சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

அரசு...! Khan11

அரசு...!

2 posters

Go down

அரசு...! Empty அரசு...!

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 14:31

அரசு...! Dark-thinking-loneliness-alone-broken2



நான் உன்னிடத்தில் இல்லை...
நான் உனக்கானவனும் இல்லை...
காற்றை யார் கட்டுப்படுத்த...
கடலை யார் அள்ளிக் குடிக்க....
திக்கெட்டும் அலையும் தீயை
குடிசைக்குள் அடைக்க முடியுமா?
வேங்கைகள் எப்போதும் சமாதானம் பேசுவதில்லை
போராளிகள் காதலென்ற போர்வையை
எப்பொதும் போர்த்துவதில்லை..!

எழுதி முடித்து விட்டு மொட்டை மாடிக்கு வந்தேன். மாலை நேரம் எப்போதும் ரம்யமானது. மொத்த பகலின் சூட்டையும் வாங்கிக் குடித்து விட்டுக் குளுமையான இரவினைப் பகிரப் போகும் பூமி சந்தோஷித்துப் புன்னகைக்கும் ஒரு அற்புதமான நேரம். நான் ஒரு கவிஞனாகவும், எழுத்தாளனாகவும், என்னை எப்போதும் நினைத்துக் கொள்வதே இல்லை. தோன்றும் போது எழுதும் எழுத்துக்களுக்கும், பகிரும் செய்திகளுக்கும் எனக்கும் எப்போதும் தொடர்புகள் இருப்பதாக நான் நினைப்பதே இல்லை.

என்னுள் எழுவது எப்போதும் மனிதர்கள் இருக்கும் போதும், இரைச்சல்கள் மத்தியிலுமா வருகிறது? அல்ல..அல்ல அது எப்போதும் வெறுமையில் இருந்துதான் வருகிறது. அப்படிப்பட்ட வெறுமையான தருணங்களுக்காக நான் அல்லாடிப் போகும் அளவிற்கு என்னைச் சுற்றி கூட்டம் சேர்ந்து போய்விட்டதால் என் படைப்புகளுக்குத் தேவையான வெற்றிடத்தின் அடர்த்தி குறைந்துதான் போனது. வாழ்வில் எல்லாவற்றையும் விட ஒரு படைப்பாளிக்கு மிக அவசியமானது தனிமையும், அமைதியும்.....

ஏனெனில் அவனிடம் இருந்து கிளைக்கும் எண்ணங்கள் எங்கிருந்தோ உருவப்படுவதும் அல்ல கடன் வாங்கிக் கடன் கொடுக்கப்படுவதும் அல்ல....! நான் படைப்பாளியா? என்று எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு எப்போதும் புறத்தின் தாக்கங்கள் பற்றிக் கவலையில்லை. உலகியல் நாடகங்களின் சூட்சுமமும் அதன் ஆதி முடிச்சும், ஏன் இப்படி நிகழ்கிறது என்பதற்கும் என்னிடம் பெரும்பாலும் விடைகள் இருப்பதால் என்னை எவையும் ஆச்சர்யப்படுத்துவதும் இல்லை. நான் ஆச்சர்யப்படுவதும் இல்லை.

சரி அதை விடுங்கள் எதற்கு மேலே அப்படி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்? என்றுதானே கேட்கிறீர்கள். உங்களின் கேள்வியில் நியாயம் இருக்கிறது. சமீபத்தில் செதுக்கி எறிந்த ஒரு நிகழ்வின் வெளிப்பாடுதான் அது...

அரசு என்கிற தமிழரசு அதுதான் என் பெயர். இதை ஒரு நாளைக்கு இந்தப் பெயரை 300 தடவை சொல்லி அழைத்த ஒருத்தி அப்படி அழைப்பதன் பின்புலத்தில் என் மீதான அதீதக் காதல் இருப்பதாகச் சொன்னாள். காதல் என்ற வார்த்தையின் மூலம் என்னவென்று நானறிவேன் அது அவ்வப்போது மனிதர்களிடமிருந்தும் வெளிப்படுவதும் என்பதையும் அறிவேன்.



அரசு...! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அரசு...! Empty Re: அரசு...!

Post by மீனு Wed 2 Mar 2011 - 14:36

நண்றாக உள்ளது சரண்யா படித்து விட்டேன் அருமை அரசு...! 331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அரசு...! Empty Re: அரசு...!

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 17:33

மீனு wrote:நண்றாக உள்ளது சரண்யா படித்து விட்டேன் அருமை அரசு...! 331844
நீங்கள் படித்தது கொஞ்சம்தான் மீனு சற்றுப் பொறுங்கள் மீதியும் வருகிறது.


அரசு...! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அரசு...! Empty Re: அரசு...!

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 17:38

சலனமற்ற குளத்தில்
எறியப்பட்ட கல்லாய்...
என்னைக் கலைத்துப்
போட்டது ஒரு காதல்....!

முதல் நாள் என்னைச் சந்தித்தவள் என்னை ஒரு விழா மேடையில் வைத்துப் பார்த்ததாகச் சொன்னாள். எக்மோர் ரயில்வே ஸ்டேசனுக்கு எதிரே இருந்த ரெஸ்டராண்டில் ஒரு காபி குடித்து விட்டு என் ஸ்கூட்டரை எடுக்க நான் வந்து கொண்டிருந்த போது என்னை இடை மறித்தவள் எப்படி என்னை கண்டு பிடித்தாள் எங்கிருந்து என்னைத் தொடர்ந்தாள் என்பதை என் மூளை ஆராயவில்லை.

அரசு.... உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்னு சொல்லிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் உங்க வண்டில போலாமா என் வண்டில போலாமா என்று என்னைக் கேட்டவுடன் எனக்குச் சம்பந்தமில்லாத அல்லது தேவையில்லாத ஒரு நிகழ்வாய் அது பட்டதின் பின்னணியில் என்னுடைய முற்போக்கு மூளையும், நிலையாமைக் கொள்கையும் இருந்தை அவள் அறிந்திருக்க முடியாது.


ஏதோ ஒரு நிகழ்வின் உந்துதலில் அவளுடைய வண்டியிலேயே பயணித்து எங்கே போகிறாய் என்று கேட்கும் முன்னாலேயே காரை அவள் நிறுத்திய இடம் நுங்காம்பாக்கம் ஹை ரோட்டில் ஒரு நட்சத்திர ஹோட்டல். அந்த காஃபி சாஃப் உள்ளே நுழையும் போது கவனித்தேன் மேட்ச் பாயிண்ட் என்ற வாசகத்தை... எனக்குள்ளேயே சிரிப்பு வந்தது...! சற்றும் மேட்ச் ஆகாத என்னைக் கொண்டு வந்திருக்கும் இடம் மேட்ச் பாயிண்ட்.

கவிதைகளையும், கட்டுரைகளையும், இலக்கியத்தையும் அவள் விமர்ச்சித்த விதமும், வேகமும் நான் எதிர்பார்க்காதது. முறிந்த சிறகுகள்ல கலீல் ஜீப்ரான் என்ன சொல்றாருனா... அவள் பேச பேச மெல்லிய வெளிச்சத்தில் எனக்கு ஒரு வித மயக்கம் கலந்த போதை வந்தது என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள். என்னுடைய கவிதைப் புத்கத்தைக் கையோடு கொண்டு வந்தவள் அதிலிருந்து கேள்விகள் கேட்டுப் பெற்று என்னை அவளிடம் மொத்தமாய் ஐக்கியமாக்க....அவளின் அபரிமிதமான அழகு கொஞ்சம் கூட உதவவில்லை மாறாக....அவளின் அறிவு.....

தினமும், பேச்சுக்களாய்.. சிரிப்புக்களாய்.... தொடர்ந்த அந்த நட்பை காதலென்று அவள் சொன்னாள்... அதுதான் காதலா? என்று நான் அவளிடமும் என்னிடமும் கேட்டுக் கொண்டேன். ஏற்கனவே என் வாழ்க்கைப் பற்றிய புரிதலும், இலக்கியக் காதலும், ஆன்மீகமும் சராசரி வாழ்க்கையை விட்டு என்னைத் தூரமாக்கி வைத்திருந்தன.


ஒரே பையன் எழுத்து, எழுத்து என்றிருக்கிறானே என்று 30 ஐ நான் தொடும் வரை துரத்திப் பிடித்தது என் வீடு, திருமணம் செய்யச் சொல்லி....என்னால்தான் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ரிட்டையர்ட் ஆன பெற்றோர்கள் என் சந்தோசத்துக்குக் குறுக்கே இப்போது வராமல் இருப்பதின் பின்ணனியில் அவர்களின் அனுபவமும், புரிதலும் இருப்பதை மறுப்பதற்கில்லை...

சக நண்பர்களுக்கும், இதர இலக்கியப் போட்டியாளர்களுக்கும் நான் ஒரு பைத்தியம் அல்லது சாமியார் இப்படியான கமெண்ட்களை என் காதுபடவே கேட்டிருக்கிறேன். 33 வயது எனது முறுக்கு ரெளத்ரத்தைக் கிளறி விட்டாலும் உள்ளிருந்து எதோ ஒன்று என்னை அடக்கிக் கொண்டே இருக்கும்.....

பெரும்பாலும் என் உலகத்தில் மனிதர்கள் நிறைய இருப்பார்கள் நானிருக்கமாட்டேன். என் கவனித்தல்களும் உள்வாங்குதலும் எழுத்துக்களாய் மாறும்....இதற்காக என்னைப் பாராட்டுவார்கள் சீராட்டுவார்கள் ஆனால் எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைதானே? அத்னால் அதை நான் பொருட்படுத்துவதில்லை...


அரசு...! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அரசு...! Empty Re: அரசு...!

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 17:41

என் ஏக்கங்கள் எல்லாம்..
ஏதோ ஒரு உலகத்திலிருக்க
மனிதர்களின் புகழ்ச்சிகளும்
இகழ்ச்சிகளும் என்னதான்
செய்து விடும் என்னை?

ஓரளவிற்கு என்னைப் புரிந்து இருப்பீர்கள் சரிதானே...? இப்படிப் பட்ட என்னிடம் காதலைக் கொண்டு வந்தவள்தான் நந்தினி....பார்த்தீர்களா.. இவ்வளவு நேரம் அவளது பெயரைச் சொல்லவேண்டும் என்று கூட நான் எண்ணவில்லை. நான் அப்படித்தான் பெயர் சொல்லாமல், என் கதை கேட்காமல் நீங்கள் போனால் போங்கள்...நான் எப்போதும் யாரையும் இழுத்துப் பிடித்து வைப்பதில்லை.

என் வார்த்தைகள்
பிடிபடவில்லை எனில்
என் எழுத்தை ஏன்
மாற்றச் சொல்லுகிறீர்கள்
உங்கள் செவிகளை..
இருக்கப் பொத்திக் கொள்ளுங்கள்..!

இப்படி இருப்பதாலேயே திமிர் பிடித்தவன் என்று என்னை பெரும்பாலும் எல்லோரும் ஒதுக்கினாலும் திருட்டுத்தனமாய் என் எழுத்துக்களை வாசிப்பதையும், கவிதைகளை எடுத்து உபயோகம் கொள்வதையும் அறியாதவனில்லை நான். போகட்டும்... மனிதர்களின் கபட எண்ணங்களோடு போட்டியிட நானில்லை...



எலும்பு பொறுக்கும் நாய் போல ஊரில் இருப்பவர்களின் கருத்துக்களை எல்லாம் பார்த்துப் பார்த்துச் சேர்த்து என்னைத் தீர்மானிப்பவனில்லை நான். நந்தினிக்கு என்னைப் பிடித்துப் போனது அவளது துரதிர்ஷ்டம்தான் என்று சொல்வேன். இலக்கில்லாமல் பயணம் செய்த என்னை ஒரு கட்டுக்குள் கொண்டு வர அவள் முதன் முதலாய் செய்த முயற்சி அசிங்கப்பட்டுப் போனது.....சென்னை மெரினாவில்...

காலையில் வாக்கிங்க் போக மனிதர்கள் மெரினா போவார்கள் நான் மனிதர்கள் வாக்கிங் போவதை பார்க்கப் போவேன். என்னைப் பார்க்க நந்தினி வருவாள். அவளின் இலக்கியம் சார், கடவுள் தேடல் சார், விழிப்புணர்வு சார் பேச்சுக்களை ரசித்த என்னால் அவளின் லெளகீக தத்துப் பித்துக்களை ரசிக்க முடியவில்லை.

முதலில் என்னை ஏன் நீங்க வாக்கிங் போனால் என்ன? என்று அவள் கேட்டு விட்டு என் உடல் நலம் பற்றிய அக்கறையை அவள் வார்த்தைகளில் கொண்டு வந்ததிற்கு பின்னால் அவளின் காதல் இருந்தது என்பதை விட......இனி நீ என் பொருள்... நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லிய அடக்குமுறை தான் நளினமாய் வெளிப்பட்டது...

பல முறை அவளிடம் சொல்லியிருக்கிறேன். உன் காதலும் என் காதலும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக மட்டும் இருக்கட்டும் மாறாக அடக்க வேண்டாம், அறிவுறுத்த வேண்டாம் என்று....அவள் என்ன செய்வாள்? உலக நியதிகளின்படி என்னைக் காதலிக்கிறாள்..........நான் அவளைப் பிரபஞ்ச நியதிகளின் படி காதலிக்கிறேன்...! இப்படி அவளிடம் நேரேயும் சொல்லி விட்டேன்.. அப்படிச் சொன்ன பிறகு உலக நியதியும் பிரபஞ்ச நியதியும் என்ன? என்று அவள் கேட்டதை ரசித்தேன்.. அது சம்பந்தமான அவளின் வேகமானப் பேச்சை ரசித்தேன்...ஆழமான அறிவினை ரசித்தேன்....


அரசு...! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அரசு...! Empty Re: அரசு...!

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 17:49

காற்றில் பறக்கும் அவளின் கேசத்தை ரசிக்கவும், கூரான நாசியையும், அலையும் விழிகளையும், அளவான உதட்டையும் என் மனது ரசிக்கச்சொல்லி என்னைத் திசை மாற்றிய பொழுது எல்லாம் அதைக் கிட்டத்தட்ட செருப்பால் அடித்து இருக்கிறேன். காமம் இங்கே தவறாகக் கையாளப்படுகிறது..... என்னைப் பொறுத்த வரையில்..... ரசிப்பு...ரசிப்பில் லயிப்பு... லயிப்பில் அன்பு, அன்பில் காதல்...அந்தக் காதலை வெளிப்படுத்த எல்லாவகையிலும் முயன்று உச்ச பட்சமாக அதை வெளிக்காட்ட காமம்.....

கடைசியில் வரும் காமம் பூர்த்தி செய்யும் ஒன்றாய் வரவேண்டும்...! பூரணத்தின் அருகே கூட்டிச் செல்லும் அந்த நிகழ்வில் காதலையும் அன்பையும் வெளிப்படுத்தும் போக்கு இருக்கவேண்டும்....! ஆனால் இங்கே என்ன நிகழ்கிறது.....காமத்தின் பால் எல்லாம் நிகழ்கிறது, காமமே பிரதானம் அதை மையப்படுத்தி மற்ற எல்லாம் வருகிறது..........அதனால்தான் முரண்கள்....


நீயும் நானும் இனி காதலன் காதலி போர்வை போர்த்த முடியாது. நட்போ என்ன கருமமோ நமது தொடர்பு அறிவு சார்ந்ததாக இருக்கட்டும்.....அதைக் காதல் என்ற கட்டுக்குள் கொண்டு வராதே நந்தினி...உன் அதிர்வுகள் என் படைக்கும் திறனைக் குலைத்து விடக்கூடாது மாறாக அது உத்வேகம் கொடுத்து அதிகப்படுத்துவதாய் இருக்கவேண்டும். நான் எப்போதும் கவிதைகள் எழுதுவேன்.. சில நேரம் காதல் கவிதைகள் கூட எழுதுவேன்.. அதில் உன்னைப் பற்றிக் கூட எழுதினாலும் எழுதுவேன் அது என் மனோ நிலை பொறுத்த விசயம். ஆனால் உன்னை மட்டுமே எனக்குள் நிரப்பி வைத்துக் கொண்டு என் ஏகாந்த கனவுகளை என்னால் சிதைத்துக் கொள்ள முடியாது. நாம் பிரியவேண்டாம் ஆனால் உன்னை நானும் என்னை நீயும் கட்டுப்படுத்த வேண்டாம்.

நீ என்னைக் காதலிக்காதே என்று சொல்லமாட்டேன்.....ஆனால் என்னால் உன்னை மட்டும் காதலிக்க முடியாது. என் உலகத்தில் காதல் என்ற வார்த்தையின் பொருள் வேறு அது சராசரி மனிதர்களால் ஜீரணிக்க முடியாதது என்பதாலேயே திருமணமே வேண்டாமென்று நகர்ந்து இருக்கிறேன். உன்னைப் பிடித்திருக்கிறது......அதுவும் உன் அறிவால் ஏற்பட்ட ஈர்ப்பு.......ஆனால் உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது என்று பொய் சொல்ல மாட்டேன்.


நந்தினியால் என்னை எதிர் கொள்ள முடியவில்லை. அழுதாள்...அழுதாள்...விளக்கினாள்..எடுத்துச் சொன்னாள்... ஆனால் எல்லாமே என்னைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுப் போயின. அவள் காயப்பட்டிருப்பாள் என்பது தெரியும் ஆனால் இந்தக் காயம் பல வகையில் சிறந்தது. இல்லையெனில் என்னைக் காதலித்துக் கட்டுக்குள் வைக்க திருமணம் அது இது என்று போய்...ரொம்பவே காயப்பட்டிருப்பாள்.

தோள் சாய வந்தவளைத் தோளில் சாய்த்துக் கொண்டேன்...........கரம் பற்றிச் சொன்னேன். இனி அறிவு சார்ப் பயணமாய் இருக்கட்டும் நமது உறவு........நான் போகிறேன் என்று சொன்னேன்... அவள் அழுதாள்...! சொல்லி முடித்து விட்டு..........நான் உன்னை நேசிக்கிறேன் நந்தினி........! ஏதாவது தேவையென்றால் சந்கேகம் என்றால் நான் உன்னை அழைக்கிறேன் நீயும் என்னை தேவை என்றால் அழை........வருகிறேன்............

மீண்டும் சொல்கிறேன் நான் உன்னை நேசிக்கிறேன்....சொல்லி விட்டு அவளின் கார் விட்டு இறங்கி வந்து விட்டேன்......!

வீட்டுக்கு வந்தவுடன் முகம் கழுவி என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுத ஆரம்பித்ததுதான்....


நான் உன்னிடத்தில் இல்லை...
நான் உனக்கானவனும் இல்லை...
காற்றை யார் கட்டுப்படுத்த...
கடலை யார் அள்ளிக் குடிக்க....
திக்கெட்டும் அலையும் தீயைக்
குடிசைக்குள் அடைக்க முடியுமா?
வேங்கைகள் எப்போதும் சமதானம் பேசுவதில்லை
போராளிகள் காதலென்ற போர்வையை
எப்பொதும் போர்த்துவதில்லை..!

மாலை முழுதாய்ச் சென்று விட்டது........! இரவின் ஆக்கிரமிப்பு தொடங்கி விட்டது......நான் ஆழமாக சுவாசித்தேன்.......மறுபடியும்....கீழிறங்கி எனது அறைக்கு வந்தேன்....

என்னோடு யாருமில்லாவிட்டால் என்ன?
இரவும், பகலும், காற்றும், மரமும்
இல்லாமலா போய் விடும்?......

நான் எழுதிக் கொண்டிருந்தேன்......

:];: இணையம்.


அரசு...! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அரசு...! Empty Re: அரசு...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
»  அரசு என்ன செய்யபோகிறது ?
» 45 வயதிலேயும் அரசு வேலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum