Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்
First topic message reminder :
பேராசைக்காரன்!
ராகேஷும், யோகேஷும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், இருவருமே குணத்தால் வேறு பட்டவர்கள். ராகேஷ் பேராசைக்காரன். யோகேஷ் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவான்.
ஒரு நாள் இருவரும் பள்ளியை விட்டு வரும் போது ஒரு மரத்தடியில் வியாபாரி ஒருவன் குல்லாய் விற்றுக் கொண்டிருந்தான். ""ஒரு மூக்கு கண்ணாடி வாங்கினால் ஒரு குல்லாய் இனாம்,'' என அவன் கூவி விற்றுக் கொண்டிருந்தான். ராகேஷ் அவனிடம் போய், ""எனக்கு இரண்டு குல்லாய்கள் இலவசமாகத் தருவதானால் சொல் ஒரு மூக்கு கண்ணாடி வாங்குகிறேன்,'' என்றான்.
""பாவம்டா! அவனோ வியாபாரம் சரிவர நடைபெறவில்லை என்பதால் இலவசமாக ஒரு குல்லாயைக் கொடுக்கிறான். அதிகமாகக் கேட்டு அவனுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தாதே,'' என்று ராகேஷுக்கு உபதேசம் செய்தான் யோகேஷ். ஆனால், அவனோ ""நீ சும்மா இரு. கிடைத்தவரை லாபம்,'' என்றான். அந்த வியாபாரியும் வேறு வழி இல்லாமல் இரண்டு குல்லாய்களை இலவசமாகக் கொடுத்து ஒரு மூக்கு கண்ணாடியை அவனுக்கு விற்றான்.
யோகேஷ் ""எனக்கு இலவச குல்லாய் வேண்டாம்,'' என்று கூறி தனக்கொரு மூக்கு கண்ணாடி மட்டும் வாங்கிக் கொண்டு வியாபாரியின் நஷ்டத்தை ஈடு கட்டினான். ராகேஷ் கண்ணாடியை அணிந்து கொண்டு குல்லாயை தன் தலையில் மாட்டிக் கொண்டான். யோகேஷ் குல்லாயை மட்டும் போட்டுக் கொண்டான். இருவரும் ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தனர். ராகேஷ் யோகேஷை வற்புறுத்தி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றான். ஆளுக்கொரு பூரி செட் கொண்டு வரச் சொல்லி சப்ளையரிடம் ஆர்டர் கொடுத்தனர். சுடச் சுட பூரி வந்தது. இருவரும் சாப்பிட்டனர். யோகேஷ் சற்று வசதியான வீட்டுப்பிள்ளை என்பதால் எப்பொழுதும் கையில் காசு வைத்திருப்பான் என்கிற நம்பிக்கையில் ராகேஷ் அவனை அழைத்திருக்கிறான். பில் கொண்டு வந்து கொடுத்ததும் அந்த பில்லை யோகேஷிடம் நீட்டினான் ராகேஷ்.
அதிர்ச்சியடைந்த யோகேஷ், ""என்னடா இது. நீ அழைத்தாய் என்றுதான் ஓட்டலுக்குள் நுழைந்தேன். உன்னிடம் காசே இல்லையா? நான் இன்றைக்கு என் பர்சை மறந்து வீட்டிலேயே வைத்து வந்துவிட்டேன் என்ன செய்வது?'' என்றான்.
""என்னிடம் ஏதுடா காசு இருந்த காசுக்குதான் மூக்கு கண்ணாடி வாங்கி விட்டோமே, உன்னை நம்பி மோசம் போனேன். இப்போ என்ன செய்யலாம்?'' என்றபடியே கையை பிசைந்தான்.
இருவரும் பேசிக் கொண்டதிலிருந்து, அவர்களிடம் காசு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு சப்ளையர் அவர்களைக் கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்த முதலாளியிடம் அழைத்துச் சென்றான். அப்போது அவர்களை யாரோ, ""தம்பிகளா!'' என அழைத்தது காதில் விழ திரும்பிப் பார்த்தனர்
அங்கே—
சற்று நேரத்திற்கு முன்பு அவர்களுக்கு கண்ணாடி விற்றானே அதே வியாபாரி.
""தம்பிகளா என்ன நடந்தது? சற்று நேரத்திற்கு முன்புதானே என்னிடம் சந்தோஷமாக கண்ணாடி வாங்கினீர்கள். நீ கேட்டாய் என்று நான் கூட ஒரு குல்லாயை அதிகமாக உனக்குக் கொடுத்தேனே அது தொலைந்து விட்டதா? வேறொன்று தரட்டுமா?'' என்று வியாபாரி ஆர்வத்தோடு கேட்டார்.
இருவரும் அவரிடம் நடந்ததைச் சொல்லலாமா வேண்டாமா என முதலில் தயங்கினர். யோகேஷ் தைரியமாக நடந்ததைச் சொன்னான். உடனே அந்த வியாபாரி, ""உங்களுடைய பில் தொகையை நான் கொடுத்து விடுகிறேன். எவ்வளவு?'' என்றார்.
""நாற்பது ரூபாய் ஐம்பது காசு,'' என்றான் யோகேஷ்.
""அடடே நீங்கள் என்னிடம் மூக்கு கண்ணாடிக்கு கொடுத்த காசுதான் அது. அதை உங்களிடமே திருப்பித் தந்து விடுகிறேன். பில் தொகையை நீங்களே கல்லாவில் கொடுத்துவிடுங்கள். நான் மூக்கு கண்ணாடியை உங்களுக்கு என்னுடைய அன்பளிப்பாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்கிறேன்,'' என்றபடியே நாற்பது ரூபாய் ஐம்பது பைசாவை அவர்களிடம் கொடுத்தான்.
உடனே ராகேஷ் அந்த வியாபாரியைக் கூப்பிட்டு வணங்கி,""என்னை மன்னிக்க வேண்டும். என்னுடைய பேராசையால் உங்களிடம் இரண்டு குல்லாய் கேட்டுப் பெற்றேன். தேவை ஒன்றுதான் என்றாலும் அதிக ஆசைப்பட்டேன். அதன் பலன்தான் இந்த தண்டனை. இனிமேல் பேராசைக் கொள்ளமாட்டேன்,'' என்றான். யோகேஷுக்கு ராகேஷ் திருந்தியதில் சந்தோஷம். இருவரும் மறுநாள் அந்த வியாபாரியிடம் பணத்தை திருப்பி அளித்தனர்.
பேராசைக்காரன்!
ராகேஷும், யோகேஷும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், இருவருமே குணத்தால் வேறு பட்டவர்கள். ராகேஷ் பேராசைக்காரன். யோகேஷ் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவான்.
ஒரு நாள் இருவரும் பள்ளியை விட்டு வரும் போது ஒரு மரத்தடியில் வியாபாரி ஒருவன் குல்லாய் விற்றுக் கொண்டிருந்தான். ""ஒரு மூக்கு கண்ணாடி வாங்கினால் ஒரு குல்லாய் இனாம்,'' என அவன் கூவி விற்றுக் கொண்டிருந்தான். ராகேஷ் அவனிடம் போய், ""எனக்கு இரண்டு குல்லாய்கள் இலவசமாகத் தருவதானால் சொல் ஒரு மூக்கு கண்ணாடி வாங்குகிறேன்,'' என்றான்.
""பாவம்டா! அவனோ வியாபாரம் சரிவர நடைபெறவில்லை என்பதால் இலவசமாக ஒரு குல்லாயைக் கொடுக்கிறான். அதிகமாகக் கேட்டு அவனுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தாதே,'' என்று ராகேஷுக்கு உபதேசம் செய்தான் யோகேஷ். ஆனால், அவனோ ""நீ சும்மா இரு. கிடைத்தவரை லாபம்,'' என்றான். அந்த வியாபாரியும் வேறு வழி இல்லாமல் இரண்டு குல்லாய்களை இலவசமாகக் கொடுத்து ஒரு மூக்கு கண்ணாடியை அவனுக்கு விற்றான்.
யோகேஷ் ""எனக்கு இலவச குல்லாய் வேண்டாம்,'' என்று கூறி தனக்கொரு மூக்கு கண்ணாடி மட்டும் வாங்கிக் கொண்டு வியாபாரியின் நஷ்டத்தை ஈடு கட்டினான். ராகேஷ் கண்ணாடியை அணிந்து கொண்டு குல்லாயை தன் தலையில் மாட்டிக் கொண்டான். யோகேஷ் குல்லாயை மட்டும் போட்டுக் கொண்டான். இருவரும் ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தனர். ராகேஷ் யோகேஷை வற்புறுத்தி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றான். ஆளுக்கொரு பூரி செட் கொண்டு வரச் சொல்லி சப்ளையரிடம் ஆர்டர் கொடுத்தனர். சுடச் சுட பூரி வந்தது. இருவரும் சாப்பிட்டனர். யோகேஷ் சற்று வசதியான வீட்டுப்பிள்ளை என்பதால் எப்பொழுதும் கையில் காசு வைத்திருப்பான் என்கிற நம்பிக்கையில் ராகேஷ் அவனை அழைத்திருக்கிறான். பில் கொண்டு வந்து கொடுத்ததும் அந்த பில்லை யோகேஷிடம் நீட்டினான் ராகேஷ்.
அதிர்ச்சியடைந்த யோகேஷ், ""என்னடா இது. நீ அழைத்தாய் என்றுதான் ஓட்டலுக்குள் நுழைந்தேன். உன்னிடம் காசே இல்லையா? நான் இன்றைக்கு என் பர்சை மறந்து வீட்டிலேயே வைத்து வந்துவிட்டேன் என்ன செய்வது?'' என்றான்.
""என்னிடம் ஏதுடா காசு இருந்த காசுக்குதான் மூக்கு கண்ணாடி வாங்கி விட்டோமே, உன்னை நம்பி மோசம் போனேன். இப்போ என்ன செய்யலாம்?'' என்றபடியே கையை பிசைந்தான்.
இருவரும் பேசிக் கொண்டதிலிருந்து, அவர்களிடம் காசு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு சப்ளையர் அவர்களைக் கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்த முதலாளியிடம் அழைத்துச் சென்றான். அப்போது அவர்களை யாரோ, ""தம்பிகளா!'' என அழைத்தது காதில் விழ திரும்பிப் பார்த்தனர்
அங்கே—
சற்று நேரத்திற்கு முன்பு அவர்களுக்கு கண்ணாடி விற்றானே அதே வியாபாரி.
""தம்பிகளா என்ன நடந்தது? சற்று நேரத்திற்கு முன்புதானே என்னிடம் சந்தோஷமாக கண்ணாடி வாங்கினீர்கள். நீ கேட்டாய் என்று நான் கூட ஒரு குல்லாயை அதிகமாக உனக்குக் கொடுத்தேனே அது தொலைந்து விட்டதா? வேறொன்று தரட்டுமா?'' என்று வியாபாரி ஆர்வத்தோடு கேட்டார்.
இருவரும் அவரிடம் நடந்ததைச் சொல்லலாமா வேண்டாமா என முதலில் தயங்கினர். யோகேஷ் தைரியமாக நடந்ததைச் சொன்னான். உடனே அந்த வியாபாரி, ""உங்களுடைய பில் தொகையை நான் கொடுத்து விடுகிறேன். எவ்வளவு?'' என்றார்.
""நாற்பது ரூபாய் ஐம்பது காசு,'' என்றான் யோகேஷ்.
""அடடே நீங்கள் என்னிடம் மூக்கு கண்ணாடிக்கு கொடுத்த காசுதான் அது. அதை உங்களிடமே திருப்பித் தந்து விடுகிறேன். பில் தொகையை நீங்களே கல்லாவில் கொடுத்துவிடுங்கள். நான் மூக்கு கண்ணாடியை உங்களுக்கு என்னுடைய அன்பளிப்பாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்கிறேன்,'' என்றபடியே நாற்பது ரூபாய் ஐம்பது பைசாவை அவர்களிடம் கொடுத்தான்.
உடனே ராகேஷ் அந்த வியாபாரியைக் கூப்பிட்டு வணங்கி,""என்னை மன்னிக்க வேண்டும். என்னுடைய பேராசையால் உங்களிடம் இரண்டு குல்லாய் கேட்டுப் பெற்றேன். தேவை ஒன்றுதான் என்றாலும் அதிக ஆசைப்பட்டேன். அதன் பலன்தான் இந்த தண்டனை. இனிமேல் பேராசைக் கொள்ளமாட்டேன்,'' என்றான். யோகேஷுக்கு ராகேஷ் திருந்தியதில் சந்தோஷம். இருவரும் மறுநாள் அந்த வியாபாரியிடம் பணத்தை திருப்பி அளித்தனர்.
Re: படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்
என்னிடம் எது உள்ளதோ அதை தருகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» படித்த சிறுவர் கதைகள்
» படித்த சிறு கதைகள்
» படித்த நகைசுவை கதைகள்
» படித்து பிடித்த நிமிட " கதைகள் "
» படித்து ரசித்த குட்டிக் கதைகள்
» படித்த சிறு கதைகள்
» படித்த நகைசுவை கதைகள்
» படித்து பிடித்த நிமிட " கதைகள் "
» படித்து ரசித்த குட்டிக் கதைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|