சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சுடலை....! Khan11

சுடலை....!

Go down

சுடலை....! Empty சுடலை....!

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 18:43

சுடலை....! Kjhhggggggg


எல்லோரும் போய் விட்டார்கள் சுப்பையாவை தவிர. அந்த கார்கால 7 மணியில் கிராமத்து இருட்டு கருமையை எனக்கென்ன என்று பரவவிட்டு இருந்தது. சுப்பையாவை கவனிக்கமால இருந்த மாசனாம் தன்னுடைய வேலையில் மும்முரமாயிருந்தார். கட்டுக்களை எல்லாம் பிரித்துக் மேலே சமமாக சாணி ராட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.

குய்யோ முறையோ என்று உறவுக் கூட்டம் கதறுவதும் பின் கடைசியில் மாசானத்தின் பொறுப்பில் விட்டு விட்டு வீடு போய்ச் சேருவதும் இன்னிக்கு நேத்தா பார்க்கிறார் மாசானம்.

எத்தனையோ உடல்கள் வருகின்றன எரித்து... எரித்து அந்த எரித்தலில் ஒரு புரிதல் ஏற்பட்டு வாழ்க்கையில் ஒரு நிதானத்துக்கு வந்த மாசானம் இருட்டில் தகர கொட்டகை ஓரமாய் அமர்ந்திருந்த 15 வயது சுப்பையாவை அப்போதுதான் கவனித்தார்....! அட..சுப்பையா.. என்னப்பு.. நீ போகலியா? கேள்வியில் ஆச்சர்யத்தை திணித்து சுப்பையாவை உற்றுப் பார்த்தவராய் கேட்டார் மாசானம்.

இல்லண்ணே என்ன செய்வீகன்னு பாக்க ஆசையா இருந்துச்சு.. அதாண்ணே... சுப்பையாவின் பதில் கேட்டு மாசானம் சிரித்த சிரிப்பில் பக்கத்து மரத்தில் இருந்த பறவைகள் பயந்து போய் கத்த தொடங்கின. ஏய் தம்பி கிறுக்கு புடிச்சு போச்சா..சுடுகாட்ல உக்காந்து கிட்டு என்ன கேள்வி கேட்டுகிட்டு.... ? உங்க அப்பு ஆத்தாக்கு தெரிஞ்சா வைவாக (திட்டுவாங்க) நீ வெரசா கிளம்பப்பே.... எனக்கு கொள்ளை வேல கிடக்கு....

அது ஒண்ணுமில்லண்ணே ஒரு நாத்து இருந்து சும்ம பாக்றேண்ணே....ன்னு சுப்பையா அவரின் சம்மத்தை வலுக்கட்டாயமாக பெற்றுக் கொண்டன்....! அட என்ன தம்பி சரி இருங்க ஆன எரிய ஆரம்பிச்ச உடனே வெரசா போய்டனும். சரியா....! இங்க பிசாசுங்க இருக்கு என்று சொல்லிவிட்டு அவர் வேலையில் மும்முரமானார்.

சுப்பையா உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டான். பிசாசு... இருக்கா? ஹா..ஹா..ஹா...செத்த மனுசந்தானே பிசாசா வருவான்....வரட்டும் வரட்டும் அப்படி ஒரு வேலை வந்தா நான் பேசி சமாளிச்சுகிறேன். இருக்குற மனுசன் கிட்டதான் பிரச்சினை எப்பவும் பின்னால குத்தறதுக்கும், புறணி பேசுறதுக்கும், காசு பணம் சேக்கவும் ஆட்டமா ஆடுவாய்ங்கே.. செத்த பின்னானாடி என்னத்த செய்ய போறனுக வரட்டும் வரட்டும்..மனதுக்குள் சொல்லிக் கொண்டே... எரியூட்டப் போகும் அந்த உடலின் மீது மனதை செலுத்தினான் சுப்பையா....

கருப்பையா பிள்ளை.....ஆமாம்..." கண்டி முதலாளி பருத்திக்கண்மாய் கருப்பையா பிள்ளை" அப்படின்னு சொன்ன...குருக்கத்தி, விட்டனேரி, பருதிக்கண்மாய், கிளுவச்சி, ஒருபோக்கி, பாப்பான் கண்மாய், கொல்லங்குடி, நரிக்குடி, நாட்டரசன் கோட்டை, காளையார்கோவில் வரைக்கும் படு பேமஸ். தெரியாத ஆளு இல்லை. சுப்பையாவுக்கு 7 வயசு ஆன 1954ஆம் வருசத்துல தான் நல்லா விவரம் தெரிஞ்சு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சான் சுப்பையா. இவனுக்கு பெரியப்பாரு முறை வேணும்.



சுடலை....! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சுடலை....! Empty Re: சுடலை....!

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 18:50

வானம் பாத்த பூமி மக்க...எப்பவும் வெதைய விதைச்சுப் புட்டு அண்ணாந்து பாத்துகிட்டே திரியுங்க...எப்பாடா வான ராசா கண்ண தொறப்பாரு...எம் புஞ்சைகாட்டு புள்ளையலுக்கு எல்லாம் மழையா வந்து விழுந்து எங்க வயித்துப் பாட்ட தீப்பாருன்னு ஏங்கிகிட்டு அலையிற சனம், கம்மாயில இருக்குற சொச்ச தண்ணிக்கும் முறை வச்சி தொறந்து விட்டு புட்டு கம்மா தண்ணி கொறய கொறய வயித்துல நெருப்பெரிய ஆரம்பிக்கும்...கண்ணுல மிரட்சியா...ஏப்பே... இன்னிக்கு நாளைக்கு மழை தண்ணி விழுகுமா?ன்னு ஒருத்தர ஒருத்தரு கேக்கவும்...விழுமப்பா...நேத்து காயஓடை பக்கமெல்லம் நல்ல மழை விழுந்துருக்குப்பா... மங்கலம் கம்மா பாதிக் கம்மா பெருகிருச்சாம்பா...! நமக்கும் விழும்பா...ஒருத்தரை ஒருத்தர் கேள்வி கேட்டு பதில் சொல்லி ஒரு மிரட்சியான வாழ்க்கை...

சில நேரம் விளையும் பல நேரம் விளையாது இருந்தாலும் வாழ்க்கையை சமமாக பார்க்கும் மனம் கொண்டவர்கள். இவர்களுக்கு மத்தியில் கண்டி கருப்பையா பிள்ளை ஒரு ஆதர்சன கதா நாயகன் தான் எல்லோருக்கும்.

சுப்பையாவுக்கு பெரியப்புதானே...அதுவுமில்லாம சுப்பையாவோட அப்பு ரங்கூன் போறதுக்கு முழுக்காரணமே கருப்பையாபிள்ளைதான். முத தடவை சுப்பையா.. அவுக அப்பு கூட பருத்திகண்மாய்க்கு கருப்பையாபிள்ளை வீட்டுக்கு போனதே பெரிய அனுபவம்தான்...!

1 கிலோ மீட்டர் சதுர பரப்புக்குள் கருவ முள் அடஞ்ச வேலி. பெரிய மூங்கிப்படல் அடஞ்ச கதவு.. அதாண்டி உள்ள போனா..ரெண்டு பாக்கமும் நெறய தென்னங்கண்டுக (மரம்) அத தாண்டி அதோ உள்ள தெரியுதப்பா பெரியா கோட்ட மாதிரி வீடு.....சுப்பையா திணறிப்போய் பார்த்துக் கொண்டிருந்தான்.


மனிசங்க இப்படியும் கூடவா வாழ்வாய்ங்க.....சுப்பைய அவுக அப்பு கைய கெட்டிய பிடிச்சுகிட்டு நடந்து போக சொல்ல எங்கே இருந்தோ வந்துசுப்பா.. ரெண்டு நாட்டு நாய்க.. ஒண்ணு ஒண்ணும் ஒரு கன்டுகுட்டி பெருசல.. வெல வெலத்து போன சுப்பையா.. கண்ண மூடிக்கிட்டு மாரநாட்டு கருப்பே.. எங்கள காப்பாத்து சாமீன்னு வேண்ட ஆரமிச்சுட்டான்.. நாய்க ரெண்டும் பாஞ்சுகிட்டு வருதுக....வெரசா.......

நல்ல வேல வெரசா வந்த ரெண்டு ஆளுக பிடிச்சு கொண்டு போய்ட்டாக... அந்த ரெண்டு பிசாசுகளையும். வீட்டு திண்ணையிலதேன் நின்னாக சுப்பையாவும் அவுக அப்புவும் ...!

செவ செவன்னு வந்தாருப்பா கருப்பையா பிள்ளை.. ! ஆத்தேய்..........எம்புட்டு உசரம், பவுனு கலரு, கொண்டையா மாறி தோல்ல கிடக்குற முடில இடை இடையே கொஞ்சம் நரை...வெத்தலை பாக்கு போட்டு செவந்து போயிருந்த உதடு.. முரட்டு மீசை, மிரட்ற கண்ணு... வெள்ள வேட்டி.. மேல ஒரு துண்டு...இம்புட்டு பெரிய செயினு எல்லாமா தங்கத்துல போடுவாக....!!!!சுப்பையா இன்னும் ஆச்சர்யத்தில் இருந்து வெளியே வரவில்லை.



சுடலை....! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சுடலை....! Empty Re: சுடலை....!

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 20:25

ஏப்பே.. என்ன அங்கனாதான நின்னுகிட்டு...உள்ள வாம்ல...." அவரு கொடுத்த சத்ததுல பேசாம உள்ளே போனாக சுப்பையவும் அவுக அப்புவும்."

வீட்ல வேலைக்கின்னே பத்து ஆளுக, அடி புடி சன்டைக்கின்னே பத்து ஆளுக இருப்பாக தம்பி...! அண்ணனுக்கு கண்டில (இலங்கை) கடை இருக்கு நல்ல யாவாரம். அடிக்கடி மலேசியா போய்ட்டு வருவாக.....! நாம சாப்பிடும் போது சோறு போனிச்சில்ல உன்னைய தண்டி டிப்பன் கேரியர்ல சுப்பையாவின் உயரத்தை காட்டி பேசிக் கொண்டிருந்தார்....அவுக அப்பு...! அந்த டிப்பன் கேரியர் அவுக மயன் சிரமட்டானுக்கு போகுதுப்பே....!


சிரமட்டானுக்கு எதுக்கு வேல வெட்டி....? அவன் நாட்டரசன் கோட்டையில் கிளப்புல சீட்டு விளையாடிகிட்டு இருப்பான்.....! காசும் சோறும் வீட்ல இருந்துதேன் போகுதுன்ன்னு அப்பு சொல்லிக் கொண்டே போனார்....!கொள்ளை காசு இருக்குப்பா..அதேன் அவுக அப்படி இருக்காக....நாம எல்லாம் வயக்காட்டுல இறங்கி வேல செஞ்சாதேன் நமக்கு மூணு வேல கஞ்சியாச்சும் கிடைக்கும்.....பேசிக் கொண்டே இருந்தார் சுப்பையாவின் அப்பு...கேட்டுக் கொண்டே நடந்தான் சுப்பையா.


சுப்பையாவுக்கே நல்லா தெரியும்...கருப்பையா பிள்ளை ஊருக்குள்ள வாராறுன்னா...கிளுவச்சி தாண்டி வண்டி வரும் போதே மாடுக வர சலங்க சத்தம் கேக்க அரம்பிக்கும்! ஊருக்குள்ள இருக்குற மக்கமாருக்கெல்லாம் கிறுக்கு புடிக்க ஆரம்பிக்கும். கூட்டு வண்டி வச்சு இருக்கவக அப்போ எல்லாம் பெரிய ஆளுக...!எல்லாரும் தட்டு வண்டிதான் வச்சு இருப்பாக அதுவும் வெள்ளாம வெளச்சலுக்ககாக... கூட்டு வண்டி வச்சி இருக்கவக பயணப்பட மட்டும்தேன்........


இரட்டை மாட்டு வண்டி பூட்டி, மாட்டுக் கொம்புகளுக்கு பூண் போட்டு கழுத்துல சலங்கை கட்டி வந்திருச்சுயா வண்டி ஜோரா ஊருக்குள்ள! சனமெல்லாம் திரண்டு நிக்கிது ரெண்டு பக்கமும் கருப்பையா பிள்ளைய பாக்க....! அவரு வருவாருன்னே எடுக்காத ரங்கூன் கம்பளத்த எடுத்து விரிச்சு, வீடு முன்னால சாணி தெளிச்சு கோலம் போட்டு....யாரு வந்தாலும் எடுக்கதா பீங்கான் பலிங்கத்த (வெற்றிலை எச்சில் துப்பும் பாத்திரம்) எடுத்து வெச்சு வீடு தொடச்சி....வெத்திலைய பரப்பி வச்சு குடிக்க பானகம் கரைச்சு வச்சு காத்தே கிடக்குது சுப்பையாவோட வீடு…!

கருப்பையா பிள்ளை வந்து வண்டிய விட்டு இறங்குறதும், அவரையும் அவரோட பெண்டையும் ஊருசனம் வாய்பிளந்து வேடிக்கை பார்க்குறதும் அவர் உக்காந்து வெத்திலை போட்டுகிட்டு செவக்க செவக்க அவரோடு கண்டி கடை பத்தியும், மலேசிய பயணத்தையும் பத்தி சொல்றதையும்னு... ஊரு சனமே வாய பொளந்து கிட்டு கேக்குறதை விட அவரு உடுத்தியிருக்கிற பட்டு சட்டையையும் வேட்டியையும் அங்கவஸ்திரத்தையும், கழுத்து செயினையும் பாக்க நிக்குற கூட்டம்தான் அதிகமிருக்கும்...


சுடலை....! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சுடலை....! Empty Re: சுடலை....!

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 20:31

வந்துட்டு போகும் போது கை நெறய எல்லாருக்கும் காசு கொடுத்துட்டு போவாரு கானா ரூனா..ஆமாம் அப்படித்தேன் ஊரு சனமே கூப்பிடும்....! போய் ரெண்டு நா வரைகும் ஊருக்குள்ள பேச்சு இருக்கும் கானா ரூன வந்தாரப்பே.. நான் பாத்தேனப்பே.. என்ன மனுசன் தெரியுமான்னு முக்குக்கு முக்கு நின்னு பேசிக்கிட்டு இருப்பாக....

இப்படியே போன வாழ்கையில் எவமுட்டு கொள்ளி கண்னு பட்டிச்சோ..தெரியல ..!சுப்பையாவுக்கு அரச புரசலா வீட்டுல பெரியவுக பேசுற பேச்சுல இருந்து ஏதோ புரிஞ்சுச்சு.. கானா ரூனவுக்கு தொழிலு நொடிச்சு போச்சாம், கண்டி கடைய கூட வித்துப்புட்டாறாம்...மலேசியாவுல யாரோ கொடுக்கவேண்டிய காச ஏச்சுபுட்டாகளாம்...இப்படி கேட்டுகிட்டே இருந்த சுப்பையாவுக்கு ஒரு நா கானா ரூனா சம்ஸாரம் தவறிப்போச்சுன்னு அப்பும் ஆத்தாளும் அழுதுகிட்டு பருத்திகம்மாயிக்கு ஓடுனத பாத்து வெலவெலத்து போச்சு.....!


ஆத்தி...ஒரு மனுசன கடவுளு எம்புட்டுதேன் சோதிப்பாரு.....ன்னு பயந்தே போனான் சுப்பையா...

கானா ரூனா சம்ஸாரம் தவறி ஒரு மாசத்துக்குள்ள பருத்திகம்மா வீட்டயும் கடங்காரவுக கிட்ட கொடுத்துபுட்டு...புள்ளையள எல்லாம் கானா ரூனா அக்கா வீட்டுக்கு சீமைக்கு அனுப்பி விட்டதா சொன்னாக....

ஒரு நா சுப்பையா சோட்டு பயலுக கூட வெளையாடிக்கிட்டு இருந்தான் தெருவுல.....! அட..யரோ ஒரு கிறுக்குப்பய கையல் குச்சியோட ஒத்த கோமணத்தோட தாடியும் மீசையுமா வாறனப்பா ஊருக்குள்ள...வெளயாட்ட நிறுத்தி புட்டு புள்ளக்குட்டியெல்லாம் போய் அவன சுத்தி சுத்தி ஏசுதுக...கத்தி கத்தி பரிகாசம் பண்ணி விளையாடுதுக....

"கோவணாண்டி.. கோவணான்டி...கொட்டங்குச்சி கையில வச்சிருக்க கோவணான்டி" ன்னு பக்கிய பாட்ட வேற பாடுதுக......


மெல்ல போயி சுப்பைய குறு குறுன்னு பாத்தான் அந்த பைத்தியத்த......

"யப்பே......கானா ரூனாவுல்லா வந்திருக்காருன்னு......"

கத்திக்கிட்டு வீட்டுப்பக்கம் பரிஞ்சு ஓடியே போனான் சுப்பையா....! கொஞ்ச நாளாவே.. வீட்ட வித்துப்புட்டு சீமை பக்கம் போறேன்னு சொல்லிட்டுப் போன கானா ரூனாவ அதுக்கப்புறம் யாருமே காங்கல...!இப்போதேன் கிராமமே கூடி நின்னு காங்குதுக.....!

சுப்பையாவோட அப்பு எம்புட்டோ மல்லுக்கு நின்னு வீட்ட்டுக்கு வாங்கனேன்னு கெஞ்சி பாத்தாரு..ம் ஹும் ஒண்ணும் கத நடக்கல! கருப்பையா பிள்ளை கலரு மங்கிப் போயி..கண்ணு எல்லாம் குழிஞ்சு போயி, கன்னம் ஒட்டிப்போயி .. கம்பங்கதிரு போல கொளுத்து நின்ன மனுசன்.. கருக்கருவாமாறி கருத்துப் போயி இருக்காரப்பா.....


ஏப்பே அவரு கிறுக்கோண்டு போயிட்டாருப்பே...." விட்டுத் தள்ளுங்க ...அப்போ அப்போ....காணுற ஆளுக கஞ்சிய தண்ணீய கொடுக்கணும்னு முடிவு பண்ணிப்புட்டு கலைஞ்சே போச்சு....ஊரு சனம்...!

நிதமும் சுப்பையா கானா ரூனாவ தெருவுல காங்குறதும்...வீடு வீடா போயி கான ரூனா சோறு வாங்கி உங்கறதும்னு ஓடிகிட்டே இருந்தச்சு பொழுது. சுப்பையா மட்டும் நினைப்பான் இடைக்கி இடைக்கி....எப்படி இருந்த மனுசன்..ஊரே கூடி வேடிக்கை பாத்த ஆளு....இப்போ சீண்ட கூட நாதி இல்லாமே எல்லாம் தோத்துப்புட்டு இப்படி கிறுக்கோண்டு அலையுதே...தெருவுல....


ஏ சாமிகளா....எங்களா போனீக....மனுசப் பொறப்ப இப்படி சீரழியற பொறப்பா படச்சிபுட்டு...எங்களா சாலியா இருக்கீக....! வருசமான பொங்க ஆடு கோழின்னு பழிகொடுக்குறம்லா.....! பூசை, மாலைன்னு போங்க............சாமீகளா... நீங்க ஏக்கிறீக.......மனுசப்பய எல்லாம் ஏமாந்து நிக்கிறாய்ங்க.....! நெசமாவே நீங்க இருந்தா இந்த மனுசன இப்படி சீரழிப்பியலா...மூச்சுக்கு முன்னுறு தடவ.........நமச்சிவாயா நமச்சிவாயான்னு சொன்ன மனுசன இப்படி கோவணத்தோட கிறுக்கோண்டு போக வச்சுபுட்டியளே..." சுப்பையாவுக்கு ஆத்திரமும் அழுகையும் வெடித்துக்கொண்டு வந்தது.


சுடலை....! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சுடலை....! Empty Re: சுடலை....!

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 20:38

காசு இருக்கப்ப பேதில போவாய்ங்க வந்து வேடிக்க பாத்தாய்ங்ஙே...! ஆகா ஓகோன்னு முகத்துக்கு நேர பேசுனாய்ங்க...காசு இல்லேன்னா..மதிக்கமாட்டாய்ங்க... ! எலே மக்கா வாங்க.. இந்தா கானாரூனா வந்து இருக்காரு.. புளிய மரத்தடியில சுருண்டு படுத்து கிடக்காரு....! வர்றவன் போறவனுக்கெல்லாம் அள்ளி கொடுத்த மனுசன்.. இந்தா புழுதில கிடக்காரு....வாங்க மக்கா...! ஒரு நாதியும் வராது...கானாரூனாகிட்டதான் காசு இல்லையே....இப்ப...!

ரெண்டு மூணு நா புளிய மரத்தடில கிடந்த மனுசன் நாலாம் நா படக்குன்னு செத்துப்போனாரு...! என்ன நினைச்சு உசுர விட்டாரோ மகராசன்...

"ஆண்டு அழிஞ்சு போச்சே...
அயிர மீனு காஞ்சு போச்சே....
கொளத்து தண்ணியெல்லாம்...
கோடையில வத்திப் போச்சே....
ஊர ஆண்ட மகராசான்
உடம்ப விட்டு உசுரு போச்சே!


ஆடி ஆத்தி.....ஆத்தி...ஆத்தி..ஆத்தி...ஆத்தி...!"

சுப்பையாவோட அப்பத்தா நெஞ்சுல அடிச்சுகிட்டு அழுதத சுப்பையா இன்னும் மறக்கல......!

" ஏய் தம்பியோவ்.... நான் பொணத்த எரிக்க போறேன் நீ கெளம்பு ராசா" சுப்பையாவோட நினைவை அசைச்சுப் போட்டாரு.......மாசானம்...! அண்ணே செத்தவடம் இருந்து பாத்திட்டு போறேண்ணே....! கெஞ்சலுக்கு வழி விட்டு... மாசானம் பேசாம சோலிய பாக்க போனாரு....


கொளுந்து விட்டு நெருப்பு மனுச உடம்பு மேல பத்துறதா கண்ணு கொட்டம பாத்துகிட்டே இருந்தான் சுப்பையா...! டப் டப்னு சத்தம் வந்துச்சு செத்த வடத்துக்குள்ள..மாசானம் சொன்னாரு.. தம்பி நரம்பு எல்லாம் இறுக்கமாகி அறுகுது பத்தியான்னு சொல்லிப்புட்டு..

கெக்க.. கெக்க கெக்கன்னு வேகமா சிரிச்சாரய்யா மாசானம்... !

அப்பதேன் பொணத்த பாத்து கூட பயப்படாத சுப்பையா கெலுக்குன்னு பயந்தே போனான்....! சுதாரிச்சிகிட்டு மறுக்கா சிரிச்சு வச்சான்…! தம்பி.. இப்ப உடம்பு எந்திரிக்கும் பாருன்னு சொல்லிகிட்டே நரம்பு எல்லாம் இறுக்கமாயி வெறச்சு எழுந்த பொணத்துல.......

"

நெஞ்சுல ஒரு அடி......! காலு முட்டிக்கு பக்கத்துல ஒரு அடி......! கம்புல அடிச்ச வேகத்துல சொன்னாருப்பா மாசானம்....அம்புட்டுதேன்..... மனுசப்பய பொறப்புன்னு....." சொல்லிப்புட்டு.... பைக்குள்ல வச்சிருந்த உடுக்கைய எடுத்து....மனுசன் அடிச்சாரு பாருங்க...

" த்துதும்..தும்..தும் தும்..த்த்தும்தும் தும் த்தும் தும்தும்....த்துதும் தும் தும்.. தும்ம் தும்த்துதுதும் "

நாடி நரம்பு எல்லாம் எந்திருச்சு நின்னு ஒரு ஆட்டம் உள்ளுக்குள்ளேயே நடந்துச்சு சுப்பையாவுக்கு...!

உலகமே ஆட்டம்...! உலகமே ஓட்டம்....! எல்லாமே...எல்லாமே கண்ணுக்கு தெரியுற எல்லாமே...ஓண்ணுவிடாம ஒழிஞ்சு போகும்....! இந்த உடுக்கைல வர்ற சப்தம் மாறி... அழுத்தமா அடிச்சு சப்தமா வெளிய வந்து காத்துல கரைஞ்சு மெலிஞ்சு கரைஞ்சு போற மாதிரி....


மனுசப்பய வாழ்க்கையும் ...ஆர்ப்பட்டமா அழுத்தமா ஆரம்பிச்சு....மெலிஞ்சு ஒழிஞ்சு தேஞ்சு போகுகுப்பேய்....!..... சப்தத்துக்கு அர்த்தம் இருக்கா...? இல்லை.. ஆன சப்தம் இருக்கு..! காத்துல கேக்குற வரைக்கும் ஓசை... கரைஞ்சு போனா... ஒண்ணுமில்ல...!

எங்க போச்சு ஏன் மறஞ்சு போச்சுன்னு என்னிக்காச்சும் ஆராஞ்சு இருக்கமா இல்லைல..அது மாதிரிதான்.. மனுச வாழ்க்கையும்...செத்துப் போனா போய்ட்டான்...அம்புட்டுதேன் அவனாச்சு.. அவன் உடம்பாச்சு அவன் உசுராச்சு...! என்னத்துக்கு ஆராய்ச்சி? என்னதுக்கு களவாணித்தனமான கற்பனை....போங்கப்பே...போங்க.... ! சுப்பையாவுக்குள்ள என்ன என்னமோ தோணிச்சு....


எலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சுப்பையோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! "

துரத்துல ஆத்தாவோட (அம்மா) குரலு காத்துல சுப்பையாவ தேட ஆரம்பிச்ச நேரம்.....பதில் கொரல் கொடுத்தான் சுப்பையா ....


இதோ வாரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஆத்த்த்தோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"

சுப்பையாவின் சத்தம் காற்றை கிழித்துக் கொண்டு போனது ஆனால் மாசானம் உடுக்கை அடியை நிறுத்த வில்லை......! கிளம்புறேன் அண்ணே சுப்பையா சொன்னது மாசானம் காதில் ஏறவில்லை....அவர் தன்னிலையில் இல்லை எனபது சுப்பையாவுக்கு புரிந்தது...


வீடு நோக்கி இருட்டில் நடந்து கொண்டிருந்தான் சுப்பையா...........காற்றில் உடுக்கை சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது...........

" த்துதும்..தும்..தும் தும்..த்த்தும்தும் தும் த்தும் தும்தும்....த்துதும் தும் தும்.. தும்ம் தும்த்துதுதும் "

:];: warrior.


சுடலை....! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சுடலை....! Empty Re: சுடலை....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum