Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
நல்லாட்சிக்கு கேடு விளைவித்தால் கடுமையான நடவடிக்கை
Page 1 of 1
நல்லாட்சிக்கு கேடு விளைவித்தால் கடுமையான நடவடிக்கை
நல்லாட்சிக்கு கேடு விளைவித்தால் கடுமையான நடவடிக்கை
நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு யாராவது முயற்சித்தால் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான தீர்மானத்தை எடுக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அரசை வீழ்த்த முயற்சிப்பவர்களுக்கு நல்லாட்சி அரசு இடம் கொடுக்காது என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், கொலைகள் மற்றும் வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பான விபரங்கள் வெளியாவதால் தாம் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சத்தில் நாட்டில் குழப்பநிலையொன்றை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார். அவ்வாறானோரின் குழப்பும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது. அவற்றை முறியடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29)நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை கூட நடத்தப்படாத ஒப்பந்தத்தைப் பிடித்துக்கொண்டு இந்திய விரோத செயற்பாடுகள் மூலம் தம்மை தேசப்பற்றாளர்களாகக் காண்பிக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளால் ஊடாக இனவாதத்தைத் தூண்டி அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடமுடியும் என அவர்கள் கனவு கண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இது குறித்து ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குழப்பும் முயற்சிகளை தைரியமாக எதிர்கொண்டு அவற்றை முறியடிப்பது என்றும், அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுப்பது என்றும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
1989ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியதைப் போன்று இந்தியாவுடன் செய்துகொள்ளப்படாதவொரு ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு சிலர் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர். இலங்கையின் நீண்டகால நட்பு நாடான இந்தியா கடந்த யுத்த காலத்தில் இலங்கைக்கு பாரிய உதவிகளைச் செய்திருந்தது என்பதை மறந்து அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் என்பது மட்டுமல்ல கடந்த கால சம்பவங்களைக் கொண்டு நன்கு பாடங்கற்றுக்கொண்டவர்கள். எனவே அரசாங்கத்தைக் குழப்பும் எந்த முயற்சிக்கும் இடமளிக்கப் போவதில்லை.
அதேநேரம், வடக்கிலும், தெற்கிலும் சில அடிப்படைவாதிகள் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அமைதியைக் குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளுடன் பேசி வருகின்றோம். எனினும் இதற்கு எதிராக அங்குள்ள சில அடிப்படைவாதிகள் செயற்படுகின்றனர்.
அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆவியைப் பிடித்துக்கொண்டு தென் பகுதியில் சிலர் இனவாதத்தைப் பரப்பி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தை குழப்புவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம். குழப்ப எடுக்கும் சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முறியடிக்கும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.
தினகரன்
நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு யாராவது முயற்சித்தால் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான தீர்மானத்தை எடுக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அரசை வீழ்த்த முயற்சிப்பவர்களுக்கு நல்லாட்சி அரசு இடம் கொடுக்காது என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், கொலைகள் மற்றும் வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பான விபரங்கள் வெளியாவதால் தாம் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சத்தில் நாட்டில் குழப்பநிலையொன்றை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார். அவ்வாறானோரின் குழப்பும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது. அவற்றை முறியடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29)நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை கூட நடத்தப்படாத ஒப்பந்தத்தைப் பிடித்துக்கொண்டு இந்திய விரோத செயற்பாடுகள் மூலம் தம்மை தேசப்பற்றாளர்களாகக் காண்பிக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளால் ஊடாக இனவாதத்தைத் தூண்டி அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடமுடியும் என அவர்கள் கனவு கண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இது குறித்து ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குழப்பும் முயற்சிகளை தைரியமாக எதிர்கொண்டு அவற்றை முறியடிப்பது என்றும், அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுப்பது என்றும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
1989ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியதைப் போன்று இந்தியாவுடன் செய்துகொள்ளப்படாதவொரு ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு சிலர் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர். இலங்கையின் நீண்டகால நட்பு நாடான இந்தியா கடந்த யுத்த காலத்தில் இலங்கைக்கு பாரிய உதவிகளைச் செய்திருந்தது என்பதை மறந்து அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் என்பது மட்டுமல்ல கடந்த கால சம்பவங்களைக் கொண்டு நன்கு பாடங்கற்றுக்கொண்டவர்கள். எனவே அரசாங்கத்தைக் குழப்பும் எந்த முயற்சிக்கும் இடமளிக்கப் போவதில்லை.
அதேநேரம், வடக்கிலும், தெற்கிலும் சில அடிப்படைவாதிகள் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அமைதியைக் குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளுடன் பேசி வருகின்றோம். எனினும் இதற்கு எதிராக அங்குள்ள சில அடிப்படைவாதிகள் செயற்படுகின்றனர்.
அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆவியைப் பிடித்துக்கொண்டு தென் பகுதியில் சிலர் இனவாதத்தைப் பரப்பி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தை குழப்புவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம். குழப்ப எடுக்கும் சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முறியடிக்கும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நல்லாட்சிக்கு உறுதுணை புரிய வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் இனவாதத்துக்கு இரையாகிறார்
» புகையிலையின் கேடு
» ஆசை, மனநிம்மதிக்கு கேடு!
» டி.வி. பார்ப்பது நலத்திற்கு கேடு!
» மதுவால் வரும் கேடு..........
» புகையிலையின் கேடு
» ஆசை, மனநிம்மதிக்கு கேடு!
» டி.வி. பார்ப்பது நலத்திற்கு கேடு!
» மதுவால் வரும் கேடு..........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|