க ஆரம்பித்தது.நல்ல அணிலாக மாறிவிட்டது.சில மாதங்களில் அந்த பெரிய வால் மறைந்து சின்னு மற்ற அணில்களை போன்று மாறிவிட்டது. பொறுப்பு வந்தது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்தது. ஆனந்தமாக வாழ்ந்தது.ஆனாலும் அந்த மரத்தின் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது. சின்ன அணில்களுக்கு சின்னுவின் கதை சொல்லி நல்லபடி நடக்க சொல்வது அந்த காட்டின் வழக்கத்தில் வந்துவிட்டது.

 சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:35

காக்கா ஏன் கறுப்பாச்சு? (பர்மா நாட்டு நாடோடிக்கதை)
------

ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..

சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலையாம்.நல்ல பெரியவங்களாகி கல்யாண வயசுல வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.



சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சாம்.


வழியில திருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.


காக்கா நல்லா சாப்பிட்டு வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.


மறுநாள் காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.

இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?

சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:37

கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும்
-----

முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான்.
ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த்திய முட்டாள் வேலைக்காரர்கள் இருவருடன் புறப்பட்டான். 

அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றியதால் வழியில் பாரம் தாங்காமல் ஒட்டகம் கீழே விழுந்து விட்டது.

வேலைக்காரர்களைப் பார்த்து அவன், ""நீங்கள் இங்கேயே ஒட்டகத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள். நான் பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சென்று இன்னொரு ஒட்டகம் கொண்டு வருகிறேன். பிறகு சுமையை இரண்டு ஒட்டகத்திலும் சமமாக வைத்துப் பயணத்தைத் தொடரலாம். நான் இல்லாத போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் வருவதற்குள் மழை வந்துவிட்டால் பெட்டிகளை எப்படியாவது நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

வேலைக்காரர்கள் இருவரும் சரியான முட்டாள்கள். இது தெரிந்தும் குறைந்த கூலி கொடுத்து அவர்களை விலை பேசியிருந்தான் வணிகன். எல்லாரும் எவ்வளவோ சொன்னார்கள். ஆனால், வியாபாரியோ வழித்துணைக்குதானே இவர்களை அழைத்துச் செல்கிறேன். எடுபடி வேலை செய்யணும். இதனால் எனக்கு ஒரு பாதிப்பும் வராது என்று நினைத்தான்.

சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது.

"நம் முதலாளி பெட்டிகளை நனையாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார். இப்பொழுது என்ன செய்வது?'' என்று கேட்டான் ஒருவன்.

"பெட்டிகளுக்கு உள்ளே இருக்கின்ற துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகள் மேலே போட்டு மூடுவோம். பெட்டிகள் நனையாமல் பார்த்துக் கொள்வோம்,'' என்றான் அடுத்தவன்.

இருவரும் பெட்டிகளுக்குள் இருந்த விலையுயர்ந்த துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகளுக்கு மேல் போட்டனர்.

மழையில் நனைந்து துணிகள் எல்லாம் ஈரமாகிவிட்டன.

ஒட்டகத்துடன் திரும்பிய வணிகன், ""ஐயோ! என்னடா செய்தீர்கள்? துணிகள் எல்லாம் நனைந்து வீணாகிவிட்டதே,'' என்று கோபத்துடன் கத்தினான்.

"முதலாளி நீங்க சொன்னபடி பெட்டிகள் நனையாமல் இருப்பதற்காகத் துணிகளை எல்லாம் அதன் மேலே போட்டோம். அந்தப் பெட்டிகள் சிறிது கூட நனையவில்லை. நீங்களே பாருங்கள்,'' என்றான் அவர்களில் ஒருவன்.

"முட்டாள்களான உங்களுக்கு இனி என்னிடம் வேலை இல்லை,'' என்று அவர்களை விரட்டினான் வணிகன்.

கொஞ்சம் காசுக்கு சிக்கனம் பார்க்கப் போய் முதலுக்கே நஷ்டம் வந்ததை எண்ணி வேதனையுடன் ஊர் திரும்பினான் வணிகன்.

சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:38

சோழ நாட்டு வீரச்சிறுவன்
-----
சோழநாட்டை குலோத்துங்கன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். இவர்தான் "சுங்கம் தவிர்த்த சோழன்' என்று வரலாற்றில் பேசப்படும் மன்னர். சோழ மரபிற்கு ஒரே வாரிசு.

குலோத்துங்கன் ஆட்சியில் கல்வியில் சிறந்த புலவர்கள் அரசனை நாடிப் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றனர். அதே போல் வீரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டிப் பரிசுகள் பல பெற்றனர். நாடெங்கிலும் திருவிழாக்கள் கோலாகலமாய் நடந்தன. மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி நடத்தி வந்தார்.

அக்காலத்தில் கடோத்கஜன் என்ற மாளவ நாட்டு மல்லன் ஒருவன் நாடெங்கும் போரிட்டு வெற்றிக்கொடி நாட்டி வந்தான். வட இந்தியாவில் பல மல்லர்களை ஜெயித்த அவன் தென்னகத்திற்கும் விஜயம் செய்தான்.

மற்போரில் மட்டுமல்லாமல், வில்வித்தைகளிலும், வாட்போரிலும் வாகை சூடிவந்தான். அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வீரர்கள் நடுநடுங்கினர்.

அவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற வீரர்களின் தலைகளை மொட்டை அடித்து அவர்களைத் தன் அடிமைகளாக்கினான். தான் செல்லும் தேசங்கள் தோறும் அவர்களைப் பரிவாரங்களாக அழைத்துச் சென்றான். அதனால் சிறந்த வீரர்களும் கூட அவனை எதிர்க்க அஞ்சினர்.

சோழநாட்டிற்கு வந்த அவன் மன்னன் குலோத்துங்கனைக் கண்டு ""என் சவாலை ஏற்கக் கூடிய வீரர்கள் உம் நாட்டில் உள்ளனரா?'' என்று ஆணவத்துடன் கேட்டான்.

மன்னன் பறை முழங்கி வீரர்களுக்கு இச்செய்தியை அறிவித்தார்.
சோழநாடு வீரத்தில் என்றும் சோடை போனதில்லை. வீரர்கள் பலர் திரண்டனர். விற்போருக்கும், மற்போருக்கும் நாட்கள் குறிக்கப்பட்டன.
அன்று அரண்மனை மைதானத்தில் மன்னர் முன் ஆயிரக் கணக்கானோர் கூடினர். போட்டி ஆரம்பமாயிற்று.

முதல் நாள் வாட்போர்—
பத்துக்கும் மேற்பட்ட சோழநாட்டு வீரர்கள் கடோத்கஜனிடம் வரிசையாகத் தோற்றனர். அவர்களால் பத்து நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.
தோற்ற வீரர்களை கடோத்கஜனின் ஆட்கள் கூடாரத்திற்கு இழுத்துச் சென்று உடனுக்குடன் மொட்டை போட்டு அவமானப்படுத்தி அடிமையாக்கினர்.

மறுநாள் மற்போர்—
சோழநாட்டின் மானத்தைக் காக்க வீரன் ஒருவன் இன்றாவது வருவானா என்று மன்னன் ஏங்கிக் கொண்டிருந்தார்.

கடல் அலையெனத் திரண்டிருந்த கூட்டத்தில் சிங்கமெனக் கர்ஜித்தான் கடோத்கஜன். அவனது திண்ணிய தோள்களும், விம்மிப்புடைத்த மார்பும், வலிமைபொருந்திய கால்களும், தினவெடுத்த கைகளும், அனல்கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுறச் செய்தன.

கோதாவில் நின்று கொக்கரித்த அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை.

""மன்னா! உம்மிடம் மலைபோல் படையிருந்தும் என்னை எதிர்க்க எந்த மல்லனும் வரவில்லை. பார்த்தீர்களா என பராக்கிரமத்தை?'' என்று இறுமாப்புடன் சொன்னான்.

மன்னன் வெட்கித் தலைகுனிந்தான்.

அதே நேரத்தில்—

""இதோ, நானிருக்கிறேன்,'' என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.
அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

பத்து வயது சிறுவன் ஒருவன் திறந்த மார்புடன் வெளியே வந்தான்.

""ஏய் சிறுவனே, நீயா எனக்கு எதிரி? மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன். உயிர் பிழைக்க ஓடிவிடு,'' எனக் கர்ஜித்தான் கடோத்கஜன்.

என்ன ஆச்சரியம்! கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து சென்ற சிறுவன், மல்லனின் தோள்களில் அமர்ந்து தன் வலக்கையை நீட்டி அவன் கழுத்தில் மின்னலாய் ஒரு வெட்டு வெட்டினான். அவ்வளவுதான்... கடோத்கஜனின் கழுத்து நரம்பொன்று சுளுக்கி வலப்பக்கம் 45 டிகிரி கோணத்தில் முகம் பின்புறம் திரும்பிக் கொண்டது. அவனது விழிகள் சுழன்றன. கற்சிலையாய் அசைவற்று நின்றான்.

தோள்களிலிருந்து கீழே குதித்த சிறுவன் மல்லனின் இடது காலை வாரி அவனை மண்ணைக் கவ்வச் செய்தான்.

கூட்டம் ஆரவாரித்தது. சிறுவனைத் தலை மேல் துõக்கி வைத்துக் கூத்தாடியது.

யாரிந்தச் சிறுவன்?

உடலின் நரம்புகளின் ஓட்டம் அறிந்து இன்ன நரம்பைத் தட்டினால் இப்படி ஆகும் என்று கூறும் வர்ம சாஸ்திரக் கலை நிபுணர் வரகுணபதியின் மகன் கபிலன் தான் அவன்.

கடோத்கஜினின் மனைவியும், மக்களும் மன்னனிடம் மன்னிப்புக் கேட்க, சிறுவன் கபிலன் கழுத்து நரம்பில் மற்றுமொரு தட்டு தட்டிவிட்டு தலைக்கோணலைச் சரியாக்கினான்.

கடோத்கஜன்வெட்கித்தலைகுனிந்தான். அவனுடைய ஆணவம் அன்றோடு அழிந்தது. தான் அடிமைபடுத்தி இருந்த ஆட்களை எல்லாம் அன்றே விடுதலை செய்து அனுப்பி வைத்தான்.

 சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:39

கெட்டிக்காரன் புளுகு
-----
ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது.

இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,

“சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்” என்றது
.
நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.

இதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது.

அதற்கு சேவல்,

அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்பதைக் கவனிக்கிறேன்

அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக “சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறி கிளம்பியது.

சேவல், “அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது”


நரி “அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்”.

இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது.


சேவல் “யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது” என்று கூறி சிரித்தது.


கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.

சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:41

நேர்மை கொண்ட உள்ளம்
----
மரியாதை ராமன் தெனாலி ராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவங்களுக்கு புலப்படாத நுணுக்கமான விசயங்களையும் எளிதில் விடுவிப்பார்.

மரியாதை ராமனின் தீர்ப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கதைகளாக மக்களிடம் பேசப்பட்டு வருகிறது, அதில் ஒன்று இதோ.


மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து
அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.

 சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:42

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
------------
பறக்கும் தங்கக்குதிரையானது இராமநாதனை சுமந்துக் கொண்டு மஞ்சள் ஆற்றைக் கடந்து, பட்டு தேசத்தின் எல்லையில் நுழைந்தது. ஊரே அமைதியாக இருந்தது, மக்கள் நடமாட்டமே தெரியவில்லை, நேராக அரண்மனை அருகில் இறங்கி உள்ளே சென்றார், எப்படியும் அரசரை சந்தித்து கொடிய மந்திரவாதி கடம்பனை பற்றிய விபரங்கள் அறிய வேண்டும். அதன்படி மந்திரவாதியை வெல்ல வேண்டும் என்பது அவரது திட்டம்.

அரண்மனையில் பயங்கர நிசப்தம் நிலவியது, உள்ளே சென்ற இராமநாதன் கண்ட காட்சி அவரது திட்டத்தை பொடிபொடியாக்கியது. உள்ளே அரசர் மட்டுமன்றி அவரை சுற்றியிருந்த அனைவரின் உடலும் மரத்தால் ஆனது போல் இருந்தது. அரசரின் தலை மட்டுமே மனித உருவில் இருந்தது.

அரசரின் அருகே ஓடிச் சென்ற இராமநாதன் பட்டு தேச மொழியில் “அரசே! உங்களுக்கு என்ன ஆச்சுது, ஏன் இங்கே மரச்சிலையாக காட்சியளிக்கிறார்கள், என்ன நடந்தது, விபரமாக கூறுங்கள்” என்று பரபரப்பாக பேசினார்.

அரசர் “இளைஞனே! உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், எங்கள் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கை வருகிறது, நடந்ததை அப்படியே கூறுகிறேன், கேள்”

“எங்கள் நாட்டிற்கும் காந்தார தேசத்திற்கும் சில நேரங்களில் எல்லைப் பிரச்சனைகளால் போர் நிகழ்ந்த காலம், ஒரு நாள் எங்கள் ஒற்றர் தலைவன் கொடுத்த செய்தியில், காந்தார தேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்த ஒரு பயங்கரமான மந்திரவாதி வந்திருப்பதாகவும், அவன் புதுப்புது ஆயுதங்கள் தயாரித்து கொடுப்பதாகவும் சொல்லியிருந்தார், ஆக நாமும் அதே போல் ஆயுதங்கள் வைத்திருக்காவிட்டால் காந்தார தேசம் நம்மை அடிமைப்படுத்திடும் என்று நினைத்தேன், என் அமைச்சர்களுடன் பேசிய பின்பு, எங்கள் ஒற்றர் படைத்தலைவன் மூலமாக திறமையான சில இளைஞர்களை காந்தார தேசத்திற்கு அனுப்பி, அங்கே இருக்கும் பயங்கரமான ஆயுதங்களின் தன்மைப்பற்றி அறிந்து அடிக்கடி செய்தி அனுப்பினார்கள். நாங்களும் எங்கள் திறமையை பயன்படுத்தி அதே மாதிரியான ஆயுதங்களை தயாரித்து, யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தோம், போர்க்காலத்தில் பயன்படுத்தவும் திட்டமிட்டிருந்தோம்”.

“சில காலத்தின் பின்னர் மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது, அது தான் காந்தார தேச மன்னரையும், நாட்டு மக்களையும் கொடிய மந்திரவாதி கற்சிலைகளாக மாற்றிவிட்டான், ஆக இனிமேல் எங்களுக்கு எதிரியில் ஒருவன் குறைந்தான் என்று நினைத்தோம், அப்படி இருக்கையில் ஒரு நாள் எங்கள் முன்னாள் அந்த கொடிய மந்திரவாதி தோன்றினான்.”

மந்திரவாதி “அரசே! உன் எதிரியான காந்தார தேச மன்னனை கல்லாக்கி விட்டேன், உனக்கு மகிழ்ச்சி தானே, இனிமேல் நான் உனக்கு உதவ நினைக்கிறேன், உனக்கு அதே போல் பல ஆயுதங்கள் தயாரித்து கொடுக்கிறேன்”

“ உன்னுடைய பேச்சுக்கு மிக்க நன்றி, தற்போது எங்களுக்கு உன்னுடைய உதவி தேவையில்லை, மேலும் எங்களாலே அந்த வகையான ஆயுதங்கள் தயாரிக்கும் வல்லமை இருக்கிறது” 

நான் இப்படி கொஞ்சம் தெனாவெட்டாக பேசியது மந்திரவாதியை கடுப்படித்திருக்க வேண்டும், ஆகையால் கடும்கோபம் கொண்டு எங்களை எல்லாம் மரச்சிலைகளாக்கிவிட்டு காந்தார தேச இளவரசியை கொண்டு சென்றது போல் என் மகளையும் அவன் கடத்தி கொண்டு போய் விட்டான். நாங்களும் பல ஆண்டுகளாக சிலையாக இருக்கிறோம், இன்று தான் உன்னை பார்த்ததில் கொஞ்சம் நம்பிக்கை உண்டாகிறது.

“அரசே! கவலை வேண்டாம், இறைவன் அருள் எனக்குண்டு, கட்டாயம் அந்த மந்திரவாதியை வென்று உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் நல்லது செய்வேன்”

” வீர இளைஞனே! நீ மட்டும் சொன்னது செய்தால், நீ என்ன கேட்டாலும் கொடுப்பேன், இது உறுதி”

“ஆமாம் அரசே! மந்திரவாதி தான் பலச்சாலியாச்சே, அவன் நினைத்தால் இளவரசியை திருமணம் செய்யலாமே, ஏன் உங்க சம்மதம் கேட்கிறான், அது ஏன்?”

“ இளைஞனே! அந்த மந்திரவாதிக்கு ஒரு சாபம் இருக்கிறது, அவன் ஒரு முனிவரிடம் சீடனாக இருந்த போது, அவரது மந்திர தந்திர சக்திகள் அனைத்தும் விரைவில் கற்றுக் கொள்ள நினைத்து, அவரது மகளின் மனதை மாற்றி திருமணம் செய்ய நினைத்திருக்கிறான், அது அறிந்து கோபப்பட்ட அவனது குரு ஒரு சாபமிட்டார். தீய எண்ணத்தில் என்னிடம் சீடனாக சேர்ந்த நீ, குருவின் மகளையே திருமணம் செய்ய நினைத்தாய், இனிமேல் திருமணம் செய்ய நினைத்தால் அந்த பெண் மற்றும் பெற்றோரின் விருப்பம் இல்லாமல் செய்ய முடியாது, அப்படி செய்தால் உன் தலை சுக்கு நூறாக நொறுங்கிவிடும், ஜாக்கிரதை என்று சொல்லிட்டார்”

“ அரசே! மந்திரவாதியைப் பற்றி வேறு ஏதாவது விபரம் தெரிந்தால் சொல்லுங்களேன்”
“ கடம்பன், பனித்தேசத்தின் எல்லையில் இருக்கும் மனிதர்கள் புக முடியாத கடும் வனத்தில் இருக்கிறான்”

“நன்றி அரசே! இன்றே நான் பனி தேசத்திற்கு சென்று உங்கள் நண்பரான அந்நாட்டு மன்னரை சந்தித்து, அவரின் உதவியை பெற்று, வனத்தில் நுழைந்து, கொடியவனை அழித்து வருகிறேன், விடை கொடுங்கள்”

அரசரிடம் விடை பெற்று, பனி தேசத்திற்கு ஏற்ற உடைகளை அணிந்து குதிரையில் ஏறி பனிதேசத்தை நோக்கி பயணமானார்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது பனிதேசத்திற்கு செல்லவேண்டும் என்று நினைத்திருந்த இராமநாதனுக்கு தந்தை படிக்க செல் என்று சொன்ன போது அடைந்த மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சி அடைந்தார்.

பனிதேசத்தின் மீது பறந்த போது கீழே எங்கே பார்த்தாலும் பனிப்படர்ந்து வெள்ளையாக காணப்பட்டது. இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே பனிதேச மன்னர் வசிக்கும் அரண்மனையின் அருகில் இறங்கினார். 

கடும்குளிர் நிலவியதால் மக்கள் நடமாட்டம் இல்லை போல் என்று நினைத்து அரண்மனை உள்ளே நுழைந்த இராமநாதனின் தண்டுவடமே சில்லிட்டது போல் உணர்ந்தார்.

அரசவையில் அரசரும் மற்றவர்களிம் வெண்ணிறத்தில் பனிக்கட்டி சிலைகளாக காட்சி அளித்தார்கள். அரசரின் தலை மட்டுமே மனித உருவில் இருந்தது.

இராமநாதன், என்னடா எங்கே போனாலும் இந்த மந்திரவாதி தொந்தரவு தாங்க முடியலையே, அவனை சீக்கிரம் ஒழித்துக் கட்ட வேண்டும், இல்லேன்னா உலகம் முழுவதும் அவனது அட்டூழியம் பரவிவிடும் என்று நினைத்தார்.

அரசரும் காந்தார, பட்டுதேச மன்னர்கள் சொன்ன கதையே சொன்னார். இனியும் தாமதிக்கக்கூடாது என்று அரசரிடம் விடைப்பெற்று தங்ககுதிரையை அழைத்து, அதன் மேல் ஏறி மீண்டும் பறக்கத் தொடங்கினார். இரவும் பகலுமாக இரண்டு நாட்களின் பயணத்தின் பின்னர் பனிதேசத்தின் எல்லையை அடைந்தார். வேகுதூரத்தில் பச்சை பசேலென பெரிய பிரதேசமே வனப்பகுதியாக காட்சியளித்தது.

இராமநாதனுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியலை, ஒருவழியாக மந்திரவாதியின் இருப்பிடத்திற்கு அருகில் வந்தாச்சு, இப்போ அவனை எப்படி வெல்வது, சரி முதலில் அவனது மாளிகையை கண்டுபிடிப்போம் என்று நினைத்துக் கொண்டு குதிரையில் அந்த வனப்பகுதியை சுற்றி சுற்றி பார்த்தார், மாளிகையே தெரியவில்லை. எப்படி கண்டுபிடிப்பது என்று தேடிய போது, ஒரு இடத்தில் மரங்கள் தீயால் கருகி இருப்பதைக் கண்டார், ஆக மொத்தம் அதன் அருகில் தான் மாளிகை இருக்க வேண்டும் என்று நினைத்து, அங்கே பறந்தப்படியே மந்திரவாதியின் மாளிகையை கண்டுபிடித்து விட்டார், பின்னர் குதிரையுடன் கொஞ்ச தொலைவில் கீழே இறங்கினார்.

குதிரையிடம் நாம் இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, மாளிகையை நோக்கி நடந்தார்.

மாளிகையை ஜாக்கிரதையாக நெருங்கியவர் நெருப்பை மிதித்தது போல் பயந்து நின்றார். மாளிகையின் முன்னால் காவலுக்கு இரண்டு பெரிய நெருப்பை கக்கும் டிராகன்கள் இருந்தது, இவற்றின் நெருப்பால் தான் மரங்கள் கருகி இருந்ததை புரிந்துக் கொண்டார், அவை தன்னைப் பார்த்தால் தானும் எரிந்து போக வேண்டியது தான், எப்படி அவற்றை ஏமாற்றி மாளிகையில் நுழைவது என்று யோசித்தார்.

அப்போ குதிரையானது இராமநாதனை நோக்கி “எஜமான், நீங்க கவலைப்பட வேண்டாம், நான் உதவுகிறேன், நான் எப்படியாவது அந்த இரண்டு டிராகன்களை ஏமாற்றி என் பின்னால் வர வைக்கிறேன், அந்த இடைவெளியில் நீங்க மாளிகையில் நுழைந்து விடுங்கள்”.

குதிரையானது இராமநாதனை விட்டு மாளிகையில் எதிர்புறமாக மறைந்து சென்று பயங்கரமாக கனைத்தது, கனைப்புச் சத்தம் கேட்ட டிராகன்கள் உணவுக்கு ஒரு குதிரை கிடைச்சாச்சு என்று குதிரையை பிடிக்க ஓடியன, தங்ககுதிரையானது அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியது, அந்த நேரத்தில் இராமநாதன் வேக வேகமாக ஓடி மாளிகையில் நுழைந்தார்.

தங்க குதிரையானது வானில் பறக்கத் தொடங்கியது, டிராகன்களும் விரட்டிக் கொண்டு பறந்தன, ஆனால் தங்ககுதிரையை பிடிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு மாளிகையின் காவலுக்கு திரும்பின. மாளிகையின் உள்ளே நுழைந்த இராமநாதன் அங்கே பயங்கர நிசப்தம் நிலவியதை கண்டார், பெரிய பெரிய தூண்களில் பயங்கரமான மிருங்கள் உயிரோடு இருப்பது போல் சிற்பங்கள் இருப்பதைக் கண்டார்.

ஒவ்வொரு அறையாக தேடி பார்த்த போது ஒரு அறையில் மூன்று இளவரசிகளும் சோர்ந்து போய் கவலையோடு இருப்பதைக் கண்டார். உள்ளே நுழைந்த இராமநாதனைக் கண்டு மூவரும் ஆச்சரியப்பட்டார்கள், இதுவரை மந்திரவாதி மட்டுமே வந்த அறையில் புதிய அழகான வாலிபனைக் கண்டதும் அவர்களால் நம்பமுடியவில்லை.

இராமநாதன் “இளவரசிகளே! கவலைப்பட வேண்டாம், உங்களை காப்பாற்ற தான் நான் வந்திருக்கிறேன், எனக்கு நீங்க கொஞ்சம் உதவி செய்தால் போது மந்திரவாதியை நான் வெல்வேன், உங்கள் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும்”.

“நயவஞ்சக மந்திரவாதியை தந்திரத்தால் வெல்ல வேண்டும், அவனது உயிர் அவனுடைய உடலில் இல்லை என்றும் எங்கே மறைத்து வைத்திருப்பதாகவும் வைத்திய மந்திரவாதி என்னிடம் சொன்னார், அது எங்கே என்பதை கண்டறிய வேண்டும், அதற்கு கால அவகாசம் இல்லை, எனவே அதை மந்திரவாதியின் வாயிலிருந்தே வரவழைக்க வேண்டும், எனக்கு உங்கள் உதவி தேவை”

“உங்களில் யாராவது ஒருவர் மந்திரவாதியை திருமணம் செய்ய சம்மதம் என்று சொல்ல வேண்டும், பின்னர் மந்திரவாதியின் மதியை மயக்கி அவனிடமிருந்து விபரங்கள் பெற வேண்டும், மந்திரவாதியின் மதியை மயக்கும் மாய வேர் என்னிடம் இருக்கிறது, சொல்லுங்க உங்களில் யார் அதை செய்ய இருக்கீங்க?”

இராமநாதன் அவ்வாறு கேட்டதும் பனிதேசத்தின் இளவரசி தைரியமாக முன்வந்தார்.
மந்திரவாதியை எவ்வாறு ஏமாற்ற வேண்டும் என்பதை தெளிவாக கூறினார். அத்துடன் தான் அதே அறையில் இருந்த பெரிய குதிருக்குள் ஒளிந்து கொண்டார்.

அன்று மாலையே மந்திரவாதி இளவரசிகள் தங்கியிருந்த அறைக்கு வந்தான். வழக்கம் போல் தன்னை திருமணம் செய்துக் கொள்ள அவர்களை மிரட்டினான். வழக்கத்திற்கு மாறாக பனித்தேசத்தின் இளவரசி அவனைப் பார்த்து புன்னகை செய்தார், அத்துடன் “மாவீரரே! நாங்கள் ஆரம்பத்தில் உங்களைக் கண்டு பயந்தோம், இப்போ உங்களின் வீரத்தையும் சக்தியையும் புரிந்துக் கொண்டோம், திருமணம் செய்தால் உங்களைத் தான் செய்வோம் என்ற முடிவுக்கு வந்தாச்சு” என்றார்.

அதைக்கேட்ட மந்திரவாதிக்கு நான் காண்பது கனவே, நினைவா என்று ஆச்சரியப்பட்டான்.. இளவரசிகளும் அவனுக்கு சுவையாக உணவு தயார் செய்து கொடுப்பதாக சொன்னார்கள். மந்திரவாதியும் மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டு, அறையை விட்டு வெளியேறினான், இரவில் மீண்டும் வருவதாக சொன்னான்.

உடனே இராமநாதன் வெளியே வந்து தன் கைப்பக்குவத்தை காட்ட, அருஞ்சுவை உணவு தயார் ஆனது, மீண்டும் குதிருக்குள் போய் ஒளிந்துக் கொண்டார்.

இரவில் வந்த மந்திரவாதியின் உணவின் சுவையாலும், உபசரிப்பாலும் மயங்கிப் போயிருந்தான், இராமநாதன் சொன்னப்படி சுவையான பாயாசத்தில் மந்திரவேரில் ஒன்றை பொடியாக்கி போட்டிருந்தார். அதை குடித்தப் பின்னர் மந்திரவாதியின் மதி மயங்கிவிட்டது.

இராமநாதன் சொன்னப்படி பனிதேசத்தின் இளவரசி பேசத் தொடங்கினார் “மாவீரரே! நீங்களோ வயதானவர், உங்களுக்கோ எதிரிகள் அதிகம், அப்படி இருக்கையில் உங்களை மணந்தப்பின்னர் நீங்க விரைவில் மரணம் அடைந்தால், எங்கள் கதி என்ன ஆகும், அது மட்டுமே இன்னமும் பயமாக இருக்குது”

“ பெண்ணே! வீண்கவலை வேண்டாம், உங்கள் மூவரையும் உங்க பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டால் எனக்கு சாகாவரம் கிடைத்து, மிகவும் அழகான வாலிபானாகி விடுவேன், மேலும் என் உயிரை நான் மறைவான இடத்தில் வைத்திருக்கிறேன்” 

“அப்படியா! ஆச்சரியமாக இருக்குதே, இப்படி கூட செய்ய முடியுமா?” என்று இளவரசி ஆச்சரியத்தோடு கேட்டார். 

“மூன்றெழுத்தில் என் மூச்சிறுக்கும்” என்று கூறியதோடு மந்திரவாதி மயங்கிப் போனான். 

மறுநாள் காலையில் மந்திரவாதி வழக்கம் போல் வெளியே சென்று விட்டான். இரவு முழுவதும் இராமநாதன் தூங்கவில்லை, அது என்ன மூன்றெழுத்தில் என் மூச்சிறுக்கும், அப்படி என்றால் மூன்றெழுத்து கொண்ட ஏதோ ஒன்றில் அவன் உயிர் இருக்கும் போலிருக்குதே, அது என்ன என்று யோசித்து யோசித்து மண்டை வலி எடுத்தது.

மூன்று எழுத்து என்றால் பூச்சி, பூரான், பல்லி, பாம்பு, கொக்கு, காக்கா, கழுதை, குதிரை இப்படியாக விலங்குகள் பறவைகள் பட்டியலும் மல்லி, லில்லி, அல்லி, தாமரை என்று பூக்கள் பட்டியலும், இப்படி பல பட்டியல் போட்டும் பிடிபடாமல், தமிழ்மணத்தில் தன் பதிவான மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் படித்தும் மண்டை காய்ந்து போனது தான் மிச்சம்.

அடுத்த நாள் இரவில் மீண்டும் இளவரசிகள் உணவு கொண்டு போய் மந்திரவாதிக்கு கொடுத்து, இரண்டாவது மாயவேர் போட்ட பாயாசத்தை கொடுத்து பேச்சு கொடுக்க கடைசியாக “காட்டுக்குள் கயிறு விடுகிறான்” என்ற சொல்லை சொல்லி மயங்கி விட்டான்.

மீண்டும் இராமநாதனுக்கு தலை வலி வந்து விட்டது, அது என்ன காட்டுக்குள் கயிறு விடுகிறான், ஒரே புதிராகவே சொல்கிறானே மந்திரவாதி, ஒருவேளை மந்திரவேரின் சக்தி போதாதா என்று யோசித்தார்.

மூன்றாவது நாள் மந்திரவாதி “நாளை அபூர்வ பௌர்ணமி வருகிறது, உங்கள் தாய் தந்தையரை இங்கே கொண்டு வந்துவிடுவேன், அவர்கள் சம்மதிக்க வைக்க வேண்டியது உங்கள் வேலை, இல்லை என்றால் அனைவரையும் இங்கேயே வெட்டி கொன்று போட்டு விடுவேன், சாகாவரம் பெற வேறு வழிகள் உள்ளது” என்று கடுமையாக சொன்ன மந்திரவாதியை சமாதானப்படுத்தி, மீண்டும் உயிர் ரகசியம் பற்றி கேட்க,
“சிப்பிக்குள் இருப்பது முத்தல்ல” என்று மூன்று வார்த்தைகள் சொல்லி மயங்கி போனான்.

ஒருவழியாக இளவரசிகளிடம் எப்படியும் நாளை இரவுக்குள் மந்திரவாதிக்கு முடிவு கட்டுகிறேன் என்று கூறி தூக்கத்திலிருந்த டிராகன்களைள ஏமாற்றிவிட்டு காட்டுக்குள் நுழைந்தார் இராமநாதன்.

தன் குதிரையில் ஏறி ஏதாவது தடயம் கிடைக்குமா என்று இரவு நேரத்தில் பயங்கரமான காட்டுக்குள் நுழைந்தார், பல மணி நேரம் தேடலுக்கு பின்னர் அங்கே பெரிய சுனை ஒன்று இருப்பதைக் கண்டார். மந்திரவாதி கடைசியாக சொன்ன சிப்பி, முத்து போன்ற வார்த்தைகள் சுனைக்கு பொருந்துகிறதே என்று மகிழ்ச்சி கொண்டார்.

வேகமாக சுனையை நோக்கி ஓடி போய் தண்ணீரில் காலை வைக்க இருந்தவர் நிலா வெளிச்சத்தில் தெரிந்த காட்சியைக் கண்டு பயந்து விட்டார். தண்ணீரில் படுபயங்கரமான பாம்புகளும், கொடிய விஷப்பற்களை கொண்ட பெரிய பெரிய மீன்களையும் கண்டு, காலை உடனே எடுத்துவிட்டார்.

தண்ணீரில் நீந்தி சிப்பியை தேடி எடுக்கலாம் என்றால் அது முடியாது போலிருக்குதே என்று கவலைப்பட்டார்.

அப்படியே அசதியில் அருகே இருந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து உறங்கிவிட்டார். காலையில் பறவைகளின் சப்தம் கேட்டு விழித்தெழுந்தார். மாலைக்குள் மந்திரவாதியின் உயிர் ரகசியத்தத கண்டுபிடிக்க வேண்டுமே என்று யோசித்து அண்ணாந்து பார்த்தார், ஆலமரத்தில் நிறைய பறவைகள் கூடு கட்டியிருந்தன, அப்படியே வேடிக்கை பார்த்தவருக்கு மின்னல் அடித்தது போல் பரவசம் ஆனார்.

ஆலமரத்தின் விழுதுகளை கண்டவருக்கு மந்திரவாதி சொன்ன “காட்டுக்குள் கயிறு விடுகிறான்” புதிருக்கான விடை ஆலமரத்தின் விழுதுகள் என்பதை புரிந்து கொண்டார்.

மந்திரவாதியின் உயிர் கட்டாயம் சுனை நீரில் தான் இருக்க வேண்டும், அதுக்கு ஆலமரத்தின் விழுது உதவி செய்யும் என்பதை வைத்து சுனையை நன்றாக ஆராய்ந்தார், சுனையின் நடுவில் நிறைய வெள்ளை தாமரை பூக்கள் பூத்திருந்தன.

மேலும் ஒன்றுமே புலப்படாமல் வழக்கம் போல் கண்களை மூடிக் கொண்டு தன் இஷ்ட தெய்வமான முருகனை வேண்டிக் கொண்டு கண்ணை திறக்க, என்ன ஆச்சரியம் தாமரை பூக்களில் ஒரு பூ மட்டும் சிவப்பாக மாறியது, அதன் நடுவில் ஏதோ ஒன்று பளீச்சென்று சூரிய ஒளியில் பலபலத்தது. “சிப்பிக்குள் இருப்பது முத்தல்ல” என்ற புதிருக்கான விடை தாமரை பூவில் இருப்பது மந்திரவாதியின் உயிர் என்பதை அறிந்து கொண்டார். சிவப்பு தாமரையானது குறிப்பிட்ட நேரம் மட்டுமே நீரின் மேல் இருந்தது, அது மீண்டும் நீரில் மறையவும் அதன் விஷமுள்ள மீன்கள் பாய்ந்து செல்வதுமாக இருந்தது. மந்திரவாதி யாரும் தாமரைப்பூவினை பறிக்காமல் இருக்க அவ்வாறு பாதுக்காப்பு ஏற்பாடு செய்திருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டார். ஆலமரத்தின் ஒரு கிளையானது தாமரைப்பூவின் மேலே சற்று உயரத்தில் இருப்பதையும் பார்த்து கொண்டார்.

வேக வேகமாக ஆலமரத்தின் விழுதுகளை வெட்டி கயிறாக தயாரித்தார். நேராக ஆலமரத்தின் மேல் ஏறினார், அங்கே இருந்த பாம்புகளை எல்லாம் வெட்டி தள்ளிவிட்டு நேராக தாமரைப்பூ வரும் இடத்திற்கு நகர்ந்து சென்றார், பின்னர் கிளையின் கயிற்றை கட்டு, மறுமுனையை தன் காலில் கட்டிக் கொண்டார். பின்னர் கயிற்றை நன்றாக முறுக்கிக் கொள்ளும் அளவும் இடமிருந்து வலமாக சுற்றினார், ரொம்ப நேரம் கணக்கு போட்டார், நேரமும் ஆகி வருகிறது, ஒருவழியாக முடிவுக்கு வந்தவர் இறைவனை வேண்டிக் கொண்டு, தன் உயிரை பணயம் வைத்து, தாமரைப்பூ மேலே வரும் நேரம் பார்த்து கிழே குதித்தார், அவர் கட்டியிருந்த கயிறு முறுக்கி போயிருந்ததால் வலமிருந்து இடமாக சுற்றிக் கொண்டே கிழே இறங்கினார், ஒரு கையில் பிடித்த வாளை கொண்டு தன்னை கடிக்க பாய்ந்த மீன்களையும் பாம்புகளையும் மின்னல் வேகத்தில் வெட்டினார், அப்படியே கிழே பாய்ந்தவர் சரியாக தாமரைப்பூவினை மறுகையால் பிடித்து பிடுங்க, இராமநாதனின் உடல் பாரத்தால் கிழே வளைந்த கிளையானது வேகமாக மேலே நகர இராமநாதனும் மேலே சென்றார்.

அய்யோ! என்ன கொடுமை, மேலே வரும் போது பாய்ந்த மீனானது பூவை பிடுங்கிக் கொண்டு நீரில் பாய, கடைசி நேரத்தில் பூவை பிடிக்க முயற்சித்து தோற்றுப் போய், மேலே மரக்கிளையினை பிடித்து ஏறிக் கொண்டார்.

இராமநாதனுக்கு சரியான ஏமாற்றம், கடைசி முயற்சியும் இப்படி கைவிட்டு போயிட்டதே, இனிமேல் எப்படி பூவை எடுத்து மந்திரவாதியை கொல்வது என்று கவலைப்பட, இடது கையில் தாமரைப் பூவின் இதழ்களோடு ஏதோ ஒன்று உறுத்ததை உணர்ந்தார், என்ன ஆச்சரியம் அவரது கை விரல்களின் நடுவில் ஒரு வெள்ளியினான வண்டு ஒன்று இருந்தது, ஆகா இது தானா மந்திரவாதியின் உயிர் இருக்கும் வெள்ளி வண்டு.

வெள்ளி வண்டை பையில் பத்திரப்படுத்திக் கொண்டு வேகமாக மரத்தை விட்டு இறங்கிய இராமநாதன், மாலை நேரம் நெருங்குவதை உணர்ந்து தன் குதிரையை அழைத்தார்.

மந்திரவாதியின் மாளிகையை நெருங்கிய பின்னர் டிராகன்களை ஏமாற்ற மீண்டும் குதிரையின் உதவியை நாடினார், இந்த முறை குதிரையின் புத்திசாலித்தனத்தால் இரண்டு டிராகன்களும் ஒன்றை ஒன்றை எரிக்க, அவை சாம்பலானது.

உள்ளே சென்ற இராமநாதன், அங்கே மந்திரவாதி பெரிய யாகத்தையும் நடத்திக் கொண்டு இளவரசிகளின் பெற்றோரை மிரட்டி, இராமநாதனையும் காணவில்லை, விதி விட்ட வழி என்ற நிலைக்கு வந்த பெற்றோர் மந்திரவாதியின் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.

மந்திரவாதி மகிழ்ச்சியோடு காந்தார தேச இளவரசியின் கழுத்தை மாலைப் போட போக, அங்கே அதிரடியாக நுழைந்த இராமநாதன் “கொடியவனே! நிறுத்து உன் காரியத்தை, இல்லையேல் உன்னை கொன்று விடுவென்.

இராமநாதனின் வருகையை கண்ட அனைவரும் மகிழ்ச்சியில் திழைத்தார்கள், மந்திரவாதியை தவிர. திடிரென்று ஒருவன் நுழைந்து தன்னை தடுத்து, தன் உயிரை எடுப்பதாக சொன்னதை கேட்டதும் மந்திரவாதிக்கு ஆத்திரம் வந்தது, யாருடா நீ சிறுவன், உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மந்திரம் சொல்ல கையை தூக்கினான், அதே வேகத்தில் இராமநாதன் அந்த வெள்ளி வண்டை தன் வாளின் கைப்பிடியால் தரையில் வைத்து நசுக்க, மந்திரவாதி அய்யோ என்று கத்திக் கொண்டு இரத்தம் வாந்தியெடுத்து செத்தான்.

மூன்று அரசர்களும் தங்கள் சுய உருவத்தை அடைந்தார்கள், நாட்டு மக்களும் சுய உருவத்தை அடைந்து மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள். ஏற்கனவே மந்திரவாதி பிடித்து வைத்திருந்த பல தேசத்து இளவரசர்களையும், வீரர்களையும் விடுவித்தார் இராமநாதன்.

மூன்று தேச அரசர்களும் இராமநாதனை தன் மருமகனாக்கிக் கொள்ள விரும்பினார்கள், இராமநாதனோ அதற்கு மறுப்பு தெரிவித்து பட்டு தேச, காந்தார தேச பிரச்சனையை தீர்க்க பட்டு தேச இளவரசியை காந்தார தேச இளவரசனுக்கும், காந்தார இளவரசியை பட்டு தேச இளவரசனுக்கும் திருமணம் செய்து வைத்தார்.

பனிப்பட தேச இளவரசியோ மணந்தால் இராமநாதன் தான் என்ற முடிவுக்கு வர, இளவரசியின் வீரமும் அறிவும் இராமநாதனுக்கு பிடித்துப் போக சம்மதித்தார். ஆனால் பெற்றோரின் சம்மதம் வாங்கியப்பின்னரே திருமணம் செய்ய முடியும் என்று கூறி, இளவரசியுடன் பறக்கும் தங்கக்குதிரையில் ஏறி தன் வீட்டை நோக்கி பறந்தார்.

சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:43

புத்தி பலம்
-----------
புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால், பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை மிஞ்ச யாராலும் முடியாது.

இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல் வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.

"தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம்? மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்!'' என்று சொல்லிச் சிரிப்பான்.

அதற்கு அந்த மூவரும், "இளங்கோ! உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்... நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும்!'' என்று சொல்லி சிரிப்பர்.

இப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.

ஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.

வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.

அப்பொழுது—
எதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

"விடுவிடு'வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.

அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.

"எனதருமை நண்பர்களே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி!'' என்றான் இளங்கோ.

"என்ன போட்டி நோஞ்சான்?'' என்று கேட்டனர்.

"உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!'' என்றான் இளங்கோ.

அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் "ஹா... ஹா... ஹா...!'' என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.

"நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டியா? வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்!'' என்றனர் அவர்கள்.

"இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும் பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால் என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம் போடுகிறீர்கள்!'' என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.

"சுண்டைக்காய் பயலே! எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம் கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்!'' என்று சொல்லிவிட்டு கயிற்றின் ஒரு முனையைப் பிடித்தனர்.

இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.

"ம்! இழுக்கலாம்!'' என்று கத்தினான்.

அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை.

திடீரென்று "இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ' என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.

மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.

எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.

வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.

இளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. "இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது இவ்வளவு பலம்' என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.

கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.

அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.

மூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த இளங்கோ, ""மூளை பலம் என்பது இது தான்,'' என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான்.

 சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:45

பூதம் சொன்ன கதை
-----
முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.

கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.

அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,'' எனக் கூறினான்.

"போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,'' எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.

அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.

பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே...'' என எண்ணி மனம் புழுங்கினான்.

அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.

அதைக் கண்டு திகைத்தான் அமுதன். "இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?'' என எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அப்போது, "அமுதா... நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.

"அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்...'' என்று சொல்லி மறைந்தது.

அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநுõறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.

சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:46

நல்ல நண்பன் கதை
----

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,

இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.

இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.

என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. 

என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,

என்னை மன்னித்து விடு, நான் உன்னில் ஏதாவது வடுவை உன்டாக்கி இருந்தால்.

சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:47

பசித்தவன் விசுவாசத்தை நம்பலாமா?
-----
கிணறு ஒன்றில் கங்காதத்தன் என்ற கிழத்தவளை ஒன்று வசித்து வந்தது. இந்தத் தவளையை அங்கிருந்த மற்ற தவளைகள் அடிக்கடி தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தது.

மற்ற தவளைகள் கொடுத்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத கிழத்தவளை இராட்டினத் தோண்டி வழியே வெளியே வந்து மற்ற தவளைகளை என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்தக் கிணற்றுக்கு அருகிலிருந்த பாம்புப் புற்று அதன் கண்ணில் பட்டது.

"நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் தவளைகளை இந்தப் புற்றிலிருக்கும் பாம்பின் உதவியோடு கொன்று விட்டால் என்ன?" என்கிற எண்ணம் வந்தது.

மெதுவாகப் பாம்புப் புற்றின் அருகில் சென்று பாம்பை நட்புக்கு அழைத்தது.

"உங்களுடைய பரம எதிரியான என்னுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவது ஏன்?" என்று கேட்டது அந்த பாம்பு.

"என்னுடன் இருக்கும் சில தவளைகள் என்னை தினந்தோறும் துன்புறுத்தி வருகின்றன. என்னால் பொறுக்க முடியவில்லை. அவற்றை அழிக்கத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன். வேண்டாதவர்களை எதிரியைக் கொண்டே அழிக்கலாம் என்று நீதி நூலில் கூட சொல்லியிருக்கிறது" என்றது அந்த கிழத்தவளை.

"என்னால் எப்படி உன் இடத்திற்கு வரமுடியும்?"

"நான் வரும் இராட்டினத்தின் வழியாக உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன்" என்றது தவளை.

பாம்பும் யோசித்தது.

நாமோ தினமும் உணவிற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது இப்படி வலிய வந்து உணவிற்கு வழி செய்யும் தவளையின் கோரிக்கையை நாம் ஏன் மறுக்க வேண்டும்? என்று நினைத்தபடி தவளையுடன் அந்த கிணற்றுக்குள் சென்றது.

அந்த பாம்பும் கிணற்றுக்குள் அந்த கிழத்தவளைக்குத் தொல்லை கொடுத்து வந்த தவளைகளை எல்லாம் தின்று அழித்தது. கிழத்தவளையும் மகிழ்ச்சியுற்றது.

ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை.

பாம்பு கிழத் தவளையைப் பார்த்து, "உன்னுடைய எதிரிகள் எல்லாம் அழிந்து விட்டபடியால் என் பசிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்." என்றது

கிழத்தவளையோ, "நண்பரே நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது . உங்கள் உதவிக்கு நன்றி. எனக்கு இனி உங்கள் உதவி தேவையில்லை." என்றது.

ஆனால் பாம்போ கோபத்துடன், "உன்னை நம்பித்தான் நான் இங்கு வந்தேன். இப்போது என்னுடைய இடத்தில் வேறு ஏதாவது வந்து குடியேறியிருக்கும். தினந்தோறும் எனக்கு நீயே ஒரு தவளையை உணவாகக் கொடுக்க வேண்டும். இல்லையேல் உன் கூட்டத்தில் இருப்பவர்களை நான் என் விருப்பப்படி பிடித்துத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்வேன்." என்று அச்சுறுத்தியது.

கிழத்தவளையும் பயந்து போய் தினந்தோறும் ஒரு தவளையை பாம்புக்குக் கொடுத்து வந்தது. கடைசியில் ஒருநாள் அது கிழத்தவளையின் மகனையும் தின்று தீர்த்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற கிழத்தவளையின் மனைவி, "நீங்கள் இந்தக் கொடியவனைக் கொண்டு வந்து நம் குழந்தையை மட்டுமில்லை, குலத்தையே அழித்து விட்டீர்கள். இனி நாமிருவர் மட்டும்தான் பாக்கி. நாமும் அழிந்து விடுவதற்கு முன்பு ஏதாவது சூழ்ச்சி செய்து அந்த பாம்பைக் கொன்று விடுங்கள் அல்லது நாமிருவரும் இங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவோம்." என்று எச்சரித்தது.

அந்த சமயத்தில் அங்கு வந்த பாம்பு தனக்குப் பசியாக இருப்பதால் "ஏதாவது கொடு" என்று கேட்டது.

உடனே கிழத்தவளையும், "நண்பரே நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இப்போதே என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்து தவளைகளை இங்கே அழைத்து வரச் சொல்கிறேன்." என்று மனைவியை அங்கிருந்து போகச் செய்தது.

சில நமிடங்கள் கழிந்த பின்பு, "நீ எவ்வளவு நேரம்தான் பசியைப் பொறுத்துக் கொண்டிருப்பாய்? நானே வேகமாய்ப் போய்த் தவளைகளை அழைத்து வருகிறேன்" என்றபடி இராட்டினத்தின் வழியே அக்கிணற்றை விட்டு வெளியேறியது.

தன் பசிக்கு உணவு கொண்டு வரச் சென்ற கிழட்டுத்தவளையும் அதனுடைய மனைவியும் ஒரு நாளாகியும் வராமலிருக்கவே பாம்பு ஏமாற்றமடைந்தது.

கிணற்றுச் சுவற்றிலிருந்த ஒரு பல்லியைப் பார்த்த அந்த பாம்பு, "பல்லியாரே, அந்தக் கிழட்டுத் தவளைக்கு நீயும் நண்பன்தானே, நீ அந்தத் தவளையிடம் சென்று, நான் அந்தத் தவளைக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று நான் உறுதியளித்ததாகச் சொல்லி பயப்படாமல் வரச் சொல்" என்று தகவல் சொல்லி அனுப்பியது.

பல்லியும் அந்தக் கிழட்டுத்தவளையைத் தேடிச் சென்று பாம்பு சொன்ன செய்தியைச் சொல்லியது.

அதற்கு அந்தக் கிழட்டுத்தவளை "பசித்தவன் விசுவாசம் நம்ப முடியாதது. அந்தக் கொடியவனிடம் நட்பு வைத்து என் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து விட்டேன். நான் இனி அங்கு வர மாட்டேன்." என்று சொல்லி அனுப்பியது.

இப்படித்தான் நாம் நம்முடைய சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தீயவர்களோடு நட்பு கொண்டால் அந்தத் தீயவர்கள் நம்மையும் சேர்த்து அழித்து விடுவார்கள்.

நட்பு கூட நல்லவர்களோடுதான் இருக்க வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்குத்தான்.


படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் 

சிறுவர் கதைகள் |
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:50

கை மேல் பலன் கிடைத்தது !
-----
அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!

சிறுவர் கதைகள் | Added by: இணையத்தமிழ்உலகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:51

ஆப்பிள் அழகி!
-------

சுந்தரபுரம் என்ற நாட்டை அனந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஐந்து மகன்கள். அவர்களுள் நான்கு பேருக்கு திருமணம் முடிந்தது. ஐந்தாவது இளவரசன் அறிவு, வீரம், அழகு எல்லாவற்றிலும் மிகவும் சிறந்து விளங்கினான். அதனால் அரசருக்கு அவன் மேல் விருப்பம் அதிகம். எங்கே அந்த மகனிடம் அரச பதவியை கொடுத்துவிடுவாரோ என பயந்தனர் மற்றவர்கள். இதனால் அவன் மீது பொறாமைக் கொண்ட அண்ணிகள், "ஆப்பிள் அழகி என்ற உலகிலேயே சிறந்த அழகி ஒருத்தி உண்டு. அவளை நீ மணந்து வா!'' என்று சொல்லி ஏத்தி விட்டனர்.
"அவள் எங்கே இருக்கிறாள்?'' என்று கேட்டான் இளவரசன். "அதான் யாருக்குமே தெரியாதே!'' என்றனர் அண்ணிகள். "நான் அவளை திருமணம் செய்துக் கொண்டு தான் இங்கே வருவேன்,'' என்று சொன்னான் இளவரசன். அண்ணிகளோ, "நீ அவளை திருமணம் செய்து கொண்டு வந்தால் நாங்கள் உனது அடிமைகள்!'' என்று கூறினர்.

அதைக் கேட்ட இளவரசன் தன் வாளுடன் காட்டை நோக்கி நடந்தான். அப்போதுதான் அவன் எப்படியாவது ஒழிந்து போவான்... என நினைத்தனர். அரசரும் "உலகிலேயே யாரும் அடைய முடியாத ஆப்பிள் அழகியை மணந்து வந்தால் இந்த நாட்டுக்கு நீதான் அரசன்,' என்றார். காரணம்! ஆப்பிள் அழகி சிரித்தாலோ வைரக் கற்கள் கொட்டும். அவற்றை கொண்டு நாட்டை செழிப்பாக்கி விடலாம் என நினைத்தார் அரசர்.

அண்ணிகளோ, "இளவரசனால் ஆப்பிள் அழகியை பார்க்கவே முடியாது. ஏனெனில், அவள் எங்கே இருக்கிறாள் என்று யாருக்குமே தெரியாது! இதோடு இவன் ஒழிந்தான்!' என்று நினைத்தனர். இளவரசன் காட்டின் நடுவில் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது களைப்பாக இருந்ததால் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்தான். அந்த மரத்தில் ஒரு பருந்து கூடு கட்டி வைத்திருந்தது. அது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அது இரை தேட செல்லும் பொழுது ஒரு நாகம் தினமும் அது இடும் முட்டைகளை குடித்துவிட்டுச் செல்லும். அன்று பருந்தின் குஞ்சுகள் நான்கை கொல்லப் போனது. குஞ்சுகள் கத்துவது இளவரசன் காதில் விழுந்தது; கோபம் வந்தது. உடனே குஞ்சுகளை கொல்வதற்கு தன் வாளுடன் மேலே பார்த்தான். அங்கே பாம்பு, குஞ்சுகளை கொல்லப் போவதைப் பார்த்தான். உடனே பாம்பை கொன்று குஞ்சுகளை காப்பாற்றினான். அதைப் பார்த்து பருந்துகளின் குஞ்சுகள் மிகுந்த சந்தோஷம் அடைந்தன.

"அண்ணே நீங்கள் யார்?'' என்று கேட்டன பருந்து குஞ்சுகள். இதைக் கேட்டதும் இளவரசன் அசந்துப் போனான். ஆப்பிள் அழகியை திருமணம் செய்யச் செல்வதாக கூறினான் இளவரசன். இதைக் கேட்ட பருந்து குஞ்சுகள், ""நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. எங்கள் அம்மா, அப்பாவால் தான் முடியும். நாங்கள் சொல்லி உதவி செய்கிறோம். நீங்கள் அந்த செடிகளில் ஒன்பதாவது செடியின் பின் சென்று ஒளிந்து கொள்ளுங்கள். நாங்கள் சொன்னால் மட்டுமே நீங்கள் வெளியே வர வேண்டும். எங்கள் அம்மா, அப்பாவிற்கு கோபம் வந்தால் உங்களையும் கொன்றுவிடுவர். அதனால்தான் சொல்லுகிறோம்,'' என்றன.

அதைக் கேட்ட இளவரசன் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று ஒளிந்துக் கொண்டான். பருந்துகள் கூட்டிற்கு வந்தன. தன் குஞ்சுகள் உயிரோடு இருப்பதையும், முட்டைகள் உடைந்து கிடப்பதையும், பாம்பு துண்டு, துண்டாக கிடப்பதையும் பார்த்து பருந்து இரண்டும் சந்தோஷத்துடன் தன் குஞ்சுகளிடம் கேட்டன.

உடனே ஒரு குஞ்சு நடந்ததை சொன்னது. ""அவன் எங்கே இருக்கிறான்?'' என்று கேட்டன.

"அம்மா நீங்கள் எங்களுக்கு பிராமிஸ் பண்ணுங்க. எங்கள் உயிரை காப்பாற்றியவருக்கு ஒரு உதவி செய்வோம் என வாக்குறுதி கொடுத்தால் நாங்கள் அவரை உங்களுக்கு காண்பிப்போம்,'' என்றன.

"சரி!'' என சொல்யதும். குஞ்சுகள் உடனே, ""அண்ணா இங்கே வாருங்கள்!'' என அழைத்தன. அதுவரை நடந்தவற்றை பொருமையாக பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் வெளியே வந்து பருந்துகளை வணங்கினான்.

"உனக்கு என்ன வேண்டும் சொல்!'' என்றன. உடனே இளவரசன் அரண்மனையில் நடந்தவற்றை கூறினான். உடனே கழுகுகள் அந்த ஆப்பிள் கன்னி ஏழு மலைகளைத் தாண்டிச் சென்றால் அழகிய தங்க ஆப்பிள் தோட்டம் வரும். அதன் நடுவில் ஒரு மரம் இருக்கும். அதில் இறக்கிவிடுவேன். அந்த மரத்தை மூன்று சுற்று சுற்ற வேண்டும். முதல் சுற்றில் ஒரு கனியை பார்க்க வேண்டும், இண்டாம் சுற்று சுற்றும் பொழுது ஒரு கனியை பார்க்க வேண்டும். மூன்றாம் சுற்று சுற்றும் பொழுது ஒரு கனியை பறிக்க வேண்டும். அந்தக் கனியை அரண்மனைக்கு எடுத்து சென்று பிய்த்து பார்த்தால் அதில் ஆப்பிள் கன்னி இருப்பாள்.

"அந்த ஆப்பிளை பறிக்கும் போது அந்த தோட்டத்தின் உரிமையாளன் கொம்பேரி பாம்பு முகத்தையுடைய பாம்பு ராட்சஷன் உன்னை கொத்த வருவான். நீ இந்த நாகக்கல்லை அவன் மீது தூக்கி எறிந்தவுடனே அவன் இறந்து போவான்,'' என்றது.

இதைக் கேட்ட இளவரசன் சரி என்றான். இளவரசன் அந்த மரத்தை பார்த்து விட்டு சுற்றத் தொடங்கினான். முதல் சுற்றில் ஒரு கனியை பார்த்தான். இரண்டாம் சுற்றில் பருந்து சொன்னது போல் பாம்பு முகத்தைக் கொண்ட ராட்சஷன் ஓடி வந்தான். நாகக்கல்லை அவன் மீது தூக்கி எறிந்தான். ராட்சஷன் "ஆ' என அலறியபடியே மடிந்து போனான். மூன்றாம் முறை மரத்தை சுற்றியதும் தங்க நிற ஆப்பிள் ஒன்று அவன் கையில் வந்து விழுந்தது. உடனே பருந்து அவனை தன் முதுகில் ஏற்றி வந்து அவனது நாட்டில் விட்டது.

மறுநாள் அரசனை வணங்கிய இளவரசன் அந்த தங்க ஆப்பிளை காண்பித்தான். அதன் அழகில் மயங்கினர். அதன் அழகில் மயங்கிய அண்ணிகள், "அது எனக்கு வேண்டும்!' என கெஞ்சினர். ஆனால், இளவரசனோ ஆப்பிளை இரண்டாகப் பிளந்தான். அதிலிருந்து தங்கச்சிலை போல் ஆப்பிள் அழகி வெளியே வந்தாள். அவள் அரசனை வணங்கி இளவரசனின் கரத்தைப் பிடித்தாள். அப்படியே அதிர்ந்தனர் அனைவரும். கலகலவென சிரித்தாள்.

வைரங்கள் கொட்டின, அசந்து போன அண்ணிகளும், அண்ணன்களும் தன் தம்பிக்கு கிடைத்த ஆப்பிள் அழகியை எண்ணி பொறாமைக் கொண்டனர். அரசன் தன் மகனுக்கு முடிசூட்டி ஆப்பிள் அழகியை அரசியாக்கி மகிழ்ந்தான். பிறகு இருவரும் சிறப்பாக நாட்டை ஆண்டனர்.

 சிறுவர் கதைகள் | Added by: kamal
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 8 Oct 2015 - 12:53

பசித்தவன் விசுவாசத்தை நம்பலாமா?
-----
கிணறு ஒன்றில் கங்காதத்தன் என்ற கிழத்தவளை ஒன்று வசித்து வந்தது. இந்தத் தவளையை அங்கிருந்த மற்ற தவளைகள் அடிக்கடி தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தது.

மற்ற தவளைகள் கொடுத்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத கிழத்தவளை இராட்டினத் தோண்டி வழியே வெளியே வந்து மற்ற தவளைகளை என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்தக் கிணற்றுக்கு அருகிலிருந்த பாம்புப் புற்று அதன் கண்ணில் பட்டது.

"நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் தவளைகளை இந்தப் புற்றிலிருக்கும் பாம்பின் உதவியோடு கொன்று விட்டால் என்ன?" என்கிற எண்ணம் வந்தது.

மெதுவாகப் பாம்புப் புற்றின் அருகில் சென்று பாம்பை நட்புக்கு அழைத்தது.

"உங்களுடைய பரம எதிரியான என்னுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவது ஏன்?" என்று கேட்டது அந்த பாம்பு.

"என்னுடன் இருக்கும் சில தவளைகள் என்னை தினந்தோறும் துன்புறுத்தி வருகின்றன. என்னால் பொறுக்க முடியவில்லை. அவற்றை அழிக்கத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன். வேண்டாதவர்களை எதிரியைக் கொண்டே அழிக்கலாம் என்று நீதி நூலில் கூட சொல்லியிருக்கிறது" என்றது அந்த கிழத்தவளை.

"என்னால் எப்படி உன் இடத்திற்கு வரமுடியும்?"

"நான் வரும் இராட்டினத்தின் வழியாக உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன்" என்றது தவளை.

பாம்பும் யோசித்தது.

நாமோ தினமும் உணவிற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது இப்படி வலிய வந்து உணவிற்கு வழி செய்யும் தவளையின் கோரிக்கையை நாம் ஏன் மறுக்க வேண்டும்? என்று நினைத்தபடி தவளையுடன் அந்த கிணற்றுக்குள் சென்றது.

அந்த பாம்பும் கிணற்றுக்குள் அந்த கிழத்தவளைக்குத் தொல்லை கொடுத்து வந்த தவளைகளை எல்லாம் தின்று அழித்தது. கிழத்தவளையும் மகிழ்ச்சியுற்றது.

ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை.

பாம்பு கிழத் தவளையைப் பார்த்து, "உன்னுடைய எதிரிகள் எல்லாம் அழிந்து விட்டபடியால் என் பசிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்." என்றது

கிழத்தவளையோ, "நண்பரே நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது . உங்கள் உதவிக்கு நன்றி. எனக்கு இனி உங்கள் உதவி தேவையில்லை." என்றது.

ஆனால் பாம்போ கோபத்துடன், "உன்னை நம்பித்தான் நான் இங்கு வந்தேன். இப்போது என்னுடைய இடத்தில் வேறு ஏதாவது வந்து குடியேறியிருக்கும். தினந்தோறும் எனக்கு நீயே ஒரு தவளையை உணவாகக் கொடுக்க வேண்டும். இல்லையேல் உன் கூட்டத்தில் இருப்பவர்களை நான் என் விருப்பப்படி பிடித்துத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்வேன்." என்று அச்சுறுத்தியது.

கிழத்தவளையும் பயந்து போய் தினந்தோறும் ஒரு தவளையை பாம்புக்குக் கொடுத்து வந்தது. கடைசியில் ஒருநாள் அது கிழத்தவளையின் மகனையும் தின்று தீர்த்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற கிழத்தவளையின் மனைவி, "நீங்கள் இந்தக் கொடியவனைக் கொண்டு வந்து நம் குழந்தையை மட்டுமில்லை, குலத்தையே அழித்து விட்டீர்கள். இனி நாமிருவர் மட்டும்தான் பாக்கி. நாமும் அழிந்து விடுவதற்கு முன்பு ஏதாவது சூழ்ச்சி செய்து அந்த பாம்பைக் கொன்று விடுங்கள் அல்லது நாமிருவரும் இங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவோம்." என்று எச்சரித்தது.

அந்த சமயத்தில் அங்கு வந்த பாம்பு தனக்குப் பசியாக இருப்பதால் "ஏதாவது கொடு" என்று கேட்டது.

உடனே கிழத்தவளையும், "நண்பரே நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இப்போதே என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்து தவளைகளை இங்கே அழைத்து வரச் சொல்கிறேன்." என்று மனைவியை அங்கிருந்து போகச் செய்தது.

சில நமிடங்கள் கழிந்த பின்பு, "நீ எவ்வளவு நேரம்தான் பசியைப் பொறுத்துக் கொண்டிருப்பாய்? நானே வேகமாய்ப் போய்த் தவளைகளை அழைத்து வருகிறேன்" என்றபடி இராட்டினத்தின் வழியே அக்கிணற்றை விட்டு வெளியேறியது.

தன் பசிக்கு உணவு கொண்டு வரச் சென்ற கிழட்டுத்தவளையும் அதனுடைய மனைவியும் ஒரு நாளாகியும் வராமலிருக்கவே பாம்பு ஏமாற்றமடைந்தது.

கிணற்றுச் சுவற்றிலிருந்த ஒரு பல்லியைப் பார்த்த அந்த பாம்பு, "பல்லியாரே, அந்தக் கிழட்டுத் தவளைக்கு நீயும் நண்பன்தானே, நீ அந்தத் தவளையிடம் சென்று, நான் அந்தத் தவளைக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று நான் உறுதியளித்ததாகச் சொல்லி பயப்படாமல் வரச் சொல்" என்று தகவல் சொல்லி அனுப்பியது.

பல்லியும் அந்தக் கிழட்டுத்தவளையைத் தேடிச் சென்று பாம்பு சொன்ன செய்தியைச் சொல்லியது.

அதற்கு அந்தக் கிழட்டுத்தவளை "பசித்தவன் விசுவாசம் நம்ப முடியாதது. அந்தக் கொடியவனிடம் நட்பு வைத்து என் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து விட்டேன். நான் இனி அங்கு வர மாட்டேன்." என்று சொல்லி அனுப்பியது.

இப்படித்தான் நாம் நம்முடைய சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தீயவர்களோடு நட்பு கொண்டால் அந்தத் தீயவர்கள் நம்மையும் சேர்த்து அழித்து விடுவார்கள்.

நட்பு கூட நல்லவர்களோடுதான் இருக்க வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்குத்தான்.


படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் 

 சிறுவர் கதைகள் | Added by: linoj
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறுவர் கதைகள் Empty Re: படித்த சிறுவர் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum