சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

அள்ள முடியும், கிள்ள முடியாது...விடுகதைகள் Khan11

அள்ள முடியும், கிள்ள முடியாது...விடுகதைகள்

Go down

அள்ள முடியும், கிள்ள முடியாது...விடுகதைகள் Empty அள்ள முடியும், கிள்ள முடியாது...விடுகதைகள்

Post by rammalar Thu 10 Feb 2022 - 5:19

101. மண்மீது குடையாவான், மழைக்கு துணையாவான் - அவன் யார்?
- [மரம்]
102. ஊருக்கெல்லாம் ஒரே ஆடை - அது என்ன?
- [வானம்]
103. கையுண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை - அவன் யார்?
- [சட்டைத்துணி]
104. அள்ள முடியும், கிள்ள முடியாது - அது எது?
- [தண்ணீர்]
105. ஒற்றை முத்துக்கு ஒரு பெட்டி, இரட்டை முத்துக்கும் ஒரே பெட்டி - அது என்ன?
- [வேர்க்கடலை]
106. மூன்று கொண்டை வைத்திருப்பாள் ஆனால் பெண் அல்ல - அது என்ன?
- [அடுப்பு விளிம்புகள்]
107. ஊரையே சுற்றுவான் ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் - அவன் யார்?
- [செருப்பு]
108. பத்து திங்கள் இருட்டறையில் இருந்தவன், விடுதலையானதும் அழுகிறான் - அவன் யார்?
- [பிறக்கும் குழந்தை]
109. தேவைப்படும்போது பையை நிரப்பலாம், ஆனால் தேவைக்கு மேலே பையை நிரப்ப முடியாது - அது என்ன?
- [வயிறு]
110. இரவிலே எழும் தீபம், பகலில் பார்க்க முடியாது - அது என்ன?
- [நிலவு]
111. உடைக்க முடியாத ஓட்டிற்குள் ஒளிந்திருப்பான் கள்ளன் - அவன் யார்?
- [ஆமை]
112. ஒருநாள் முழுமுகம் காட்டுவான், ஒருநாள் முகமே காட்ட மாட்டான் -அவன் யார்?
- [நிலவு]
113. வீடு கட்டத் தேவை சாரம். வீட்டு ஒளிக்குத் தேவை இன்னொரு சாரம் - அது என்ன சாரம்?
- [மின்சாரம்]
114. உடல் முழுதும் நூறுகட்டு, உச்சி முடிக்கு கட்டே இல்லை - அது என்ன?
- [தென்னை மரம்]
115. நீரில் மிதக்கும் பூ, இரவில் பூக்கும், பகலில் உறங்கும் - அது என்ன பூ?
- [அல்லிப்பூ]
116. போதையின்றி தள்ளாடினாலும், புறப்படும் ஊர் போய் சேருவான் - அது என்ன?
- [கப்பல்]
117. ஒரே நேரத்தில் மூடித் திறக்கும் கதவுகள், ஓராயிரம் முறை இயங்கினாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன?
- [இமைகள்]
118. ஆயிரம்பேர் திரண்டாலும், அணு அளவு கூட தூசி கிளம்பாது - அது என்ன?
- [எறும்புக்கூட்டம்]
119. குளிருக்கு கல்லாவான், அனலுக்கு தண்ணீராவான் - அது என்ன?
- [பனிக்கட்டி]
120. கிட்ட இருக்கும் பட்டணம் எட்டி பார்க்க முடியாது - அது என்ன?
- [நமது முதுகு]
121. பெட்டியை உடைத்தால் முத்துக்கள் - அது என்ன?
- [மாதுளம் பழம்]
122. காற்றிலே பறந்து போகும் கண்ணாடிக் கூண்டு, கைபட்டால் உடைந்து போகும் கண்ணாடிக் கூண்டு - அது என்ன?
- [சோப்புக் குமிழ்]
123. பள்ளிக்குப் போனாலும் பாடம் படிக்க மாட்டான், ஆனால் சரியாக கண்ணக்குச் சொல்வான் - அவன் யார்?
- [கால்குலேட்டர்]
124. குடையுடன் சந்தைக்கு வருபவரை, குழம்புக்காக எல்லோரும் விரும்புவார்கள் - அது என்ன?
-[கத்தரிக்காய்]
125. மழை நேரத்தில் வெட்ட வெளியில் மின்னும் விளக்கு - அது என்ன?
- [மின்னல்]
126. சரியென்றாலும் அழிப்பான், தவறென்றாலும் அழிப்பான் - அவன் யார்?
-[ரப்பர்]
127. ஒலி கொடுத்து அழைப்பான், உரையாடலில் திளைப்பான் - அவன் யார்?
-[டெலிபோன்]
128. ஆட்டிவிட்டால் ஆடுவான், ஆட்டாவிட்டால் தொங்குவான் - அவன் யார்?
- [ஊஞ்சல்]
129. மண்ணெடித்து கூடு கட்டும், மரம் அரித்து உயிர் வாழும் - அது என்ன?
- [கரையான்]
130. சிதறிக் கிடக்குது புள்ளிகள் சித்திரம் வரைய ஆளில்லை - யார் அது?
-[நட்சத்திரக்கூட்டம்]
131. விருந்துக்கு அழைத்து விதியை முடிப்பவன் - அவன் யார்?
- [எலிப்பொறி]
132. குதி குதித்தான் பல் இளித்தான் - அவன் யார்?
- [சோளப்பொறி]
133. அம்பும் நாணும் இல்லாத வில், ஆகாயத்தில் தோன்றும் வில் - அது என்ன வில்?
- [வானவில்]
134. காற்றில் பறக்கும் ஆடையை, கழற்றி எறிந்தவன் புற்றுக்குள்ளே - அது என்ன?
[பாம்பு]
135. வானம் இருண்டால் வடிவழகி ஆடுவாள் - அவள் யார்?
- [மயில்]
136. நன்றி மறக்காத பிள்ளை, நம்ம வீட்டு செல்லப் பிளிளை - அது யார்?
- [நாய்]
137. இரட்டைக் குழல் துப்பாக்கியில் காற்று வரும் போகும் - அது என்ன?
- [மூக்கு]
138. வெட்கையிலே மலரும் பூ, வெகுபேர் பசி போக்கும் - அது என்ன?
- [சோறு]
139. தாய் சின்னக்கொடி, பிள்ளைகள் பெரியவர்கள் - இது என்ன?
- [பூசனிக்காய்]
140. சோறுபோல பொங்க வைத்து, சுவரெல்லாம் பூசுவார்கள் - அது என்ன?
- [சுண்ணாம்பு]
141. பறக்கும் வண்ணப்பட்டு, வாடுமம்மா மற்றவர்கள் கைபட்டு - அது என்ன?
- [பட்டாம் பூச்சி]
142. காற்றிலே பறக்குது கண்ணாடுக்கூண்டு, கையால் தொட்டால் காணாமல் போகுது - அது என்ன?
- [சோப்புக் குமிழ்]
143. ஒன்றாய் பிறந்து ஒரே வேலையை செய்யும் இரட்டையர்கள் - அவர்கள் யார்?
- [கண் பார்வை]
144. இரவல் கிடைக்காதது, இரவில் கிடைக்கும் - அது என்ன?
- [தூக்கம்]
145. இரவிலே பிறந்த ராஜகுமாரனுக்கு தலையிலே குடை - அது என்ன?
- [காளான்]
146. உச்சியில் தோகை, உள்ளங்காலில் ரோமம், உடலெல்லாம் வரிகள் - அது என்ன?
- [கரும்பு]
147. மொட்டைப் பாறையில் மூடிய கண்கள் மூன்று - அது என்ன?
- [தேங்காய்]
148. வெளிச்சத்தில் தொடருவான், இருட்டிற்கள் தொடரமாட்டான் - அவன் யார்?
- [நிழல்]
149. அள்ளக் குறையாது, குடிக்க உதவாது - அது என்ன?
- [கடல் நீர்]
150. அவன் கழற்றிய சட்டையை அடுத்தவன் போட முடியாது - அது என்ன?
- [பாம்பு]
151. அந்தரத்து தொட்டிலில் ஆடுவார்கள், கூடுவார்கள் - அவர்கள் யார்?
-[தூக்கணாங் குருவிகள்]
152. அண்ணன் சுட்டெரிப்பான், தம்பி குளிர வைப்பான் - அவர்கள் யார்?
- [சூரியன், சந்திரன்]
153. அவ்வப்போது நிரப்பலாம், மொத்தமாக நிரப்ப முடியாது - அது என்ன?
- [வயிறு]
154. அவன் அன்னநடை நடந்தாலும் சும்மா அதிரும் - அவன் யார்?
- [யானை]
155. அண்ணன் தம்பி அஞ்சு பேரு, அதில சின்னவன் இல்லாம பெரியவங்களால எதுவும் செய்ய முடியாது - யார் அவர்கள்?
- [நமது கை விரல்கள்]
156. ஆனந்தத்திற்கும், துக்கத்திற்கும் மட்டுமே தண்ணீர் பொங்கும் குளம் - அது என்ன குளம்?
- [கண்கள்-கண்ணீர்]
157. காலையும் மாலேயும் உயர்ந்தவன், மதிய வேளையில் குட்டையாவான், இரவில் எங்கேதான் போவானோ - அவன் யார்?
- [நமது நிழல்]
158. மூணு கண்ணுப் பானையிலே ஒரு மடக்குத் தண்ணீர் - அது என்ன?
- [தேங்காய்த் தண்ணீர்]
159. கடலில் தோன்றி, கடலில் மறையும் - அது என்ன?
- [அலைகள்]
160. ஆளில்லாத வீட்டில் அவன் குடுயேறுவான் - அவன் யார்?
- [சிலந்திகள்]
161. கால் இல்லாத பந்தலை, காணக்காண வினோதம் - அது என்ன?
- [வானம்]
162. கையில் தவழும், பையில உறங்கும் - அது என்ன?
- [பணம்]
163. குடிக்கத் தண்ணீர் உண்டு, குளிக்கத் தண்ணீர் இல்லை - அது என்ன?
- [இளநீர்]
164. திறந்து திறந்து மூடினாலும், ஓசை சிறிதும் பேட்காது - அது என்ன?
- [இமைகள்]
165. வெள்ளைச் சீமாட்டியின் தலை மேல் விளக்கு - அது என்ன?
- [மெழுகுவர்த்தி]
166. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும், ருசியும் மாறாமு - அது என்ன?
- [கரும்பு]
167. உடலுக்குள் உருவாகும் உருவமில்லா கல், அதிர்ச்சியில் மறையும் கல் - அது என்ன கல்?
- [விக்கல்]
168. கண் சிமிட்டி கண்டதையெல்லாம் பெட்டிக்குள் போட்டுக் கொள்வான் - அவன் யார்?
- [கேமிரா]
169. கல்லில் நீரூற்ற, கனன்று உருவாகும் பூ - அது என்ன பூ?
- [சுண்ணாம்பு]
170. கமண்டலம் இல்லாமல் தவமிருப்பான், தூண்டில் இல்லாமல் மீன் பிடிப்பான் - அவன் யார்?
- [கொக்கு]
171. சிறுதூசி விழுந்ந்தும், குளமே கலங்கியது - அது என்ன?
- [கண்கள்]
172. அரைசாண் ராணிக்குள்ளே ஆயிரம் முத்துக்கள் - அது என்ன?
- [வெண்டைக்காய்]
173. நிழலுக்கு ஒதுங்கலாம், மழைக்கு ஒதுங்க முடியாது - அது என்ன?
- [மரம்]
174. பால் கொடுத்துப் பழகினாலும், என்றும் பகையாளியாக இருப்பான் - அவன் யார்?
- [பாம்பு]
175. நாலு கால் இருந்தும் அவன் நடப்பதில்லை, இருக்கையிலே தான் அவன் வாழ்வு - அது யார்?
- [நாற்காலி]
176. ஒற்றைக் காது உள்ளவனுக்கு ஒருபோதும் கேட்காது - அது என்ன?
- [ஊசி]
177. வீடுகட்ட உதவாத கல், சமையலுக்கு உதவும் கல் - அது என்ன கல்?
- [உப்புக்கல்]
178. தலைகீழாய் தொங்குவான், தலையசைத்தால் தென்றல் தருவான் - அவன் யார்?
- [மின் விசிறி]
179. அன்பால் மலரும் பூ, அனைவரும் விரும்பும் பூ, மனிதன் உதட்டில் மலரும் பூ - அது என்ன பூ?
- [சிரிப்பு]
180.கல்லாலும் மண்ணாலும் கட்டாத வீடு, கதவு இல்லாத வீடு காற்றினிலே ஆடும் வீடு - அது என்ன?
- [தூக்கணாங் குருவிக் கூடு]
181. கடல் நீரால் வளர்வான், மழை நீரால் மடிவான் - அவன் யார்?
- [உப்பு]
182. திரி இல்லாத விளக்கு, திரிலோகம் எல்லாம் தெரியுதாம் - அது என்ன?
- [சூரியன்]
183. நான்கு காலில் பின்னிய வலையில் நாமெல்லாம் தூங்கலாம் - அது என்ன?
- [நார்க்கட்டில்]
184. பறக்கும் ஆனால், பறந்து போகாது - அது என்ன?
- [கொடி]
185. அரிசி மாவில் வரையாத அழகு கோலம், அங்கமெல்லாம் அழகாக்கும் - அது என்ன?
- [பச்சை குத்துதல்]
186. குப்பை மேட்டில் குதறுவாள், கொஞ்சிப்பேணி பிள்ளை வளர்ப்பாள் - அவள் யார்?
- [கோழி]
187. பச்சை, கருப்பு, வெள்ளை மூன்றும் பக்குவமானால் சிவப்பு - அது என்ன?
- [வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு]
188. பசுமை பாய் விரித்த சோலை, பசிபோக்கும் சோலை - அது என்ன?
- [நெல் வயல்]
189. அக்காள் வீட்டில் விளக்கு ஏற்றினால், தங்கை வீட்டில் தானே எரியும் எரியும் - அது என்ன?
-[கொடியடுப்பு(இணைந்த அடுப்பு)]
190. பகலில் அக்கினித் தட்டு, இரவில் குளிர்தட்டு - அது என்ன?
- [சூரியன், சந்திரன்]
191. ஒளியில் நம்கூடவே இருப்பான், இருளில் மறைந்து கொள்வான் - அவன் யார்?
- [நிழல்]
192. அவன் பற்களை அழுத்தினால் பல பேர் ரசிக்கும் இசை ஒலிக்கும் - அவன் யார்?
- [ஹார்மோனியப் பெட்டி]
193. பகலில் இருபுறம் நின்று காவல் காப்பான், இரவில் நடுவிலே நின்று காவல் காப்பான் - அவன் யார்?
- [இரட்டை கதவு]
194. பச்சைப் பெட்டியில் பத்துச்சரம் முத்துகள் - அது என்ன?
-[வெண்டைக்காய்]
195. பட்ட மரம் இசை எழுப்ப படைகள் திரண்டு வரும் - அது என்ன?
- [முரசு]
196. தாயோ கடல், தந்தையோ சூரியன் - அவன் யார்?
- [உப்பு]
197. தங்கை விளக்கு காட்ட, அண்ணன் மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்?
- [மின்னல், இடி, மழை]
198. கூன் முதுகு கிழவனுக்கு குதிகால் வரை பற்கள் - அது என்ன?
-[கதிர் அரிவாள்]
199. கத்தியால் வெள்ளையனைச் சீவ கருப்பன் தலைகாட்டுவான் - அவன் யார்?
- [பென்சில்]
200. எட்டாத இடத்திலே ஏகப்பட்ட மின்மினிப் பூச்சிகள் - அவை என்ன?
- [நட்சத்திரம்]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum