Latest topics
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு சென்னையில் 754 பேர் எழுதினர்
Page 1 of 1
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு சென்னையில் 754 பேர் எழுதினர்
சென்னை,
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் பணியில் அடங்கிய 985 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 22–ந் தேதி வெளியிடப்பட்டது.
இதன்படி முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 18–ந் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவு கடந்த ஜூலை 27–ந் தேதி வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வில், 13,350 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனைத்தொடர்ந்து முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) நேற்று தொடங்கியது. வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த தேர்வு நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நேற்று முதன்மை தேர்வு தொடங்கியது தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் முதன்மை தேர்வு நடைபெற்றது. சென்னையில் 754 பேர் தேர்வு எழுதினர். 9 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 9 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12 மணி வரை நடந்தது.
எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 4 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. தேர்வு எழுத வந்தவர்கள் அனைவரையும் போலீசார் முழுமையாக சோதனை செய்த பிறகே தேர்வு எழுத தேர்வு மையத்திற்குள் அனுப்பினர்.
சென்னை எழும்பூர் மாநில மகளிர் பள்ளியில் தேர்வு எழுதிய மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முத்து கூறியதாவது:–
எனது தந்தை ஒரு விவசாயி. என்னை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். நான் பட்டப்படிப்பை முடித்ததும் எனது பெற்றோர் என்னை வேலைக்கு அனுப்பாமல் போட்டி தேர்வுகளுக்கு படிக்க சொன்னார்கள்.
நான் அவர்கள் விருப்பப்படியே படித்து சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளேன். இன்று (நேற்று) நடந்த தேர்வை நான் தமிழில் எழுதினேன். தேர்வு எளிமையாக இருந்தது. நான் எப்படியும் அதிகாரி ஆகி என்னை போன்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரத்தை சேர்ந்த சித்ரா கூறுகையில், ‘தேர்வு எளிமையாக இருந்தது. நான் 3 முறை சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி உள்ளேன். கடந்த முறை நேர்முகத் தேர்வில் தோல்வி அடைந்தேன். இந்த முறை எப்படியாவது அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுவேன்’ என்று கூறினார்.
------------------------
தினத்தந்தி
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் பணியில் அடங்கிய 985 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 22–ந் தேதி வெளியிடப்பட்டது.
இதன்படி முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 18–ந் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவு கடந்த ஜூலை 27–ந் தேதி வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வில், 13,350 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனைத்தொடர்ந்து முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) நேற்று தொடங்கியது. வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த தேர்வு நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நேற்று முதன்மை தேர்வு தொடங்கியது தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் முதன்மை தேர்வு நடைபெற்றது. சென்னையில் 754 பேர் தேர்வு எழுதினர். 9 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 9 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12 மணி வரை நடந்தது.
எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 4 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. தேர்வு எழுத வந்தவர்கள் அனைவரையும் போலீசார் முழுமையாக சோதனை செய்த பிறகே தேர்வு எழுத தேர்வு மையத்திற்குள் அனுப்பினர்.
சென்னை எழும்பூர் மாநில மகளிர் பள்ளியில் தேர்வு எழுதிய மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முத்து கூறியதாவது:–
எனது தந்தை ஒரு விவசாயி. என்னை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். நான் பட்டப்படிப்பை முடித்ததும் எனது பெற்றோர் என்னை வேலைக்கு அனுப்பாமல் போட்டி தேர்வுகளுக்கு படிக்க சொன்னார்கள்.
நான் அவர்கள் விருப்பப்படியே படித்து சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளேன். இன்று (நேற்று) நடந்த தேர்வை நான் தமிழில் எழுதினேன். தேர்வு எளிமையாக இருந்தது. நான் எப்படியும் அதிகாரி ஆகி என்னை போன்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரத்தை சேர்ந்த சித்ரா கூறுகையில், ‘தேர்வு எளிமையாக இருந்தது. நான் 3 முறை சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி உள்ளேன். கடந்த முறை நேர்முகத் தேர்வில் தோல்வி அடைந்தேன். இந்த முறை எப்படியாவது அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுவேன்’ என்று கூறினார்.
------------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24161
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|