சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Khan11

மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்

Go down

 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Empty மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 21:04

மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ?

மதீனா முனவ்வராவுக்குப் பயணம் செல்லும் பெரும்பாலோர் அதன் நோக்கத்தைப் புரியாமலே சென்று வருகின்றனர். சிலர் அதை ஹஜ்ஜூ வணக்கங்களில் ஒன்றாகவே கருதுகின்றனர்.

மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? அல்லது அதன் ஸூன்னத்தான வணக்கங்களைச் சார்ந்ததா? ஹஜ்ஜூக்காக வந்து மதீனாவுக்குச் செல்ல வில்லையெனில் ஹஜ்ஜூ நிறைவேறாதா? போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு இன்றும் எழுகின்றன. கேட்கவும் செய்கின்றனர்.

மதீனா ஸியாரத் என்பது ஹஜ்ஜூ நிறைவேறுவதற்குரிய கடமைகளில் ஒன்றல்ல. அதன் ஸூன்னத்தான ஒரு வணக்கமுமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Empty Re: மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 21:04

பின் எதற்காக அங்கே செல்ல வேண்டும் ?

‘தொழுவதற்காக’ என்ற எண்ணத்தில் (நிய்யத்தில்) மட்டுமே மஸ்ஜிதுன் நபவீக்குப் பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-

இந்த என் பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத்தவிர உள்ள ஏனைய பள்ளிவாசல்களில் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு மேலானது. (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.)

மேலும் தெரிவித்துள்ளார்கள்:

மூன்று பள்ளிவாசல்களுக்கே தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக்கூடாது. ஒன்று (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம். மற்றொன்று (மதீனாவிலுள்ள) எனது பள்ளிவாசல். புpறிதொன்று (ஜெரூஸலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் பள்ளிவாசல்.

இந்த இரு நபிமொழிகளின் மூலம் 'மூன்றே முன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அதுவும் நன்மையை நாடி, தொழுகை என்னும் வணக்கத்தை நிறைவேற்றுதற்காகவே செல்ல வேண்டும். ஸியாரத் செய்யும் நோக்கத்துடன் அல்ல’ என்பது தெளிவாகிறது.

இதிலிருந்து ’ஹஜ்ஜூக்கு முன்னரோ பின்னரோ மதீனா ஸியாரத்துக்குச் செல்வது ஹஜ்ஜூக் கடமையைச் சார்ந்ததல்ல’ என்பதையும் ‘ஹஜ்ஜூக்கும் இதற்கும் தொடர்பில்லை’ என்பதையும் நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.


 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Empty Re: மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 21:05

மஸ்ஜிதுந்நபவிக்குச் சென்றால் நமது கடமைகள் என்னென்ன?

1. மஸ்ஜித் நபவியில் தொழுவது

ஏனைய பள்ளி வாசல்களில் கடைப் பிடிப்பதையே இங்கும் கடைப் பிடிக்கவேண்டும்.
1. வலது காலை முன்வைத்து உள்ளே நுழைய வேண்டும்.
2. உள்ளே செல்லும்போது ‘ பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி, அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக்க’ என்ற துஆவை ஓதவேண்டும்.
3. பின்னர் இரண்டு ரகஅத்துகள் தஹிய்யத்துல் மஸ்ஜிது தொழவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
உங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) , ஆதாரம் : புகாரி-1163)

உள்ளே சென்றதும் ஃபர்ளான தொழுகைக்கு ஜமாஅத் ஆரம்பிக்கப் பட்டு விட்டால் நேராகச் சென்று அதில் சேர்ந்து கொள்ளவேண்டும்.

அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?


 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Empty Re: மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 21:06

2. ஸியாரத் செய்வது.

தொழுகை முடிந்ததும் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கும் அவர்களின் அருகே அடக்கமாயிருக்கும் அவர்களின் இரு தோழர்களான அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோரின்ன் இரு கப்ருகளுக்கும் சென்று ஸலாம் சொல்வது முஸ்தஹப்- விரும்பத் தக்கதாகும்.

எவ்வாறு ஸலாம் சொல்ல வேண்டும்?

"அஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹி, வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ!" என்று நபி (ஸல்) அவர்களுக்கும்,

அடுத்து, அங்கு அடங்கப் பட்டிருக்கும் அவர்களின் தோழர் அபூபக்ரு அவருகளுக்கு, "அஸ்ஸலாமு அலைக்க யா அபாபக்கருஸ் ஸித்தீக் கலீஃபத்த ரஸூலில்லாஹி,
வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ !" என்றும்,

அடுத்து "அஸ்ஸலாமு அலைக்க யா உமர் ஃபாரூக் கலீஃபத்த ரஸூலில்லாஹி, வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ!" என்று உமர் (ரலி) அவர்களுக்கும் ஸலாம் கூறிவிட்டு அங்கிருந்து திரும்பிவிட வேண்டும்.

பெருமானார் (ஸல்)அவர்களின் ஒவ்வொரு செயலையும் வழிமுறைகளையும் அணுவளவும் பிசகாது பின்பற்றிவந்த அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்துள்ளார்கள் என்பதை ஆதாரபூர்வமான ஹதீஸ் நூல்களிலே காணமுடிகிறது.

இதுவே ஸியாரத் செய்யும் முறையாகும்.

அங்கே நீண்ட நேரம் நிற்பதோ, அவர்களிடம் துஆ கேட்பதோ, குரலை உயர்த்திக் கோரசாக துஆக்களை ஓதிக்கொண்டிருப்பதோ கூடாது.

கிப்லாவை முன்னோக்கி நமது தேவைகளை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும்.

அங்கே ரவ்லாவுக்கருகே நின்று தொழுவதோ, தொட்டு முத்துவதோ கூடாது.


 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Empty Re: மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 21:07

ஸியாரத்தின் நோக்கம் - நினைவிற் கொள்க!

1. மதீனா ஸியாரத் ஹஜ்ஜூக் கடமைகளில் ஒன்றல்ல.
2. பெருமானார் (ஸல்) அவர்களின கப்ரை ஸியாரத் செய்யும் நோக்கத்தை முன்வைத்து அங்குச் செல்வது கூடாது.
3. தொழுவதற்காகவே செல்லவேண்டும்.

மஸ்ஜிதுத் தக்வா-குபா பள்ளி வாசலில் தொழுவது

அடுத்தபடியாக, மதீனாவுக்கு வந்திருப்போர் மஸ்ஜிது குபாவுக்குச் சென்று தொழுவது நபி வழியாகும். இது, "தக்வா அடிப்படையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல்" என்று இதற்கு ஓர் அங்கீகாரத்தையும் வழங்கி இறைவன் சிறப்பித்துள்ளான். (குர்ஆன்:9:108).

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
"யார் தமது வீட்டில் உளுச் செய்துவிட்டு, பின்னர் குபா பள்ளிவாசலுக்கு வந்து இரு ரகஅத்துகள் (இன்னொரு அறிவிப்பில் ஒரு தொழுகையை) தொழுகிறாரோ அவருக்கு ஒரு உம்ரா செய்த நன்மைகிடைக்கும்"(ஆதாரம்:அஹ்மது,நஸயீ,அப்னுமாஜா,ஹாக்கிம்)

நபி (ஸல்) அவர்கள் சனிக்கிழமை தோறும் வாகனத்திலோ, கால்நடையாகவோ இங்கு வந்து செல்வார்கள்.


 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Empty Re: மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 21:08

ஜன்னத்துல் பகீஃ, உஹது ஷுஹதாக்களை ஸியாரத் செய்வது.

நபி (ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்று ஸியாரத் செய்து அவர்களுக்காக துஆ செய்து வருவார்கள்.

நபி (ஸல்) அவர்கள், மக்கள் கப்ருகளுக்குச் செல்வதன் நோக்கத்தைப் புரியாமலிருந்ததால் ஆரம்பத்தில் தடை செய்திருந்தார்கள். பின்னர் அதற்கு அனுமதி வழங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
"கப்ருகளுக்குச் சென்று ஸியாரத் செய்வதை தடை செய்திருந்தேன். இப்போது (அதன் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொண்டதால்) ஸியாரத் செய்து வாருங்கள்" ஆதாரம்: முஸ்லிம்.

கப்ருகளுக்குச் சென்றால் எவ்வாறு ஸியாரத் செய்வது.? அங்கு என்ன செய்யவேண்டும் ? என்பதை நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு மிகத் தெளிவாகவே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

ஃபாத்திஹா ஓதச் சொல்லவில்லை. யாஸீன் ஓதச் சொல்லவில்லை. இறந்தவர்களிடம் துஆ கேட்கச் சொல்லவில்லை. பின் என்ன சொன்னார்கள் ?


 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Empty Re: மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 21:51

செய்யக் கூடாதவை:-

1. ஆண்களுக்கு மட்டுமே ஸியாரத் அனுமதியே தவிர பெண்களுக்கல்ல.
2. நமது தேவைகளுக்காக நபிகள் நாயகத்திடம் பிரார்த்திப்பது கூடாது.
3. கப்ரு திசையை நோக்கிப் பிரார்த்திப்பதும் கையை உயர்த்துவதும் கூடாது.
4. அங்கே நீண்ட நேரம் நிற்பதும் கூடாது.
5. அங்கு நுழையும்போதோ, உள்ளே சென்ற பிறகோ குறிப்பிட்ட துஆக்கள், விசேச துஆக்கள் ஓதவேண்டுமென்பது எதுவும் கிடையாது.
6. கூட்டாக (கோரஸாக) துஆ ஓதுவதும் கூடாது.
7. ஒவ்வொரு முறையும் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் கப்று ஸியாரத் செய்யவேண்டும் என்பதும் கிடையாது.
8. ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கப்று ஸியாரத் என்பதும் இல்லை.
9. பெருமானாரின் கப்ருக்கருகே (மட்டுமல்ல; எந்தக் கப்ருக்கருகிலும்) தொழுவது கூடாது.
10. மிஹ்ராபில் தொழவேண்டும் என்பதும் அங்கே முண்டியடித்துக் கொண்டு தொழுவதும் கூடாது.
11. ரவ்லா தூண்களின் எல்லைக்குள்தான் தொழுது தீரவேண்டும் என்பதும் கிடையாது.

அங்கே எங்கு வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். இந்த இரு இடங்களிலும் தொழுவதற்காக மக்கள் முண்டியடித்துக் கொள்வதையும் தாமும் சரிவரத் தொழாது பிறரையும் தொழவிடாது சிரமப்படுத்தும் செயல்களையும் மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பிறருக்குத் துன்பம் விளைவிப்பது ஹராமாகும். ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு ஹராமைச் செய்ய வேண்டுமா? நாம் சிந்திக்கவேண்டும்.

பெருமானார் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டதும் கை நகம் தொட்டு முத்தி நுகர்ந்து கண்களில் ஒற்றிக் கொள்வதும் மார்க்கத்தில் அனுமதி கிடையாது.

வேறு ஸியாரத் செய்யவேண்டிய முக்கியமான இடங்கள் ஏதேனும் உண்டா? என்றால் எதுவும் இல்லை.


 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்		  Empty Re: மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum