Latest topics
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!by rammalar Today at 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்!
Page 1 of 1
இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்!
வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் நாம் வாழும் முறையில்தான் நமது வாழ்க்கையின் அர்த்தம் அடங்கியிருக்கிறது. வாழ்க்கையை ரசனையாக வாழவும், நினைத்த செயல்களை செய்து முடிக்கவும் வெற்றியாளர்கள் சொல்லும் 9 எளிய விதிகள் என இவற்றைப் பட்டியலிடுகிறார்கள். அது இங்கே அப்படியே…!
1.இலக்கை தீர்மானியுங்கள் !
தோட்டா எவ்வளவு வேகமாக இருந்தாலும், அதனை சரியாக செலுத்த துப்பாக்கி அவசியம். அந்த துப்பாக்கிதான் இலக்கு. குறைந்த காலத்திட்டங்கள் மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் என இரண்டு விதமாக உங்கள் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
குறைந்தகால இலக்காக, பணி உயர்வு பெறுவது, நீண்டநாள் கனவுகளை நிறைவேற்றுவது என சின்னச்சின்ன விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீண்டகால இலக்காக, உங்களின் லட்சியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்தகாலத் திட்டங்களை அதற்குரிய கால இடைவெளிகள் செய்து முடித்து விட்டோமோ? என சுயபரிசோதனை செய்து கொண்டால், அடுத்தமுறை அதற்கேற்றபடி திட்டமிடலாம்.
நீண்டநாள் லட்சியங்களை வருடத்திற்கு ஒருமுறை எந்தளவு நீங்கள் அதனை நெருங்க முடிந்தது எனப்பார்த்து அடுத்த ஆண்டு, அதற்கேற்ப திட்டமிடுங்கள். நாம் இன்று விதைப்பதைதான் நாளை அறுவடை செய்ய முடியும் !
2.ககபோ !
காதலோ, கஷ்டமோ எதுவும் கடந்து போகும். எனவே கடந்த காலத்தில் உங்கள் வாழ்க்கையில் நடந்த, மோசமான விஷயங்களை நினைத்து வருந்துவதை விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சந்தோஷமாக இருங்கள். நாம் என்ன செய்தாலும், கடந்த காலத்தை மாற்ற முடியாதே?
பின்னர் ஏன் அதை நினைத்து வருந்த வேண்டும்? இன்றைக்கு நீங்கள் செய்யும் விஷயங்கள்தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அவற்றில் மட்டும் கவனம் இருக்கட்டும். கடந்த கால அனுபவங்கள் தந்த பாடங்கள் மட்டும் போதும் நமக்கு!
3. கை கொடுக்கும் நம்பிக்கை !
நம்பிக்கையின் வெற்றியே முழுவதுமாக நம்புவதில்தான் இருக்கிறது. உங்களால் எதுவும் முடியும் என்கிற கர்வமில்லாத, முழு நம்பிக்கை மிக அவசியம். அனுபவமும், திறமையும்தான் இந்த துணிச்சலைத் தரும். அதனை அதிகமாக்குங்கள். “சிறகிருந்தால் போதும், சிறியதுதான் வானம்” என்பது கவிஞர் வைரமுத்துவின் வரி. அந்த சிறகு உங்கள் நம்பிக்கைதான்.
4.அடக்கம் அவசியம் !
வெற்றிகளும், பொறுப்புகளும் வர வர அடக்கமும் வரவேண்டும். பணிவுதான் தலைமைப்பண்புக்கு முதல் தகுதி. அந்தப்பணிவை தலைவன் ஆனாலும் விட்டுவிடாதீர்கள்.
தற்புகழ்ச்சி, சுயவிளம்பரம் இதெல்லாம் நீங்கள் நிச்சயம் வெறுக்க வேண்டியவை. எத்தனை பேரும், புகழும் வந்தாலும், அத்தனையும் “எல்லாபுகழும் இறைவனுக்கே” என சொல்லும் பண்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மட்டுமல்ல.. உங்களுக்கும் அவசியம்.
5. மாத்தியோசி !
“மரம் வெட்டுவதற்கு எனக்கு 9 மணிநேரம் கொடுத்தால், 6 மணிநேரம் நான் எனது கோடரியை கூர் செய்வேன்”- இதைச்சொன்னது ஆபிரகாம் லிங்கன். ஸ்மார்ட்வொர்க் (smartwork) என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம்.
திட்டமிடப்படாத கடின உழைப்பு முனைமழுங்கிய கோடரியை வைத்து 9 மணி நேரம் மரம் வெட்டுவது போலத்தான். எனவே நீங்கள் செய்யும் பணிகளில் இந்தப்பார்வை மிகவும் முக்கியம். இப்படி கிரியேட்டிவாக பணிசெய்தால், அலுவலகம் எப்படிப்பிடிக்காமல் போகும்?
6.சேமிப்பு !
“உங்களுக்குத் தேவையற்ற பொருட்களை எல்லாம் வாங்கிக் குவித்தால், உங்களுக்கு தேவையானதை எல்லாம் ஒருநாள் விற்க நேரிடும்”- இப்படி மிரட்டுவது பொருளாதார நிபுணரும், சிறந்த தொழிலதிபருமான வாரன் பஃபெட். சேமிப்பும், ஒருவகையில் உங்களின் லாபம்தான். சேமிப்பும் ஒரு வருமானம்தான். எனவே சரியான திட்டமிடலுடன் சேமிப்பு ரொம்ப முக்கியம்.
7. நேர மேலாண்மை !
நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும், உங்களின் கடந்த ஒரு நொடியை கூட உங்களால் திரும்பப்பெற முடியாது. அப்படியெனில் அதன் மதிப்பு எவ்வளவு என யோசித்துப் பாருங்கள்.
எந்த விஷயத்தையும் நாளை என தள்ளிப்போடாமல், “தள்ளிப்போடாதே..” என இன்றே முடித்து விடுங்கள். ஒரு நொடியில் நீங்கள் எடுக்கும் முடிவு கூட, மிகப்பெரிய வெற்றிகளை உங்களுக்காக வைத்துக்கொண்டு காத்திருக்கலாம்.
8.குழுவாகச் செயல்படுங்கள் !
இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன, சச்சின் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் அல்ல. ஆனால் தோனி ? சொல்லவே வேண்டாம். உங்களது திறமை என்பது வேறு. குழுவாக இணைந்து பணியாற்றுவது என்பது வேறு. இந்த திறமையால்தான் சிறந்த கேப்டன் எனக்கொண்டாடப்படுகிறார் தோனி.
அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளியுங்கள். அடுத்தவர் கருத்துக்கு காதுகொடுங்கள். அவர்களின் சிரமங்களுக்கு கைகொடுங்கள். பிறகு உங்களை விட சிறந்த டீம் லீடர் யாரும் இருக்க முடியாது.
9. கற்றுக்கொள்ளுங்கள்.. கற்றுக்கொண்டே இருங்கள்..!
வாழ்க்கையில் எப்போதும் கற்றுக்கொண்டே இருங்கள். ஏனெனில் வாழ்க்கை எப்போதும் கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது. உலகம் தன்னை தினந்தோறும் மாற்றிக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப நாமும் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள், உங்கள் துறையில் வந்திருக்கும் புதுமைகள் என எப்போதும் அப்டேட்டாக இருங்கள். இல்லையெனில் நீங்கள் பழசாகத் தெரிவீர்கள்.
-ஞா.சுதாகர்
நன்றி: விகடன்
1.இலக்கை தீர்மானியுங்கள் !
தோட்டா எவ்வளவு வேகமாக இருந்தாலும், அதனை சரியாக செலுத்த துப்பாக்கி அவசியம். அந்த துப்பாக்கிதான் இலக்கு. குறைந்த காலத்திட்டங்கள் மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் என இரண்டு விதமாக உங்கள் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
குறைந்தகால இலக்காக, பணி உயர்வு பெறுவது, நீண்டநாள் கனவுகளை நிறைவேற்றுவது என சின்னச்சின்ன விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீண்டகால இலக்காக, உங்களின் லட்சியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்தகாலத் திட்டங்களை அதற்குரிய கால இடைவெளிகள் செய்து முடித்து விட்டோமோ? என சுயபரிசோதனை செய்து கொண்டால், அடுத்தமுறை அதற்கேற்றபடி திட்டமிடலாம்.
நீண்டநாள் லட்சியங்களை வருடத்திற்கு ஒருமுறை எந்தளவு நீங்கள் அதனை நெருங்க முடிந்தது எனப்பார்த்து அடுத்த ஆண்டு, அதற்கேற்ப திட்டமிடுங்கள். நாம் இன்று விதைப்பதைதான் நாளை அறுவடை செய்ய முடியும் !
2.ககபோ !
காதலோ, கஷ்டமோ எதுவும் கடந்து போகும். எனவே கடந்த காலத்தில் உங்கள் வாழ்க்கையில் நடந்த, மோசமான விஷயங்களை நினைத்து வருந்துவதை விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சந்தோஷமாக இருங்கள். நாம் என்ன செய்தாலும், கடந்த காலத்தை மாற்ற முடியாதே?
பின்னர் ஏன் அதை நினைத்து வருந்த வேண்டும்? இன்றைக்கு நீங்கள் செய்யும் விஷயங்கள்தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அவற்றில் மட்டும் கவனம் இருக்கட்டும். கடந்த கால அனுபவங்கள் தந்த பாடங்கள் மட்டும் போதும் நமக்கு!
3. கை கொடுக்கும் நம்பிக்கை !
நம்பிக்கையின் வெற்றியே முழுவதுமாக நம்புவதில்தான் இருக்கிறது. உங்களால் எதுவும் முடியும் என்கிற கர்வமில்லாத, முழு நம்பிக்கை மிக அவசியம். அனுபவமும், திறமையும்தான் இந்த துணிச்சலைத் தரும். அதனை அதிகமாக்குங்கள். “சிறகிருந்தால் போதும், சிறியதுதான் வானம்” என்பது கவிஞர் வைரமுத்துவின் வரி. அந்த சிறகு உங்கள் நம்பிக்கைதான்.
4.அடக்கம் அவசியம் !
வெற்றிகளும், பொறுப்புகளும் வர வர அடக்கமும் வரவேண்டும். பணிவுதான் தலைமைப்பண்புக்கு முதல் தகுதி. அந்தப்பணிவை தலைவன் ஆனாலும் விட்டுவிடாதீர்கள்.
தற்புகழ்ச்சி, சுயவிளம்பரம் இதெல்லாம் நீங்கள் நிச்சயம் வெறுக்க வேண்டியவை. எத்தனை பேரும், புகழும் வந்தாலும், அத்தனையும் “எல்லாபுகழும் இறைவனுக்கே” என சொல்லும் பண்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மட்டுமல்ல.. உங்களுக்கும் அவசியம்.
5. மாத்தியோசி !
“மரம் வெட்டுவதற்கு எனக்கு 9 மணிநேரம் கொடுத்தால், 6 மணிநேரம் நான் எனது கோடரியை கூர் செய்வேன்”- இதைச்சொன்னது ஆபிரகாம் லிங்கன். ஸ்மார்ட்வொர்க் (smartwork) என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம்.
திட்டமிடப்படாத கடின உழைப்பு முனைமழுங்கிய கோடரியை வைத்து 9 மணி நேரம் மரம் வெட்டுவது போலத்தான். எனவே நீங்கள் செய்யும் பணிகளில் இந்தப்பார்வை மிகவும் முக்கியம். இப்படி கிரியேட்டிவாக பணிசெய்தால், அலுவலகம் எப்படிப்பிடிக்காமல் போகும்?
6.சேமிப்பு !
“உங்களுக்குத் தேவையற்ற பொருட்களை எல்லாம் வாங்கிக் குவித்தால், உங்களுக்கு தேவையானதை எல்லாம் ஒருநாள் விற்க நேரிடும்”- இப்படி மிரட்டுவது பொருளாதார நிபுணரும், சிறந்த தொழிலதிபருமான வாரன் பஃபெட். சேமிப்பும், ஒருவகையில் உங்களின் லாபம்தான். சேமிப்பும் ஒரு வருமானம்தான். எனவே சரியான திட்டமிடலுடன் சேமிப்பு ரொம்ப முக்கியம்.
7. நேர மேலாண்மை !
நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும், உங்களின் கடந்த ஒரு நொடியை கூட உங்களால் திரும்பப்பெற முடியாது. அப்படியெனில் அதன் மதிப்பு எவ்வளவு என யோசித்துப் பாருங்கள்.
எந்த விஷயத்தையும் நாளை என தள்ளிப்போடாமல், “தள்ளிப்போடாதே..” என இன்றே முடித்து விடுங்கள். ஒரு நொடியில் நீங்கள் எடுக்கும் முடிவு கூட, மிகப்பெரிய வெற்றிகளை உங்களுக்காக வைத்துக்கொண்டு காத்திருக்கலாம்.
8.குழுவாகச் செயல்படுங்கள் !
இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன, சச்சின் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் அல்ல. ஆனால் தோனி ? சொல்லவே வேண்டாம். உங்களது திறமை என்பது வேறு. குழுவாக இணைந்து பணியாற்றுவது என்பது வேறு. இந்த திறமையால்தான் சிறந்த கேப்டன் எனக்கொண்டாடப்படுகிறார் தோனி.
அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளியுங்கள். அடுத்தவர் கருத்துக்கு காதுகொடுங்கள். அவர்களின் சிரமங்களுக்கு கைகொடுங்கள். பிறகு உங்களை விட சிறந்த டீம் லீடர் யாரும் இருக்க முடியாது.
9. கற்றுக்கொள்ளுங்கள்.. கற்றுக்கொண்டே இருங்கள்..!
வாழ்க்கையில் எப்போதும் கற்றுக்கொண்டே இருங்கள். ஏனெனில் வாழ்க்கை எப்போதும் கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது. உலகம் தன்னை தினந்தோறும் மாற்றிக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப நாமும் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள், உங்கள் துறையில் வந்திருக்கும் புதுமைகள் என எப்போதும் அப்டேட்டாக இருங்கள். இல்லையெனில் நீங்கள் பழசாகத் தெரிவீர்கள்.
-ஞா.சுதாகர்
நன்றி: விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23975
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கொழும்பு மாநகர வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இலக்கு
» மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு
» உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை.
» இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?
» உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை
» மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு
» உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை.
» இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?
» உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|