Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
மனிதாபிமானம்: பிரிட்டனில் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இலங்கைத் தமிழர்!
4 posters
Page 1 of 1
மனிதாபிமானம்: பிரிட்டனில் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இலங்கைத் தமிழர்!
பிரிட்டனில் ரயிலில் வைத்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்து உள்ளார் இலங்கைத் தமிழர் ஒருவர். இவரின் பெயர் வி. எஸ். வாசன். வயது - 64. ஐந்து பிள்ளைகளின் தந்தை. மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் அரசியல் தஞ்சம் பெற்று லண்டனில் வாழ்ந்து வருகின்றார். இவரது பிள்ளைகளில் இருவர் 1996 ஆம் ஆண்டு எத்தியோப்பிய விமானம் ஒன்று கோமரோஸ் தீவில் விபத்தில் சிக்கியபோது இறந்து விட்டனர். வாசன் மிகுந்த பிரயாசைக்காரர். நேர்மையானவர். அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். இதனால் இவர் மீது அபிமானமும், மரியாதையும் மிகுந்த கூட்டம் ஒன்று லண்டனில் உள்ளது. ஓய்வூதியர். பல்லினங்களைச் சேர்ந்த மக்களும் இவருக்கு நண்பர்களாக உள்ளனர். ஆங்கிலேய நண்பர்களும் ஏராளம். இவர் Letchworth நகரத்தில் உள்ள ஆங்கிலேய நண்பர் ஒருவரின் வீட்டுக்கு வார இறுதி விடுமுறையை கழிக்க சென்று விட்டு பிரிட்டிஷ் புகையிரதத்தில் கடந்த 10 ஆம் திகதி திரும்பி வந்து கொண்டு இருந்தார். இப்புகையிரத பயணத்தின்போது மறக்க முடியாத அநுபவம் ஒன்று இவருக்கு கிடைத்தது. இவரது ஆசனத்தோடு இணைந்த ஆசனங்களில் இளம்பிராயத்தினர் ஐவர் அமர்ந்து இருந்தனர். இவர்கள் ஆங்கிலேயர்கள். வலியால் ஒரு பெண் அழுகின்றமையை பார்த்து இந்த ஆங்கிலேயர்கள் நையாண்டியாக சிரித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த பயணிகள் என்ன நடக்கின்றது? என வேடிக்கை பார்த்தார்களே ஒழிய பெண்ணுக்கு உதவ முன் வந்து இருக்கவில்லை. சீரியஸான பிரச்சினை ஒன்று போய்க் கொண்டு இருக்கின்றது என்று உணர்ந்தார் வாசன். என்ன பிரச்சினை? என்று அப்பெண்ணுடன் கூட வந்திருந்தவரிடம் வினவினார். பிரசவ வேதனையால் அப்பெண் துடித்துக் கொண்டு இருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டார். அப்பெண்ணுக்கு உதவ முன்வருமாறு சக பயணிகளிடம் கேட்டுக் கொண்டார். இரு பெண்கள் மாத்திரம் உதவ முன் வந்தனர். ஏனையோரை வேறு பகுதிக்கு செல்லச் சொன்னார். ரயிலை அவசரமாக நிறுத்துகின்றமைக்கான நெம்புகோலை பிடித்து இழுத்தார். மெதுவாக நகரத் தொடங்கியது புகையிரதம். கைப்பையை திறந்து இரண்டு துணிகளை வெளியில் எடுத்தார். தரையில் ஒரு துணியை விரித்தார். அதில் பெண்ணை கிடத்தினார். பெண்ணுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்னார்கள். தேற்றினார்கள். பெண்ணை பிரசவத்துக்கு தயார்ப்படுத்தினர். பெண் பிரசவ வேதனையின் உச்சத்தில் கத்தத் தொடங்கினார். குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. குழந்தையின் தலை வெளியே வந்தது. உடல் வெளியே வருவது வெகு சிரமமாக இருந்தது. குழந்தையின் உடலை வாசன் மெதுமெதுவாக வெளியே எடுத்தார். மற்றத் துணியின் மேல் குழந்தையை கிடத்தினார். தாயின் மார்பில் குழந்தையை வைத்தார். இரு ரயில் பணியாளர்கள் வந்தனர். நிலைமையை புரிந்து கொண்டனர். அடுத்த நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. தயார் நிலையில் இருந்த அம்புலன்ஸ் வண்டியில் தாயும் சேயும் மிகவும் பத்திரமாக ஏற்றப்பட்டனர். பெரியவர் வாசனை கை எடுத்துக் கும்பிட்டு கண்ணீர் மல்க நன்றி கூறினார் அப்பெண்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: மனிதாபிமானம்: பிரிட்டனில் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இலங்கைத் தமிழர்!
நல்ல செய்தி ஒன்று பகிர்ந்தீர்கள் முபீஸ் இது போல் செய்திகள் படித்து நீண்ட நாட்களாகி விட்டது நன்றி முபீஸ் மனம் நெகிழ்ந்து விட்டது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனிதாபிமானம்: பிரிட்டனில் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இலங்கைத் தமிழர்!
கண்ணீர் வந்து விட்டது இதைப் படிக்கும்போது.... ! ஆழ்ந்த மூச்சு விட்டு என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்..
வாழ்க அந்த மனிதர்! நற்செயல் புரிந்த அந்த நல்லவரின் உயர்ந்த குணம் நம் அனைவருக்கும் வரவேண்டும்.... காலத்தில் செய்யும் உதவி... கர்மம்... இதுதான் !
வாழ்க அந்த மனிதர்! நற்செயல் புரிந்த அந்த நல்லவரின் உயர்ந்த குணம் நம் அனைவருக்கும் வரவேண்டும்.... காலத்தில் செய்யும் உதவி... கர்மம்... இதுதான் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனிதாபிமானம்: பிரிட்டனில் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இலங்கைத் தமிழர்!
பெரியவர் வாசனை கை எடுத்துக் கும்பிட்டு கண்ணீர் மல்க நன்றி கூறினார் அப்பெண்.
சேனை சார்பாக,பெரியவர் வாசனை வாழ்த்துவோம் .
நன்றி தோழரே !பகிர்வுக்கு .
சேனை சார்பாக,பெரியவர் வாசனை வாழ்த்துவோம் .
நன்றி தோழரே !பகிர்வுக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி இலங்கைத் தமிழர்
» ரயிலில் பிச்சையெடுத்த பெண்ணுக்கு ஆறுமாத சிறை
» லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம்
» ஐந்து வயதேயான பெண்ணுக்கு பிரிட்டனில் கட்டாயத் திருமணம்!
» லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்
» ரயிலில் பிச்சையெடுத்த பெண்ணுக்கு ஆறுமாத சிறை
» லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம்
» ஐந்து வயதேயான பெண்ணுக்கு பிரிட்டனில் கட்டாயத் திருமணம்!
» லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|