Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
அரசுக் கல்லூரியில் ரூ.11,600; ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.8 லட்சம் கட்டணம்!- இது நியாயமா
Page 1 of 1
அரசுக் கல்லூரியில் ரூ.11,600; ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.8 லட்சம் கட்டணம்!- இது நியாயமா
"சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும்
பல் மருத்துவக் கல்லூரியை, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்
பல்கலைக்கழகத்தின் நிர்வாக வரம்புக்குள் கொண்டுவரும்
போது, அவற்றின் கட்டணங்களையும் அரசு மருத்துவக்
கல்லூரிகளின் கட்டணம் அளவுக்குக் குறைக்க வேண்டும்" என்று
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஓர்
அங்கமாகச் செயல்பட்டு வரும் ராஜா முத்தையா மருத்துவக்
கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை
அரசுக் கல்லூரிகளாக அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.
தமிழக அரசின் இந்தத் திட்டம் சரியானது என்பதில் ஐயமில்லை.
ஆனால், நிர்வாக மாற்றம் மட்டுமன்றி, கட்டண மாற்றமும்
செய்தால்தான் இந்நடவடிக்கை பயனுள்ளதாக அமையும்.
பா.ம.க முன்வைத்த யோசனைப்படி, சிதம்பரம் அண்ணாமலைப்
பல்கலைக்கழகம் கடந்த 2013-ம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்ட
போதிலும், அதன் முழுமையான பயன்கள் இன்னும்
மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை.
பல்கலைக்கழகத்தின் அங்கமாகத் திகழும் ராஜா முத்தையா
மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி
ஆகியவை பெயரளவில் அரசுடைமையாக்கப்பட்டாலும்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனியாரின் கைகளில்
இருந்தபோது வசூலிக்கப்பட்ட கட்டணம்தான் தொடர்ந்து
வசூலிக்கப்பட்டுவருகிறது.
மாணவர்களின் நலனுக்கு எதிரான இக்கட்டண முறையை
நீக்கிவிட்டு, அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதே
கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பா.ம.க. வலியுறுத்தி வந்த நிலையில், இப்படி ஒரு முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக்
கல்லூரியும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்
நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்
பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு மாறுவது, மாணவர்களுக்குப்
பல வழிகளில் வசதியாக இருக்கும்.
அதேநேரத்தில், இந்த நடவடிக்கையால் இக்கல்லூரி
மாணவர்களுக்குக் கட்டணக் குறைப்பு இருக்குமா என்பதுதான்
மில்லியன் டாலர் வினா.
பல் மருத்துவக் கல்லூரியை, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்
பல்கலைக்கழகத்தின் நிர்வாக வரம்புக்குள் கொண்டுவரும்
போது, அவற்றின் கட்டணங்களையும் அரசு மருத்துவக்
கல்லூரிகளின் கட்டணம் அளவுக்குக் குறைக்க வேண்டும்" என்று
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஓர்
அங்கமாகச் செயல்பட்டு வரும் ராஜா முத்தையா மருத்துவக்
கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை
அரசுக் கல்லூரிகளாக அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.
தமிழக அரசின் இந்தத் திட்டம் சரியானது என்பதில் ஐயமில்லை.
ஆனால், நிர்வாக மாற்றம் மட்டுமன்றி, கட்டண மாற்றமும்
செய்தால்தான் இந்நடவடிக்கை பயனுள்ளதாக அமையும்.
பா.ம.க முன்வைத்த யோசனைப்படி, சிதம்பரம் அண்ணாமலைப்
பல்கலைக்கழகம் கடந்த 2013-ம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்ட
போதிலும், அதன் முழுமையான பயன்கள் இன்னும்
மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை.
பல்கலைக்கழகத்தின் அங்கமாகத் திகழும் ராஜா முத்தையா
மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி
ஆகியவை பெயரளவில் அரசுடைமையாக்கப்பட்டாலும்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனியாரின் கைகளில்
இருந்தபோது வசூலிக்கப்பட்ட கட்டணம்தான் தொடர்ந்து
வசூலிக்கப்பட்டுவருகிறது.
மாணவர்களின் நலனுக்கு எதிரான இக்கட்டண முறையை
நீக்கிவிட்டு, அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதே
கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பா.ம.க. வலியுறுத்தி வந்த நிலையில், இப்படி ஒரு முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக்
கல்லூரியும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்
நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்
பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு மாறுவது, மாணவர்களுக்குப்
பல வழிகளில் வசதியாக இருக்கும்.
அதேநேரத்தில், இந்த நடவடிக்கையால் இக்கல்லூரி
மாணவர்களுக்குக் கட்டணக் குறைப்பு இருக்குமா என்பதுதான்
மில்லியன் டாலர் வினா.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: அரசுக் கல்லூரியில் ரூ.11,600; ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.8 லட்சம் கட்டணம்!- இது நியாயமா
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி
ஆகியவற்றை நேரடியாக தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்து, தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்
கழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பா.ம.க.
வலியுறுத்திவருவதன் நோக்கமே, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு
இணையாக இந்த இரு கல்லூரிகளின் கல்விக் கட்டணமும்
குறைக்கப்பட வேண்டும் என்பதுதாம்.
ஆனால், இந்த இரு கல்லூரிகளையும் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்க
வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிடுவதன் நோக்கம் வேறு
ஆகும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செலவுகள்
அதிகரித்துவிட்ட நிலையில், ஆண்டுக்கு ரூ.250 கோடி பற்றாக்
குறை ஏற்படும் நிலையில், மருத்துவக் கல்லூரிகளைத் தனியாகப்
பிரித்துவிட்டால், பல்கலைக்கழகச் செலவுகளில் ஆண்டுக்கு
ரூ.80 கோடி குறையும் என்பதற்காகவே, அரசு இவ்வாறு செய்ய
நினைக்கிறது.
-
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியையும், பல் மருத்துவக்
கல்லூரியையும் நிர்வாக மாற்றம் செய்வதுடன் தமிழக அரசு
நிறுத்திக் கொண்டால், மாணவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது.
கல்விக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்பதுதான்
மாணவர்களின் முக்கியக் கோரிக்கை ஆகும். தமிழக அரசின்
நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும்
நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் ஒற்றைச் சாளர
கலந்தாய்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
ஆனால், இளநிலை மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக
அரசுக் கல்லூரிகளில் 13,600 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்
நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.5 லட்சத்து
54 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், இளநிலை பல் மருத்துவம், முதுநிலை மருத்துவப்
பட்டப்படிப்பு, முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கு
அரசு மருத்துவக் கல்லூரிகளில் முறையே ரூ.11,600, ரூ. 42,025,
ரூ.31,325 மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், ராஜா முத்தையா
மருத்துவக் கல்லூரியில் இப்படிப்புகளுக்கு முறையே
ரூ.3.40 லட்சம், ரூ.9.80 லட்சம், ரூ.8 லட்சம் கட்டணமாக
வசூலிக்கப்படுகிறது.
ஒரே அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் மருத்துவக்
கல்லூரிகளில், வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது
முறையல்ல. இதை எந்த வகையிலும் அரசு நியாயப்படுத்த
முடியாது.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக்
கல்லூரி கட்டணத்தைக் குறைப்பது ஒன்றும் சாத்தியமில்லாத
விஷயமல்ல. இந்த இரு கல்லூரிகளையும் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்திலிருந்து பிரிக்கப்பட்டவையாகப் பார்க்காமல்,
கடலூர் மாவட்டத்துக்காக புதிதாக அமைக்கப்பட்டவையாக
நினைத்து, அவற்றுக்கான தொடர் செலவினங்களுக்கு நிதி
ஒதுக்கினால் போதுமானது.
இதற்கு முன், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொழிலாளர்
ஈட்டுறுதிக் கழகத்துக்குச் (இ.எஸ்.ஐ) சொந்தமான இரு மருத்துவக்
கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக,
பிரதமர் நரேந்திர மோடிக்கு 12.3.2015 அன்று அப்போதைய
முதலமைச்சர் பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில்,
அக்கல்லூரிகளின் தொடர் செலவினங்களை தமிழக அரசே ஏற்றுக்
கொள்ளும் என்று கூறியிருந்தார்.
அதே விதி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும்
பல் மருத்துவக் கல்லூரிக்கும் பொருந்தும். எனவே, சிதம்பரம் ராஜா
முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியை
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக
வரம்புக்குள் கொண்டுவரும்போது, அவற்றின் கட்டணங்களையும்
அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் அளவுக்குக் குறைக்க
வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.
-
----------------------------------
சகாயராஜ் மு
-விகடன்
ஆகியவற்றை நேரடியாக தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்து, தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்
கழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பா.ம.க.
வலியுறுத்திவருவதன் நோக்கமே, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு
இணையாக இந்த இரு கல்லூரிகளின் கல்விக் கட்டணமும்
குறைக்கப்பட வேண்டும் என்பதுதாம்.
ஆனால், இந்த இரு கல்லூரிகளையும் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்க
வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிடுவதன் நோக்கம் வேறு
ஆகும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செலவுகள்
அதிகரித்துவிட்ட நிலையில், ஆண்டுக்கு ரூ.250 கோடி பற்றாக்
குறை ஏற்படும் நிலையில், மருத்துவக் கல்லூரிகளைத் தனியாகப்
பிரித்துவிட்டால், பல்கலைக்கழகச் செலவுகளில் ஆண்டுக்கு
ரூ.80 கோடி குறையும் என்பதற்காகவே, அரசு இவ்வாறு செய்ய
நினைக்கிறது.
-
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியையும், பல் மருத்துவக்
கல்லூரியையும் நிர்வாக மாற்றம் செய்வதுடன் தமிழக அரசு
நிறுத்திக் கொண்டால், மாணவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது.
கல்விக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்பதுதான்
மாணவர்களின் முக்கியக் கோரிக்கை ஆகும். தமிழக அரசின்
நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும்
நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் ஒற்றைச் சாளர
கலந்தாய்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
ஆனால், இளநிலை மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக
அரசுக் கல்லூரிகளில் 13,600 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்
நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.5 லட்சத்து
54 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், இளநிலை பல் மருத்துவம், முதுநிலை மருத்துவப்
பட்டப்படிப்பு, முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கு
அரசு மருத்துவக் கல்லூரிகளில் முறையே ரூ.11,600, ரூ. 42,025,
ரூ.31,325 மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், ராஜா முத்தையா
மருத்துவக் கல்லூரியில் இப்படிப்புகளுக்கு முறையே
ரூ.3.40 லட்சம், ரூ.9.80 லட்சம், ரூ.8 லட்சம் கட்டணமாக
வசூலிக்கப்படுகிறது.
ஒரே அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் மருத்துவக்
கல்லூரிகளில், வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது
முறையல்ல. இதை எந்த வகையிலும் அரசு நியாயப்படுத்த
முடியாது.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக்
கல்லூரி கட்டணத்தைக் குறைப்பது ஒன்றும் சாத்தியமில்லாத
விஷயமல்ல. இந்த இரு கல்லூரிகளையும் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்திலிருந்து பிரிக்கப்பட்டவையாகப் பார்க்காமல்,
கடலூர் மாவட்டத்துக்காக புதிதாக அமைக்கப்பட்டவையாக
நினைத்து, அவற்றுக்கான தொடர் செலவினங்களுக்கு நிதி
ஒதுக்கினால் போதுமானது.
இதற்கு முன், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொழிலாளர்
ஈட்டுறுதிக் கழகத்துக்குச் (இ.எஸ்.ஐ) சொந்தமான இரு மருத்துவக்
கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக,
பிரதமர் நரேந்திர மோடிக்கு 12.3.2015 அன்று அப்போதைய
முதலமைச்சர் பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில்,
அக்கல்லூரிகளின் தொடர் செலவினங்களை தமிழக அரசே ஏற்றுக்
கொள்ளும் என்று கூறியிருந்தார்.
அதே விதி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும்
பல் மருத்துவக் கல்லூரிக்கும் பொருந்தும். எனவே, சிதம்பரம் ராஜா
முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியை
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக
வரம்புக்குள் கொண்டுவரும்போது, அவற்றின் கட்டணங்களையும்
அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் அளவுக்குக் குறைக்க
வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.
-
----------------------------------
சகாயராஜ் மு
-விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஒபாமாவுடன் விருந்து சாப்பிட கட்டணம் ரூ. 16 லட்சம்... நீங்க ரெடியா?
» 100 யூனிட் இலவச மின்சாரம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது
» திருமணம் ஆனதால் மாணவியை கல்லூரியில் சேர்க்க மறுப்பு
» திருச்சுழியில் அரசுக் கல்லூரி தொடங்காதது ஏன்?: தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்
» செல்பேசி, கோபுரங்களால் உடல் நலக்கேடு: மத்திய அரசுக் குழு ஆய்வறிக்கை வெளியீடு
» 100 யூனிட் இலவச மின்சாரம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது
» திருமணம் ஆனதால் மாணவியை கல்லூரியில் சேர்க்க மறுப்பு
» திருச்சுழியில் அரசுக் கல்லூரி தொடங்காதது ஏன்?: தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்
» செல்பேசி, கோபுரங்களால் உடல் நலக்கேடு: மத்திய அரசுக் குழு ஆய்வறிக்கை வெளியீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|