சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 12:18 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm

» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm

» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm

» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm

» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm

பெண்களுக்கான `பிங்க் மாதம்’-மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு.. Khan11

பெண்களுக்கான `பிங்க் மாதம்’-மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு..

Go down

பெண்களுக்கான `பிங்க் மாதம்’-மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு.. Empty பெண்களுக்கான `பிங்க் மாதம்’-மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு..

Post by *சம்ஸ் Mon Dec 06, 2010 3:06 am

பெண்களுக்கான `பிங்க் மாதம்’-மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு.. Beat-breast-cancer
மாதத்திற்கு “பிங்க் மாதம்” என்று பெயரிட்டு, மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மாதமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. அது தொடர்பான கட்டுரை.

“புற்றுநோய்” என்று பெயர் வரக் காரணம் என்ன?

- எறும்பின் புற்று அடிப்பாகம் பெரிதாகவும், மேல் பாகம் கூர்மையாகவும், பல கிளைகளாக பரவியும் காணப்படும். அதன் ஓரங்களும் சீராக இருக்காது. புற்று நோயாளிகளின் பாதிக்கப்பட்ட உடல்பாகமும் அதுபோல் தெரிவதால் அதற்கு புற்றுநோய் என்று பெயரிட்டுவிட்டார்கள். ஆங்கிலத்தில் “கேன்சர்” என்று சொல்வார்கள். கேன்சர் என்ற வார்த்தை “கேன்கர்” என்ற சொல்லிருந்து வந்தது. கேன்கர் என்றால் நண்டு. நண்டின் உடல் நடுவிலும், அதன் கால்கள் பல கிளைகளாக ஓரங்களிலும் தெரிவதுபோல் புற்றுநோயின் பாதிப்பும் தெரிவதால், கேன்சர் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். யாருக்கும், உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். மார்பக புற்றுநோய், உலகில் இரண்டாவது பெரும் நோயாக குறிப்பிடப்படுகிறது.

புற்று நோய் ஏன் வருகிறது?

மனிதனின் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும் பொழுதோ அல்லது தேய்மானம் அடையும் பொழுதோ, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரையில்தான், மறுபடியும் பெருகும். இதை தீர்மானிப்பது ஒவ்வொரு செல்லிலும் உள்ள “நூக்லியஸ்” என்ற உயிர் பொருள். இது குறிப்பிட்ட அளவை விட மிக அதிகமான எண்ணிக்கையில், பெருகினால் புற்றுநோய் தோன்றும்.

மார்பக புற்று நோய், மார்பில் உள்ள பால் சுரப்பிகளில் ஏற்படலாம். பால்வரும் குழாய்களிலும் ஏற்படலாம். இந்த குழாய்கள் எல்லாம் சேர்ந்து மொட்டு மாதிரி தோன்றும் மார்பகக் காம்புகளிலும் வரலாம். ஒவ்வொரு பால் சுரப்பியையும் இணைக்கும் கொழுப்பு திசுக்களிலோ அல்லது மற்ற திசுக்களிலோகூட வரலாம்.

மார்பக புற்று நோய் மார்பில் மட்டும் இருப்பதில்லை. அவை அங்கிருந்து பரவி கீழே உள்ள நெஞ்சுக்கூட்டின் திசுக்களில் பரவும். அக்குள்களில் உள்ள நெறிக்கட்டிகளிலோ, இன்னொரு மார்பகத்திலோகூட பரவும். ரத்தத்தின் வழியாக எந்த உறுப்புகளுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். குறிப்பாக மூளை, சிறுநீரகங்கள் அதிகமாக தாக்கப்படுகின்றன. மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

பல காரணங்களை சொல்லலாம். பொதுவாக இது உடலில் உள்ள மரபணுக்களால்தான் (எக்ஙூக்ஞ்கூஷ ஊஹஷஞ்ச்சு) வருகிறது. 5 முதல் 10 விழுக்காடு தாய், தந்தையிடமிருந்து வரலாம். ஆதஇஅ-1 ஆதஇஅ-2 என்று இரண்டு மரபணுக்களை கண்டுபிடித்துள்ளனர். இது தாயிடமிருந்தோ அல்லது தந்தையிடமிருந்தோ வரலாம். ஒருவருடைய ரத்த சொந்தங்கள் யாருக்கேனும் மார்பக புற்று நோய் இருந்தால், அவருடைய அடுத்த தலைமுறை நபர்களுக்கும் இது வருவதற்கான வாய்ப்பு அதிகம். மது அருந்தும் மங்கையர்களையும், மாதவிடாய் நின்ற பிறகு உடல் பருமனாகிறவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்கும். உடலில் உள்ள கொழுப்பு திசுக்கள் “ஈஸ்ட்ரோஜன்” என்ற வேதிப் பொருளை சுரக்கின்றன. மாதவிடாய் நிலைத்துப்போகும் `மெனோபாஸ்’ காலத்தை பெண் அடைந்த பின்பு, உடலில் அதிகமாக இருக்கும் ஈஸ்ட்ரோஜன், மார்பக புற்று நோயை தோற்றுவிக்கலாம். புகை பிடித்தல், ஈஸ்ட்ரோஜன் அதிகமாக உள்ள மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவது, தவறான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, மன அழுத்தம், மன உளைச்சல், ஆகியவைகளும் மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்களாக அறியப்படுகின்றன.

உணவு வகைகளில் இன்னமும் தீர்மானமாகச் சொல்லப்படவில்லை என்றாலும் கொழுப்பு நிறைந்த சிவப்பு இறைச்சி, கொழுப்பு நிறைந்த பால், ஐஸ்கிரீம், பாலாடை கட்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வரலாம். சிறு வயதில் பூப்படைதல், மிகவும் தாமதமாக மெனோபாஸ் காலகட்டத்தை அடைதல் போன்றவையும் நோய்க் காரணங்களாக சொல்லப்படுகின்றன.

எந்த வயதில் இந்த நோய் அதிகம் தாக்கும்?

30 வயதிலிருந்து 39 வயது வரை 233 பேர்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வரலாம்.

40 வயதிலிருந்து 49 வயது வரை 69 பேர்களில் ஒருவருக்கும், 50 வயதிலிருந்து 59 வயது வரை 38 பேர்களில் ஒருவருக்கும், 60 வயதிலிருந்து 69 வயது வரை 27 பேர்களில் ஒருவருக்கும் மார்பக புற்று நோய் வரலாம். இதன் அறிகுறி என்ன?

முதலாவதாக தென்படுவது மார்பகத்தில் கட்டி. ஆரம்ப நாட்களில் வலி இல்லாமலும், அந்த கட்டியினுடைய ஓரங்கள் சீராக இல்லாமலும் இருக்கும். ஆனால் பல சமயங்களில் தொட்டாலோ அல்லது அழுத்தினாலோ வலி ஏற்படுகின்ற கட்டியாகத்தான் இது வருகிறது. மார்பகத் தோலில் எரிச்சல் அல்லது நமைச்சல் அல்லது ஆரஞ்சு பழத்தோலில் இருப்பது போன்ற புள்ளி புள்ளியாக குழிகள், மார்பக காம்புகளில் வலி, வீக்கம், காம்பை சுற்றியுள்ள தோலில் சுருக்கம், நமைச்சலுடன் கூடிய தேமல் போன்ற தோற்றம் எல்லாம் அறிகுறிகள். மார்பகக் காம்புகள் உள்ளிழுக்கப்பட்ட நிலை, சுரப்பிகள் வழியாக ரத்தமோ அல்லது திரவமோ கசிவது, அக்குகளில் நெறிக்கட்டிகள் வீங்கியிருப்பது போன்றவைகளும் அறிகுறிகள்தான்.

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்த பின்னர் பெண்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்யவேண்டும். ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தால், உடனே மருத்துவரின் பரிந்துரைப்படி `மாமோகிராம்’ முறையில் மார்பகத்தை படம்பிடித்து சோதித்துப் பார்க்க வேண்டும். கட்டிகள் இருப்பின் கட்டியை ஊசி மூலம் துளைத்து அதை பரிசோதிக்க வேண்டும். மார்பக காம்பிலிருந்து கசியும் திரவத்தை ஆராய்ந்து புற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா என்றும் கவனிக்க வேண்டும்.

மார்பக புற்றுநோய்க்கான தீர்வு என்ன?

வருமுன் காப்பது எளிது! வந்த பின்னர் மருத்துவரை உடனே பார்ப்பது நல்லது!

சிலருக்கு எளிமையான கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்தால் போதுமானது. சிலருக்கு மார்பகத்தை நீக்கிவிடுவார்கள். கூடவே கீழே உள்ள தசையையும், அக்குகளில் உள்ள நெறிக் கட்டிகளையும் சேர்த்து அப்புறப்படுத்துவார்கள். சிலருக்கு கதிர்வீச்சு வைத்தியம் தேவைப்படும். நோயை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மருந்து, மாத்திரைகள், ஊசிகள் தேவைப்படலாம். பல வைத்திய முறைகளில் குணப்படுத்தலாம். ஆனால் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை பார்க்க வேண்டும்.

இந்த நோய் வராமலே தடுக்க முடியுமா?

உடற்பயிற்சி தினமும் செய்தால் இந்த நோய் வரும் வாய்ப்பு குறையும். ஒரு நாளைக்கு 45 முதல் 60 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்பவர்களை பொதுவாக மார்பக புற்று நோய் தாக்குவதில்லை. கேரட், பீட்ரூட், தக்காளி, பூசணி, பரங்கிக்காய், ப்ராக்கோலி, கீரை வகைகளில் “கரடினாய்ட்ஸ்” என்ற வேதிப் பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய் வருவதை தடுக்கின்றது.

சிவப்பு திராட்சை, பெர்ரி, பீச், ஆப்பிள், வாழைப்பழம் (குறிப்பாக செவ்வாழை) போன்றவைகளை தினமும் சாப்பிடுபவர்களை மார்பக புற்றுநோய் தாக்கும்தன்மை குறைவு.

பிங்க் மாதமாகிய இந்த அக்டோபரில் ஒவ்வொரு பெண்ணும் `உடல் சுத்தம், மன சுத்தத்தோடு வாழ்வேன். உடற்பயிற்சி செய்வேன். நல்ல உணவுப் பழக்கத்தை மேற்கொள்வேன்’ என்ற உறுதிமொழியை எடுத்து, அதை கடைபிடித்தால் மார்பக புற்றுநோயின்றி வாழலாம். விளக்கம்: டாக்டர் அருணா ராமகிருஷ்ணன் (மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவ நிபுணர்) சென்னை – 41.

***

நோயின் பல நிலைகள்
நிலை `0′: புற்றுநோய் பால் குழாய்களில் மட்டும் இருக்கும். மார்பக திசுக்களில் பரவி இருக்காது.

நிலை 1: புற்றுநோய் 2 செ.மீ. அல்லது குறைவாக இருக்கும். மார்பகங்களில் மட்டும் இருக்கும். சிலருக்கு மார்பகங்களில் இருக்காது. அக்குகளில் உள்ள நெறிக்கட்டிகளில் இருக்கும்.

நிலை 2- அ புற்றுநோய் 2 செ.மீ., அளவில் அக்குளில் உள்ள நெறிக்கட்டிகளுடன் சேர்ந்து இருக்கும்.

நிலை 2- ஆ புற்று நோய் கட்டி 5 செ.மீ.க்கு பெரிதாகியிருக்கும். ஆனால் மற்ற இடங்களுக்கு பரவாமல் மார்பகத்தில் மட்டும் இருக்கும்.

நிலை 3- அ கட்டியின் அளவு பெரிதாக இருக்கும். எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.

நிலை 3- ஆ புற்று நோய் மார்பு எலும்பிற்கும் பரவி இருக்கும்.

நிலை 3- இ புற்று நோய் காலர் எலும்பின் கீழ் உள்ள நெறிக்கட்டிகளை தாக்கியிருக்கும்.

நிலை 4: புற்று நோய் மற்ற பாகங்களுக்கும், மற்ற உறுப்புகளுக்கும் பரவி இருக்கும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum