Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
தொலைந்து போனேன் - கவிதை
Page 1 of 1
தொலைந்து போனேன் - கவிதை
-
புழுதி புரளும் வீதிகளில்
பச்சையோ சிவப்போ கவனமின்றி
பரபரவென்று குறுக்கும் நெடுக்குமாக
வரிசையின்றி ஊறும்
வாகனங்களின் பரபரப்பில்..
-
கோயிலைச் சுற்றி நகரமைத்த
மன்னர் பெயர் மறந்துபோக,
பெருங் கோயிலும், குறு வீதிகளும்
காலத்தால் மறையாது நிற்க..
ஓயாது தினம் நிகழும்
வணிகத்தின் சுறுசுறுப்பில்..
-
திருவிளையாடல் பல செய்து
தெய்வங்கள் மணம் புரிந்து,
திக்விஜயம் செய்தாண்ட
மகத்தான மாநகர் இதுவென்று
வருடந்தோறும் நினைவூட்டி..
-
வெயிற் காலத்தில்
வேடங்கள் கலைத்து,
கூட்டத்தில் ஒருவராய்க் கரைந்து..
மூன்று தலைமுறையை
இணைக்கின்ற பிணைப்பாக,
ஊர்கூடிக் கொண்டாடும்
திருவிழா கலகலப்பில்..
-
'ஏ ஆத்தா மீனாட்சி
இன்னைய பொளுது நல்லபடியா போக
நீயும் எங்கப்பன் சொக்கனுந்தேன்
காப்பாத்தணும்.. சொல்லிப்புட்டேன்..'
உரிமையோடு அருள் வேண்டும்
வெள்ளந்தி மனிதர்களின்
ஆத்மார்த்த பக்தியின்
ஆழ்ந்த நம்பிக்கையில்..
-
'வாங்கண்ணே எங்கிட்டு போகணும்..
நம்ம வண்டியிலேயே போயிறலாம்ணே..
ஒங்களுக்கு தெரியாததா..
ஏதோ பாத்து குடுங்கண்ணே..'
முன்பின் தெரியாத
எவருக்கும் நாள்தோறும்
'அதிதி தேவோ பவ'
என்று உதவிக்கரம் நீட்டி
'அன்பின் வழியது உயிர்நிலை' என
வாழ்ந்து காட்டுவோரின்
நட்பான வழிகாட்டலில்..
-
'தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்..'
பசிக்கொடுமை கண்டு
உள்ளம் கொதித்துப் பாடிய,
'மகாகவி பணியாற்றிய பெருமையுடைத்து'
பள்ளி அமைந்த பரபர நகரின்
வீதிதோறும் நடைபாதையில்..
-
சூடான உணவு செய்து
சுவையான கதைபேசலுடன் கலந்து
நாள்முழுதும் அயராமல்
பரிமாறிப் பசியாற்றும்
தூங்கா நகர்வாழ்
தாயுள்ளங்களின் பேரன்பில்..
-
பிறந்து, வளர்ந்து, நகர்ந்து
மறந்திடா என் தாய் வீடு
மதுரைக்கு நான்
வரும்போதெல்லாம்,
புதியன கழிதலும்..
பழையன புகுதலும்.. என்று
காலம் மாறினாலும்
காட்சிகள் மாறாது
உறைந்து நிலைக்க..
-
மனத்திரையில் காலம்
தானாக ரீவைண்ட் ஆகி,
வேண்டாது மறுபடியும்
இளமை வரம்பெற்று,
என்னுள்ளேயே நான்
தொலைந்து போனேன்!
---------------------
~ஸ்வாமி (தமிழ் கோரா)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தொலைந்து போன நாட்கள் – கவிதை
» தொலைந்து போனது..
» #தொலைந்து போன அரசியல் நாகரீகம்#
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» தொலைந்து போனது..
» #தொலைந்து போன அரசியல் நாகரீகம்#
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|