Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!
Page 1 of 1
வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!
--
கோடைக்கால வெப்பத்திலிருந்து நம் உடல் நலனைக் காத்துக்கொள்ள, இந்த வெயில் சீசனில் மட்டும் பிரத்யேகமாகக் கிடைக்கும் கீழ்கண்ட 10 உணவுகளை உண்டு உடலைக் குளிர வைப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நலன்களையும் பெறுவோம்.
Nungu
நுங்கு:
நுங்கில் உள்ள வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்து உடல் உஷ்ணத்தை தணிக்கக் கூடியது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. இதன் நீர் வேர்க்குருவிற்கு நல்ல நிவாரணம் தருகிறது.
Neer MorImage Credit: ticklingpalates
நீர் மோர்:
மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோபுளோவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. இதை அருந்துவதால் நீரிழப்பினால் ஏற்படும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி, புத்துணர்ச்சி கிடைத்துவிடும். தாகத்தைத் தணித்து, வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பதுடன் காரமான உணவுகளால் ஏற்படும் வயிற்று எரிச்சலையும் இது தணிக்கிறது.
green tender coconutImage Credit: maatarafruitscompany
இளநீர்:
இதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்துள்ளதால் சரும பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் இது பெரிதும் உதவும்.
Watermelon
தர்பூசணி:
நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியமான வைட்டமின் சி அதிகம் உள்ள இதை உட்கொள்வதன் மூலம். நம் உடலால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். தவிர, நம் முடி மற்றும் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் இதில் அதிகம் நிறைந்துள்ளதால் சருமம் வெயிலால் உலர்ந்து போகாமல் இருக்கும்.
MangoImage Credit: Indiamart
மாம்பழம்:
மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் C சத்துடன் நார்ச்சத்தும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் செரிமானத்திற்கும் இது நல்லது. இதிலுள்ள பொட்டாசியம் வெயிலினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.
Khevaraku Khammangul
கூழ்:
கேழ்வரகு மற்றும் கம்பு கொண்டு செய்யப்படும் கூழ், நம் உடலுக்குத் தரும் நன்மைகள் ஏராளம். இதில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோபுளோவின் ஆகியவையும் உள்ளன. மோருடன் கலந்து இந்தக் கூழை அருந்தும்போது, உடலுக்கு குளிர்ச்சியையும், வலுவையும் தருகிறது.
Ragi Kali Image Credit: wikimedia
ராகி களி:
பல்வேறு வகையான தாதுப்பொருட்கள் நிறைந்த தானியங்களில் ராகியும் ஒன்று. இதில் எலும்புகளை வலுவாக்க உதவும் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும், இதில் உள்ள பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. கோடைக்கேற்ற ஆரோக்கிய உணவு இது.
Green MangoImage Credit: saravanaonline
மாங்காய்:
மாங்காய் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதில் வைட்டமின் C சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் உட்கொண்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், உடலின் நீர்ச்சத்தினை தக்க வைத்துக்கொள்ளும். உடல் சூட்டினால் ஏற்படும் நீர்க்குத்தலை இது தடுக்கும்.
Mor Chili
மோர் மிளகாய்:
மிளகாயில் உள்ள அதிக அளவு காப்சைசின் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், இதய பாதிப்புகளையும் தடுக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்னைப் போக்கி குடல் மேம்பட உதவுகிறது. இதில் கலோரிகள் எதுவும் இல்லை என்பதால் உடல் எடையும் குறையும். பல மருத்துவப் பயன்கள் நிறைந்த மிளகாயை மோரில் கலந்து வெயிலில் காய வைப்பதால் இது உடலுக்கு மேலும் நலன் தரும்.
PanagamImage Credit: ticklingpalates
பானகம்:
நீர் மோருடன் வெயில் கால பானமாக தாகம் தீர்த்து, உடல் சூட்டைத் தவிர்த்து, நல்ல புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் தரவல்லது பானகம். உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த வெல்லம், சுக்கு, எலுமிச்சை சாறு சேர்த்து செய்யப்படும் ருசியான இது வெயிலினால் ஏற்படும் சோர்வைப் போக்கி உடனடி சக்தியை தருவதோடு, வயிற்று வலி, நீர் கடுப்பு, கண் எரிச்சல் போன்ற பிரச்னைகளையும் குறைக்கும்
--
-சேலம் சுபா - கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வெயில் காலத்தில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்.
» வெயில் காலத்தில் செல்லங்களை நல்லா கவனிங்க!
» இந்த காலத்தில் இப்படி ஒரு "தந்தை"
» இந்த வார ஜொள்ளு....(18+கண்டிப்பாக மட்டும்)
» திருமணமானவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டாம்.. (இளைஞர்களுக்கு மட்டும்)
» வெயில் காலத்தில் செல்லங்களை நல்லா கவனிங்க!
» இந்த காலத்தில் இப்படி ஒரு "தந்தை"
» இந்த வார ஜொள்ளு....(18+கண்டிப்பாக மட்டும்)
» திருமணமானவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டாம்.. (இளைஞர்களுக்கு மட்டும்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|