சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

வாணி ஜெயராம் பாடிய பாடல்களில்  மறக்க முடியாத பாடல்கள்  Khan11

வாணி ஜெயராம் பாடிய பாடல்களில் மறக்க முடியாத பாடல்கள்

Go down

வாணி ஜெயராம் பாடிய பாடல்களில்  மறக்க முடியாத பாடல்கள்  Empty வாணி ஜெயராம் பாடிய பாடல்களில் மறக்க முடியாத பாடல்கள்

Post by rammalar Thu 5 Oct 2023 - 16:35

முரளிதரன் காசிவிஸ்வநாதன் (பி பி சி -தமிழ்)

----




நினைவுகூரத்தக்க அவரது 10 பாடல்களும், அவற்றின் பின்னணியும்:


1. மல்லிகை என் மன்னன் மயங்கும்: 1974ல் ஏ.சி. திருலோகச்சந்தர்
 இயக்கத்தில் வெளிவந்த தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் இடம்பெற்ற 
பாடல் இது. 


எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், வாலி பாடலை எழுதியிருந்தார். 
முத்துராமனும் கே.ஆர். விஜயாவும் இந்தப் பாடலைப் பாடி 
நடித்திருந்தார்கள். 


பாடலில் ஆண் குரல் கிடையாது. 
இதற்கு முன்பாகவே தமிழில் வாணி ஜெயராம் பாடியிருந்தாலும் இந்தப் 
பாடல்தான் அவரை எல்லோரும் கவனிக்க வைத்தது.
---
2). ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்: 


கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் டைட்டில் பாடல் 
இது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடலை 
எழுதியிருந்தார். இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு 
ராகத்தில் இடம்பெற்றிருந்தன. 


பந்துவராளி, சிவரஞ்சனி, சிந்து பைரவி, காம்போதி ஆகிய நான்கு ராகங்கள் 
இந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தன. மிகச் சிக்கலான கதையைக் கொண்ட 
இந்தப் படத்திற்கு கட்டியம் கூறுவதைப் போல இடம்பெறும், இந்தப் பாடல்
 மிக அபூர்வமான இசையையும் வரிகளையும் கொண்டிருந்தது


 ஸ்ரீவித்யா இந்தப் பாடலைப் பாடுவதைப் போல திரைப்படத்தில் காட்சி 
இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் 
பெற்றார் வாணி ஜெயராம்.


3. மானச சஞ்சரரே: 


சங்கராபரணம் படத்தில் இடம் பெற்ற பாடல் இது. 
ஸ்வாமி சதாசிவ ப்ரஹ்மேந்திரரால் இயற்றப்பட்ட இந்த பாடலுக்கு 
கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். படத்தில் மஞ்சு பார்கவி 
பாடுவதைப் போல இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. 


மிக மிக அற்புதமாக பாடப்பட்ட இந்தப் பாடலுக்கும் சிறந்த பாடகிக்கான
 தேசிய விருது கிடைத்தது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாணி ஜெயராம் பாடிய பாடல்களில்  மறக்க முடியாத பாடல்கள்  Empty Re: வாணி ஜெயராம் பாடிய பாடல்களில் மறக்க முடியாத பாடல்கள்

Post by rammalar Thu 5 Oct 2023 - 16:38

4. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது: 


வாணி ஜெயராம் என்றவுடன் பலருக்கும் நினைவில் வரும் முதல் 
பாடல் இதுவாகத்தான் இருக்கும். கே. ரங்கராஜ் இயக்கத்தில் 
மோகனும் ராதாவும் நடிக்க வெளிவந்த நெஞ்சமெல்லாம் நீயே 
படத்தில் இடம்பெற்ற பாடல் இது. 


சங்கர் - கணேஷ் இசையமைக்க, இந்தப் பாடலை வைரமுத்து 
எழுதியிருந்தார். 
வாணி ஜெயராமின் ரசிகர்களால் மறக்கவே முடியாத பாடல் இது.
------
5. நானே நானா யாரோ தானா: 


வாணி ஜெயராம் பாடிய பாடல்களில் புகழ்பெற்ற மற்றுமொரு 
பாடல். 1979ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த 'அழகே உன்னை 
ஆராதிக்கிறேன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு 
இளையராஜா இசையமைத்திருந்தார். பாடலை எழுதியது வாலி. 


ஜெய் கணேஷும் லதாவும் இந்தப் பாடலின் காட்சியில் இடம் 
பெற்றிருந்தனர். இதே படத்தில் இடம்பெற்றிருந்த "என் கல்யாண 
வைபோகம் உன்னோடுதான்" பாடலும் கேட்போரை உருக 
வைக்கக்கூடியது.
--
6. இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ: ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 
1984ல் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்ற 
பாடல் இது. இளையராஜா இசையமைக்க, கங்கை அமரன் பாடலை 
எழுதியிருந்தார். 


ஜெயச்சந்திரனுடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருந்தார் 
வாணி ஜெயராம். 
80களின் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்து, வானொலியில் 
அடிக்கடி ஒலித்த பாடல் இது.
----------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாணி ஜெயராம் பாடிய பாடல்களில்  மறக்க முடியாத பாடல்கள்  Empty Re: வாணி ஜெயராம் பாடிய பாடல்களில் மறக்க முடியாத பாடல்கள்

Post by rammalar Thu 5 Oct 2023 - 16:43

7. நினைவாலே சிலை செய்து: 


1978ல் வெளியான அந்தமான் காதலி படத்தில் இடம்பெற்ற இந்தப் 
பாடலை கே.ஜே. யேசுதாஸும் வாணி ஜெயராமும் இணைந்து 
பாடியிருப்பார்கள். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் 
இந்தப் பாடலை எழுதியிருந்தார்.


 "திருக்கோவிலே ஓடிவா" என்ற வரியை கே.ஜே. யேசுதாஸ் 
தெருக்கோவிலே ஓடிவா என உச்சரித்ததாக சிலர் உணர்வதுண்டு. 
ஆனால், வாணி ஜெயராமின் குரல் துல்லியமாக ஒலிக்கும்.
----------


8. என்னுள்ளில் ஏதோ ஏங்கும் ஏக்கம்: 


1979ல் வெளிவந்த ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் இடம்
பெற்ற இந்தப் பாடலுக்கு இளையராஜா இசையமைக்க 
கங்கை அமரன் பாடல் எழுதியிருந்தார். தான் இன்னும் சிறப்பான 
ஒரு வாழ்க்கைக்கு தகுதியானவள் என நினைக்கும் நாயகியின் 
மன உணர்வை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் 
கங்கை அமரன்


. "என் மன கங்கையில் சங்கமிக்க, சங்கமிக்க பங்கு வைக்க, 
பொங்கிடும் பூம்புனலில், பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலின், 
போதையிலே மனம், பொங்கி நிற்க தங்கி நிற்க, காலம் இன்றே
 சேராதோ" என்ற வரிகளில் வாணி ஜெயராமின் குரல் அந்த 
ஏக்கத்தின் உச்சத்தைத் தொடும்.
----------


9. மேகமே மேகமே: 


1981ல் வெளிவந்த பாலைவனச் சோலை படத்தில் இடம்பெற்ற இந்தப் 
பாடல், 
தமிழ்த் திரையிசையில் ஒரு அபூர்வமான பாடல். சங்கர் கணேஷ் 
இசையில் பாடலை எழுதியவர் வைரமுத்து. 


சுஹாசினியும் சந்திரசேகரும் இந்தப் பாடலில் நடித்திருந்தனர். 
ஒரு கஸல் பாடலைப் போல ஒலிக்கும் இந்தப் பாடல், 80களின் 
துவக்கத்தில் இளைஞர்களின் இதய ராகமாக இருந்தது. 


இந்தப் பாடலில் இடம்பெற்ற "தூரிகை எரிகின்ற போது இந்த 
தாள்களில் ஏதும் எழுதாது தினம் கனவு எனதுணவு நிலம் புதிது 
விதை பழுது எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்" என்ற 
வரிகளை இப்போதும் வாணி ஜெயராமின் அஞ்சலிக் குறிப்புகளில் 
பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
-------------


10. ஒரே நாள் உனை நான்: 1


978ல் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இடம்பெற்ற பாடல் 
இது. இளையராஜா இசையமைக்க, வாலி பாடலை எழுதியிருந்தார். 
எஸ்பி பாலசுப்ரமணியத்துடன் இணைந்து வாணி ஜெயராம் இந்தப் 
பாடலை பாடியிருந்தார். கமல்ஹாசனும் ஸ்ரீப்ரியாவும் இந்தப் பாடலில் 
நடித்திருந்தனர். 


அந்த காலகட்ட காதலர்களின் தேசிய கீதமாக இந்தப் பாடல் இருந்தது. 
"நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன், நெஞ்சத்தில் பேர் 
எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன், கற்பனைகளில் சுகம் சுகம் 
கண்டதென்னவோ நிதம் நிதம், மழை நீ நிலம் நான் தயக்கமென்ன" 
என்ற வரிகள் வானொலியில் ஒலிக்கும்போது மயங்காதவர் இல்லை.
--------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாணி ஜெயராம் பாடிய பாடல்களில்  மறக்க முடியாத பாடல்கள்  Empty Re: வாணி ஜெயராம் பாடிய பாடல்களில் மறக்க முடியாத பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum