Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Today at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52
» பல்சுவை - 5
by rammalar Today at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்!
3 posters
Page 1 of 1
மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்!
இன்று உலகம் முழுவதும் பேசப்படுகின்ற ஒரு விடயம் நோய்கள் பற்றியதாகும். மனிதனின் நோய்க்கு கிருமிகள் காரணமாக அமைகின்றன. இலங்கையிலும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எலிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி மக்களை கிலிகொள்ளச் செய்த சமாச்சாரம் நாம் அறியாத விடயமா என்ன?
இவற்றுக்கெல்லம் காரணமாக அமைகின்ற கிருமிகள் எம் உடம்பினுள் சென்று உரித்தான நோய்களை ஏற்படுத்தி விடுகின்றபடியினால்தான் இறப்பு ஏற்படும் அளவிற்கு இன்று இந்நோய்களின் தாக்கம் காணப்படுகிறது. எனவே தான் நுண்ணங்கிகள் பரவாது தடுக்கும் நோக்குடன் நமது சுற்றாடலையும், சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வுகள் தற்போது பட்டிதொட்டியெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.
சரி இக்கிருமிகள் எமது உடம்பில் புகுந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி ஆளையே அபேஸ் பண்ணிவிடும் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதில் முழுமையான உண்மை இல்லை என்றுதான் கூறவேண்டும்.கொலராவை ஏற்படுத்தும் கிருமி நம் உடம்பினுள் சென்றுவிட்டால் சில மணி நேரத்தினுள் நமக்கு பேதி ஏற்படும் வாந்தியோ பயங்கரமாக வெளியேறும். சிறிது நேரத்தினுள் நாடி நரம்பு கூட தளர்ந்து மயக்கம் ஏற்பட்டு சிறுநீர் வெளியேறாது இருதயமோ சரியாக இயங்காது விடும் அவ்வளவு பயங்கரமானது இக்கொலரா கிருமி.
நமது உடம்பு ஆரோக்கியமாக உள்ள நிலையில் இது நடவாது. இதனை நிரூபித்திருக்கிறார் ஒரு விஞ்ஞான டாக்டர். என்ன நம்ப மறுக்கிறீர்களா? இதோ அச்சம்பவம் 1892ம் ஆண்டில் புரசரும் டாக்டருமான பெட்டன் கோபர் என்ற மருத்துவ விஞ்ஞான கொலரா தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கிருமிகளை ஒரு சோதனைக் குழாயினுள் நிரப்பிக்கொண்டு எல்லோர் முன்னிலும் அதைக்காட்டிவிட்டு கிருமிகளை வாயில் கொட்டி விழுங்கி விடுகிறார். பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள்.
என்ன ஆச்சரியம் விஞ்ஞானிக்கோ கொலராவும் இல்லை, பேதியும் இல்லை வாந்தி மயக்கம் எதுவுமே ஏற்படவில்லை. அவர் கூறினார். ‘ஆரோக்கியமான உடம்பில் எந்த நோய்க்கிருமி நுழைந்தாலும் நோய் உண்டாவதில்லை. இதை நிரூபித்துக் காட்டவே இச்சாகசத்தை செயதேன்’ என்று விடை பகிர்ந்தார்.
நோயினைத் ஏற்படுத்தும் கிருமிகளோ காற்றில், தண்ணீரில் கலந்தும், உணவு வழியாக சேர்ந்தும் விடுகின்றன. ஈ, நுளம்பு, நாய், பன்றி, குரங்கு போன்றன மூலமாக பரவியும் வருகின்ற நிலையும் காணப்படுகிறது. எவ்வடிவில்தான் கிருமிகள் வந்திடினும் ஆரோக்கியமான உடம்பை எந்தக் கிருமியாலும் அசைக்க முடியாது. கிருமிகள் தோற்றுவிடுகின்றன. அப்படித்தான் நோய்வந்தாலும் உடம்பினுள் இருக்கின்ற கிருமிகளை விரட்டியடிக்க புதிய புதிய மருந்துகளும், சிகிச்சை முறைகளும் இன்றைய நவீன உலகில் வந்தவண்ணமே உள்ளன. இதன் காரணமாக கிருமிகளைக் கொல்லவும் அல்லது அதன் வளர்ச்சியைத் தடுக்கவும் முடிகிறது.
கியணீடைடi கிருமிகளை அடையாளம் கண்டு பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வைரஸ் கிருமிகள் கண்டறியப்பட்டு சுமார் 72 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்னும் இன்னும் கிருமிகளைப் பற்றி ஆராய்ந்தே வருகின்றனர் விஞ்ஞானிகள். கிருமிகள் நோய்களை உண்டாக்குவது போல் பல்வேறு நன்மைகள் செய்யும். கிருமிகளும் ஏராளமாகவே இருப்பது கண்டறியப்பட்டுள்ள உண்மையாகும்.
கிருமி நோய்களைத்தான் உண்டாக்குகின்றன என்று நம்மில் பலர் நினைப்பதில் தப்பேதுமில்லை. அவற்றிலிருந்து சற்று விலகி அவை செய்யும் நன்மைகளையும் சீர்தூக்கி பார்போமானால் பாலைத் தயிராக்கும் பணியில் இந்த கண்ணுக்குத் தெரியாத கிருமிதான் உதவுகிறது. பூதக் கண்ணாடியில் பார்த்தால் நாம் ஒருவருமே தயிர் உண்ணமாட்டோம். அவ்வளவு கிருமிகள் அங்கே காணப்படும். இதனைப்பலர் நன்மை செய்யும் கிருமிகள் என்று அழைப்பதுண்டு.
அதுமட்டுமன்றி நமது சிறுகுடலில் இனப்பெருக்கம் செய்து கொண்டு ஏராளமான கிருமிகள் வாழ்ந்து வருகின்றன. இவை எமக்கு கெடுதல் செய்யாது. நாம் உண்ணும் உணவைச் ஜீரணிக்க நீர்களைச் சுரந்து கொடுத்து உதவுகிறது. இவை இல்லாவிடின் உணவுப் பொருள்கள் இரத்தத்தில் கலக்க இயலாமல் போகும். ஆதலினால் தீய விளைவுகளை ஏற்படுத்திவிடும். காய்கறி உணவில் காணப்படும் ‘செலுலோஸ்’ என்கிற நார்ச் சத்தினை புளிக்கச் செய்வதும் இந்தக் கிருமிகள் தான்.
எமக்கு ஏற்படுகின்ற விபத்தினால் காயம் ஏற்பட்டு குருதி வெளியேறி விடுகிறது. சில வேளைகளில் அதிக குருதி வெளியேறினால் உயிர்ப்பிரிவும் ஏற்படும். இவ்வாறு இரத்தத்தை உறையவைக்க உதவுவதும் இந்த பக்ரீறியா கிருமிகளே. நாம் உண்ணும் தோசை மாவைப் புளிக்கவைப்பது.
பீட்ரூட்டின் சாறு மதுவாக மாற்றமடைய வைப்பது ஈஸ்ட் என்ற நுண்ணுயிர்களே காரணமாக அமைகின்றன. இவைமட்டுமா? நைதரசன் உப்பை மண்ணில் உண்டாக்கி தாவரங்களுக்கு உயிரளிப்பதுவும் பக்ரீறியாக்களே. இதுபோல் இன்னும் பல்வேறுவிதமான நன்மைகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.
எனவே பக்ரீறியாக்கள் பலவிதம் காணப்படுகின்றன. கிருமிகளை உணவிலே வளரவிட்டால் உடம்பின் செல்களாக மாறுகிறது. அதே நுண் உயிர்களை அழுகிக்கொண்டிருக்கும் பொருள்கள் மீது விட்டால் அவை தீமையைத் தருகின்ற கிருமிகளாக மாறுகின்றன என்கிற உண்மையை அன்றே கண்டுபிடித்துச் சொன்னவர் வேறுயாருமல்ல அவர்தான் விஞ்ஞானி லூயிபாஸ்டர் ஆவார்.
எஸ்.எம். மன்சூர் (ஆசிரியர்)
அட்டாளைச்சேனை
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்!
பயனுள்ள தகவல் நன்றி ஷஹி
றிமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» நன்மை செய்யும் 4000 சத்துணவுப் பொருட்கள் !
» விரோதியை நண்பனாக நினை!
» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
» மனிதனுக்கு மனிதன்
» மனிதனுக்கு அழிவை தருபவை
» விரோதியை நண்பனாக நினை!
» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
» மனிதனுக்கு மனிதன்
» மனிதனுக்கு அழிவை தருபவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|