Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
வெள்ளி மங்கை: வாழ்க்கை படமாகிறது
Page 1 of 1
வெள்ளி மங்கை: வாழ்க்கை படமாகிறது
தோஹா ஆசியப்போட்டியில் முதலாவதாக வந்து தங்கப்
பதக்கங்களை கோமதி மாரியப்பனும், சித்ராவும் தட்டி வர,
ஹெப்டதலான் வீரங்கனை ஸ்வப்னா பர்மனும், ஈட்டி எறிதலில்
அன்னுராணியும் இரண்டாவதாக வந்து வெள்ளிப்
பதக்கங்களை பெற்று வந்துள்ளனர்.
இதில் விசேஷம் என்னவென்றால், கொல்கத்தாவை சேர்ந்த
ஸ்வப்னா பர்மன் (23) வாழ்க்கையை இயக்குநர், ஸ்ரீஜித் முகர்ஜி,
திரைப்படமாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதில் ஸ்வப்னாவாக சோஷினி சர்கார் என்ற நடிகை
நடிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ்
போட்டிகளில் கலந்து கொள்ள தீவிர பயிற்சியில் உள்ள
ஸ்வப்னா, தன்னுடைய வாழ்க்கை படமாவது மகிழ்ச்சியாக
இருக்கிறது என்றும், இது விளையாட்டு வீராங்கனையாக வர
விரும்பும் இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாக
இருப்பதோடு, ஊக்கமும் அளிக்கும் என்கிறார்.
2017-ஆம் ஆண்டிலேயே முதல் ஆசிய ஹெப்டதலான்
சாம்பியன்ஷிப் பெற்ற முதல் இந்திய வீராங்கனையான
ஸ்வப்னாவின் அம்மா, தேயிலை தோட்டத்தில் கூலி வேலை
செய்கிறார்.
இவரது தந்தை 2011-ஆம் ஆண்டு பாரிசவாயுவால்
தாக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். சிறுவயது
முதலே சர்வதேச அளவில் விளையாட்டு வீராங்கனையாக
வேண்டுமென்ற லட்சியத்தில் பயிற்சியில் ஈடுபட்ட
ஸ்வப்னாவின் கால் பாதங்கள் ஒவ்வொன்றிலும் ஆறு
விரல்கள்.
இதற்காக அகலமான காலணிகள் வாங்க பணம்
சேமிப்பதுண்டாம்.
" விளையாட்டுத் துறையில் ஆண்-பெண் என்ற வித்தியாசம்
இல்லை. அனைவரும் ஒன்றுதான். திறமைதான் முக்கியம்.
முன்பெல்லாம் விளையாட்டு வீரர்கள் விருது வாங்கி வந்தால்
அதைபற்றி யாரும் பெரிதாக பேசமாட்டார்கள்.
இப்போது இந்தியா பெருமைபடும் வகையில் விருதுகளை
நம் வீரர்கள் வாங்கி குவிக்கத் தொடங்கிய பிறகுதான்,
அதை பற்றி பேசுவதோடு, இளைய தலைமுறையினர்
விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டும் வகையில்
உற்காசமூட்டத் தொடங்கியுள்ளனர். இது ஒரு நல்ல மாற்றம்.
அதே நேரத்தில் என்னைப் போன்று ஏழ்மை நிலையில்
உள்ளவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது,
உதவி பெற பலரை அணுக வேண்டியுள்ளது. ஒரு சிலர் உதவ
முன் வருகின்றனர்.
அரசு மட்டுமின்றி தனியார் கார்பரேட் நிறுவனங்களும் இளம்
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க முன்வர வேண்டும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விருது பெற்று
வந்தவர்களுக்கு பெரிய அளவில் பணம் கிடைப்பதால்,
இப்போது பலரும் விளையாட்டுத் துறையில் ஆர்வம்
காட்டுகின்றனர். மேலும் ஏதாவது ஒரு வேலையும்
கிடைக்கிறது.
மேற்கு வங்க அரசு ஊக்கத் தொகையை மேலும் அதிகரிக்க
வேண்டும்.
விளையாட்டுத் துறையில் பயிற்சி பெறுவது சுலபமல்ல.
பயிற்சியின்போது பலமுறை நான் காயமடைந்துள்ளேன்.
என் குடும்ப சூழ்நிலை கவலை தருவதாக இருந்தது.
அதே சமயம் எனக்கேற்பட்ட காயத்தின் காரணமாக சிலர்
, "இனி இவள் அவ்வளவுதான். இந்த துறையைவிட்டே விலகி
விடுவாள்' என்று என் எதிரிலேயே கூறினார்.
என்னுடைய குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர்.
இடையூறுகளை மீறி என்னுடைய திறமையால் வெற்றி
பெற்றேன். "எந்த விமர்சனமாக இருந்தாலும் அதற்கு உன்
மனதில் இடம் கொடுக்காதே' என்று என்னுடைய
பயிற்சியாளர் சுபாஷ் சர்க்கார் கூறுவார்.
வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று
நினைத்தால் அதை நோக்கியே முன்னேற வேண்டும்
என்பதை கற்றுக் கொண்டேன். அதனால் என்னுடைய
வாழ்க்கை திரைப்படமாவது மகிழ்ச்சிதான்'' என்றார்
ஸ்வப்னா பார்மன்.
-
----------------------------------------
- பூர்ணிமா
நன்றி-தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!
» சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது
» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது
» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|