Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
Page 1 of 1
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
-
இளம் பாடலாசிரியர்களில் இளையகம்பனை நான்
அவசியம் குறிப்பிட வேண்டும். அவர் பச்சையப்பன்
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே அவரை
நன்கறிவேன். மரபுக் கவிதை எழுதுவதில் வல்லவர்.
வெண்பா விரைவாகவும் நன்றாகவும் எழுதுவார்.
இன்றைய இளம்பாடலாசிரியர்களில் பிழையில்லாமல்
வெண்பா எழுதக் கூடிய கவிஞர்கள் நானறிந்தவரை
இவரைத் தவிர எவருமிலர்.
-
1982 -ஆம் ஆண்டில் "சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில்
நான் எழுதிய தொடர் கட்டுரையை அவர்தான் அந்த
அலுவலகத்திற்குச் சென்று கட்டுரைகளைப் படியெடுத்துக்
கொண்டு வந்து கொடுத்தார்.
அது "என் பாடல்கள் சில பார்வைகள்' என்ற தலைப்பில்
புத்தகமாக வெளிவந்தது. ஆகவே அவர் எனது அன்புக்கும்
நன்றிக்கும் உரியவர்.
பல கவியரங்கங்களில் என் தலைமையில் பாடியிருக்கிறார்.
-
திருவண்ணாமலைப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருக்கிற
அம்மன் கோயிலைப் பற்றியும் அம்மனைப் பற்றியும்
பாட்டெழுத வேண்டுமென்று அழைத்துப் போனார்.
அவர் சொன்னார் என்பதற்காக நான் பாடல் எழுதினேன்.
ஆனால் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படவில்லை.
ஆனாலும் அவர்களால் இயன்ற ஒரு தொகையை எனக்குக்
கொடுக்க வந்தபோது அதை இளைய கம்பனிடமே
கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.
அப்போதுதான் அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு
மிகவும் வேண்டியவர். இவர் பாடல் எழுதிய முதல்
திரைப்படம் "உன்னைக்கொடு என்னைத் தருவேன்'
என்ற படம்.
இது 2000-த்தில் வெளிவந்தது.
சூப்பர் குட் பிலிம்ஸ் செüத்திரி தயாரித்த படம்.
இளம் பாடலாசிரியர்களில் இளையகம்பனை நான்
அவசியம் குறிப்பிட வேண்டும். அவர் பச்சையப்பன்
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே அவரை
நன்கறிவேன். மரபுக் கவிதை எழுதுவதில் வல்லவர்.
வெண்பா விரைவாகவும் நன்றாகவும் எழுதுவார்.
இன்றைய இளம்பாடலாசிரியர்களில் பிழையில்லாமல்
வெண்பா எழுதக் கூடிய கவிஞர்கள் நானறிந்தவரை
இவரைத் தவிர எவருமிலர்.
-
1982 -ஆம் ஆண்டில் "சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில்
நான் எழுதிய தொடர் கட்டுரையை அவர்தான் அந்த
அலுவலகத்திற்குச் சென்று கட்டுரைகளைப் படியெடுத்துக்
கொண்டு வந்து கொடுத்தார்.
அது "என் பாடல்கள் சில பார்வைகள்' என்ற தலைப்பில்
புத்தகமாக வெளிவந்தது. ஆகவே அவர் எனது அன்புக்கும்
நன்றிக்கும் உரியவர்.
பல கவியரங்கங்களில் என் தலைமையில் பாடியிருக்கிறார்.
-
திருவண்ணாமலைப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருக்கிற
அம்மன் கோயிலைப் பற்றியும் அம்மனைப் பற்றியும்
பாட்டெழுத வேண்டுமென்று அழைத்துப் போனார்.
அவர் சொன்னார் என்பதற்காக நான் பாடல் எழுதினேன்.
ஆனால் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படவில்லை.
ஆனாலும் அவர்களால் இயன்ற ஒரு தொகையை எனக்குக்
கொடுக்க வந்தபோது அதை இளைய கம்பனிடமே
கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.
அப்போதுதான் அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு
மிகவும் வேண்டியவர். இவர் பாடல் எழுதிய முதல்
திரைப்படம் "உன்னைக்கொடு என்னைத் தருவேன்'
என்ற படம்.
இது 2000-த்தில் வெளிவந்தது.
சூப்பர் குட் பிலிம்ஸ் செüத்திரி தயாரித்த படம்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
Re: ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
இதயத்தைக் காணவில்லை - அது
தொலைந்தும் நான் தேடவில்லை
கண்டேன் அழகிய கொலுசு கொலுசு
திருகாணி ஆனது மனசு மனசு
இந்நாள் அனுபவம் புதுசு புதுசு
--
எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் அவர் எழுதிய முதற்பாடல்.
இந்தப் படத்தை இயக்கியவர் கவி. காளிதாஸ்.
படம் சுமாராக ஓடியது. பாடல் பிரபலமானது.
இவர் பாடல் எழுதிய இரண்டாவது படம் "மாயி'
இதில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இரண்டுமே பிரபலமான பாடல்கள்.
எஸ்.ஏ. ராஜ்குமார் தான் இதற்கும் இசை.
படமும் நுறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.
--
ஓலெ ஓலெ ஓலெ
ஓலெக் குடிசையில்
ஓட்டகம் வந்திருச்சா
ஊசி ஊசி ஊசி முனையிலே
கப்பலும் வந்திருச்சா
-
மீசை இருக்கிற மாமா - என்
ஆசை இருக்காதா
பூத்துக் கிடக்குது ரோசா - என்
வாசம் அடிக்காதா
என்ற பாடல் ஒன்று.
-
நிலவே வான்நிலவே வான்நிலவே
வார்த்தை ஒன்று பேசு
கண்ணன் காலடியே ராதைஇவள்
வாழ்க்கை யென்று கூறு
-
என்ற பாடல் மற்றொன்று.
இது சரத்குமார் நடித்த படம்.
-
அன்பாலயா நிறுவனம் தயாரித்த "தைப் பொறந்தாச்சு'
என்ற படத்தில் தேவா இசையில்
-
நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாடப் போறேன்
மலரே மலரே ராகம் தேடு
பாட்டொண்ணு பாடப் போறேன்
நட்சத்திரமே கூடவா
அக்காமகளைப் பாடவா
நான் பாடும் பாடல் அவளல்லவா
-
என்ற இவரது பாடலும் பிரபலமான பாடல்.
படமும் நூறுநாள் ஓடியது. நடிகர் பிரபு நடித்த படம் இது.
-
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் கமலஹாசன்
நடித்த "தெனாலி' என்ற படத்தில் இவர் எழுதிய பாடல்
பிரபலமான பாடல்.
படமும் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. அந்தப் பாடல்
இதுதான்.
-
தெனாலி தெனாலி - இவன்
பயத்துக்கு இங்கேது வேலி
தெனாலி தெனாலி - இவன்
பயந்தா ஊருக்குப் பல ஜோலி
என்ற பல்லவியுடன் ஆரம்பமாகும்.
-
"தூத்துக்குடி' என்ற படத்தில் பிரவின்மணி இசையில்
இவர் எழுதிய பாடல் எல்லாராலும் பாடப்படுகிற
பாடலாக மட்டுமல்ல இளைஞர்களை ஈர்க்கும்
பாடலாகவும் இயங்குகிறது.
-
கருவாப்பையா கருவாப்பையா
கருவாச்சி கவுந்துப்புட்டா
மனச்சாட்சி தொலைச்சுப்புட்டா
குண்டூசி மீசை குத்தி
மேலுதடு காய மாச்சு
கிறுக்குப்பய பல்லுக்குப்பட்டு
கீழுதடு சாயம்போச்சு
-
என்று தொடக்கமாகும் அந்தப் பாடல்.
தொலைந்தும் நான் தேடவில்லை
கண்டேன் அழகிய கொலுசு கொலுசு
திருகாணி ஆனது மனசு மனசு
இந்நாள் அனுபவம் புதுசு புதுசு
--
எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் அவர் எழுதிய முதற்பாடல்.
இந்தப் படத்தை இயக்கியவர் கவி. காளிதாஸ்.
படம் சுமாராக ஓடியது. பாடல் பிரபலமானது.
இவர் பாடல் எழுதிய இரண்டாவது படம் "மாயி'
இதில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இரண்டுமே பிரபலமான பாடல்கள்.
எஸ்.ஏ. ராஜ்குமார் தான் இதற்கும் இசை.
படமும் நுறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.
--
ஓலெ ஓலெ ஓலெ
ஓலெக் குடிசையில்
ஓட்டகம் வந்திருச்சா
ஊசி ஊசி ஊசி முனையிலே
கப்பலும் வந்திருச்சா
-
மீசை இருக்கிற மாமா - என்
ஆசை இருக்காதா
பூத்துக் கிடக்குது ரோசா - என்
வாசம் அடிக்காதா
என்ற பாடல் ஒன்று.
-
நிலவே வான்நிலவே வான்நிலவே
வார்த்தை ஒன்று பேசு
கண்ணன் காலடியே ராதைஇவள்
வாழ்க்கை யென்று கூறு
-
என்ற பாடல் மற்றொன்று.
இது சரத்குமார் நடித்த படம்.
-
அன்பாலயா நிறுவனம் தயாரித்த "தைப் பொறந்தாச்சு'
என்ற படத்தில் தேவா இசையில்
-
நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாடப் போறேன்
மலரே மலரே ராகம் தேடு
பாட்டொண்ணு பாடப் போறேன்
நட்சத்திரமே கூடவா
அக்காமகளைப் பாடவா
நான் பாடும் பாடல் அவளல்லவா
-
என்ற இவரது பாடலும் பிரபலமான பாடல்.
படமும் நூறுநாள் ஓடியது. நடிகர் பிரபு நடித்த படம் இது.
-
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் கமலஹாசன்
நடித்த "தெனாலி' என்ற படத்தில் இவர் எழுதிய பாடல்
பிரபலமான பாடல்.
படமும் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. அந்தப் பாடல்
இதுதான்.
-
தெனாலி தெனாலி - இவன்
பயத்துக்கு இங்கேது வேலி
தெனாலி தெனாலி - இவன்
பயந்தா ஊருக்குப் பல ஜோலி
என்ற பல்லவியுடன் ஆரம்பமாகும்.
-
"தூத்துக்குடி' என்ற படத்தில் பிரவின்மணி இசையில்
இவர் எழுதிய பாடல் எல்லாராலும் பாடப்படுகிற
பாடலாக மட்டுமல்ல இளைஞர்களை ஈர்க்கும்
பாடலாகவும் இயங்குகிறது.
-
கருவாப்பையா கருவாப்பையா
கருவாச்சி கவுந்துப்புட்டா
மனச்சாட்சி தொலைச்சுப்புட்டா
குண்டூசி மீசை குத்தி
மேலுதடு காய மாச்சு
கிறுக்குப்பய பல்லுக்குப்பட்டு
கீழுதடு சாயம்போச்சு
-
என்று தொடக்கமாகும் அந்தப் பாடல்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
Re: ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
நடிகர் விஜய், சிம்ரன் நடித்த "உதயா' படத்தில்
-
பெண் : கெட்டி மேள கெட்டிமேளச் சத்தத்திலே
பூக்கும்பூ என்ன என்ன?
ஆண் : மல்லிகைப் பூ
பெண் : இல்லே இல்லே
ஆண் : மலைப்பூ
பெண் : இல்லே இல்லே
ஆண் : மழலைப் பூ
பெண் : இல்லை இல்லை
என்று தொடங்கி
-
ஆண் : பூவோட அழகெல்லாம் வேருக்குத் தெரியாது
பூங்காற்றைச் சேராமல் புல்லாங்குழல் பாடாது
என்று முடியும் பல்லவி.
-
இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இதுவும் இளைய கம்பன் எழுதிய பாடல்தான்
இதற்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரகுமான். இது எழுதி
இசையமைத்த பாடல்.
-
சபேஷ் முரளி இசையில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில்
"சமுத்திரம்' படத்தில் இவர் எழுதிய
-
கண்டுபிடி கண்டுபிடி
கள்வனைக் கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
கல்மிஷம் பண்ணுதடி - ஒரு
சேலை நூலையே கொண்டு - இந்தச்
சீனச் சுவரை இழுத்தாயே
திருடனைத் திருடிக் கொண்டு - நீ
காதல் ஊழல் செய்தாயே
-
என்று வித்தியாசமாக எழுதிய பாடல் பலரைக் கவர்ந்து
நிற்கும் பாடல். படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, பவதாரணி ஆகியோர்
இசையிலும் இவர் பாடல் எழுதியிருக்கிறார்.
இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை
எழுதியிருக்கிறார். இவர் எழுதிய திரைப்பாடல்களுக்காகப்
பல்வேறு தனியார் விருதுகள் பெற்றுள்ளார்.
எம்பில் ஆய்வுக்காகவும், டாக்டர் பட்ட ஆய்வுக்காகவும்
இவர் கவிதை நூல்களைச் சில மாணாக்கர்கள் ஆய்வு
செய்திருக்கின்றனர். அமைதியும் அடக்கமும் உள்ள
கவிஞர் இவர்.
-
----------------------------
படங்கள் உதவி: ஞானம்
தினமணி கொண்டாட்டம்
-
பெண் : கெட்டி மேள கெட்டிமேளச் சத்தத்திலே
பூக்கும்பூ என்ன என்ன?
ஆண் : மல்லிகைப் பூ
பெண் : இல்லே இல்லே
ஆண் : மலைப்பூ
பெண் : இல்லே இல்லே
ஆண் : மழலைப் பூ
பெண் : இல்லை இல்லை
என்று தொடங்கி
-
ஆண் : பூவோட அழகெல்லாம் வேருக்குத் தெரியாது
பூங்காற்றைச் சேராமல் புல்லாங்குழல் பாடாது
என்று முடியும் பல்லவி.
-
இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இதுவும் இளைய கம்பன் எழுதிய பாடல்தான்
இதற்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரகுமான். இது எழுதி
இசையமைத்த பாடல்.
-
சபேஷ் முரளி இசையில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில்
"சமுத்திரம்' படத்தில் இவர் எழுதிய
-
கண்டுபிடி கண்டுபிடி
கள்வனைக் கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
கல்மிஷம் பண்ணுதடி - ஒரு
சேலை நூலையே கொண்டு - இந்தச்
சீனச் சுவரை இழுத்தாயே
திருடனைத் திருடிக் கொண்டு - நீ
காதல் ஊழல் செய்தாயே
-
என்று வித்தியாசமாக எழுதிய பாடல் பலரைக் கவர்ந்து
நிற்கும் பாடல். படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, பவதாரணி ஆகியோர்
இசையிலும் இவர் பாடல் எழுதியிருக்கிறார்.
இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை
எழுதியிருக்கிறார். இவர் எழுதிய திரைப்பாடல்களுக்காகப்
பல்வேறு தனியார் விருதுகள் பெற்றுள்ளார்.
எம்பில் ஆய்வுக்காகவும், டாக்டர் பட்ட ஆய்வுக்காகவும்
இவர் கவிதை நூல்களைச் சில மாணாக்கர்கள் ஆய்வு
செய்திருக்கின்றனர். அமைதியும் அடக்கமும் உள்ள
கவிஞர் இவர்.
-
----------------------------
படங்கள் உதவி: ஞானம்
தினமணி கொண்டாட்டம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
» இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்
» கவிஞர் நீலாவணனின்
» கவிஞர் நா.முத்துக்குமாரின் அனுபவம்...
» கவிஞர் வாலி...
» இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்
» கவிஞர் நீலாவணனின்
» கவிஞர் நா.முத்துக்குமாரின் அனுபவம்...
» கவிஞர் வாலி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|