Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்!
2 posters
Page 1 of 1
என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்!
5 வருடங்களுக்குப் பிறகு மளிகைக் கடையில் ஒரு குண்டக்க மண்டக்க (கற்பனை)
:: எல்லா பொருட்களுக்கும் சேர்த்து எவ்வளவு ஆச்சு?
: மொத்தம் 450 ரூபாய் ஆச்சு.
:: இந்தா 500 ரூபாய். மீதம் 50 ரூபாய் குடு. (இது புதிய 500 ரூபாய்)
: இந்த நோட்டு கிழிஞ்சிருக்குபா. வேற நோட்டு குடு.
:: என்கிட்டே ரெண்டு 500 ரூபாய் நோட்டு இருக்கு. அதுல எது வேணும்?
: இது என்னப்பா கேள்வி? ரெண்டும் 500 ரூபாய் நோட்டுதானே?... கிழியாம இருந்தா எதையாவது குடு. எனக்கு வேற நோட்டு வேணும் அவ்வளவுதான்.
:: சரி இந்தா 500 ரூபாய்... மீதம் 50 ரூபாய் குடு. (இது பழைய 500 ரூபாய் நோட்டு)
: யோவ்!... என்னய்யா இது? வேற 500 ரூபாய் நோட்டைக் குடுக்குறே?...
:: நீதானே வேற நோட்டு கேட்டே.... அதான் குடுத்தேன்....
: வேற நோட்டு கேட்டேன்தான். ஆனா நீ, நோட்டே வேறயா குடுக்குறியே?...
:: வேற நோட்டு கேட்டா, வேற நோட்டுதானே கொடுக்க முடியும்? நான் கிளியராத்தான் இருக்கேன்.. தப்பு உன் பக்கம்தான்! என்னன்னு செக் பண்ணு...
: தம்பி! இது பழைய நோட்டுப்பா. இப்ப இது செல்லாது... வேற நோட்டு குடுப்பா.
:: சரி... ரெண்டு ஆயிரம் ரூபாய் நோட்டு இருக்கு வேணுமா?
: என்னாது.... ஆயிரம் ரூபாவும் ரெண்டு இருக்கா?
:: ரெண்டு தனித்தனி ஆயிரம் இல்லையா, ஒரே நோட்டா ரெண்டாயிரம் ரூபாய் இருக்கு. வேணுமா?
: உன்கிட்ட இருக்குப்பா. ஆனா, என்கிட்டே சில்லறை இல்லையே... இன்னைக்கு நீதான் முதல் போனி.
:: சரி, அப்போ அஞ்சாயிரம் ரூபாய் நோட்டு தரவா?
: அஞ்சாயிரம் ரூபாவா?
:: இல்லேன்னா இந்தா பத்தாயிரம் ரூபாய்!
: பத்தாயிரம் ரூபாயா? என்னப்பா கலர் காலரா ரூபாய் நோட்டா நீட்டுற? இதையெல்லா யாருப்பா உன்கிட்ட குடுத்தனுப்புறது?
:: இந்த 500 , 2000 ல்லாம் மோடி கொடுத்தது. 5,000 , 10,௦௦௦ நோட்டெல்லாம் 'டாடி' கொடுத்தது.
: 'டாடி'ன்னா? உங்க அப்பா வா?
:: கோ டாடி!
: 'கோ டாடி'ன்னா?
:: கூகுள்ல சர்ச் பண்ணி எடுத்தேன்யா...
: ஏன்பா.... கவர்மெண்டு அடிச்ச நோட்டு எதுவுமே உன்கிட்ட இல்லையா?
:: இதெல்லாமே கவர்மெண்டு அடிச்ச நோட்டுதான்... ஆனா இப்ப தடை பண்ணிட்டாங்க.
: தடை பண்ண நோட்டையெல்லாம் வச்சிக்கிட்டு ஏன்பா இப்படி என் கடை வியாபாரத்தை கெடுக்குறே?
:: நாட்டுல என்னென்ன நடந்திருக்குதுன்னு ஒரு PK தெரிஞ்சுக்க வேண்டாமா? அதுக்குத்தான்.
: அது என்ன PK?
:: பொது நாலெட்ஜ்!
: (மனதிற்குள் பேசுவது) ஆஹா.... இது அவனேதான்! ஜெனரல் நாலேஜ்ங்கறதை, பொது நாலேஜ்ன்னு ஏன் இப்படி இங்கிலீசையும், தமிழையும் கலந்தடிக்கிறேன்னு கேக்கணும்னுதான் தோணுது. ஆனா கேட்டா..... குண்டங்க மண்டக்க நாமளே மாட்டிக்க வேண்டியதுதான். அதனால கேக்க வேண்டாம்....
:: சும்மா கேட்டுத்தான் பாரேன்....
: என்னது?!.... நான் எதுவும் கேக்கலையேபா.
:: இப்போ மனசுக்குள்ள பேசுனியே அதைக் கேளு.
: நான் மனசுக்குள்ள நினைக்கிறது உனக்கு எப்படிப்பா தெரியுது?
:: ஹா.. ஹா.. ஹா... மனசுதான் உன்னோடது. ஆனா, அதுல ஓடுற நினைப்பு எல்லாம் என்னோடது. தட் ஈஸ் மீ!
: இல்லப்பா..., ஒன்னு தமிழ பேசணும், இல்லேன்னா இங்கிலீசுல பேசணும். ஏன் இப்படி கலப்படமா பேசுறேன்னு கேக்க நினைச்சேன். வேற ஒன்னும் இல்ல.
:: நான் கேட்டேனா?
: என்ன நான் கேட்டேனா?
:: உதயம் பருப்புன்னு பாக்கெட்டை தயாரிச்சு வச்சுக்கிட்டு, அதுல ரேஷன் பருப்பை கொட்டி விக்கிறியே அதை ஏன் கலப்படம் பண்ணுறேன்னு நான் உன்கிட்ட கேட்டனா?
: நான் சொல்லல... என் வாயைப் புடுங்கி என் வயித்துலயே அடிக்கிறான் பாருங்க. இவன் அவனேதான்!! போன்ல வந்தான், பத்திரிக்கையில் வந்தான், டிவியில வந்தான், இப்ப நேருலயே வந்துட்டான்...
ஐயா சாமி, நீ பார்த்திபனா இருந்துக்கோ. ஆனா, என்னை வடிவேலா ஆக்கிடாதப்பா!!......
:: சரி இப்ப என்ன பண்ணலாம்?
: நீதான் யோசிச்சு வச்சிருப்பியே... சொல்லிட்டு கெளம்பு.
:: என்கிட்டே ஒரு பழைய 500 ரூபாய் நோட்டு இருக்கு.. அந்தப் பணத்தை...... இப்ப மாத்தணும்!
: பணத்தை மாத்தணும்னு இப்படி படுத்துறியே... ஆனா, உன் குணத்தை மாத்த மாட்டேங்கறியே.......!!
:: அது கூடவே பொறந்தது. மாத்த முடியாது! மாத்திக்கவும் மாட்டேன்!
: நீ மாத்த வேண்டாம்ப்பா..... நான் மாரிக்கறேன். இந்தா மீதம் 50 ரூபாய். அந்த பழைய 500 ரூபாவை குடுத்துட்டு முதல்ல நீ கெளம்பு.
:: ஹா! ஹா! ஹா!
: ஏன்பா சிரிக்கிறே?
:: ஹா! ஹா! ஹா!
: அட ஏம்பா சிரிக்கிறே?
:: ஹா! ஹா! ஹா!
: ஹா! ஹா! ஹா ..... ஹா! ஹா! ஹா!
:: நீ ஏன்யா சிரிக்கிறே?
: நீ சிரிக்கிறே.... உன்னை பார்த்து ஊரே சிரிக்குது..... நான் சிரிக்கக் கூடாதா?
:: என்கிட்டே ரெண்டு கேரக்ட்டர் இருக்கு...
: இத பார்! கேரட்டு இருக்கு, பீட்ரூட்டு இருக்குன்னு ஏதாவது பேசினே... மவனே ஜுஸ் போட்டு குடிச்சுடுவேன். மரியாதையா ஓடிப்போயிடு!
** வாட்ஸ் அப் பகிர்வூ
:: எல்லா பொருட்களுக்கும் சேர்த்து எவ்வளவு ஆச்சு?
: மொத்தம் 450 ரூபாய் ஆச்சு.
:: இந்தா 500 ரூபாய். மீதம் 50 ரூபாய் குடு. (இது புதிய 500 ரூபாய்)
: இந்த நோட்டு கிழிஞ்சிருக்குபா. வேற நோட்டு குடு.
:: என்கிட்டே ரெண்டு 500 ரூபாய் நோட்டு இருக்கு. அதுல எது வேணும்?
: இது என்னப்பா கேள்வி? ரெண்டும் 500 ரூபாய் நோட்டுதானே?... கிழியாம இருந்தா எதையாவது குடு. எனக்கு வேற நோட்டு வேணும் அவ்வளவுதான்.
:: சரி இந்தா 500 ரூபாய்... மீதம் 50 ரூபாய் குடு. (இது பழைய 500 ரூபாய் நோட்டு)
: யோவ்!... என்னய்யா இது? வேற 500 ரூபாய் நோட்டைக் குடுக்குறே?...
:: நீதானே வேற நோட்டு கேட்டே.... அதான் குடுத்தேன்....
: வேற நோட்டு கேட்டேன்தான். ஆனா நீ, நோட்டே வேறயா குடுக்குறியே?...
:: வேற நோட்டு கேட்டா, வேற நோட்டுதானே கொடுக்க முடியும்? நான் கிளியராத்தான் இருக்கேன்.. தப்பு உன் பக்கம்தான்! என்னன்னு செக் பண்ணு...
: தம்பி! இது பழைய நோட்டுப்பா. இப்ப இது செல்லாது... வேற நோட்டு குடுப்பா.
:: சரி... ரெண்டு ஆயிரம் ரூபாய் நோட்டு இருக்கு வேணுமா?
: என்னாது.... ஆயிரம் ரூபாவும் ரெண்டு இருக்கா?
:: ரெண்டு தனித்தனி ஆயிரம் இல்லையா, ஒரே நோட்டா ரெண்டாயிரம் ரூபாய் இருக்கு. வேணுமா?
: உன்கிட்ட இருக்குப்பா. ஆனா, என்கிட்டே சில்லறை இல்லையே... இன்னைக்கு நீதான் முதல் போனி.
:: சரி, அப்போ அஞ்சாயிரம் ரூபாய் நோட்டு தரவா?
: அஞ்சாயிரம் ரூபாவா?
:: இல்லேன்னா இந்தா பத்தாயிரம் ரூபாய்!
: பத்தாயிரம் ரூபாயா? என்னப்பா கலர் காலரா ரூபாய் நோட்டா நீட்டுற? இதையெல்லா யாருப்பா உன்கிட்ட குடுத்தனுப்புறது?
:: இந்த 500 , 2000 ல்லாம் மோடி கொடுத்தது. 5,000 , 10,௦௦௦ நோட்டெல்லாம் 'டாடி' கொடுத்தது.
: 'டாடி'ன்னா? உங்க அப்பா வா?
:: கோ டாடி!
: 'கோ டாடி'ன்னா?
:: கூகுள்ல சர்ச் பண்ணி எடுத்தேன்யா...
: ஏன்பா.... கவர்மெண்டு அடிச்ச நோட்டு எதுவுமே உன்கிட்ட இல்லையா?
:: இதெல்லாமே கவர்மெண்டு அடிச்ச நோட்டுதான்... ஆனா இப்ப தடை பண்ணிட்டாங்க.
: தடை பண்ண நோட்டையெல்லாம் வச்சிக்கிட்டு ஏன்பா இப்படி என் கடை வியாபாரத்தை கெடுக்குறே?
:: நாட்டுல என்னென்ன நடந்திருக்குதுன்னு ஒரு PK தெரிஞ்சுக்க வேண்டாமா? அதுக்குத்தான்.
: அது என்ன PK?
:: பொது நாலெட்ஜ்!
: (மனதிற்குள் பேசுவது) ஆஹா.... இது அவனேதான்! ஜெனரல் நாலேஜ்ங்கறதை, பொது நாலேஜ்ன்னு ஏன் இப்படி இங்கிலீசையும், தமிழையும் கலந்தடிக்கிறேன்னு கேக்கணும்னுதான் தோணுது. ஆனா கேட்டா..... குண்டங்க மண்டக்க நாமளே மாட்டிக்க வேண்டியதுதான். அதனால கேக்க வேண்டாம்....
:: சும்மா கேட்டுத்தான் பாரேன்....
: என்னது?!.... நான் எதுவும் கேக்கலையேபா.
:: இப்போ மனசுக்குள்ள பேசுனியே அதைக் கேளு.
: நான் மனசுக்குள்ள நினைக்கிறது உனக்கு எப்படிப்பா தெரியுது?
:: ஹா.. ஹா.. ஹா... மனசுதான் உன்னோடது. ஆனா, அதுல ஓடுற நினைப்பு எல்லாம் என்னோடது. தட் ஈஸ் மீ!
: இல்லப்பா..., ஒன்னு தமிழ பேசணும், இல்லேன்னா இங்கிலீசுல பேசணும். ஏன் இப்படி கலப்படமா பேசுறேன்னு கேக்க நினைச்சேன். வேற ஒன்னும் இல்ல.
:: நான் கேட்டேனா?
: என்ன நான் கேட்டேனா?
:: உதயம் பருப்புன்னு பாக்கெட்டை தயாரிச்சு வச்சுக்கிட்டு, அதுல ரேஷன் பருப்பை கொட்டி விக்கிறியே அதை ஏன் கலப்படம் பண்ணுறேன்னு நான் உன்கிட்ட கேட்டனா?
: நான் சொல்லல... என் வாயைப் புடுங்கி என் வயித்துலயே அடிக்கிறான் பாருங்க. இவன் அவனேதான்!! போன்ல வந்தான், பத்திரிக்கையில் வந்தான், டிவியில வந்தான், இப்ப நேருலயே வந்துட்டான்...
ஐயா சாமி, நீ பார்த்திபனா இருந்துக்கோ. ஆனா, என்னை வடிவேலா ஆக்கிடாதப்பா!!......
:: சரி இப்ப என்ன பண்ணலாம்?
: நீதான் யோசிச்சு வச்சிருப்பியே... சொல்லிட்டு கெளம்பு.
:: என்கிட்டே ஒரு பழைய 500 ரூபாய் நோட்டு இருக்கு.. அந்தப் பணத்தை...... இப்ப மாத்தணும்!
: பணத்தை மாத்தணும்னு இப்படி படுத்துறியே... ஆனா, உன் குணத்தை மாத்த மாட்டேங்கறியே.......!!
:: அது கூடவே பொறந்தது. மாத்த முடியாது! மாத்திக்கவும் மாட்டேன்!
: நீ மாத்த வேண்டாம்ப்பா..... நான் மாரிக்கறேன். இந்தா மீதம் 50 ரூபாய். அந்த பழைய 500 ரூபாவை குடுத்துட்டு முதல்ல நீ கெளம்பு.
:: ஹா! ஹா! ஹா!
: ஏன்பா சிரிக்கிறே?
:: ஹா! ஹா! ஹா!
: அட ஏம்பா சிரிக்கிறே?
:: ஹா! ஹா! ஹா!
: ஹா! ஹா! ஹா ..... ஹா! ஹா! ஹா!
:: நீ ஏன்யா சிரிக்கிறே?
: நீ சிரிக்கிறே.... உன்னை பார்த்து ஊரே சிரிக்குது..... நான் சிரிக்கக் கூடாதா?
:: என்கிட்டே ரெண்டு கேரக்ட்டர் இருக்கு...
: இத பார்! கேரட்டு இருக்கு, பீட்ரூட்டு இருக்குன்னு ஏதாவது பேசினே... மவனே ஜுஸ் போட்டு குடிச்சுடுவேன். மரியாதையா ஓடிப்போயிடு!
** வாட்ஸ் அப் பகிர்வூ
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Re: என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்!
நல்லாத்தான் இருக்கு... ஹி..ஹி...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» ரூபா நோட்டு கதை....
» வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|