சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

என்னைப் புசியுங்கள் Khan11

என்னைப் புசியுங்கள்

4 posters

Go down

என்னைப் புசியுங்கள் Empty என்னைப் புசியுங்கள்

Post by selvakumarm Mon 25 Jan 2016 - 7:24

சாத்தான்
தோட்டத்து
கனி நான்..

வரிசை வேண்டாம்..
வந்து
புசியுங்கள்..

சாபக்கனியென்று....
என்னை
சட்டெனத்
தள்ளாதீர்...

பசியிருப்போர்
உண்ணுங்கள்
பாவம்
பார்க்காதீர்...

பட்டினியாய்
வாழ்ந்திருந்து
பரலோகம்
தேடாதீர்.

இச்சையுள்ள
மனிதரெல்லாம்
இந்த
பச்சைக்கனி
பாருங்கள்..

காணாத
கடவுளுக்காய்..
காத்திருந்து
சோராமல்..

கை வரும்
கனி
நான்..
கண்கள் மூடி
போகாதீர்.

ஆதிக்கதை..
நீதிக்கதை,
சொன்னதெல்லாம்
கேட்டதனால்..
இன்றுவரை
கவலை கொள்ளா
மனிதருண்டா?

எனைத்தின்று
மோட்சம்
கிட்டார்
உம்மிடத்தில்
சொன்னதுண்டா?

காமம்
சீண்டும்
சாமத்துக்கனி
நான்...
பாவமென்போர்
போர்த்தித்
தூங்குங்கள்.

ஆமென்போர்
மட்டும்
அடுத்தும்
வாருங்கள்..

அனுதினமும்
முன்னேறும்
நுட்பம்
நானறிவேன்..

குறுஞ்செய்தி,
அலைபேசி,
கணினியிலும்
இந்த
கனி கிடைக்கும்..

வீட்டுக்கே
வந்தாலும்
விலையொன்றும்
கிடையாது..

கல்லிலும்
வேர்பிடிக்கும்
என்
விதையின்
வீரியங்கள்...

வலிய வந்து
ஆடுவதால்...
வான்கோழி
என்னை
வைய்யாதீர்..

மயில்
கொண்டு
பிரியாணி..?
சாத்தியங்கள்
இங்கு இல்லை.

கவலைகள்
இதுவரை..
கவ்வாதார்
என்னைத் தள்ளலாம்.

சாதி
நான்
பார்ப்பதில்லை..
சகலரும்
கொள்ளலாம்.

முடியுமெனில்
சொல்லுங்கள்..

உங்கள்
கடவுளுக்கும்
அனுப்பலாம்...

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha Mon 25 Jan 2016 - 8:53

இந்தக்கவிதையை படித்துக்கருத்திட நான் போதிமரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற வேண்டுமா செல்வா சார்?
எந்தக்கனியும் சாத்தான் தோட்டக்கனியல்ல! அதெல்லாம் நாம் பார்க்கும்  பார்வையில் தான்!

கனிகள் என்றுமே நல்லவைகள் தான்!சில நேரம் கனிகளில் அழுக்குகளும் பூச்சிகளும் வந்தாலும் அவைகளை வெட்டி வீசி பயன் படுத்துவது போல்  தான் நல்லவை அல்லாதவைகள் கண்டால் தூக்கி போட்டு விட்டு  நலலதை தெரிந்தெடுப்போம்.
வலிய வந்து
ஆடுவதால்...
வான்கோழி
என்னை
வைய்யாதீர்.
சரி சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by நண்பன் Mon 25 Jan 2016 - 9:15

பயங்கரமான கவிதை 
எனக்கு வேண்டாம்
சாத்தான் தோட்டத்துக் கனி
ஆனால் இது என்ன கனி
என்பதில் ஒரு குழப்பம் இருக்கு அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha Mon 25 Jan 2016 - 9:21

ஹாசிம் வந்திருக்கார், அவரை படிக்க சொல்லுங்கள், என்ன புரியிது என கேட்போம், எனக்கும் தான்  ஒவ்வொரு முறை படிக்கும் போது ஒவொன்றாய் தோன்றுகின்றது. அதுக்காக  கனிகளை தூக்கி எறிவோமா? 

தும்பிக்கு வேண்டாம்னால் எனக்கும் வேண்டாம் தான்,  ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jan 2016 - 9:23

அதைத்தான் எக்கனி என கடைசி சொல்வரை தேடினேன் எக்கனி என்று புரியவில்லைதான் சொல்லாட்சி பிரமாதம் பாராட்டுகள் வாழ்த்துகள் தொடருங்கள்


என்னைப் புசியுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by நண்பன் Mon 25 Jan 2016 - 9:27

Nisha wrote:ஹாசிம் வந்திருக்கார், அவரை படிக்க சொல்லுங்கள், என்ன புரியிது என கேட்போம், எனக்கும் தான்  ஒவ்வொரு முறை படிக்கும் போது ஒவொன்றாய் தோன்றுகின்றது. அதுக்காக  கனிகளை தூக்கி எறிவோமா? 

தும்பிக்கு வேண்டாம்னால் எனக்கும் வேண்டாம் தான்,  ஹாஹா!

ஆதாம் ஹவ்வா எமது தாய் தந்தையரை சாப்பிட வைத்த கனியோ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha Mon 25 Jan 2016 - 9:28

நேசமுடன் ஹாசிம் wrote:அதைத்தான் எக்கனி என கடைசி சொல்வரை தேடினேன் எக்கனி என்று புரியவில்லைதான் சொல்லாட்சி பிரமாதம் பாராட்டுகள் வாழ்த்துகள் தொடருங்கள்

என் புரிதல் என்ன தெரியுமா? இதை அவர் தன் சுய அறிமுகமாக சொல்கின்றார் என நினைகின்றேன். சாதாரண மனிதன் நான் , நல்லதும் கெட்டதும் உண்டென கனியை உதாரணம் காட்டி சொல்கின்றார். தன்னில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும்  ஒரு முயற்சி என எடுக்கலாம். சரியா தப்பா என செல்வா சார் தான் வந்து சொல்ல வேண்டும்.

ஆனாலும் ஒரு கவிதை எழுதி நம்மை சிந்திக்க வைத்தமைக்கு  பாராட்ட வேண்டும். 

நம்மில்  பலர் நம் உணர்வுகளை முகமூடி போட்டு  மறைக்கின்றோம். முகமூடியை கழட்டி விட்டால்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by நண்பன் Mon 25 Jan 2016 - 9:33

பட்டினியாய்
வாழ்ந்திருந்து
பரலோகம்
தேடாதீர்.

இச்சையுள்ள
மனிதரெல்லாம்
இந்த
பச்சைக்கனி
பாருங்கள்..

காணாத
கடவுளுக்காய்..
காத்திருந்து
சோராமல்..

கை வரும்
கனி
நான்..
கண்கள் மூடி
போகாதீர்.

ஆதிக்கதை..
நீதிக்கதை,
சொன்னதெல்லாம்
கேட்டதனால்..
இன்றுவரை
கவலை கொள்ளா
மனிதருண்டா?

எனைத்தின்று
மோட்சம்
கிட்டார்
உம்மிடத்தில்
சொன்னதுண்டா?

காமம்
சீண்டும்
சாமத்துக்கனி
நான்...
பாவமென்போர்
போர்த்தித்
தூங்குங்கள்.

ஐயா நான் தூங்கிவிட்டேன்
என்னிடம் உள்ள கனியை சாப்பிட்டு விட்டு
என்னைப் புசியுங்கள் 3087023502 என்னைப் புசியுங்கள் 3087023502


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by நண்பன் Mon 25 Jan 2016 - 9:35

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அதைத்தான் எக்கனி என கடைசி சொல்வரை தேடினேன் எக்கனி என்று புரியவில்லைதான் சொல்லாட்சி பிரமாதம் பாராட்டுகள் வாழ்த்துகள் தொடருங்கள்

என் புரிதல் என்ன தெரியுமா? இதை அவர் தன் சுய அறிமுகமாக சொல்கின்றார் என நினைகின்றேன். சாதாரண மனிதன் நான் , நல்லதும் கெட்டதும் உண்டென கனியை உதாரணம் காட்டி சொல்கின்றார். தன்னில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும்  ஒரு முயற்சி என எடுக்கலாம். சரியா தப்பா என செல்வா சார் தான் வந்து சொல்ல வேண்டும்.

ஆனாலும் ஒரு கவிதை எழுதி நம்மை சிந்திக்க வைத்தமைக்கு  பாராட்ட வேண்டும். 

நம்மில்  பலர் நம் உணர்வுகளை முகமூடி போட்டு  மறைக்கின்றோம். முகமூடியை கழட்டி விட்டால்?

என்னுடய புரிதல் இந்தக் கனி வேறு
இது சாத்தான் தோட்டத்துக்கனி
வரம்பு மீறினால் இந்தக் கனியை நாம் புசிக்கலாம்
ஆனால் கண்ணில் காணாத கடவுளைப் பயந்து 
இந்தக்கனியை நாம் வெறுக்கிறோம்
இதுதான் என் புரிதல்
கன்னியாக வரும்க னி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha Mon 25 Jan 2016 - 9:40

அட! ஆமாம்ல இப்படியும் இருக்கும்ல!
கூட்டணி 
 
ஐய்ய்ய்ய்யோ ஒரு கவிதையை போட்டு  இல்லாத மூளையை உலுக்கு குலுக்கி சிந்திக்க வைத்து விட்டு  நான் ஒன்று   சொல்வேன் சார் எங்கே போய் ஒளிந்து கொண்டாரோ? 

அருமை, எருமை, பெருமைகளுக்கிடையில் நான் இப்படில்லாம் இந்த கவிதையை குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் பிச்சி உதறுவோம் என கனவிலும்  நினைத்திருக்க மாட்டார். 

பாருங்கள். ஆள் இனி எஸ்கேப் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha Mon 25 Jan 2016 - 9:42

நண்பன் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அதைத்தான் எக்கனி என கடைசி சொல்வரை தேடினேன் எக்கனி என்று புரியவில்லைதான் சொல்லாட்சி பிரமாதம் பாராட்டுகள் வாழ்த்துகள் தொடருங்கள்

என் புரிதல் என்ன தெரியுமா? இதை அவர் தன் சுய அறிமுகமாக சொல்கின்றார் என நினைகின்றேன். சாதாரண மனிதன் நான் , நல்லதும் கெட்டதும் உண்டென கனியை உதாரணம் காட்டி சொல்கின்றார். தன்னில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும்  ஒரு முயற்சி என எடுக்கலாம். சரியா தப்பா என செல்வா சார் தான் வந்து சொல்ல வேண்டும்.

ஆனாலும் ஒரு கவிதை எழுதி நம்மை சிந்திக்க வைத்தமைக்கு  பாராட்ட வேண்டும். 

நம்மில்  பலர் நம் உணர்வுகளை முகமூடி போட்டு  மறைக்கின்றோம். முகமூடியை கழட்டி விட்டால்?

என்னுடய புரிதல் இந்தக் கனி வேறு
இது சாத்தான் தோட்டத்துக்கனி
வரம்பு மீறினால் இந்தக் கனியை நாம் புசிக்கலாம்
ஆனால் கண்ணில் காணாத கடவுளைப் பயந்து 
இந்தக்கனியை நாம் வெறுக்கிறோம்
இதுதான் என் புரிதல்
கன்னியாக வரும்க னி

ஆமாம்ல,அப்ப நமக்கு அது, சேசே உங்களுக்கு  அது வேண்டாம், என் தும்பி நல்ல தும்பி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jan 2016 - 9:43

கனிக்கு நிகராக்கி தன்னை புசிக்கக் கோரியிருக்கிறார் என்பதுதான் மீண்டும் படித்த போது கிடைத்த விடை காத்திருப்போம் கிடைக்கும் வரை


என்னைப் புசியுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha Mon 25 Jan 2016 - 9:47

நேசமுடன் ஹாசிம் wrote:கனிக்கு நிகராக்கி தன்னை புசிக்கக் கோரியிருக்கிறார் என்பதுதான் மீண்டும் படித்த போது கிடைத்த விடை காத்திருப்போம் கிடைக்கும் வரை
 
ஐய்ய்யோ  என்னப்பா இது, முடியல்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha Mon 25 Jan 2016 - 9:49

நண்பன் wrote:
பட்டினியாய்
வாழ்ந்திருந்து
பரலோகம்
தேடாதீர்.

இச்சையுள்ள
மனிதரெல்லாம்
இந்த
பச்சைக்கனி
பாருங்கள்..

காணாத
கடவுளுக்காய்..
காத்திருந்து
சோராமல்..

கை வரும்
கனி
நான்..
கண்கள் மூடி
போகாதீர்.

ஆதிக்கதை..
நீதிக்கதை,
சொன்னதெல்லாம்
கேட்டதனால்..
இன்றுவரை
கவலை கொள்ளா
மனிதருண்டா?

எனைத்தின்று
மோட்சம்
கிட்டார்
உம்மிடத்தில்
சொன்னதுண்டா?

காமம்
சீண்டும்
சாமத்துக்கனி
நான்...
பாவமென்போர்
போர்த்தித்
தூங்குங்கள்.

ஐயா நான் தூங்கிவிட்டேன்
என்னிடம் உள்ள கனியை சாப்பிட்டு விட்டு
என்னைப் புசியுங்கள் 3087023502 என்னைப் புசியுங்கள் 3087023502

குதூகலம் குதூகலம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by selvakumarm Mon 25 Jan 2016 - 9:54

நான் ஓடமாட்டேன்..

இன்னும் பேசவைப்பேன்...
பேசாப்பொருளை பேசவைப்பதும் கவிதையின் பணிதான்.

தோணுதல் எழுதுவதிலும்...சிந்திக்கவைப்பது கவியின் வெற்றி.....

எழுதுங்கள்....வாழ்த்துங்கள்..
திட்டுங்கள்..
எல்லாம் என் வரங்கள்...
.

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jan 2016 - 9:59

selvakumarm wrote:நான் ஓடமாட்டேன்..

இன்னும் பேசவைப்பேன்...
பேசாப்பொருளை பேசவைப்பதும் கவிதையின் பணிதான்.

தோணுதல் எழுதுவதிலும்...சிந்திக்கவைப்பது கவியின் வெற்றி.....

எழுதுங்கள்....வாழ்த்துங்கள்..
திட்டுங்கள்..
எல்லாம் என் வரங்கள்...
.
புதுமை புரட்சி என உங்கள் பணி தொடரட்டும்


என்னைப் புசியுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by நண்பன் Mon 25 Jan 2016 - 10:58

selvakumarm wrote:நான் ஓடமாட்டேன்..

இன்னும் பேசவைப்பேன்...
பேசாப்பொருளை பேசவைப்பதும் கவிதையின் பணிதான்.

தோணுதல் எழுதுவதிலும்...சிந்திக்கவைப்பது கவியின் வெற்றி.....

எழுதுங்கள்....வாழ்த்துங்கள்..
திட்டுங்கள்..
எல்லாம் என் வரங்கள்...
.

உங்கள் எழுத்துப் பயணம் தொடரட்டும் 
நான் குழந்தை அதை மறக்க வேண்டாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னைப் புசியுங்கள் Empty Re: என்னைப் புசியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum