Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
அள்ள முடியும், கிள்ள முடியாது...விடுகதைகள்
Page 1 of 1
அள்ள முடியும், கிள்ள முடியாது...விடுகதைகள்
101. மண்மீது குடையாவான், மழைக்கு துணையாவான் - அவன் யார்?
- [மரம்]
102. ஊருக்கெல்லாம் ஒரே ஆடை - அது என்ன?
- [வானம்]
103. கையுண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை - அவன் யார்?
- [சட்டைத்துணி]
104. அள்ள முடியும், கிள்ள முடியாது - அது எது?
- [தண்ணீர்]
105. ஒற்றை முத்துக்கு ஒரு பெட்டி, இரட்டை முத்துக்கும் ஒரே பெட்டி - அது என்ன?
- [வேர்க்கடலை]
106. மூன்று கொண்டை வைத்திருப்பாள் ஆனால் பெண் அல்ல - அது என்ன?
- [அடுப்பு விளிம்புகள்]
107. ஊரையே சுற்றுவான் ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் - அவன் யார்?
- [செருப்பு]
108. பத்து திங்கள் இருட்டறையில் இருந்தவன், விடுதலையானதும் அழுகிறான் - அவன் யார்?
- [பிறக்கும் குழந்தை]
109. தேவைப்படும்போது பையை நிரப்பலாம், ஆனால் தேவைக்கு மேலே பையை நிரப்ப முடியாது - அது என்ன?
- [வயிறு]
110. இரவிலே எழும் தீபம், பகலில் பார்க்க முடியாது - அது என்ன?
- [நிலவு]
111. உடைக்க முடியாத ஓட்டிற்குள் ஒளிந்திருப்பான் கள்ளன் - அவன் யார்?
- [ஆமை]
112. ஒருநாள் முழுமுகம் காட்டுவான், ஒருநாள் முகமே காட்ட மாட்டான் -அவன் யார்?
- [நிலவு]
113. வீடு கட்டத் தேவை சாரம். வீட்டு ஒளிக்குத் தேவை இன்னொரு சாரம் - அது என்ன சாரம்?
- [மின்சாரம்]
114. உடல் முழுதும் நூறுகட்டு, உச்சி முடிக்கு கட்டே இல்லை - அது என்ன?
- [தென்னை மரம்]
115. நீரில் மிதக்கும் பூ, இரவில் பூக்கும், பகலில் உறங்கும் - அது என்ன பூ?
- [அல்லிப்பூ]
116. போதையின்றி தள்ளாடினாலும், புறப்படும் ஊர் போய் சேருவான் - அது என்ன?
- [கப்பல்]
117. ஒரே நேரத்தில் மூடித் திறக்கும் கதவுகள், ஓராயிரம் முறை இயங்கினாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன?
- [இமைகள்]
118. ஆயிரம்பேர் திரண்டாலும், அணு அளவு கூட தூசி கிளம்பாது - அது என்ன?
- [எறும்புக்கூட்டம்]
119. குளிருக்கு கல்லாவான், அனலுக்கு தண்ணீராவான் - அது என்ன?
- [பனிக்கட்டி]
120. கிட்ட இருக்கும் பட்டணம் எட்டி பார்க்க முடியாது - அது என்ன?
- [நமது முதுகு]
121. பெட்டியை உடைத்தால் முத்துக்கள் - அது என்ன?
- [மாதுளம் பழம்]
122. காற்றிலே பறந்து போகும் கண்ணாடிக் கூண்டு, கைபட்டால் உடைந்து போகும் கண்ணாடிக் கூண்டு - அது என்ன?
- [சோப்புக் குமிழ்]
123. பள்ளிக்குப் போனாலும் பாடம் படிக்க மாட்டான், ஆனால் சரியாக கண்ணக்குச் சொல்வான் - அவன் யார்?
- [கால்குலேட்டர்]
124. குடையுடன் சந்தைக்கு வருபவரை, குழம்புக்காக எல்லோரும் விரும்புவார்கள் - அது என்ன?
-[கத்தரிக்காய்]
125. மழை நேரத்தில் வெட்ட வெளியில் மின்னும் விளக்கு - அது என்ன?
- [மின்னல்]
126. சரியென்றாலும் அழிப்பான், தவறென்றாலும் அழிப்பான் - அவன் யார்?
-[ரப்பர்]
127. ஒலி கொடுத்து அழைப்பான், உரையாடலில் திளைப்பான் - அவன் யார்?
-[டெலிபோன்]
128. ஆட்டிவிட்டால் ஆடுவான், ஆட்டாவிட்டால் தொங்குவான் - அவன் யார்?
- [ஊஞ்சல்]
129. மண்ணெடித்து கூடு கட்டும், மரம் அரித்து உயிர் வாழும் - அது என்ன?
- [கரையான்]
130. சிதறிக் கிடக்குது புள்ளிகள் சித்திரம் வரைய ஆளில்லை - யார் அது?
-[நட்சத்திரக்கூட்டம்]
131. விருந்துக்கு அழைத்து விதியை முடிப்பவன் - அவன் யார்?
- [எலிப்பொறி]
132. குதி குதித்தான் பல் இளித்தான் - அவன் யார்?
- [சோளப்பொறி]
133. அம்பும் நாணும் இல்லாத வில், ஆகாயத்தில் தோன்றும் வில் - அது என்ன வில்?
- [வானவில்]
134. காற்றில் பறக்கும் ஆடையை, கழற்றி எறிந்தவன் புற்றுக்குள்ளே - அது என்ன?
[பாம்பு]
135. வானம் இருண்டால் வடிவழகி ஆடுவாள் - அவள் யார்?
- [மயில்]
136. நன்றி மறக்காத பிள்ளை, நம்ம வீட்டு செல்லப் பிளிளை - அது யார்?
- [நாய்]
137. இரட்டைக் குழல் துப்பாக்கியில் காற்று வரும் போகும் - அது என்ன?
- [மூக்கு]
138. வெட்கையிலே மலரும் பூ, வெகுபேர் பசி போக்கும் - அது என்ன?
- [சோறு]
139. தாய் சின்னக்கொடி, பிள்ளைகள் பெரியவர்கள் - இது என்ன?
- [பூசனிக்காய்]
140. சோறுபோல பொங்க வைத்து, சுவரெல்லாம் பூசுவார்கள் - அது என்ன?
- [சுண்ணாம்பு]
141. பறக்கும் வண்ணப்பட்டு, வாடுமம்மா மற்றவர்கள் கைபட்டு - அது என்ன?
- [பட்டாம் பூச்சி]
142. காற்றிலே பறக்குது கண்ணாடுக்கூண்டு, கையால் தொட்டால் காணாமல் போகுது - அது என்ன?
- [சோப்புக் குமிழ்]
143. ஒன்றாய் பிறந்து ஒரே வேலையை செய்யும் இரட்டையர்கள் - அவர்கள் யார்?
- [கண் பார்வை]
144. இரவல் கிடைக்காதது, இரவில் கிடைக்கும் - அது என்ன?
- [தூக்கம்]
145. இரவிலே பிறந்த ராஜகுமாரனுக்கு தலையிலே குடை - அது என்ன?
- [காளான்]
146. உச்சியில் தோகை, உள்ளங்காலில் ரோமம், உடலெல்லாம் வரிகள் - அது என்ன?
- [கரும்பு]
147. மொட்டைப் பாறையில் மூடிய கண்கள் மூன்று - அது என்ன?
- [தேங்காய்]
148. வெளிச்சத்தில் தொடருவான், இருட்டிற்கள் தொடரமாட்டான் - அவன் யார்?
- [நிழல்]
149. அள்ளக் குறையாது, குடிக்க உதவாது - அது என்ன?
- [கடல் நீர்]
150. அவன் கழற்றிய சட்டையை அடுத்தவன் போட முடியாது - அது என்ன?
- [பாம்பு]
151. அந்தரத்து தொட்டிலில் ஆடுவார்கள், கூடுவார்கள் - அவர்கள் யார்?
-[தூக்கணாங் குருவிகள்]
152. அண்ணன் சுட்டெரிப்பான், தம்பி குளிர வைப்பான் - அவர்கள் யார்?
- [சூரியன், சந்திரன்]
153. அவ்வப்போது நிரப்பலாம், மொத்தமாக நிரப்ப முடியாது - அது என்ன?
- [வயிறு]
154. அவன் அன்னநடை நடந்தாலும் சும்மா அதிரும் - அவன் யார்?
- [யானை]
155. அண்ணன் தம்பி அஞ்சு பேரு, அதில சின்னவன் இல்லாம பெரியவங்களால எதுவும் செய்ய முடியாது - யார் அவர்கள்?
- [நமது கை விரல்கள்]
156. ஆனந்தத்திற்கும், துக்கத்திற்கும் மட்டுமே தண்ணீர் பொங்கும் குளம் - அது என்ன குளம்?
- [கண்கள்-கண்ணீர்]
157. காலையும் மாலேயும் உயர்ந்தவன், மதிய வேளையில் குட்டையாவான், இரவில் எங்கேதான் போவானோ - அவன் யார்?
- [நமது நிழல்]
158. மூணு கண்ணுப் பானையிலே ஒரு மடக்குத் தண்ணீர் - அது என்ன?
- [தேங்காய்த் தண்ணீர்]
159. கடலில் தோன்றி, கடலில் மறையும் - அது என்ன?
- [அலைகள்]
160. ஆளில்லாத வீட்டில் அவன் குடுயேறுவான் - அவன் யார்?
- [சிலந்திகள்]
161. கால் இல்லாத பந்தலை, காணக்காண வினோதம் - அது என்ன?
- [வானம்]
162. கையில் தவழும், பையில உறங்கும் - அது என்ன?
- [பணம்]
163. குடிக்கத் தண்ணீர் உண்டு, குளிக்கத் தண்ணீர் இல்லை - அது என்ன?
- [இளநீர்]
164. திறந்து திறந்து மூடினாலும், ஓசை சிறிதும் பேட்காது - அது என்ன?
- [இமைகள்]
165. வெள்ளைச் சீமாட்டியின் தலை மேல் விளக்கு - அது என்ன?
- [மெழுகுவர்த்தி]
166. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும், ருசியும் மாறாமு - அது என்ன?
- [கரும்பு]
167. உடலுக்குள் உருவாகும் உருவமில்லா கல், அதிர்ச்சியில் மறையும் கல் - அது என்ன கல்?
- [விக்கல்]
168. கண் சிமிட்டி கண்டதையெல்லாம் பெட்டிக்குள் போட்டுக் கொள்வான் - அவன் யார்?
- [கேமிரா]
169. கல்லில் நீரூற்ற, கனன்று உருவாகும் பூ - அது என்ன பூ?
- [சுண்ணாம்பு]
170. கமண்டலம் இல்லாமல் தவமிருப்பான், தூண்டில் இல்லாமல் மீன் பிடிப்பான் - அவன் யார்?
- [கொக்கு]
171. சிறுதூசி விழுந்ந்தும், குளமே கலங்கியது - அது என்ன?
- [கண்கள்]
172. அரைசாண் ராணிக்குள்ளே ஆயிரம் முத்துக்கள் - அது என்ன?
- [வெண்டைக்காய்]
173. நிழலுக்கு ஒதுங்கலாம், மழைக்கு ஒதுங்க முடியாது - அது என்ன?
- [மரம்]
174. பால் கொடுத்துப் பழகினாலும், என்றும் பகையாளியாக இருப்பான் - அவன் யார்?
- [பாம்பு]
175. நாலு கால் இருந்தும் அவன் நடப்பதில்லை, இருக்கையிலே தான் அவன் வாழ்வு - அது யார்?
- [நாற்காலி]
176. ஒற்றைக் காது உள்ளவனுக்கு ஒருபோதும் கேட்காது - அது என்ன?
- [ஊசி]
177. வீடுகட்ட உதவாத கல், சமையலுக்கு உதவும் கல் - அது என்ன கல்?
- [உப்புக்கல்]
178. தலைகீழாய் தொங்குவான், தலையசைத்தால் தென்றல் தருவான் - அவன் யார்?
- [மின் விசிறி]
179. அன்பால் மலரும் பூ, அனைவரும் விரும்பும் பூ, மனிதன் உதட்டில் மலரும் பூ - அது என்ன பூ?
- [சிரிப்பு]
180.கல்லாலும் மண்ணாலும் கட்டாத வீடு, கதவு இல்லாத வீடு காற்றினிலே ஆடும் வீடு - அது என்ன?
- [தூக்கணாங் குருவிக் கூடு]
181. கடல் நீரால் வளர்வான், மழை நீரால் மடிவான் - அவன் யார்?
- [உப்பு]
182. திரி இல்லாத விளக்கு, திரிலோகம் எல்லாம் தெரியுதாம் - அது என்ன?
- [சூரியன்]
183. நான்கு காலில் பின்னிய வலையில் நாமெல்லாம் தூங்கலாம் - அது என்ன?
- [நார்க்கட்டில்]
184. பறக்கும் ஆனால், பறந்து போகாது - அது என்ன?
- [கொடி]
185. அரிசி மாவில் வரையாத அழகு கோலம், அங்கமெல்லாம் அழகாக்கும் - அது என்ன?
- [பச்சை குத்துதல்]
186. குப்பை மேட்டில் குதறுவாள், கொஞ்சிப்பேணி பிள்ளை வளர்ப்பாள் - அவள் யார்?
- [கோழி]
187. பச்சை, கருப்பு, வெள்ளை மூன்றும் பக்குவமானால் சிவப்பு - அது என்ன?
- [வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு]
188. பசுமை பாய் விரித்த சோலை, பசிபோக்கும் சோலை - அது என்ன?
- [நெல் வயல்]
189. அக்காள் வீட்டில் விளக்கு ஏற்றினால், தங்கை வீட்டில் தானே எரியும் எரியும் - அது என்ன?
-[கொடியடுப்பு(இணைந்த அடுப்பு)]
190. பகலில் அக்கினித் தட்டு, இரவில் குளிர்தட்டு - அது என்ன?
- [சூரியன், சந்திரன்]
191. ஒளியில் நம்கூடவே இருப்பான், இருளில் மறைந்து கொள்வான் - அவன் யார்?
- [நிழல்]
192. அவன் பற்களை அழுத்தினால் பல பேர் ரசிக்கும் இசை ஒலிக்கும் - அவன் யார்?
- [ஹார்மோனியப் பெட்டி]
193. பகலில் இருபுறம் நின்று காவல் காப்பான், இரவில் நடுவிலே நின்று காவல் காப்பான் - அவன் யார்?
- [இரட்டை கதவு]
194. பச்சைப் பெட்டியில் பத்துச்சரம் முத்துகள் - அது என்ன?
-[வெண்டைக்காய்]
195. பட்ட மரம் இசை எழுப்ப படைகள் திரண்டு வரும் - அது என்ன?
- [முரசு]
196. தாயோ கடல், தந்தையோ சூரியன் - அவன் யார்?
- [உப்பு]
197. தங்கை விளக்கு காட்ட, அண்ணன் மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்?
- [மின்னல், இடி, மழை]
198. கூன் முதுகு கிழவனுக்கு குதிகால் வரை பற்கள் - அது என்ன?
-[கதிர் அரிவாள்]
199. கத்தியால் வெள்ளையனைச் சீவ கருப்பன் தலைகாட்டுவான் - அவன் யார்?
- [பென்சில்]
200. எட்டாத இடத்திலே ஏகப்பட்ட மின்மினிப் பூச்சிகள் - அவை என்ன?
- [நட்சத்திரம்]
- [மரம்]
102. ஊருக்கெல்லாம் ஒரே ஆடை - அது என்ன?
- [வானம்]
103. கையுண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை - அவன் யார்?
- [சட்டைத்துணி]
104. அள்ள முடியும், கிள்ள முடியாது - அது எது?
- [தண்ணீர்]
105. ஒற்றை முத்துக்கு ஒரு பெட்டி, இரட்டை முத்துக்கும் ஒரே பெட்டி - அது என்ன?
- [வேர்க்கடலை]
106. மூன்று கொண்டை வைத்திருப்பாள் ஆனால் பெண் அல்ல - அது என்ன?
- [அடுப்பு விளிம்புகள்]
107. ஊரையே சுற்றுவான் ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் - அவன் யார்?
- [செருப்பு]
108. பத்து திங்கள் இருட்டறையில் இருந்தவன், விடுதலையானதும் அழுகிறான் - அவன் யார்?
- [பிறக்கும் குழந்தை]
109. தேவைப்படும்போது பையை நிரப்பலாம், ஆனால் தேவைக்கு மேலே பையை நிரப்ப முடியாது - அது என்ன?
- [வயிறு]
110. இரவிலே எழும் தீபம், பகலில் பார்க்க முடியாது - அது என்ன?
- [நிலவு]
111. உடைக்க முடியாத ஓட்டிற்குள் ஒளிந்திருப்பான் கள்ளன் - அவன் யார்?
- [ஆமை]
112. ஒருநாள் முழுமுகம் காட்டுவான், ஒருநாள் முகமே காட்ட மாட்டான் -அவன் யார்?
- [நிலவு]
113. வீடு கட்டத் தேவை சாரம். வீட்டு ஒளிக்குத் தேவை இன்னொரு சாரம் - அது என்ன சாரம்?
- [மின்சாரம்]
114. உடல் முழுதும் நூறுகட்டு, உச்சி முடிக்கு கட்டே இல்லை - அது என்ன?
- [தென்னை மரம்]
115. நீரில் மிதக்கும் பூ, இரவில் பூக்கும், பகலில் உறங்கும் - அது என்ன பூ?
- [அல்லிப்பூ]
116. போதையின்றி தள்ளாடினாலும், புறப்படும் ஊர் போய் சேருவான் - அது என்ன?
- [கப்பல்]
117. ஒரே நேரத்தில் மூடித் திறக்கும் கதவுகள், ஓராயிரம் முறை இயங்கினாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன?
- [இமைகள்]
118. ஆயிரம்பேர் திரண்டாலும், அணு அளவு கூட தூசி கிளம்பாது - அது என்ன?
- [எறும்புக்கூட்டம்]
119. குளிருக்கு கல்லாவான், அனலுக்கு தண்ணீராவான் - அது என்ன?
- [பனிக்கட்டி]
120. கிட்ட இருக்கும் பட்டணம் எட்டி பார்க்க முடியாது - அது என்ன?
- [நமது முதுகு]
121. பெட்டியை உடைத்தால் முத்துக்கள் - அது என்ன?
- [மாதுளம் பழம்]
122. காற்றிலே பறந்து போகும் கண்ணாடிக் கூண்டு, கைபட்டால் உடைந்து போகும் கண்ணாடிக் கூண்டு - அது என்ன?
- [சோப்புக் குமிழ்]
123. பள்ளிக்குப் போனாலும் பாடம் படிக்க மாட்டான், ஆனால் சரியாக கண்ணக்குச் சொல்வான் - அவன் யார்?
- [கால்குலேட்டர்]
124. குடையுடன் சந்தைக்கு வருபவரை, குழம்புக்காக எல்லோரும் விரும்புவார்கள் - அது என்ன?
-[கத்தரிக்காய்]
125. மழை நேரத்தில் வெட்ட வெளியில் மின்னும் விளக்கு - அது என்ன?
- [மின்னல்]
126. சரியென்றாலும் அழிப்பான், தவறென்றாலும் அழிப்பான் - அவன் யார்?
-[ரப்பர்]
127. ஒலி கொடுத்து அழைப்பான், உரையாடலில் திளைப்பான் - அவன் யார்?
-[டெலிபோன்]
128. ஆட்டிவிட்டால் ஆடுவான், ஆட்டாவிட்டால் தொங்குவான் - அவன் யார்?
- [ஊஞ்சல்]
129. மண்ணெடித்து கூடு கட்டும், மரம் அரித்து உயிர் வாழும் - அது என்ன?
- [கரையான்]
130. சிதறிக் கிடக்குது புள்ளிகள் சித்திரம் வரைய ஆளில்லை - யார் அது?
-[நட்சத்திரக்கூட்டம்]
131. விருந்துக்கு அழைத்து விதியை முடிப்பவன் - அவன் யார்?
- [எலிப்பொறி]
132. குதி குதித்தான் பல் இளித்தான் - அவன் யார்?
- [சோளப்பொறி]
133. அம்பும் நாணும் இல்லாத வில், ஆகாயத்தில் தோன்றும் வில் - அது என்ன வில்?
- [வானவில்]
134. காற்றில் பறக்கும் ஆடையை, கழற்றி எறிந்தவன் புற்றுக்குள்ளே - அது என்ன?
[பாம்பு]
135. வானம் இருண்டால் வடிவழகி ஆடுவாள் - அவள் யார்?
- [மயில்]
136. நன்றி மறக்காத பிள்ளை, நம்ம வீட்டு செல்லப் பிளிளை - அது யார்?
- [நாய்]
137. இரட்டைக் குழல் துப்பாக்கியில் காற்று வரும் போகும் - அது என்ன?
- [மூக்கு]
138. வெட்கையிலே மலரும் பூ, வெகுபேர் பசி போக்கும் - அது என்ன?
- [சோறு]
139. தாய் சின்னக்கொடி, பிள்ளைகள் பெரியவர்கள் - இது என்ன?
- [பூசனிக்காய்]
140. சோறுபோல பொங்க வைத்து, சுவரெல்லாம் பூசுவார்கள் - அது என்ன?
- [சுண்ணாம்பு]
141. பறக்கும் வண்ணப்பட்டு, வாடுமம்மா மற்றவர்கள் கைபட்டு - அது என்ன?
- [பட்டாம் பூச்சி]
142. காற்றிலே பறக்குது கண்ணாடுக்கூண்டு, கையால் தொட்டால் காணாமல் போகுது - அது என்ன?
- [சோப்புக் குமிழ்]
143. ஒன்றாய் பிறந்து ஒரே வேலையை செய்யும் இரட்டையர்கள் - அவர்கள் யார்?
- [கண் பார்வை]
144. இரவல் கிடைக்காதது, இரவில் கிடைக்கும் - அது என்ன?
- [தூக்கம்]
145. இரவிலே பிறந்த ராஜகுமாரனுக்கு தலையிலே குடை - அது என்ன?
- [காளான்]
146. உச்சியில் தோகை, உள்ளங்காலில் ரோமம், உடலெல்லாம் வரிகள் - அது என்ன?
- [கரும்பு]
147. மொட்டைப் பாறையில் மூடிய கண்கள் மூன்று - அது என்ன?
- [தேங்காய்]
148. வெளிச்சத்தில் தொடருவான், இருட்டிற்கள் தொடரமாட்டான் - அவன் யார்?
- [நிழல்]
149. அள்ளக் குறையாது, குடிக்க உதவாது - அது என்ன?
- [கடல் நீர்]
150. அவன் கழற்றிய சட்டையை அடுத்தவன் போட முடியாது - அது என்ன?
- [பாம்பு]
151. அந்தரத்து தொட்டிலில் ஆடுவார்கள், கூடுவார்கள் - அவர்கள் யார்?
-[தூக்கணாங் குருவிகள்]
152. அண்ணன் சுட்டெரிப்பான், தம்பி குளிர வைப்பான் - அவர்கள் யார்?
- [சூரியன், சந்திரன்]
153. அவ்வப்போது நிரப்பலாம், மொத்தமாக நிரப்ப முடியாது - அது என்ன?
- [வயிறு]
154. அவன் அன்னநடை நடந்தாலும் சும்மா அதிரும் - அவன் யார்?
- [யானை]
155. அண்ணன் தம்பி அஞ்சு பேரு, அதில சின்னவன் இல்லாம பெரியவங்களால எதுவும் செய்ய முடியாது - யார் அவர்கள்?
- [நமது கை விரல்கள்]
156. ஆனந்தத்திற்கும், துக்கத்திற்கும் மட்டுமே தண்ணீர் பொங்கும் குளம் - அது என்ன குளம்?
- [கண்கள்-கண்ணீர்]
157. காலையும் மாலேயும் உயர்ந்தவன், மதிய வேளையில் குட்டையாவான், இரவில் எங்கேதான் போவானோ - அவன் யார்?
- [நமது நிழல்]
158. மூணு கண்ணுப் பானையிலே ஒரு மடக்குத் தண்ணீர் - அது என்ன?
- [தேங்காய்த் தண்ணீர்]
159. கடலில் தோன்றி, கடலில் மறையும் - அது என்ன?
- [அலைகள்]
160. ஆளில்லாத வீட்டில் அவன் குடுயேறுவான் - அவன் யார்?
- [சிலந்திகள்]
161. கால் இல்லாத பந்தலை, காணக்காண வினோதம் - அது என்ன?
- [வானம்]
162. கையில் தவழும், பையில உறங்கும் - அது என்ன?
- [பணம்]
163. குடிக்கத் தண்ணீர் உண்டு, குளிக்கத் தண்ணீர் இல்லை - அது என்ன?
- [இளநீர்]
164. திறந்து திறந்து மூடினாலும், ஓசை சிறிதும் பேட்காது - அது என்ன?
- [இமைகள்]
165. வெள்ளைச் சீமாட்டியின் தலை மேல் விளக்கு - அது என்ன?
- [மெழுகுவர்த்தி]
166. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும், ருசியும் மாறாமு - அது என்ன?
- [கரும்பு]
167. உடலுக்குள் உருவாகும் உருவமில்லா கல், அதிர்ச்சியில் மறையும் கல் - அது என்ன கல்?
- [விக்கல்]
168. கண் சிமிட்டி கண்டதையெல்லாம் பெட்டிக்குள் போட்டுக் கொள்வான் - அவன் யார்?
- [கேமிரா]
169. கல்லில் நீரூற்ற, கனன்று உருவாகும் பூ - அது என்ன பூ?
- [சுண்ணாம்பு]
170. கமண்டலம் இல்லாமல் தவமிருப்பான், தூண்டில் இல்லாமல் மீன் பிடிப்பான் - அவன் யார்?
- [கொக்கு]
171. சிறுதூசி விழுந்ந்தும், குளமே கலங்கியது - அது என்ன?
- [கண்கள்]
172. அரைசாண் ராணிக்குள்ளே ஆயிரம் முத்துக்கள் - அது என்ன?
- [வெண்டைக்காய்]
173. நிழலுக்கு ஒதுங்கலாம், மழைக்கு ஒதுங்க முடியாது - அது என்ன?
- [மரம்]
174. பால் கொடுத்துப் பழகினாலும், என்றும் பகையாளியாக இருப்பான் - அவன் யார்?
- [பாம்பு]
175. நாலு கால் இருந்தும் அவன் நடப்பதில்லை, இருக்கையிலே தான் அவன் வாழ்வு - அது யார்?
- [நாற்காலி]
176. ஒற்றைக் காது உள்ளவனுக்கு ஒருபோதும் கேட்காது - அது என்ன?
- [ஊசி]
177. வீடுகட்ட உதவாத கல், சமையலுக்கு உதவும் கல் - அது என்ன கல்?
- [உப்புக்கல்]
178. தலைகீழாய் தொங்குவான், தலையசைத்தால் தென்றல் தருவான் - அவன் யார்?
- [மின் விசிறி]
179. அன்பால் மலரும் பூ, அனைவரும் விரும்பும் பூ, மனிதன் உதட்டில் மலரும் பூ - அது என்ன பூ?
- [சிரிப்பு]
180.கல்லாலும் மண்ணாலும் கட்டாத வீடு, கதவு இல்லாத வீடு காற்றினிலே ஆடும் வீடு - அது என்ன?
- [தூக்கணாங் குருவிக் கூடு]
181. கடல் நீரால் வளர்வான், மழை நீரால் மடிவான் - அவன் யார்?
- [உப்பு]
182. திரி இல்லாத விளக்கு, திரிலோகம் எல்லாம் தெரியுதாம் - அது என்ன?
- [சூரியன்]
183. நான்கு காலில் பின்னிய வலையில் நாமெல்லாம் தூங்கலாம் - அது என்ன?
- [நார்க்கட்டில்]
184. பறக்கும் ஆனால், பறந்து போகாது - அது என்ன?
- [கொடி]
185. அரிசி மாவில் வரையாத அழகு கோலம், அங்கமெல்லாம் அழகாக்கும் - அது என்ன?
- [பச்சை குத்துதல்]
186. குப்பை மேட்டில் குதறுவாள், கொஞ்சிப்பேணி பிள்ளை வளர்ப்பாள் - அவள் யார்?
- [கோழி]
187. பச்சை, கருப்பு, வெள்ளை மூன்றும் பக்குவமானால் சிவப்பு - அது என்ன?
- [வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு]
188. பசுமை பாய் விரித்த சோலை, பசிபோக்கும் சோலை - அது என்ன?
- [நெல் வயல்]
189. அக்காள் வீட்டில் விளக்கு ஏற்றினால், தங்கை வீட்டில் தானே எரியும் எரியும் - அது என்ன?
-[கொடியடுப்பு(இணைந்த அடுப்பு)]
190. பகலில் அக்கினித் தட்டு, இரவில் குளிர்தட்டு - அது என்ன?
- [சூரியன், சந்திரன்]
191. ஒளியில் நம்கூடவே இருப்பான், இருளில் மறைந்து கொள்வான் - அவன் யார்?
- [நிழல்]
192. அவன் பற்களை அழுத்தினால் பல பேர் ரசிக்கும் இசை ஒலிக்கும் - அவன் யார்?
- [ஹார்மோனியப் பெட்டி]
193. பகலில் இருபுறம் நின்று காவல் காப்பான், இரவில் நடுவிலே நின்று காவல் காப்பான் - அவன் யார்?
- [இரட்டை கதவு]
194. பச்சைப் பெட்டியில் பத்துச்சரம் முத்துகள் - அது என்ன?
-[வெண்டைக்காய்]
195. பட்ட மரம் இசை எழுப்ப படைகள் திரண்டு வரும் - அது என்ன?
- [முரசு]
196. தாயோ கடல், தந்தையோ சூரியன் - அவன் யார்?
- [உப்பு]
197. தங்கை விளக்கு காட்ட, அண்ணன் மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்?
- [மின்னல், இடி, மழை]
198. கூன் முதுகு கிழவனுக்கு குதிகால் வரை பற்கள் - அது என்ன?
-[கதிர் அரிவாள்]
199. கத்தியால் வெள்ளையனைச் சீவ கருப்பன் தலைகாட்டுவான் - அவன் யார்?
- [பென்சில்]
200. எட்டாத இடத்திலே ஏகப்பட்ட மின்மினிப் பூச்சிகள் - அவை என்ன?
- [நட்சத்திரம்]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உங்களால் முடியாது நானா மாட்டினாத்தான் முடியும்.
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும்.
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|