சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

‘காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -4 Khan11

‘காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -4

Go down

‘காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -4 Empty ‘காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -4

Post by rammalar Thu 25 Oct 2018 - 4:40

தாயின் சிறகுகளுக்குள் 
புகுந்து அதன்
அடிவயிற்றுப் பரிசத்தில்
கண்மூடி லயிக்கும்
கோழிக் குஞ்சு போல,
இரவுகள் பூராவும் 
என்னவளின்
நினைவுகளுக்குள் புகுந்து, 
அது வழங்கும்
காதல் வானிலையின்
இதமான கதகதப்பில்
இன்பம் துய்க்கிறேன்..
 - ஆதியோகி

**
உணவும் செல்லாது  
உறக்கம் கொள்ளாது 
ஓரிடத்தும் நில்லாது 
யாரிடத்தும்  சொல்லாது 
சேரிடம் தெரியாது 
நெஞ்சிடும்  உணர்வுகள் 
விஞ்சிடும் ஆசைகள் 
தஞ்சமிடும் மஞ்சம் 
தகித்திடும் உடல் 
தத்தளிக்கும் மனம் 
விளிம்பிடும் கண்ணீர் 
வெளுத்திடும் கண்கள் 
அந்தோ பரிதாபம்!
யாருக்கு வேண்டும் ?
காதலரை
நினைத்து நினைத்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
காத்து காத்து 
பூத்த மலர் வாடிடும் 
பொழுதினில் 
காதலர்   மனநிலை 
கணித்திடும்
காதலின் வானிலை ! 
- எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்

**

பாலகராய் இருந்தபோது இல்லை பேதம்

……….பருவங்கள் எய்துவிட்டால் வந்து போகும்.!

மாலமாயம் செய்வித்தே மயக்க வைக்கும்

……….மனமுமொரு நிலையிலாது பரித விக்கும்.!

காலத்தின் நிலையறிய கோள்கள் போல

……….காதலிலும் வானிலையைக் கண்ட துண்டு.!

மூலதனம் ஏதுமில்லை முயற்ச்சி வேணும்

……….முக்கியமாய்க் காதலிக்க ஆர்வம் போதும்.!

அக்கறையும் அன்புடனே சேர்ந்து விட்டால்

……….அதன்பிறகு காதலுக்கும் புரியும் அர்த்தம்..!

பக்குவமாய் காதலித்தால் பலனும் உண்டு

……….பகுத்தறிவுக் கேள்வியங்கே எடுப டாது..!

வக்கிரத்தால் வருங்காதல் அறிந்து கொண்டு

……….விபரீதம் நிகழாமல் விழிப்பு வேண்டும்..

அக்கினிக்கும் காதலுக்கும் உறவு உண்டு

……….அதன்தொடர்பு பாதியிலே அறுந்து போனால்..!

காதலுமோர் வானிலையைப் போலத் தானே

……….காதலிக்கும் கலையறிய கற்க வேண்டும்..!

சோதனைகள் வந்தாலும் தொடரும் காதல்

……….சொந்தத்தைச் சிலசமயம் மறக்கச் செய்யும்..!

வேதனைகள் இல்லாது காதல் செய்யும்

……….வித்தகர்கள் வயதிற்கும் வரம்பு இல்லை..!

பாதகங்கள் வேண்டாமே! பந்தம் வேண்டும்!

……….பருவநிலை அறிந்தபின்னே காதல் செய்வீர்..!

- பெருவை பார்த்தசாரதி

**

வேண்டி வந்து நிற்பேன்..
தாண்டிச்சென்று விடுவாய்
தலைகுனிந்துகொண்டே..!
நொண்டியடித்தபடி மனமும்
நொந்துகொண்டே திரும்பும்..!
ஏதோ யோசித்துக்கொண்டிருப்பேன்
எங்கிருந்தோ வந்து முன் நிற்பாய்!
எனை விழுங்கும் விழிகளால்
எண்ணற்ற மகிழ்வும் தந்து செல்வாய்..!
தவறெதுவும் நான் தவறிச் செய்தால்
எவர் உண்டென்றும் பாராமல் 
எரிக்கும் விழிகளால் முறைக்கிறாய்..!
எவர் விழிகள் என் மீது பட்டாலும்
எனக்கெதுவும் ஆகக்கூடாதென்று 
அவர் பார்வையிலிருந்து மறைக்கிறாய்..!
வருமென்று நினைக்கும்போது வராமலும்
வராதென்று நினைக்கையில் முன்வந்து நிற்பதிலும்
வானத்து மின்னலாய் ஜொலிப்பதிலும்
வஞ்சி நீயும் மழை தான்..என் 
நெஞ்சில் எப்போதும் காதல் வானிலை தான்..!

- கவுதம் கருணாநிதி, திருச்சூர், கேரளா

**

தேரில் வரும் அம்மனிலும்
நேரில் வரும் ஆட்களிலும்
கூர்ந்து நான் கவனிக்க
வைத்தது ந்தன் சாயலன்றோ?

வானிலையும் மாறாதோ
வான் நிலவும் வாராதா
பாலை நெஞ்சில் பூப்பூக்க
காலையிலே கண்ட கனா -

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

இரு கண்கள்
சந்தித்த வேளையில்
இரு இதயங்கள்
இடம் மாறிக் கொண்டதோ

மௌன மொழியாலே
மௌனமாய் பேசினோமே
அகத்தினுள் அவளுருவம்
ஆனந்தமாய் அலையடிக்கிறது

நிஜத்தினில் பார்க்கின்றேன்
நீங்காத மழை பொழிவு
தெரிந்து விட்டதோ தென்றலுக்கும்
புரிந்து விட்டதோ இயற்கைக்கும்

உன்னில் நான் வந்த மாற்றம்
என்னில் நீ வந்த மாற்றம்
இயற்கையின் மாற்றமோ இல்லை
காதலின் வானிலை மாற்றமோ

- மதுரை மாலதி (PC)

**
மேகங்களின் காதல் 
மோகத்தில் மழை !

தவிக்கும் இதயம் அன்பால் 
குவிக்கும் காதல் கனவுகளை !

கண்களின் காவிய மோதல் 
மண்ணின் மழையென காதல் !

ஈரம் காயும் வேளையில் - மனதிலே 
பாரம் குறையும் சொன்ன காதலாலே !

வண்டுகள் தேடும் தேன்போல 
பெண்வண்டைத் தேடும் காதலே !

மேகஓவியம்  கரைவதற்க்குள் 
தாகம்  தீர்க்கும் விவேகக்காதலே !

 - கா. மகேந்திரபிரபு, சிவகாசி

**

கார்மேகம் காணும் போதுன்
கருங்கூந்தல் நினைவில் வாழும்
நேர்காணும் வகிடும் என்னுள்
நினைவூட்டும் மின்னல் தானே
பார்க்காத நொடியின் நேரம்
பார்க்குமுன் விழிகள் ஓரம்
ஈர்ப்புவிசை  மனங்கள் ஆற்றும்
இலக்கியங்கள் காதல் போற்றும்

பருவத்தே காதலி யற்கை
பயிர்வளர்க்கும் மழையே போன்று
உருவத்தால் வனப்பை பெற்றும்
உள்ளத்தால் அச்ச முற்றாள்
கரைகடக்கும் புயலின் சேதம்
கண்டறிவின் கலக்கம் போலும்
வரம்புகள் குறித்து வைத்து

வார்த்தையில் கவனம் வைப்பாள்
காதலெனும் மழையும் ஓங்க
கருமுகிலாம் ஈரம் வேண்டும்
ஆதரவாய் தென்றல் பார்வை
அனுப்பிவிடும் தூது வொன்றால்
சாதகமாய் மழையும் ஆங்கு
சரித்திரமே படைத்து நிற்கும்
வேதனைதான் காதல் என்றால்
வெளிப்பட்ட அன்பில் பொய்யே

- கவிஞர் முருகுபாண்டியன்

**

விதைக்கப்பட்ட நிலவு விண்ணில் வளர்கிறது !
முழுமதி ஆனபின் மெதுவாய்  தேய்கிறது !!
காணும்நாளில் மனம்  களிப்புடன் ரசிக்கிறது !
காணாத நாட்களில் கவிதைக்கும் பசிக்கிறது !!

தூவப்பட்ட விண்மீன்கள் துள்ளுகிறது- நிலாகாக்க
ஏவப்பட்ட  வேலையாளாய்  எண்ணுகிறது.....
சிற்றொளி தரும் சிப்பந்திகளின்
கண்சிமிட்டும் கலை உள்ளம்  பறிக்கிறது !
காதலுடன் உணர்வும்  ரசித்து சிரிக்கிறது !!...

நீர்த்துளிகள்  பொதிந்த நீள மூட்டைகளாய் 
நித்தமும் நகர்கிறது  நீலவான் முகில்கள்...
கடல் நீர் திருடர்களை கண்டு
களித்தே மனம் காதல் கொள்கிறதே !

மழையெனும் ஓவியன் மறந்து போன
விண்ணப் பெட்டி வானவில்-- காண்கையில்
காதலும் பூக்கிறது கவிதையில் நிறம் சேர்க்கிறது !
வஞ்சியோடு காதல் கொண்ட  மனிதரில்

வானத்தோடு அலைகிறது என் காதல் ...
இப்பொழுதும் கூட அதன்
மழையெனும்  மரபுக்கவிதையினை
ரசித்து கொண்டே...

- துள.கவிஅன்பு

**
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum