சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

ஏட்டு சுரைக்காய்! Khan11

ஏட்டு சுரைக்காய்!

Go down

ஏட்டு சுரைக்காய்! Empty ஏட்டு சுரைக்காய்!

Post by rammalar Sun 31 Jan 2021 - 17:22

ஏட்டு சுரைக்காய்! E_1611925588

-
மாமண்டூரை ஆண்டு வந்தார் மன்னர் மகிலன். 
கலைவாணர்களை ஆதரித்தார். கவிஞர்களுக்கு பரிசு தந்து 
உற்சாகப்படுத்தினார். அவரது கொடைத்தன்மை அறிந்து, 
கலைஞர்களும், கவிஞர்களும் திறமை காட்டி பரிசு பெற்றனர்.


ஒரு நாள் -
ஐந்து பெரும் பண்டிதர்கள் அவரது அவைக்கு வந்தனர். 
ஒருவர், தருக்க நுாலை கரைத்து குடித்தவர். சாஸ்திரத்தில் 
அவரை மிஞ்ச யாரும் இல்லை. மற்றொருவர், வியாகரணம் 
நுாலில் புலமை பெற்றவர். வடமொழி இலக்கணம், 
இலக்கியங்களை பயின்றவர்.


மூன்றாமவர், ஜோதிட கலையில் வல்லவர். நான்காமவரோ, 
இசை, நாட்டியக் கலையில் தேர்ந்தவர். ஐந்தாமவர், மருத்துவ 
கலையில் வல்லவர். இவர்கள், தனித்தனியே மன்னர் முன் 
திறமையைக் காட்டினர்.


வியந்து, 'உண்மையிலே சிறந்த மேதைகள் தான்' என முடிவுக்கு 
வந்தார் மன்னர்.


எனினும் கல்வி அறிவுடன், உலக அறிவும் பெற்றுள்ளனரா என, 
சோதிக்க எண்ணி, 'உங்கள் திறமையை மெச்சினேன்; 
ஐந்து பேரும் இன்று இவ்வூரில் ஒன்றாக தங்கியிருந்து, நாளை 
வாருங்கள். அனைவரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வர 
வேண்டும்...' என நிபந்தனை விதித்தார் மன்னர்.


அதை ஏற்று புறப்பட்டனர்.
அவர்களை கண்காணிக்க, ஒற்றர்களை அனுப்பினார் மன்னர்.
அன்று மாலை -
இசைக்கலை அறிந்தவர், சமையல் வேலையை மேற்கொண்டார். 
அடுப்பில் உலை வைத்ததும் பாட ஆரம்பித்து விட்டார்.


உலையில் நீர் கொதித்த போது, 'தள...தள...' என சத்தம் கேட்டது. 
அதற்கு தக்கவாறு தொடையில் தாளம் போட ஆரம்பித்தார். 
தாளத்துக்கு, கொதிக்கும் நீர் ஓசை ஒத்து வரவில்லை. 
கோபத்துடன் அடுப்பில் இருந்த பானையை, 'தொப்' என போட்டு 
உடைத்தார்.


நெய் வாங்கி வர, கடை தெருவுக்குச் சென்றார் சாஸ்திரத்தில் 
மிஞ்சியவர்.


வியாபாரியிடம் வாங்கியபோது, 'தொன்னைக்கு, நெய் ஆதாரமா... 
நெய்க்கு, தொன்னை ஆதாரமா' என்ற சந்தேகம் வந்தது. 
வெகுநேரம் ஆராய்ந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை.
சோதித்து அறிய தீர்மானித்து, தொன்னையை கவிழ்த்தார். 
தரையில் கொட்டி, மண்ணோடு கலந்தது நெய். நெய்க்கு, தொன்னை 
ஆதாரம் என புரிந்தது.


'ஆஹா... எவ்வளவு பெரிய உண்மையைக் கண்டுபிடித்து 
விட்டேன்' என மகிழ்ந்தபடி, வெறும் கையுடன் திரும்பினார்.


தயிர் வாங்கச் சென்ற இலக்கணப் பண்டிதர்,
 'தயிரோ... ஓ... தயிர்...' என, நீட்டி முழக்கி கூவியபடி வரும் 
பெண்ணைக் கண்டார்.


தயிர் விற்கும் பெண், இலக்கணத்தை மீறி, பிழையுடன் கூவியது
 பிடிக்கவில்லை. பொத்துக்கொண்டு வந்தது கோபம். வந்த 
வேலையை மறந்து, அப்பெண்ணுடன் சண்டை போட ஆரம்பித்தார்.


'எனக்கு இலக்கணம், கிலக்கணம் எதுவும் தெரியாது சாமி; 
சம்மதமிருந்தால் தயிர் வாங்கு... இல்லயேல் ஆளை விடு...' என 
புறப்பட்டாள் பெண்.
சண்டையால் தயிர் வாங்காமலே திரும்பினார்.


இலை பறித்து வர சென்ற ஜோதிட வல்லுனர், 
ஒரு மரத்தில் ஏறினார். அப்போது, பல்லி, ஒலி எழுப்பியது. 
இதைக் கேட்டதும், பல்லி ஒலியால் வரும் பலனை ஆராய 
ஆரம்பித்தார்.


நீண்ட நேரம் கணக்குப் போட்டு பார்த்தார். பல்லி கூறியபடி பலன் 
சரியில்லை என முடிவு செய்தார். எனவே, அதற்கு மேல் மரத்தில் 
ஏறவும் இல்லை; இறங்கவும் இல்லை. மரத்தின் இடையில் தொத்திக் 
கொண்டிருந்தார்.


காய்கறி வாங்கி வர, கடைத் தெருவுக்கு சென்றார் வைத்தியர். 
அங்கு கண்ட காய்கறிகளின் குணநலன்களை ஆராய்ச்சி செய்தார்.
'அது, வாயுவைத் தரும்...'
'சூட்டை தரும் உணவு இது...'
'இது, குளிர்ச்சியானது. உடலுக்கு ஒத்துவராது...'
இப்படிக் கூறி எல்லாவற்றையும் ஒதுக்கினார்.
கடைசியில் வெறுங்கையுடன் வீடு திரும்பினார்.


பண்டிதர்களின் செயலைக் கண்காணித்த ஒற்றர்கள், விடாமல் 
அனைத்தையும் மன்னரிடம் கூறினர்.


அதைக்கேட்டு புன்னகைத்து, 'பண்டிதர்களிடம் உள்ளது வெறும் ஏட்டு 
படிப்பு தான்; உலக அனுபவம் துளியும் கிடையாது...' என்றார் மன்னர்.


குழந்தைகளே... 
ஏட்டுப்படிப்பு மட்டும் வாழ்க்கைக்கு உதவாது. பயிற்சியுடன் கூடிய 
படிப்பே பயன் தரும்.
-
நன்றி-சிறுவர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum