Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
+3
நண்பன்
kalainilaa
பாயிஸ்
7 posters
Page 1 of 1
எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!
-வைரமுத்து
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
எனது மனசிக ஆசான் இவர் .
இவரின் வரிகளை மீண்டும் தந்தமைக்கு நன்றி .
இவரின் வரிகளை மீண்டும் தந்தமைக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
kalainilaa wrote:எனது மனசிக ஆசான் இவர் .
இவரின் வரிகளை மீண்டும் தந்தமைக்கு நன்றி .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
நண்பன் wrote:kalainilaa wrote:எனது மனசிக ஆசான் இவர் .
இவரின் வரிகளை மீண்டும் தந்தமைக்கு நன்றி .
தோழர்களே இது முத்துவையே சேரும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
வைரமுத்துன்னா சும்மாவா
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
இந்த கவிதையை அவர் சொல்ல வானொலியில் கேட்டுள்ளேன்.
நன்றி பகிர்விற்க்கு.
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
இந்த கவிதையை அவர் சொல்ல வானொலியில் கேட்டுள்ளேன்.
நன்றி பகிர்விற்க்கு.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
ஆம், இக்கவிதை,, ஜோடி என்ற திரைபடத்தில் கேட்டிருக்கிறேன்,,
தனித்துவம் வாய்ந்த கவிப்பேரரசு
தனித்துவம் வாய்ந்த கவிப்பேரரசு
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
@. @. @.sikkandar_badusha wrote:ஆம், இக்கவிதை,, ஜோடி என்ற திரைபடத்தில் கேட்டிருக்கிறேன்,,
தனித்துவம் வாய்ந்த கவிப்பேரரசு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்..
எனக்கு ஒரு காலம்
தபால் காறன் அப்படித்தான் தெரிந்தான்
ஆனால் இப்போது
ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்
தொலைபேசிதான்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்..
எனக்கு ஒரு காலம்
தபால் காறன் அப்படித்தான் தெரிந்தான்
ஆனால் இப்போது
ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்
தொலைபேசிதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
நண்பன் wrote:உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்..
எனக்கு ஒரு காலம்
தபால் காறன் அப்படித்தான் தெரிந்தான்
ஆனால் இப்போது
ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்
தொலைபேசிதான்
பழையக் காதல் கூவத்துக்கு
மனைவியின் காதல் வரும் தலைமுறைக்கு !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
@. @.kalainilaa wrote:நண்பன் wrote:உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்..
எனக்கு ஒரு காலம்
தபால் காறன் அப்படித்தான் தெரிந்தான்
ஆனால் இப்போது
ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்
தொலைபேசிதான்
பழையக் காதல் கூவத்துக்கு
மனைவியின் காதல் வரும் தலைமுறைக்கு !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட …
» காதல் – கவிதை
» காதல் கவிதை!
» காதல் தோல்வி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட இளைஞர்!
» காதல்…காதல்…! – கவிதை
» காதல் – கவிதை
» காதல் கவிதை!
» காதல் தோல்வி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட இளைஞர்!
» காதல்…காதல்…! – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|