சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

அவள்.....! Khan11

அவள்.....!

2 posters

Go down

அவள்.....! Empty அவள்.....!

Post by ஹம்னா Thu 3 Mar 2011 - 17:46

அவள்.....! Evaie2


அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது.

+2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை.


அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை.

மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என்ற ஒரு மிகப் பெரிய கண்ணுக்கு தெரியாத பாரம் தலையை கனக்க செய்யாமல் இல்லை......



வழக்கம் போல கல்லூரிக்குள் நண்பர்களோடு சென்று கொண்டிருந்த சுரேஷ் பேச்சு மும்முரத்தில் எதேச்சையாக கவனிக்க காரணமாகியிருந்தது அவளின் கண்கள்.....சட்டேன்று ஏதோ ஒன்று நெஞ்சை இறுக்கிப் பிடிக்க மீண்டும் பார்த்தான் சந்தேகமாக.....ஆமாம் அவள் இவனைத்தான் பார்க்கிறாள்....!

மீண்டும் மீண்டும் உறுதி செய்து கொண்டவன் ஒரு வளைவு தாண்டி அவள் சென்று மீண்டும் திரும்ப வந்து இவனைப் பார்த்து செல்வது கண்டு தரையில் நிற்க முடியவில்லை...உற்சாகத்தில் கத்தினான்..டேய் மச்சான்.....அவ என்ன பாத்துட்டே போறாடா...பறந்து கொண்டிருந்தான் சுரேஷ். நண்பர்களின் விசாரித்தலில் அவள் மூன்றாமாண்டு வணிகவியல் படிப்பதை அறிய அதிக நேரம் பிடிக்கவில்லை அவனுக்கு....

தினமும் அவளை கவனிக்க ஆரம்பித்தான்...ஒரு வித மலர்ச்சியை பரவவிட்டுக் கொண்டு இவனை பார்ப்பதை இப்போது அவனது நண்பர்களும் பார்க்கத் தொடங்கினர். "மச்சான்... நீ ரொம்ப லக்கிடா அவ உன்னையதான்டா பார்க்கிறா...என்ன தேர்ட் இயர் படிச்சா என்ன மச்சி பிரச்சைனை 2 வருசம்தானடா சீனியர் ஸ்டில் சீ இஸ் ப்ரெட்டி டா....உனக்கு ஏத்த ஜோடிடா மச்சான்.. ம்ம்ம்ம் நமக்குதான் ஒண்ணும் சிக்க மாட்டேங்குது" வித விதமாய் நண்பர்கள் கூட்டம் சுரேஷை ஏற்றி விட்டது.

இப்படித்தான் வாழ்வின் ஓட்டத்தில் பலர் வருவர் நமது வாழ்க்கையில்..என்ன காரணம் என்று நாம் ஆராயக் கூட முடியாத அளவிற்கு இருக்கும் முக ஸ்துதிகள். ஒருவர் நம்மை புகழ்கிறார் என்றால் நின்று கவனிக்க வேண்டிய இடம் அது. தகுதிகள் எப்போதும் கூடவே இருப்பது அதை பிறர் சொல்லி நாம் உணரும் போது வார்த்தைகளை புறத்திலேயே நிறுத்தி விட்டு.... ஒரு புன்னகையோடு அதை கடந்து செல்ல வேண்டும்.

பெரும்பாலும் புகழ்ச்சிக்கு பின்னால் காரியங்கள் ஒளிந்திருக்கிறது...அல்லது காரணமின்றி ஒருவரை புகழ்வதில் தனக்கும் அதில் ஒரு பங்கு உண்டு என்ற சொறிதலில் சுகமடையும் ஒரு சுய நலமும் இருக்கிறது. பெரும்பாலும் நலவிரும்பிகள் புகழ்தலோடு ஒரு எச்சரிக்கையையும் அதை தக்க வைக்கும் கட்டுப்பாட்டையும் விதைத்தே செல்கிறார்கள்.

இப்படி மேலே சொன்ன ஏதோ ஒரு விசயத்துக்காக சுரேஷ் புகழப்பட்டான். அந்த புகழ் அவனுக்குள் தீயை கிளறி விட...அவள் பார்வையையே குட்டிப் போட்ட நாயாய் சுற்றி வந்தான். அந்த கிறுக்கில் ...வார்தைகள் தாறுமாறாய் வந்து விழ...விழுந்தது எல்லாம் ... கவிதையாய்.... நண்பர்களால் புகழப்பட்டது.

கிறக்கத்தில் உறக்கம் போனது....இப்போது எல்லாம் நண்பர்கள் இல்லாத போதும் அவள் இருக்கும் வீட்டை வலம் வர ஆரம்பித்தான் சுரேஷ். அவ்வப்போது காணும் அவளையும் அவளது பார்வையையும் வாங்கிக் கொண்டு காற்றில் பறந்து கொண்டிருந்தான்.



அவள்.....! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அவள்.....! Empty Re: அவள்.....!

Post by ஹம்னா Thu 3 Mar 2011 - 17:50

நகர்ந்து கொண்டிருந்த நாட்களும் நண்பர்களின் உந்துதலும் அவளிடம் போய் காதலை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தை திடபடுத்தியதின் விளைவு அவளின் முன் கொண்டு போய் நிற்கவைத்தது...அந்த மதிய உணவு இடைவேளையில் எடுத்த முடிவு...திக் திக் அனுபவமாக அவளை லைப்ரேரிக்கு செல்லும் அந்த ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சந்தித்து மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திக்கி திணறி...சொன்னான்...


" நல்லா இருக்கீங்களா....என்று கேட்டான்... அவள் மெளனமாய் தலையசைத்து...அவனை மலர்ச்சியாய் பார்த்தாள்.." மெல்லிய குரலில் சொன்னான்..."எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்ங்க....." அவள் சிரித்தாள்...சரி...என்று சொல்லி மீண்டும் அவனை பார்த்தாள்...அவன் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தான்.....மெலிதாய் கிசு கிசுப்பாய்....சொன்னான் நான் உங்களை நேசிக்கிறேன்ங்க..ஆக்சுவலி ஐ லவ் யூங்க என்று..சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டான்.....!

அவள் ஆழமாய் அவனை ஊடுருவிப் பார்த்தாள்....பின் மெதுவாக சொன்னாள்.... என் வீடு உனக்குதான் தெரியும்தானே.....? இன்னிக்கு ஈவ்னிங் என்னோட வீட்டுக்கு வா.....என்று....சொல்லிவிட்டு வருவேல்ல என்று அவன் முகம் பார்த்தாள்...

அவன் மெல்ல தலையசைத்தான்....சரிங்க வர்றேன்....ஆனா வீட்ல எப்படி? என்று இழுத்தான். அவள் பரவாயில்லை வா...என்று சொல்லி விட்டு...மெல்ல திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.


சுரஷுக்கு 19 வயதில் இது ஒரு வித்தியாசமான உணர்வுதான்....! ஒரு கனவைப் போல கடந்துபோயிருந்த அந்த நிமிடங்களை இழுத்து பிடித்து நிறுத்தி வைத்து மீண்டும் மீண்டும் அந்த சூழலுக்குள்ளேயே கிடந்தன் சுரேஷ்.

மெல்ல காற்றில் பறப்பது போல நடந்து அவனுக்காக காத்திருந்த நண்பர்கள் கூட்டத்திற்குள் வந்தான்....ஹேய்....மச்சா நீ கில்லிடா... செம பிகருடா.....அவ.....உனக்கு மச்சம்டா..கூட்டம் கை குலுக்கி கும்மாளமிட்டது. எல்லாம் சரிடா மச்சான் வீட்டுக்கு வர சொல்லியிருக்காளேடாடன்னு இழுத்த சுரேஷை கூட்டம் மோட்டிவேட் செய்தது ...

"டேய் மச்சான் ...சில பொண்ணூக எல்லாம் இப்படித்தான்...வெளில சுத்த கூச்சப்படுவாங்க....வீட்டுல கூட்டிடுப் போய் கிளாஸ்மெட்டுனு சொல்லிட்டு பாதுகாப்பாவே பேசுவாங்க..... நீ போடா மச்சான் ... ஜமாய்.. நாளைக்கு பார்ட்டி கொடுக்கணும் அப்புறம் புல் ஸ்டோரியும் சொல்லணும் ...மறைச்சே.அவ்ளோதான் பாத்துக்க... " ஆளாளுக்கு ஒன்று சொல்ல... சுரேஷ்...அந்த மாலை நேரத்தை பற்றிய திட்டமிடலில் இருந்தான்........


6 மணி மாலை...அவள் வீட்டருகே...பைக் நிறுத்தி விட்டான் சுரேஷ்....."மச்சான் ஜமாய்டா" யாரோ ஒரு நண்பன் சொன்னது காதில் வந்து தேவையில்லாமல் ஒலித்தது. மெல்ல பயந்து கொண்டு வீட்டு வாசலில் போய்... நின்றான். காலிங் பெல்லை அடிக்க கை போனது....அப்புறம் யோசித்தான்...சரி போய் விடலாமா...எதுக்கு தேவையில்லாம அவுங்க வீட்ல போய்.....ம்ம்ம்ம் இரண்டு அடி திரும்பி பைக் நோக்கி நடக்க ஆரம்பித்தான்....

பிறகு நின்றான்....சரி சும்மாவா வரச் சொல்லியிருப்பா...ஏதாவது பிடிக்கவில்லை என்றால் அப்போதே சொல்லியிருப்பாளே.. மனம் அவனை தேற்றியது. மீண்டும் அவள் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

காலிங் பெல்...அமுக்கியவுடன் உள்ளே ஒரு எலக்ட்ரானிக் குருவி இவனது வருகையை தெரிவிக்க....உள்ளிருந்து காலடி சத்தம் கதவருகே நடந்து வருவது கதவு திறக்கப்படும் ஓசையும் கேட்ட சுரேஷின் லப்...டப் பின் வேகம் ...அதிகரித்தது.............

பளீரென்று நின்ற கதவுகளுக்குப் பின்னால்...........

அவள்

"உள்ளே வாங்க....." மிருதுவான அழைப்பு....வெளித் திண்ணையிலிருந்து உள்ளே அழைப்பாள் என்று எதிர்பார்க்காத அவன் இன்னும் வேகமான இதயதுடிப்புக்கு சொந்தமானவன் ஆனான். வீட்ல என்று இழுத்தான்.......அவள் தொடர்ந்தாள்....அம்மா கோவிலுக்கு போய் இருக்காங்க....அப்பா...வேலை முடிந்து வர மணி எட்டு ஆகும்..........என்று சொன்னவள் நிறுத்தினாள்....

மீண்டும் அவனை உள்ளே வாங்க என்று அழைத்துக் கொண்டு அந்த...அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.......



அவள்.....! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அவள்.....! Empty Re: அவள்.....!

Post by ஹம்னா Thu 3 Mar 2011 - 17:58

சுரேஷுக்கு ஒரு மாதிரி வியர்க்க ஆரம்பித்தது...என்ன இது வீட்டுக்குள் அழைத்து வேறு ஒரு அறைப்பக்கம் போகிறாளே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவள் அறைக்கதவை திறந்து உள்ளே சென்று விட்டாள்....! சுரேஷ் கதவுக்கு இரண்டு அடி முன்னாலேயே நின்று கொண்டான்...

உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்......வாங்க உள்ளே..... அவள் அவனை கூப்பிட்டாள். மெல்ல நடந்து கதவு கடந்து உள்ளே போனான் சுரேஷ்....

உள்ளே.......


அது...அவர்களின் பூஜை அறையாயிருந்தது.....சாமி படங்கள் துணியிட்டு மறைக்கப்பட்டு இருந்தது...........பளீரென்று சாமி படங்களை மறைத்திருந்த துணியை விலக்கினாள்.....எல்லா சாமிப்படங்களோடு சேர்ந்து பக்கத்து ஓரத்தில்.....இருந்த புகைப்படத்தின் கீழே ....தோற்றம் மறைவு...அட...என்ன இது...இந்த பையன் என்னை மாதிரியே... இருக்கானே என்று நினைத்துக் கொண்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.....

அவள் அழுது கொண்டிருந்தாள்.......சுரேஷ் அவளிடம் என்னாச்சுங்க...உடைந்த குரலில் கேட்டான். அவள் அழுகை இரண்டு மடங்காகியது......அழுது முடிக்கும் வரை சுரேஷ் மெளனமாய் நின்று கொண்டிருந்தான்....மீண்டும் சுவற்றில் இருந்த அந்த போட்டோவை பார்த்தான்.....


அவள் பேசத் தொடங்கினாள்.....அவன் என் தம்பி.....! .என் தம்பி என்றால் எனக்கு உயிர்..... நானென்றால் அவனுக்கு உயிர் ..அவள் விவரித்து முடிக்கையில்.....தாறுமாறாக...யாரோ ஓட்டி வந்த வாகனம் நடை பாதை ஓரமாக அவன் பைக்கை நிறுத்தி பக்கத்தில் பூ வாங்கிக் கொண்டிருந்த அவனின் அக்காவிற்காக காத்திருந்த பொழுதில்.... இவன் மீது மோதி அந்த இடத்திலேயே துடி துடித்து இறந்தது.... மேலும் அதை அவள் கண் முன்னே கண்டதையும் சொன்னதை சுரேஷால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அவள் அழுகையோடு தொடர்ந்தாள்.... நீ மட்டும் இல்லை தம்பி...இன்னும் என் தம்பியை ஒத்த வயதில் அவனை போலவே இருக்கிறவங்கள பாத்தா என் தம்பி ஞாபகம் வந்துடும். அதுவும் நீ அவனை மாதிரியே இருப்பதால் என் தம்பி இருந்தால் இப்படிதானே பேசுவான் ..இப்படிதானே சிரிப்பான் என்று வைத்த கண் வாங்கமல் பார்த்திருக்கிறேன்.....ஆனால் அதில் பாசம்தான் தம்பி இருந்திருக்கு..... காதல் இல்லை.... !


நான் உன்னை கவனிப்பதை உனக்கு தெரியாமலேயே தான் ரொம்ப நாளா செஞ்சுகிட்டு இருந்தேன்...ஆனால் நீ கவனிச்சது லேட்டாதான் புரிஞ்சுகிட்டேன். நீ என்னை கவனிச்சப்புறமும்...என்கிட்ட தவறா எதுவும் பேசலன்னு தெரிஞ்சதும் உன்னை பார்த்து அதே வாஞ்சையோடு சிரிக்க ஆரம்பிச்சேன்....

ஆனா....எனக்கு இப்போ இருக்குற உலக பத்தி நல்லா தெரியும்பா...ஒரு பொண்ணு ஒரு ஆணை பார்த்தாலே ஏன்? ஏன்னு அதுக்கு ஒரு அர்த்தம் கற்பித்து களங்கம் கற்பித்து ஒரு தவறான ஒரு பார்வையைதான் சமுதாயம் பதிக்கிறது.

இப்போ கூட நீ புரிஞ்சுகிட்டியான்னு எனக்கு தெரியல.....ஆனா ஒரு பெண் ஆணோட பேசினாலே அதை காதலாகவும் காமத்தோடும் சம்பந்தப்படுத்திதான் எல்லோரும் சிந்திக்கிறாங்க? வகுப்பறையில் கூட படிக்கிற பசங்க கிட்ட எல்லாம் என்ன நல்லா இருக்கியானு சினேகமா கேட்ட கூட ஒண்ணு அவுங்க தப்பா நினைச்சு நான் அவுங்கள லவ் பண்றேன்னு நினைக்கிறாங்க இல்லேன்னா...கூடப்படிக்கிற பொண்ணூக எல்லாம் என்னடி லவ்வானு கிண்டல் பண்றாங்க.......


இது பெண்களுக்கு மட்டும் இல்லைப்பா... நிறைய ஆண்கள் கூட பெண்களை இதே ரீதியில் பார்க்கலாம்...தம் உறவுக்கார பெண்ணாக, எங்கேயோ சந்தித்த நபராக, தனது தங்கையைப் போல அல்லது அம்மா அக்கா போல இருக்கிறாளே என்ற ரீதியில் பார்க்கலாம்...!

ஒரு பெண் ஆணையும் அல்லது ஆண் பெண்ணையும் பார்க்க....இயல்பாய் ஒரு முகம் பிடித்த மாதிரி இருந்தா எந்த எண்ணமும் இல்லாம பாக்கிறது எல்லம் எப்படிப்பா...? காதலாவும் காமமாவும் ஆகும்...? ஆன மிகைப்பட்ட பேரு இப்படி தவறா நடக்கிறதால....,உறவுகளை சின்னாபின்னமாக்குவதால எல்லோருமே இப்படி பயந்து பயந்து வாழ்றது எப்படிப்பா சரியாகும்?

என் தம்பி மாதிரியே இருந்த உன்னைப் பார்த்ததில்....எனக்குள் காதல் துளி கூட இல்லவே இல்லப்பா...ஆனா உன்னை பார்ப்பதில் இருக்கும் பிடிப்பும் உண்மைதன்......

அவள் சொல்லி முடித்துவிட்டு...சுரேஷை பார்த்தாள்.......


கரெக்டுதானுங்க அக்கா........" தெளிவான குரலில் தீர்க்கமாய் சொன்னான் சுரேஷ்.

அவனுக்குள் இருந்த பழமையும் அறியாமையை கொழுந்து விட்டு எறிந்து கொண்டிருந்தது. ஒரு பெண்....என்றவுடன் மனம் போடும் வித்தைகள்தான் எத்தனை? கற்பனைகள் எத்தனை......விவரித்து பார்த்து நாமேதானே நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம்.

வாழ்க்கையில் நம்மை சுற்றி இருப்பது மனிதர்களும் இயற்கையும்.....இதோடு தானே வாழ வேண்டும்.....! பிடிக்கும் விசயங்களை எல்லாம் பிடித்தலோடு வைத்துக் கொள்வது நல்லது....மற்றவரோடு நமது பிடித்தல்களை தொடர்புபடுத்தி அவர்களை நிர்பந்திக்கும் போதுதானே..எல்லா பிரச்சினையும்......!

தொடர்புகளையும் பார்வைகளையும் வைத்து....கணித்தல் தவறு. இனி யாரையாவது பிடித்தால்...கற்பனையை வளரவிடுவது மடைமை ...மாறாக உண்மையை உடனுக்குடன் அறிவது... நல்ல சமுதாயத்தை உருவாக்கும். நமது கலச்சாரம் ஒராயிரம் விசயங்களை நமக்கு சும்மா விளையாட்டுக்கு சொல்லிச் செல்லவில்லை எல்லாம் படிப்பினைகள்.....


சுரேஷ்...அவள் குரல் கேட்டு கலைந்தவனாய்...அவளின் கரம் பற்றி ரொம்ப நன்றிங்க அக்கா....கொஞ்சம் தண்ணி கொடுங்க குடிக்க....

சுரேஷின் தெளிவை உணர்ந்தவளாய்.....உள்ளே சென்றாள் அவள்.


பைக்கின் கிக்கரை சுரேஷ் உதையும் போது...மணி 7:05 ......ஆக்ஸிலேட்டரின் முறுக்கலில் அடி பணிந்த பைக் பறக்க தொடங்கியது.....

"மச்சான் ஜமாய்டா.." யாரோ நண்பன் சொன்னது காதில் ஒலித்தது.....

ஆமாம்டா....ஜாமயிச்சுட்டேன்.....அவன் புரிதலுக்கு நன்றியாக காற்று அவன் கேசம் கலைத்து கொஞ்சிக் கொண்டிருந்தது...வீடு நோக்கி பறந்துகொண்டிருந்தது பைக்.....!


அவள்.....! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அவள்.....! Empty Re: அவள்.....!

Post by ராசாத்தி Thu 3 Mar 2011 - 22:49

அக்கா என்னால் அதிகம் படிக்க முடியவில்லை நீங்கள் படித்துவிட்டு போன் பன்னுங்கள்..001
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அவள்.....! Empty Re: அவள்.....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum