சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

அதிமுக ஆட்சியில் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம்: கருணாநிதி Khan11

அதிமுக ஆட்சியில் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம்: கருணாநிதி

2 posters

Go down

அதிமுக ஆட்சியில் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம்: கருணாநிதி Empty அதிமுக ஆட்சியில் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம்: கருணாநிதி

Post by யாதுமானவள் Sat 23 Jul 2011 - 13:33

அல்லல் நீங்கும் தொல்லை குறையும் என்ற தலைப்பில் தனது தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

உடன்பிறப்பே,

"ஆரம்பமாகி விட்டன அரூபத்தின் லீலைகள்!" என்று "மனோகரா" படத்தில் ஒரு உரையாடல் கேட்டிருப்பாய்! அதைத் தொடர்ந்து வருகின்ற வசந்த சேனையின் அட்டகாசங்களையும் பார்த்திருப்பாய்!

எதுவுமே அறியாமல் அவள் மடிதான் தனக்குச் சொர்க்கலோக மெத்தை என்று கூறிக் கொண்டு சொக்கிக்கிடக்கும் புருசோத்தம மன்னனையும் கண்டிருப்பாய்!

இப்படி அந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் மனோகரனாலும், அவனைப் பெற்றெடுத்த பத்தினித் தங்கமாம் பத்மாவதியின் சாபத்தினாலும் எப்படியெல்லாம் பட்டொழிந்தார்கள்; கெட்டுத் தொலைந்தார்கள் என்ற முடிவையும் ரசித்து மகிழ்ந்திருப்பாய்.

இது நாடகத்தில்-திரைக்காவியத்தில் படமாக மட்டுமல்ல; பாடமாகவும் உன் நெஞ்சில் பதிய வைக்கப்பட்ட பம்மல் சம்மந்தனார் எழுதிய பழைய சரித்திரத்தின் ஒரு புதிய பொன்னேடு.

அந்த ஏடு இதோ மீண்டும் திரும்புகிறது என்பதற்கு அடையாளமாக தமிழகத்தில் ‘‘கள்ளி’’யாகப் படர்ந்துள்ள புதிய அரசு "பழையகள், புதிய மொந்தை" என்ற பழமொழிக்கேற்ப, தன்னுடைய அராஜக ஆட்டத்தை இதோ மீண்டும் தொடர்ந்திருக்கின்றது.

குற்றங்கள், தவறுகள், கொள்ளைகள், கொலைகள் எங்கே நடைபெற்றாலும், அதை யார் நடத்தினாலும், அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொல்லுகின்ற இமாலயத் தவறினை நாம் என்றைக்கும் செய்திட மாட்டோம். அப்படிச் செய்பவர்களை மன்னிக்கவும் தயாராக இருக்க மாட்டோம்.

இதோ! இரண்டொரு மாதங்களுக்கு முன்பு ஏமாந்த தமிழ் நாட்டு மக்களால் அவர்கள் தோளில் ஏறிக் கொண்டு ஆட்சிக்கு வந்துள்ள ஒரு கட்சி, அராஜகத்தை தன்னுடைய ஆபரணமாகவும், அடக்குமுறையை தனது போர் வாளாகவும் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம் என்ற ஜார் மன்னனின் இரக்கமற்ற கூச்சலை இசைப் பாடலாகவும் ஆக்கிக் கொண்டு

"எதிர்க்கட்சிகளை குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தினரை அவர்கள் குற்றம் செய்திருந்தாலும், அந்தக் குற்றத்தின் பக்கமே தலைகாட்டாமல் இருந்திருந்தாலும் எல்லோரையும் சகட்டு மேனிக்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவேன், சட்டத்தின் பெயரைச் சொல்லி சவுக்கடி கொடுப்பேன்; மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எல்லோரிடமிருந்தும் அவர்களைப் பிரித்து தனிமைப்படுத்தி

முடிந்தால், தணலில் வேண்டுமானாலும் போட்டுப் பொசுக்குவேன்" என்று ஆங்காரக் கூச்சலிட்டு, ஓங்கார முழக்கம் செய்து தன் முதுகிலே இருக்கிற புண்ணுக்கு மருந்து தடவிடவும் மறந்து விட்டு நாட்டையே சுடுகாடாக ஆக்கி; "மாகாளி" நர்த்தனம் ஆடுவேன் என்று தன் காலடியில் உள்ள காவல் துறை உள்ளிட்ட எல்லா துறைகளையும் வாயில் நுரை பொங்க வாட்டி வதைத்து

"இதோ வந்தேனடா எங்கும் காண முடியாத பத்ரகாளி" என்று பல்லைக்கடித்து, நாக்கை நீட்டி, ரத்தப் பலி வரையிலே கேட்பேன் என்று நித்தம் உரைக்கின்ற காட்சியை நாம் காணுகிறோம்.

நினைத்ததை முடிப்பேன் என்று நினைத்த படியெல்லாம் திட்டங்களை அறிவித்து பள்ளிச் சிறார், துள்ளித் திரியும் பருவத்தினர் எள்ளி நகையாட- எல்லா அறிவிப்புக்களுமே மக்கள் மன்றத்தில், நீதிமன்றத்தில் தூள்தூளாக நொறுங்கிப்போவது கண்டு மேலும் மேலும் எரிச்சல் மிகக் கொண்டு "எங்கிருக்கிறான் எதிர்க்கட்சித் தோழன்? எங்கிருக்கிறது அவன் குடும்பம் ? எங்கே போய்விடுவார்கள் என் வஞ்சக வலையில் சிக்காமல் ?" என்று பொய்த்திரை போட்டு

இந்தப் புவியில் வாழ்வோர் கண்களை இருட்டாக்கி, இன்னும் எத்தனை காலம் இங்குள்ளவரை ஏமாற்ற நினைத்திடுவார் என்ற முழக்கம் எங்கெங்கு திரும்பினும் கேட்கு தடா! எட்டுத் திசையும் ‘‘இனி தொலைவாய்’’ என்ற முழக்கமடா.

இது தான் இன்றைய தமிழ்நாட்டு நிலை. இந்த நிலை மாற்ற நெருப்பின் பொறிகளே. நீங்கள் தான் தேவையென்று திராவிட இன இளைஞர்களை அன்று தட்டி எழுப்பிய பெரியாரும், அண்ணாவும் இதோ ஒன்றாக ஓரணியில் நின்று உங்களை அழைக்கின்றார்கள்.

அறப்போர் குறித்து ஆயிரம் சாதனைகளைப் படைத்த அண்ணன், தம்பிகளே! ஆருயிர் உடன்பிறப்புகளே! அதோ, தெரிகிறது வெளிச்சம். அதை நோக்கி விரைந்து நடந்து வாருங்கள்.

அல்லல் நீங்கும்! தொல்லை குறையும் !

இவ்வாறு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அதிமுக ஆட்சியில் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம்: கருணாநிதி Empty Re: அதிமுக ஆட்சியில் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம்: கருணாநிதி

Post by kalainilaa Sat 23 Jul 2011 - 14:20

:!#: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது: கருணாநிதி பேச்சு
» உண்மையென்ன என தெரியாது அதிமுக தொண்டர்கள் ஜெ.வை பாராட்டுகின்றனர் - கருணாநிதி
» ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி
» கருணாநிதி வீட்டில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு?: சட்டசபையில் அதிமுக புகார்; கடும் மோதல், திமுக வெளிநடப்ப
» இலங்கையில் தமிழீழம் மலரும் என்றால் ஆட்சியை இழக்கத் தயார் என்றவன் நான்: கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum